Thursday, July 10, 2025

SIBLING EMOTION -3

 SIBLING EMOTION -3

உடன் பிறப்புகள்- உணர்ச்சிகள்-3

அன்னான் என்னடா தம்பி என்னடா [பழனி- `1965] கண்ணதாசன் விஸ்வாநரதன்-ராமமூர்த்தி , டி எம் எஸ் 

கண்ணதாசனின் சொந்த சூழலை க்கொண்டு பாடலை எழுதியுள்ளார். தீபாளி நேரத்தில் செலவுக்கு பணம் தர மறுத்த அண்ணனை நொந்துகொண்டு தன்னையும் நொந்து கொண்டு, போடா இறைவன் எல்லோரையும் காக்கிறான் நீங்கள் இல்லாவிடில் என்ன என்பது போன்ற வாதங்களைக்கொண்டு எழுதப்பட்ட தத்துவப்பாடல் உடன் பிறப்புகள் சில நேரங்களில் விரோதம் கொள் வதை ப்பார்க்கிறோம் .பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?app=desktop&v=pvp4dwUeUy0  ANNAN ENNADAA     

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே [உயர்ந்த மனிதன் - ]வாலி , எம் எஸ் விஸ்வநாதன்  டி எ ம் எஸ், சிவாஜி , மேஜர்

நண்பர்களே அண்ணன் -தம்பிகள் போல் வாழ்ந்த காட்சியும் களமும் . எண்ணற்ற சூழல்களை விளக்கி நட்புகள் பாடும் பாடல். வாலி யின் யாப்பு .மிகவும் நயமான வாதங்கள் . வெகு இயர்கையாக பாடப்பட்ட பாடல். எளிது போல் தோன்றினாலும் பாடுவது எளிதல்ல ஏனெனில் உணர்ச்சி பூர்வ சொற்கள் அதிகம். கேட்டு  மகிழுங்கள் 

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=HiQI7tgwZoo ANDHANAL GNAABAGAM

இதே பாடலை சிவாஜி நினைவு நிகழ்ச்சியில் டி எம் எஸ் / மேஜர் பாட [சங்கர்] கணேஷ் இசைக்குழுவை இயக்குவதைக்காண இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=S9rMM84Fop8 TMS MAJOR

நன்றி அன்பன் ராமன்

DIRECTOR SRIDHAR - 8

  DIRECTOR SRIDHAR - 8          

இயக்குனர் ஸ்ரீதர்-8         

மங்கையரில்  மஹராணி [அவளுக்கென்று ஓர் மனம் 1971]  கண்ணதாசன் , எம் எஸ் வி, எஸ் பி பி  பி  சுசீலா

ஒரே பாடலில் காதலின் உற்சாகத்தையும், வேண்டாத தொல்லையின் துயரத்தையும் பிணைத்து பாடல் உருவாக்க முடியும்  என இசை அமைப்பாளர் வகுத்துக்காட்டிய விந்தை/ வித்தை .ஏனெனில் காஞ்சனா -ஜெமினி குதூகலலி க்க அருகிலேயே பாரதி முத்துராமனின் பிடியில் சிக்கி சோகம் மீட்டும் உணர்வு. டுய்ட்டில் சோகம் வெறும் ஹம்மிங் மூலமே காட்டப்பட்டுள்ளது கூர்ந்து கேளுங்கள் இசையின் வலிமை புரியும் இணைப்பு கீழே

 MANGAIYARIL KD MSV SPB  PS  

https://www.youtube.com/watch?v=sV1RWJQYD6U

 எல்லோரும் பார்க்க [அவளுக்கென்று ஓர் மனம் -1971] கண்ணதாசன், எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி

எல் ஆர் ஈஸ்வரியினால் ஒரு சோகப்பாடல் தர இயலுமா ? ஏன் முடியாது என்ற பதில் .

இதில் எம் எஸ் வியின் பங்களிப்பு மிளிர்கிறது. எப்படி எனில் இசை என்னவோ க்ளப் நடனத்திற்காய் ஆனால் ராகம் ஏற்ற இரக்கம் இவை எல்லாம் உள்ளார்ந்த மனக்கொ திப்பை காட்டும் விதம்.

நான் ஆடும் நிலையில் இலை நான் பாடும் நிலையில் இல்லை ஆனாலும் இங்கே ஆடாமல் ஆடுகின்றேன் பாடாமல் பாடுகின்றேன்.

நூல் கொண்டு ஆடும் பொம்மை போன்ற வரிகளும் , பாரதியின் சோக போதை நடனமும் கமெரா கோணங்களும் அரிதானவை . ஆழ்ந்து கேட்கப்பட வேண்டிய பாடல்.

இணைப்பு இதோ 

       ELLORUMPAARKKA –KD MSV LRE  https://www.google.com/search?q=ellorum+parkka+song+video+song&newwindow=1&sca_esv=9b9e500fc75b63b3&sxsrf=AE3TifO9tIneaOyJQz8zivp51mhQM5IGIg%3A1748420070418&ei=5sU2aIaeGbjG4-EPoI-h-

 

ENGAL KALYNAM CVR INTERVIEW

எங்கள் கல்யாணம் பாடல் படமாக்கியதை சி வி ராஜேந்திரன் விளக்குகிகிறார் , இப்பாடல் பற்றி மேல் நாட்டவர் பார்வை இங்கே தரப்பட்டுள்ளது . ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=cjiAE7rMWRw

நன்றி  அன்பன் ராமன்

Friday, July 4, 2025

LET US PERCEIVE THE SONG -30

 LET US PERCEIVE THE SONG -30           

பாடலை உணர்வோம் -30  

ஜில் என்று காற்று வந்ததோ [நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எஸ் விஸ்வநாதன், டி எம் எஸ், சுசீலா

சில தினங்கள் முன்  ஒரு நீச்சல் குள க்காட்சியை பார்த்தோய்ம். இதோ மற்றொன்று ஆனால் இது தான் தமிழ் சினிமாவில் நீச்சல் காட்சி ஒளிப்பதிவில் புரட்சி செய்த படம் . புரட்சியாளர் இருவர் .

1 சி வி ராஜேந்திரன் [இயக்குனர்]  2 பி என் சுந்தரம் [ஒளிப்பதிவாளர்] நீருக்கடியில் பிரத்தியேக கமெரா இல்லாமலேயே ஒரு பேழையை தயார்செய்து அதற்குள் நின்று கொண்டு படம் பிடித்த சுந்தரம் கட்டிய வழியில் பின்னர் சிலர் பயணிக்க ஆங்கிலப்படங்களுக்கு இணையாக இந்திய படங்களிலும் காட்சிகள் அரங்கேறின .,

1969 இல் வெளிவந்த "நில் கவனி காதலி " படம் எட்டிய பரிமாணம் அதிகம் தான் .

வசதிகளே இல்லாவிடினும் கடும் உழைப்பைக்கொட்டிய கலைஞர் கள் .

நீர் அழுத்தம் தாங்காமல் படீரென்று பேழை சிதறி சுந்தரம் காலில் பலமாககண்ணாடி  கிழித்து விட , 3 வார ஓய்வு தேவைப்பட்டது பி என் சுந்தரத்திற்கு.. இப்போது கண்ணாடிக்கு பதில் perspex என்னும் பிளாட்டிக் போன்ற பொருளால் செய்த கூண்டினுள்  மீண்டும் சுந்தரம். நீரின் ஆழம்- நீர் மட்டம்- நீருக்கு மேல் என்று தெளிவாக படம் பிடித்த நேர்த்தியை என்னென்று சொல்ல? காட்சியை கவனித்து ப்பாருங்கள் உண்மை தெரியும் .

வாலியின் வரிகளுக்கு எம் எஸ் வி யின் இசை. இதை போன்ற சூழல்களுக்கு எம் எஸ் வி கையிலெடுக்கும் உத்திகள் மாறுபட்டவை . அக்காடியன் , சைலோபோன் , சாரங்கி, ப்ரஷ் ட்ரம் என்று கருவிப்பட்டாளம் ஒரு புறம்.. பாடலில் குஷி கிளம்பியதன் அறிகுறியாக அவ்வப்போது டாடட் டா    என்று மாறி மாறிப்படி குதூகலம் காட்டும் குரல்கள் டி எம் எஸ் /சுசீலா . சையில் இனம் தெரியாத வசீகரம் ஊடுருவ விடுவதில் எம் எஸ் வி தனி முத்திரை பதிப்பவர். இப்போதும் அதை திறம்பட தந்துள்ளார். இது போன்ற காட்சிகளை படமாக்க அசாத்திய பொறுமையும் விடா முயற்சியும் தேவைப்படும் . இம்மி பிசகாமல் அதை ஈடேற்றியுள்ளார் திரு சி வி ராஜேந்திரன் அவர்கள். இவ்வகை காட்சியில் ஆசானுக்கே [ஸ்ரீதர்] முன்னோடி அவர் . பாடலை கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=u-fdak01sn4&list=RDu-fdak01sn4 JIL ENRU

இந்த பாடலில் இசையின் ஆழமும் பரிமாணமும் எந்த அளவுக்கு பரவியுள்ளன என்பதை தனக்கே உரிய வகையில் மெய்மறந்து விளக்குகிறார் திரு அமுதபாரதி [இசை அமைப்பு[பாலர்] பாடலை அவர்  அணு அணுவாக ரசித்து விளக்குவதை நீங்களும் கேளுங்கள் , எம் எஸ் வியின் வியாபகம் தெளிவாகும் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=N7d9TaOm5mI jillendru amudhabarathi

நன்றி அன்பன் ராமன்.

 

 

SIBLING EMOTION -3

  SIBLING EMOTION -3 உடன் பிறப்புகள் - உணர்ச்சிகள்-3 அன்னான் என்னடா தம்பி என்னடா [பழனி- `1965] கண்ணதாசன் விஸ்வாநரதன்-ராமமூர்த்தி , டி எ...