Tuesday, May 26, 2026

AN IMPORTANT SETTLEMENT

 AN  IMPORTANT  SETTLEMENT

முக்கிய தீர்வு

எப்போதும் போல் இன்றையபதிவிலும் நமது இறையாண்மை மற்றும் நலன் சார்ந்த துல்லியமான நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதை மேஜர் திரு மதன் குமார் விளக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் விவரங்கள் அச்சுறுத்தும் வகையானவை எனினும், தீமைகள் இருக்கும் இடங்களுக்கே சென்றோ செல்லாமலோ, சொல்லாமலே அழிக்கும் உத்தி அமைதியாக ஈடேறி அதன்மூலம் தீர்வு காணப்படுவது என்பது ஒரு நூதன அணுகுமுறை.

. இவை இன்றைய தேவை என்னும் அளவிற்கு குற்றம் புரிவோர் மலிந்து விட்டனர் என்பதையும் விட பல ஊடுருவல் நகர்வுகளுக்கு உதவ பல அமைப்புகள் இயங்கிவருவதால், பாதுகாப்பு மேற்கொள்வோரின் பணி  கடுமையாவதும் தேவையற்ற விமரிசனங்களுக்கு உள்ளாவதையும் முற்றாகத்தவிர்த்திட  , அந்த அமைப்புகளுக்கு இருக்கும் வழி அந்த கொடூரர்களை  அவனவன் இருக்கும் பகுதியிலேயே பகலில் களைவது என்பதே.

இது மிக நுட்பமான /ஆபத்து மிகுந்த நடை முறை தான். ஆனால் இதற்கென சிறப்பு அணுகுமுறைகளை வகுத்து திடீரென்று ஆளைக்காணோம் என ஒரு நிலையை ஏற்படுத்தும் சூழலில் குற்றவாளிகளுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த அந்தந்தநாட்டு அமைப்புகள் பெரும் குரல் எழுப்பவோ பன்னாட்டு அமைதி நிறுவனங்களிலோ முறையிட முயலாமல் அரசினர் பங்களிப்புடன் ஈமக்கிரியைகள் செய்யப்படுவதிலிருந்தே இந்த அமைதிவிரோத அணுகுமுறை சில அரசுகளா லேயே செயல் வடிவம் பெறுவதை புரிந்து கொள்ளலாம்.

இவ்வகை நிகழ்வு குறித்து மேஜர் திரு மதன் குமார் கூறும் விவரங்களை நுணுக்கமாக புரிந்துகொள்ள வீடியோ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=opdWDPmkOe0 imp settlement Maj. Madan Kumar

                   ***********************

 

Sunday, May 24, 2026

MADURAI-11

MADURAI-11

 மதுரை-11

சித்திரைத்திருவிழா

சித்திரைத்திருவிழாவில் அன்னை மீனாட்சி பங்குபெறும் நிகழ்வுகள் அனைத்தும் மதுரை நகரிலேயே நிகழ்வதை அறிவோம். முத்தாய்ப்பாக சித்ராபௌர்ணமி தினத்தில் சுந்தரராஜ பெருமாள் [அழகர்கள்ளழகர் ]       வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் ஆழ்வார்புரம் பகுதியில் நீரில் இறங்குவது [அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வாக]  மதுரை வட்டாரத்தில் ஆண்டுதோறும் நிகழும் பெரும்விழா.

ஆனால் இந்நிகழ்வு அழகர் கோயில் என்னும் திருமாலிருஞ்சோலை  அழகர் மலை கோயிலில் 10 தினங்களுக்கு முன் 'பவித்ரோத்சவம்' என்று துவங்கி இறுதியில் மதுரையில் இருந்து அழகர் தனது இருப்பிடம் திரும்பி வரும்  வரை நடைபெறும் நிகழ்வுகள் பலவற்றை உள்ளடக்கியது.

இந்த 10 நாள் நிகழ்வில் முதல் மூன்று தினங்கள் அழகர்கோயில் வளாகத்திலேயே புறப்பாடு அலங்காரம் என நடைபெறும். நான்காம் நாள் அழகர் கள்வன் வேடம் தரித்து பல்லக்கில் மதுரை  நோக்கி  பயணித்து போகப்போக எண்ணற்ற பக்தர்கள் புடைசூழ ஆங்காங்கே மண்டகப்படிகளை ஏற்றுக்கொண்டு பௌர்ணமிக்கு முதல் நாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சந்நிதானத்திற்கு எழுந்தருள அதன் பின் இரவு அங்கேயே எழுந்தருளி மறுநாள் அதிகாலையில்  

தங்கக்குதிரையில் ஆரோகணித்து மிகுந்த ஜாஜ்வல்யமாக வைகை நதியில் இறங்கி சில மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்து, அவர்களின் காணிக்கை பூஜை ,கைங்கரியங்களைப்பெற்று கரை ஓரமாகவே பயணித்து ராமராயர் மண்டபம் சென்றைடைதல்   முற்பகலில் நிறைவேறும்.

பவித்ரோத்ஸவம் குறித்த பல முக்கிய தகவல்களை அழகர்கோயில் திரு. பாலாஜி பட்டர் விடியோபதிவாக வழங்கியுள்ளார்.. நல்ல பயனுள்ள விவரங்கள் உள்ளன.  

கேட்கக்கேட்க வியப்பு தரும் விழாவாக சித்ராபௌர்ணமி விளங்குகிறது. திரு பாலாஜி பட்டர் விளக்கிய முக்கிய கருத்து .’கள்ளழகர் பக்தன் இருப்பிடம் தேடி சென்று அருள் பாலிக்கிறார்’ . எனவே தான், வேறெந்த கோயிலிலும் இல்லாத நடை முறையாக இந்த விழாவில் பக்தர்கள் தரும் பிரசாதம் [அவரவர் தயாரித்து தரும் கேசரி, பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை] எதுவாயினும் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. பொதுவாக எல்லா தெய்வங்களுக்கும் கோயில் மடப்பள்ளி தயாரிப்புகள் மட்டுமே நிவேதனம் செய்வர் . இந்த விழாவில் அழகர் எந்த அன்பு தயாரிப்பையும் மனமுவந்து  ஏற்றுக்கொள்வதாக பாலாஜி பட்டர் தெளிவாக குறிப்பிடுகிறார் . மக்களும் இறைவனும் நெருங்கி உறவாடும் விழாதான் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். மேலும் இவ்விழாவில் இறைவன் மீது நீர்பாய்ச்சும் நிகழ்வு குறித்து பல முக்கிய விவரங்களை பேசுகிறார் பாலாஜி பட்டர் அவர்கள். 

அன்றிரவில் தசாவதார சேவை நிகழும் . உண்மையில் 7 அவதாரங்கள் மட்டுமே அலங்கரிக்கப்படுவன. 3 உக்கிர அவதாரங்கள் தவிர்க்கப்படுகின்றன. இது தொடர்பான பல அரிய தகவல்கள் வீடியோ விளக்கமாக திரு பாலாஜி பட்டர்  விரிவாக விளக்குகிறார், எண்ணற்ற தகவல் களஞ்சியம் இந்த வீடியோ. நன்கு கேட்டு பயன் பெறுவீர்

நன்றி  அன்பன்

வீடியோ

https://www.youtube.com/watch?v=Fq_5omDyC18 PAVITHROTHSAVAM –BAALAJI BHATTAR

                                                               *************

AN IMPORTANT SETTLEMENT

  AN   IMPORTANT   SETTLEMENT முக்கிய தீர்வு எப்போதும் போல் இன்றையபதிவிலும் நமது இறையாண்மை மற்றும் நலன் சார்ந்த துல்லியமான நட...