Wednesday, August 12, 2026

CHANGING TIMES-6

 CHANGING TIMES-6   

கால மற்றம் -6

பழைய பாடல்களின் வளம் ஏன் பேசு பொருள் ஆகிறது என்ற கேள்வி எழுவது இயற்கை தான். அதற்கான அடிப்படை விடை எது என்று தேடினால்  .........

அன்றைய பாடல் காட்சிகள் பெரும்பாலும் உறவு முறை /நெருக்கம் /தோழமை / உளவியல் சார்ந்த தகவல் பரிமாற்றம் என்ற ஏதேனும் ஒரு வலுவான பிணைப்பில் எழுந்த கவிதை யாகவே இருக்கும். எனவே அதில் வாதமும் பதிலும் இழையோடும். அதை ஒட்டியே இசையின் போக்கும் பாடும் முறையும் அமையும். எனவே அவை பொருள்பொதிந்த ஆக்கங்களாக நீடு வாழ்கின்றன.

இந்த மன்றத்தில் [போலீஸ் காரன் மகள் -1963]

பாடல் -சோக நிலையில் ஒலிப்பது. எனவே நிதானமாக இயங்குகிறது .தாளம் என்பதே இல்லை ஆயினும் தும் தும் என்ற double bass கருவியின் ஒலி யே ஆதார  லயமாக ஒலிக்க ஜானகியின் உணர்ச்சி பொங்கிய குரல் பின்னர் அவளின் சகோதரனின் குரலாக பி பி ஸ்ரீனிவாஸ் அதே சோகத்தை பிழிய -துயருற்ற தங்கையின் வேதனையைப்பகிரும் அண்ணன் . இது போன்ற காட்சிகளுக்கு கவிதை புனைவதும், இசை தொகுப்பதும் கலைத்திறன்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு. அதுதான் இப்பாடலின் வெற்றிக்கு தளம் .

 

https://www.youtube.com/watch?v=ecVL0W7krBs&list=RDoWE1rTHKXtM&index=2 indha manraththil SJ  VR

சின்ன சின்ன கண்ணனுக்கு [வாழ்க்கை படகு -1965]

பெற்ற மகன் என்பதே தெரியாமல் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு பாடும் தகப்பன்.   எப்படி கண்ணதாசன் பின்னியெடுத்துள்ளார்? குழந்தையை கொஞ்சும் தகப்பன், மகவின் தாயை குற்றவாளியாக்கி சாடுகிறான் அவ்விடத்தில் இசை பெரும் அதிர்வலையை கிளப்புவதை காணலாம். அதே போல காதல் / கவிதை இரண்டிலும் உள்ள வேறுபாட்டினை கவிஞர் வெகு நேர்த்தியாக சொல்லி மழலையின் பெருமையை உயர்த்திப்பேச இசை அதனை மேலும் உயர்த்த என்ன ஒரு பாடல் -தனி மனித மன ஓட்டம் இது. பிபி ஸ்ரீனிவாஸ் குரலில் உச்சம்தொட்ட பாடல் .

https://www.youtube.com/watch?v=8KIwWoJstNk china china v padagu vr pbs

கண்ணன் வந்தான்

மற்றுமோர் உணர்ச்சிக்குவியல் போட்டி போடும் கவி இசை, குரல்கள் நடிப்பில் முதிர்ந்த ஆறுதல் தரும் நாகையா, சோகத்தில் வாடும் தகப்பன் ஜெமினி கணே சன் , வாய் பேச இயலாத சிறுவன் ராஜ்குமார் [இப்போது திரை இசையில் முக்கிய கிட்டார் கலைஞன் ] துன்பப்பட்ட மனதின் சோகம் தீர்த்த இசை, என்று கேட்டாலும் குன்றாத ஆதரவும் நம்பிக்கையும் கேட்டவருக்கு கேட்டபடி தந்த கலைஞர்கள். இசையின் வீச்சு இன்றும் கூட எட்டிப்பிடிக்க இயலாத நுணுக்கமும் கம்பீரமும் பின்னிப்பிணைந்த ஆளுமை 1966ல்.

https://www.youtube.com/watch?v=ilEXfqkeveI  KANNAN VANDHAAN SG TMS MSV 1966 RAMU 

பொன்னெழில் பூத்தது

கலங்கரை விளக்க மாக எம் எஸ் வியை உயர்த்திப்பிடித்த வாய்ப்பு . பூர்வ ஜென்ம நினைவில் பல்லவ மன்னன் சிவகாமி என்றழைத்து சிவகாமி நடன நாரீமணியாக களமிறங்கி மிளிர்ந்த காவியப்பாடல் பஞ்சு அருணாசலத்தின் கை  வண்ணத்தில் . எம் எஸ் வி ட்ரிபிள் போங்கோ வை வெகு நேர்த்தியாக கையாண்ட புதுமை , சுசீலா டி எம் எஸ் - வெல்ல முடியாத குரல்கள் .இளமை குன்றாத பல்லவ சாம்ராஜ்ய பாடல். இவையே என் சிற்றறிவில் முகம் காட்டும் வடிவங்கள். உங்களில் பலரைப்போல் எனக்கும் எழுத வராது .வந்த வரை முயன்றுள்ளேன் . இவையே சென்ற பதிவின் பாடல்களுக்கான சிறிய விளக்கம்.

https://www.youtube.com/watch?v=aub9hxjPYr4&list=RDoWE1rTHKXtM&index=4 PONNEZHIL

இன்றைய பதிவில் இடம் பெரும் பாடல்கள்

https://www.youtube.com/watch?v=WEorjm-6AbU  MAHARAJAN KARNAN VR TMS PS

https://www.youtube.com/watch?v=VSBvtAMAUes&list=RDVSBvtAMAUes&start_radio=1 rajavin msv 1966 vali tms ps orchestration

https://www.youtube.com/watch?v=dbxZ3hulXTEhttps://www.youtube.com/watch?v=dbxZ3hulXTE  ninaikka therindha  vr aanandhajyothi

https://www.youtube.com/watch?v=n8wVRvi__Dc  poovasraiyum vaali 1963pbs  v  r

விளக்கங்கள் பின்னர் .

கேள்விகள் அறவே கிடையாது [கேட்க நினைத்தால் 1000 கேள்விகள் உண்டு , ஒரு கேள்விக்கே திகைத்து திக்கு முக்காடும் நபர்களிடம் வினா எழுப்புவது குருடனை ராஜ விழிப்பார்வை காட்டு என்பதை விட மோசமான தற்கொலை முயற்சி அல்லவா?]  அதை விட அரசனையே குருடன் போல் விழிக்க சொல்லலாம் ].

நன்றி  

அன்பன்   

                               AN ANNOUNCEMENT 

CLIMATE   AND CHANGES  THERE-IN

                                             ஒரு அறிவிப்பு

கிளைமேட் அல்லது பருவ நிலை மாறுபாடுகள் 

 

நாம் இது குறித்து அறிந்ததை விட கவலை கொள்வதும் "மரத்தை எல்லாம் வெட்டியாச்சு , இனிமே வெந்து சாக வேண்டியது தான் " என்று த்ரிகால ஞானிகள் போல் நமது அக்கம் பக்கம் உள்ள நட்புகளிடம் அங்கலாய்ப்பது ஒரு சம கால பொழுதுபோக்கு [contemporary entertainment .] .  ஏன் மழை பொழிகிறது, வெய்யில் காய்கிறது காற்று தோன்றி பரவுகிறது இவற்றை ப்புரிந்து கொண்டால், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ வகை பேச்சுகளைக்கடந்து உண்மையான அறிவு பூர்வமான அணுகுமுறையில் பல விவரங்களை சிறப்பாக புரிந்து கொள்ளலாம் . உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பதில் சொல்லுங்கள் .

அட போய்யா மழை பெய்தால் என்ன , வெய்யில் கொளுத்தினால் என்ன நான் அமெரிக்கா போவேன்/ ஆஸ்திரேலியா போவேன் என்று முணுமுணுப்பது தெரிகிறது. எதையாவது அறியும் ஆர்வம் இருந்தால், ஒரு அளவிற்கேனும் விளக்க முற்படலாம்.

நம்மவர் ஆர்வம் ஊரறிந்த ஒன்று அந்த டீவியில் சொல்லிவிட்டான், இந்த டீவியில் சொல்லியிருக்கிறான் என்று மேலோட்டமாக மேய்வது ஒருநாளும் உதவாது. எனவே எதையாவது பேச வேண்டுமானால், அக்கு வேறு ஆணி வேறு என்று பிரித்து மேய தயார் என்றால் நிச்சயம் முயற்சி செய்யலாம். அது உங்கள் மன நிலை சார்ந்தது.. இல்லையேல் கிளி ஜோசியம் பார்த்து ஆருடம் மூலம் , அறியப்பார்க்கலாம் .

நீங்கள் என்ன  சொல்கிறீர்கள் பார்ப்போம் 

அன்பன்  

…………………………………………………………………………..

CHANGING TIMES-6

  CHANGING TIMES-6    கால மற்றம் -6 பழைய பாடல்களின் வளம் ஏன் பேசு பொருள் ஆகிறது என்ற கேள்வி எழுவது இயற்கை தான் . அதற்கான அ...