Friday, September 18, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION [ A sample]

MSV’s APPROACH  TO SONG COMPOSITION  [ A sample]

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்         [ஒருசான்று ]

இது வரை எம் எஸ் வி யின் இசையின் உள்ளார்ந்த நுணுக்கங்களையும் வெகு பொருத்தமான ஸ்வர அமைப்புகளையும் வைத்து இயல்பாக பாவத்தை முன்னிலைப்படுத்தும் அதீத சரஸ்வதி கடாக்ஷத்தையும் இரு விற்பன்னர்கள் விவாதிக்க கேட்டீர்கள். அந்த கருத்துகள் எல்லாமே எம் எஸ் வி அவர்களின் இசையின் வெற்றிக்கான பின்னணி என்பதை என் போன்ற பாமரனும் அறிவான்.

இதை நான் சொல்லித்தான் நமது blog விற்பன்னர்கள் அறிந்து கொள்ள வேண்டுமா என்ன ?

அவை அனைத்தையும் அறிவர் அதற்கு மேலும் அறிவர். என்ன --அவர்களுக்கு நேரம் ஒதுக்க வோ கேள்விகளுக்கு விடை சொல்லவோ அவகாசம் /ஆர்வம் இரண்டும் இல்லை. எனினும் பதிவுகளை வழங்கி வருகிறேன். போகட்டும்,

திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்களும் திரு முரளி அவர்களும் விளக்கிய கருத்துகளை அசை போட்ட பொழுது

மூன்று தெய்வங்கள் படத்தில் எம் எஸ் வி இசையில் கண்ணதாசனின் 'வசந்தத்தில் ஓர் நாள் ' பாடலின் இசைத்தட்டு வீடியோ கிடைத்தது. கவிஞர் மரபு சார்ந்த சொற்களை கையாள்வதில் வித்தகர்

வைதேஹி என்ற பெயரை  நான் பார்த்தவரை கண்ணதாசன் தான் அதிகம் கையாண்டவர் ; இதே பாடலில் அவர் இறுதியில் சீதையை வாழ்த்த வந்தாரோ என்று வைதேஹி யார் என்று சொல்லாமல் சொல்லும் நேர்த்தியை காணலாம்.

மெல்லிசை மன்னர் இப்பாடலில் எவ்வளவு மென்மையான ட்யூன் கொடுத்து அதை எளிதாக வெற்றிபெறச்செய்தார் என்பது கவனத்திற்குரிய ஒன்று. 300, 400 இசைக்கலைஞர்களை கட்டி ஆண்ட சேனாபதி திரு எம் எஸ் வி அவர்கள்.

ஆனால் இப்பாடல் முழுவதிலும் 4 கருவிகள் மங்கல ஒலி வழங்கும் குழல், தபலா,  நாதஸ்வரமும் தவிலும், தான்.

குரலோடு ஒலிக்கும் தாளக்கருவி தவில் மட்டுமே .அதையும் அடக்கி வாசிக்க வைத்துள்ளார் .இடை இசையாக  முற்றிலும் ஒலிப்பது நாதஸ்வரம்.

எவ்வளவு கவனமாக இசையைதொகுத்துள்ளார் என்பதோடு எவ்வளவு பொருத்தமாக பாடலைக்கட்டமைத்துள்ளனர் இந்த மூன்று தெய்வங்கள், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் பி சுசீலா அவர்கள்.

செய்வன திருந்தச்செய் அதையும் பொருந்தச்செய்   என்ற மரபில் வாழ்ந்தவர்கள் அவர்கள்.

திரு முரளி- திருமதி பிரியா பார்த்தசாரதி வீடியோ விற்கு  மேலும் ஒரு சான்று என்றெண்ணி இதை பதிவிட்டுள்ளேன். தவறெனில் மன்னிப்பீர் .இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=7z5UxZJKR6w vasanthaththil or naal                 

https://www.youtube.com/watch?v=uYr6uI824U8&t=149s QFR 188                 

 நன்றி  அன்பன்

Thursday, September 17, 2026

NEEM -3

 NEEM -3

The grandeur of Neem is not a matter of any push over in the sense that the tree serves humanity in ways known and unknown to us. Its dimensions include social, cultural, religious, spiritual, medicinal and  ritual facets. Every social arrangement has a place of pride for this tree.

Much of the deep faith placed on this tree is based on its ability to serve as an anti-microbial agent; I would go a little beyond to name its potential as ‘Anti-biotic’, as several insects , bacteria and fungi that readily invade any wood [except Teak and a few other wood types] rarely manage to ‘attack’ even fallen wood of ‘Neem’. So, it holds a wealth of chemical compounds that serve to protect varied items of value to human life.

 Neem gum

It is a well-known natural exudate from living mature trees upon physical injury to the wood. Chemically it is a ‘resin’ used as a binder and in Silk dyeing. Besides, it is an agent used in medicine to serve as a slow-releasing agent and as a film coat.

Pest and disease control

Azadirachtin –a natural compound in ‘neem’ is a powerful insecticide and is sprayed as a water-based product on crops.

Neem cake [solid residue from oil extraction] is used as a fertilizer both to add nutrients to soil and also as repellent of several worms and pests in land.

Bio-pesticide

Neem seed extracts contain limonoid triterpenes that are effective in containing ‘destroying pathogens’. Advanced approaches are used to extract the compound to derive absolutely aseptic products to enhance their efficacy as bio-pesticide.

These are some major aspects for the benefit of humanity from ‘Neem’. 

Please await a SPECIAL posting tomorrow [special , as it appears on saturday-a non-blog day for us.

**********************************************************

Wednesday, September 16, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION

 MSV’s APPROACH  TO SONG COMPOSITION  

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்

ஒரு இசை அமைப்பாளரின் தொழில் அணுகுமுறை PROFESSION  APPROACH ] பற்றி அறிந்து கொள்ள

1 தொழில் ரீதியிலான / வர்த்தக முறையிலான தேவைகள் [இசை வகைகள், ஸ்வர ஞானம், ஸ்வர அடுக்குகள் வெளிப்படுத்தும் ராக லட்சணங்கள்] பற்றிய தெளிவு

2 சமகாலத்திய நடை முறை அணுகுமுறைகள் [ஒலி அமைப்பு, கருவிகள், தாள வகைகள் ]

3 அந்த குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பிரத்தியேக விருப்புகள் [ எம் எஸ் வி அவர்களுக்கு பியானோ, போங்கோ, கோரஸ் , ஷெனாய், குழல் மற்றும் பாடுவதில் மாறுபாடு எனும் உத்தி]

4 அந்த இசை அமைப்பாளர் எப்படி ஒரு மந்திர வாதி போல மக்களின் ரசனையை மெல்ல மெல்ல மாற்றி தன் இசை அமைப்புக்கு தயார் படுத்துகிறார்.

[திரு எம் எஸ் வி அவர்கள்சுமார் 3 - 5 ஆண்டு கால இடை வெளியில் வெவ்வேறு இசைக்கோலங்களை அரங்கேற்றியமை அவரின் இசையை கீரிப்பிள்ளை போல் உற்று நோக்கி வந்தவர்களுக்கு விளங்கும்.           ஆனால்  ஏன் எதற்கு என்பதெல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

அவரின் வெற்றி இரண்டு குறியீடுகளால் சிகரம் தொட்டது  ] கடுமையான உழைப்பு ] நான் அப்படி செய்தேன் இப்படி செய்தேன் , இதற்கு முன் யாரும் செய்யாததை நான் தான் செய்தேன் என்று அவரது 60 ஆண்டு இசைப்பயணத்தில்  ஒரு முறைகூட சொன்னதில்லை. ஏதாவது கேட்டால் மேல் வானத்தை நோக்கி கையை காட்டிவிட்டு கடந்து போய் விடுவார்..

இவரை முறையாக அறிந்து கொள்ள எண்ணற்ற தகவல்களையும் நுணுக்கங்களையும் ஒரு சேர இணைத்துப்பார்க்கும் இசைத்திறன் வேண்டும்.

இவை கைவரப்பெற்ற திரு முரளி அவர்களும் இசை கலைஞர் திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்களும் [எவரும் தொடவே பயப்படும்]  'கலைக்கோயில் ' / 'கர்ணன் ' பட  பாடல்களை அலசுகிறார்கள் .

நம்மில் பலர் இவ்விரு ஆய்வாளர்களைக்காட்டிலும் ஆழ்ந்த விற்பன்னர்கள். எனவே அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. 3, 4 நாட்கள் ஆனாலும் இவற்றை [ஏறெடுத்துப்பார்க்க] போகிற போக்கை பார்த்தால்  G-pay / paytm செய்யச்சொல்வார்கள்.போல் தோன்றுகிறது.  அவ்வளவுக்கெல்லாம் வழியில்லை - அது குருடனை ராஜ விழி விழிக்க சொல்வதற்கு ஒப்பானது. ஏற்கனவே விழிபிதுங்க விழித்துக்கொண்டிருக்கிறேன் .

விருப்பமுள்ளோர் பின் வரும் இணைப்பை உபயோகியுங்கள்

https://www.youtube.com/watch?v=xVq2aBQLt6U   MURALI –PRIYA ON KALAIKOIL KARNAN SONGS     


                                                      17-09-26

இன்று அன்னை மீனாட்சியை நினைவு கொள்ளாமல் எப்படி இருப்பது? அவளது திருக்கோயிலில் இன்று குடமுழுக்கு [கும்பாபிஷேகம்]. மனதில் மதுரை நிழலாடுகிறது. அதன் பிரதிபலிப்பாக  திரு கண்ணதாசன் , பி சுசீலா, கே வி எம் பங்களித்த முகூர்த்த நாள் படப்பாடல் -கேட்டு மகிழ்வீர்

         https://www.youtube.com/watch?v=EY929HsSKoY  audio maanikka

நன்றி  அன்பன்


MSV’s APPROACH TO SONG COMPOSITION [ A sample]

MSV’s APPROACH   TO SONG COMPOSITION   [ A sample] எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்         [ஒருசான்று ] இது வரை எம் எஸ் வ...