Tuesday, July 7, 2026

O K

 O K                                       

கா

இது என்ன கா  என்று தோன்றினால், இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என புரிந்து கொள்வீர் . கடந்த சில மாதங்களாக இங்கே உள்ளூர் கொந்தளிப்பு பரவலாக வலுப்பெற்று வருகிறதென்பதை பல தகவல்கள் மூலம் அறியலாம்.. அதன் ஒரு அடையாளம் இங்கே பாக் அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல் நடத்தி உங்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்க வழி  செய்கிறோம்  என்று ஆசை வார்த்தை பேசியபோது அட போங்கய்யா உங்கள் தேர்தல் வேண்டாம் , எங்களுக்கு நீங்களே வேண்டாம் நாங்கள் உங்கள் தலைமையை ஏற்க விரும்பவில்லை. மாறாக இந்தியாவுடன் இணையவே விரும்புகிறோம் என்று அதிர்ச்சி வைத்தியம் செய்தனர் பொது மக்கள். பாக். போர் வீரர்களுக்கு முன்போல் ஆதரவோ ஒத்துழைப்போ இப்போது   கா மக்களிடம் கிடைப்பதில்லை .                         போதா க்குறைக்கு , ஆப்கன் பகுதியில் பாக் அதிகாரம் செல்லுபடி ஆகவில்லை மேலும் பாக் ராணுவம் அடித்து துவைத்து துரத்தப்படுவதாக பல தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. சரி ஆப்கன் சூழல் வேறு, ஆனால்   கா வில் என்ன ஆயிற்று.? ஆம் அது தான் முறையான மன மாற்றம் .

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து விக்கிக்கொள்ளப்பட்டவுடன் சுதந்திரம் சுயமரியாதை பறி போயிற்று ஐயோ காஷ்மீருக்கு எந்த நிதியும் கிடைக்காது என்றெல்லாம் திட்டமிட்டு கூக்குரல் எழுப்பியவர்கள் இப்போது பேச்சு மூச்சு இன்றி முடக்குவது ஏன்

அது தான் காஷ்மீர் புதிதாக கண்ட வளர்ச்சிப்பாதை. அரசு நல்ல திட்டங்களை செயல் படுத்தி, ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்தி காஷ்மீரின் சுற்றுலா இப்போது பெரிதும் மேம்பட்டுவாகன ஓட்டிகள், வியாபாரிகள், ஓட்டல் துறையினர் என பன்முக பொருளாதாரம் விரிவடைந்து காஷ்மீர் மக்கள் இப்போது இந்தியா முன்னெடுத்த நடவடிக்கைகளின் நற்பயன்களை நேரடியாக பெற்று பெரும் தன்னிறைவு மற்றும் அச்சமில்லா வாழ்வுதனை கண்கூடாக அடைந்துள்ளனர்.  

இதை அறிந்த கா பகுதி மக்கள் இந்தியா நல்ல திட்டங்களை வகுத்து முன்னேற்றம் அடைய உதவுகிறது அனால் நமது பகுதி தீவிரவாதம் பிரச்சாரம் இவற்றால் முடங்கிக்கிடக்கிறதே என்பதை உணர்ந்து அதன் மூலம் விழிப்படைந்து இந்தியாவின் பக்கம் இருப்பதே நம் நன்மைக்கு உகந்தது என்று பரவலாக உள்ளூர் குழப்பம் அதிகரித்து விட்டது. இதை உணர்ந்த தலைவர்களும் இந்தியாவுடன் இணைவதை பெரிதும் விரும்புகிறார்கள், பொருளாதார ஏற்றம் எவ்வளவு தேவை என்பதை காஷ்மீர் உணர்த்திவிட்டது அதனால் முன்பு போல் மதம் என்ற குறியீட்டைப்பேசிக்கொண்டிருந்தால் ஆவது என்ன என்று சிந்திக்க வைத்துவிட்டது. து பற்றி 3 விடியோக்கள்  maj. Madhan kumar,பாலகுமார் சோமு பத்ரி ஆகிய] மூவரின் தனித்தனி விடியோக்கள் இணைத்துள்ளேன் நன்கு விரிவாக புரிந்துகொள்ளுங்கள்

https://www.youtube.com/watch?v=_tbXV5C0838 maj. Madhan kumar

https://www.youtube.com/watch?v=KwbD0SWTzhU BK SOMU

https://www.youtube.com/watch?v=zwFcJekadEA Badhri

நன்றி

அன்பன்

நன்றி

அன்பன்

Monday, July 6, 2026

SCIENCE – V A C C I N E -3

SCIENCE – V A C C I N E -3

அறிவியல்வாக்ஸின் -3

எனது முந்தைய பதிவில் B -LYMPHOCYTES, antibody களை விரைந்து உருவாக்கும் நினைவாற்றல் கொண்டவை எனவே memory செல்கள் என்று அழைக்கப்படுகின்றன என தெரிவித்திருந்தேன்.

இதன்  மேல் விளக்கமாக பேராசிரியர் Dr .கே.வெங்கட்ராமன்  சில தகவல்களை அளித்துள்ளார். B வகை மட்டுமல்லாது, [T cells exposed to antigens] antigen களை எதிர்கொண்ட  T வகை செல்களும்  antibody களை  உருவாக்கும் திறன் கொண்டவை . எனவே நோய் எதிர்ப்பு என்பது இருவகையில் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது அவை முறையே B செல்-mediated  மற்றும் T செல் mediated  immune ரெஸ்பான்ஸ் [ B cell வழி உருவாகும் / T செல் வழி உருவாகும் நோய் எதிர்ப்பு] என்று அறியப்படுகின்றன என்று விளக்கியுள்ளார். அன்பருக்கு அனைவர் சார்பிலும் நன்றி.

தொடர்ந்து அவரின் [ Dr .கே.வெங்கட்ராமன்] பங்களிப்பு கிடைக்குமானால் மேலும் நமது அறிதல் வலுப்படும் .மீண்டும் ஒரு முறை Dr . கே..வி  அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறேன் ..

இந்த அடிப்படைத்தகவல் களுடன் வாக்ஸின் தயாரிப்பு குறித்த மேலும் தகவல்களை பார்ப்போம் .

வாக்ஸின் தயாரிப்புக்கூடங்கள் உலகத்தரத்தில் அமைந்த பாதுகாப்பு மற்றும் தூய்மை நிறைந்த கலன்கள் , பணியாளர்கள், தானியங்கி கருவிகள், மிகத்துல்லியமாக அளவிடும் கருவிகள் போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன், தொடர்ந்து கண்காணிக்கும் உயிரின ஆராய்ச்சி பகுதிகள், விவாத அரங்குகள் மற்றும் Sterile area எனப்படும் நிரந்தர நுழைவுத்தடை கொண்ட பல் அடுக்கு பாதுகாப்பு அரண்களுடன் அமைக்கப்படுவன

வெளி மனிதர்களுக்கு  பார்வை அரங்குகள் பாக்டரியிலிருந்து வெகு தொலைவில் அமைத்த்திருப்பர் . இதனால் தூய்மைப்பராமரிப்புக்கென பெரும் செலவு ஏற்படும், எனவே தயாரிப்பு செலவு மிக அதிகம் அதில் சமரசம் செய்துகொள்ள முடியாது / கூடாது.      உயிர் காக்கும் வாக்ஸின் தயாரிப்பில் பல்வேறு உத்திகள் [STRATEGIES] கையாளப்படுகின்றன . சுருக்கமாக அவற்றை விளக்க முயலுவோம் .

2020 ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் [WHO ] சுமார் 200 வாக்ஸின்  தயாரிப்பு முயற்சிகள் உலகெங்கணும் நடந்து வருவதாக தெரிவித்திருந்தது. எனவே பல நிறுவனங்களும் , நிர்வாகங்களும் சோர்வுற்று செய்வதறியாமல் திகைத்தன . ஏனெனில் பொதுவாக வாக்ஸின் தயாரித்து பல சோதனைகளைக்கடந்து பயன்பாட்டுக்கு வர சுமார் 7 முதல் 10 ஆண்டுகள்  கால அவகாசம் ஆகும் என்று உலகே அறியும்

சரியான மருத்துவ பாதுகாப்பை உறுதி செய்யாமல் 7 ஆண்டுகள் காத்திருந்து ஆய்வு செய்து கொண்டிருக்க கூடிய வகை நோயா கொரோனா? கொரோனா போன்ற நோயை வேறு எவ்வகையிலும் எதிர்கொள்ள இயலாது. . மிகவும் இக்கட்டான தருணம் அது . அந்த சூழலில் இந்தியா இயங்கிய விதம் மகோன்னதமானது. ஏனெனில் நமது பொருளாதாரம், பொது சுகாதாரம்  மருத்துவக்கட்டமைப்புகள் , LITERACY என்னும் கல்வி நிலை அனைத்தையும் ஏளனப்பார்வை பார்த்தே வளர்ந்து விட்ட நாடுகள் தான் உண்மையில் வளரவில்லை என்பதை கொரோனா வைரஸ் ஐயந்திரிபற பட்டவர்த்தனமாக்கியது.

ஆம் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த கூட்டங்கள் அமெரிக்கா /ஐரோப்பா / அதிலும் பிரிட்டன் , இத்தாலி , ஜெர்மனி நாடுகளில் மிக மிக அதிகம். தேவையான அளவு சவப்பெட்டிகளை வடிவமைக்கக்கூட அவகாசமின்றி தோண்டப்பட்ட MASS GRAVE   என்னும் ஒட்டு மொத்தப்புதைகுழிகள் ஏராளம். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இந்தியா தனது வாக்ஸின் வடிவமைப்பு செயல் பாடுகளை பன் மடங்கு உயர்த்தியது , லாக் டவுன் என்னும் விசேஷ பாதுகாப்பை மிகவும் அக்கறையுடன் பின்பற்றி உயிரிழப்புகளை வெகுவாக தவிர்த்து விட்டது. நமது பொது சூழல்கள் அடிப்படையில் பார்த்தால்  கொரோனா உயிரிழப்பு சொற்பமே .

நமது நாட்டிலும் கூட பலர் இன்னும் கூட இந்தியா வை குறை கூறுவதையும் , யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு , நமது கல்வித்திட்டங்களை கிண்டல் செய்வதும் தொடர்கிறது. இன்றைய கட்டுரைக்கு தேவை இல்லாத விலகல் எனினும் நமது மேன்மைகள் யாவை என்பதை பிறிதொரு கட்டத்தில் வாதிட நினைக்கிறன் . இப்போதைக்கு இந்த விலகலை மன்னித்தருள்வீர்..

வாக்ஸின் தயாரிப்பின் அடிப்படை , குறிப்பிட்ட நோய் தோன்ற காரணமாக இருக்கும் ஆன்டிஜென்களை  அடையாளம் கண்டு அதே வகை ஆன்டிஜென் அமைப்புள்ள நோய் தாக்கும் திறனற்ற ஆன்டிஜென்களை நமது உடலில் ஊசி வாயிலாக செலுத்தி , எதிர்ப்பு சக்தியை [பொருத்தமான ஆன்டிபாடிகளை] தோற்றுவிக்கும் [நோய் எதிர்க்கும்] திறனை மேம்படுத்தும் உத்தி தான் வாக்சினேஷன் என்று  எனப்புரிந்துகொள்ளலாம்

ஆகவே, நோய் கிருமியை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி , அக்கிருமியின் எந்த உடல் பகுதிகள் ஆன்டிஜென்களாக பயன் படுத்தலாம் என்று கண்டறிவர். அல்லது அந்த உயிரினவகை  அமைப்பை செயல் இழக்க வைத்து [attenuated ] வைரஸ்/ பாக்டீரியா [எது காரணியோ] அதை வாக்ஸின்  தயாரிப்பில் பயன்படுத்துவர்.. அதன் நோய் தாக்கும்   திறனற்ற  புறஅமைப்பு ப்ரோடீன்கள் [shell proteins]  வாக்ஸினில் இடம் பெறும் ANTIGENகள்.  ஒரு வாக்ஸினில் உள்ள பொருட்கள் யாவை ?  ஏன் என அறிவோம்.

தொடரும் அன்பன்

O K

  O K                                         ஆ கா இது என்ன ஆ கா   என்று தோன்றினால் , இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என புரிந்து க...