Thursday, December 11, 2025

BEATS BEAT RETREAT

 BEATS BEAT RETREAT

[MILD OR NO BEATS]

ஒதுங்கிய /ஒடுங்கிய தாளம்

தாளம் திரைப்பாடல்களில் முக்கிய அங்கம்;அது பல அவதாரங்களை மேற்கொள்ளும். அது தெரிந்தது தான் எனினும் 'அடக்கி வாசித்தல் 'என்றொரு சொல்லாடல் உண்டு. அப்படி அடக்கி வாசித்தலில் வெவ்வேறு வகைகள் உண்டு. அதாவது அடங்கி, அமர்ந்து, தாழ்ந்து  மடங்கி , முடங்கி , ஒடுங்கி ஒதுங்கி என மாறுபட்ட அமைப்புகளில் தாளங்கள் உலவி வந்துள்ளன . அவற்றில் கருவிகளின் ஒலி எழுப்பும் பண்பும் மிக முக்கியமானது. சாப்ட் டச் எனப்படும் மென் வாசிப்புகளுக்கென்றே கருவிகளும் உத்திகளும் உள்ளன.

இவ்வளவு இருந்தாலும் அனைத்தையும் மீறி தாளமே வேண்டாம் அல்லது தாளம் ஒலிப்பது கூட ரகசியம் பேசுவது போல் ஒலித்த அல்லது தாளமே இல்லாமல் அமைந்த பாடல்களும் உண்டு

அன்பு மலர் ஆசை மலர் [பாச  மலர் 1961]  

பாடல் எம் எஸ் வியின் குரலில் . மனிதர் எவ்வளவு உணர்ச்சி கொப்பளிக்க பாடியுள்ளார் . ஏன் பாடகர்கள் அவரிடம் அச்சம் கொள்கிறார்கள் என்பது இப்பாடலில் விளங்கும். அதிலும் "தாய்ப்பறவைவாடுமே  என்று வானுயர ஓங்கி ஒலிக்கிறாரே அந்த    இடத்தில் குரல் உயர துயரம் பீறிட பாடுகிறார். பாடல் முடிந்ததும் எதையோ இழந்த உணரவே நம்மை வாட்டுகிறது. இப்பாடலில் தாளமே இல்லை . இதோ இணைப்பு 

https://www.youtube.com/watch?v=P_eTy-vY13w Anbu malar [pasa malar 1961] kd VR msv sings title song

எங்கிருந்தோ ஆசைகள்

சந்திரோதயம்     டி எம் எஸ் சுசீலா

வெகு நேர்த்தியான மென்மையான டூயட் .பாடலின் போக்கே ரம்யாம் தாளம் மிக மிக ஒடுங்கிய அமைப்பில் அதுவும் ஆண் குரலைத்தான் பிரஷ் ட்ரம் லேசாக தொட்டு ஒலிக்கிறது [நோயல் க்ராண்ட் ட்ரம்மில் கொசு அமர்வது போன்ற வாசிப்பு  -அசகாய சூரன் அவர் .

இணைப்பு

https://www.youtube.com/watch?v=pw9dLWvrL0w  engirundho aasaigal no percussion only rhythm strings

அத்தான் என் அத்தான்

இப்பாடலில் சிறப்பே தாளத்துக்கு அடங்காது என்ற அறியப்பட்ட கவிதையை தாளமில்லாவிட்டால் என்ன என்று உருவாக்கிய சிறப்பு தானே. இடை இசையில் மட்டும் லேசாக தபலா பேச ஏனைய தருணங்களில் நம்மை அடக்கி கட்டிப்போடும் இசைக்கோர்வை இப்பாடல் [பாவ மன்னிப்பு -1961] இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4 aththaan en aththaan no beats until yenaththan ennai paaraththaan

கண்ணன் எந்தன் காதலன் [ஒரு தாய் மக்கள் ]

அருமையான மென்மையான தொய்வில்லாத தாலாட்டும் வகை டூயட். சீராக பயணிக்கும் பாடல் பல்லவியில் தாள மே இல்லை . சரணத்தின் நுழைவில் மெல்ல தலை காட்டும் தபலா . பலமுறை கேட்டாலும் சலிப்பே தோன்றாத உயர் ரக இசை -வேறு யார் எம் எஸ் வி தான் .  இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=A4g68-N4G6Q KANNAN ENDHANKAADHALAM ORU THAAI MAKKALMSV VALI TMS PS PARTIAL BEATS

Wednesday, December 10, 2025

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-18]

 GOOD- BUT   A LITTLE OFF MEMORY [-18]

நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தவை[-18]  

வணங்காமுடி 1957

எவ்வ்வளவு நேர்த்தியான தொகுப்பு -சொல்லில் கௌரவம் இசையில் நளினம் , மென்மை மற்றும் காட்சியில் அப்படி ஒரு யதார்த்தம் இவ்வளவு 1957 ம் ஆண்டின் வணங்காமுடி படத்தில் வந்த "மோஹனப்புன்னகை செய்திடும் நிலவே " என்ற தஞ்சை ராமையா தாஸ் எழுதிய கவிதை. அதாற்கு இசை ஜாம்பவான் திரு ஜி ராமநாதன் வழங்கியுள்ள இயல்பான இசை. அன்றைய ஒலி பதிவு கருவிகளின் திறன் குறைவு என்பதைத்தவிர சொல்வதற்கு குற்றம் எதுவும் தென்படவில்லை. காட்சியில் சாவித்திரியும் சிவாஜி கணேசனும் எவ்வளவு இயல்பாக உலவியுள்ளனர்  . இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=qh2rU3ap8Zg mohana punnagai vanangamudi 1957 thanjai GR TMS PS

 காத்திருந்த கண்கள் 1964

ஓடம் நதியினிலே -கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி , சீர்காழி கோவிந்தராஜன் .

ஹிந்தி திரையில் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் திரு நௌஷத் பெரிதும் ரசித்த பாடல் விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் ஆக்கம். பாடலில் குரலே பிரதானம் இரண்டே கருவிகள் , ஏற்ற இறக்கங்கங்கள் நிகழ்த்திய இசை சாம்ராஜ்யம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=Az3ftle3ODU ODAM NADHIYINILE KAATHTHI KANGAL

KD VR SG

வாழ்க்கை படகு

கண்களே கண்களே [1965] கண்ணதாசன் , வி-ரா , பி பி ஸ்ரீனிவாஸ் 

காதலில் தோல்விகண்டதாக எண்ணி புலம்பும் ஆண் , பஞ்சமில்லாமல் வசை பாடும் கவிதை, நெஞ்சம் நிறைந்த துயரை வடித்துக்கொட்டும் இசை, குரலில் சோகம், மனதில் குமுறல் என்று முழக்க மிட்ட அந்நாளைய கீதம் இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=w0CvSTAxQ6Y KANGALE VAAZH PADAGU 1965 KD VR PBS

வாழ்க்கை படகு [1965]

காதலில் குதூகலிக்க பெண்ணுடன் நெருங்கி ப்பாடும் ஆண் . பாடலில் பெண் பேசாமடந்தை [தேவிகா]  அனால் முக பாவத்தில் உணர்வைக்கொட்டி நடித்த பங்கு சிறப்பு. இதற்கான பாடலின் மையடக்கருத்து திருக்குறளில் இருந்து கையாளப்பட்டது பட்டவர்த்தனம்

"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது ன்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன நிலவென்ன தேய்ந்தாபோகும் ,

புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் ? [கவியரசு ] இதில் ஓவ்வொரு சொல்லுக்கும் தேவிகா     கா ட்டிய உடல் /மன /முக /விழி மொழிகள் வெகு சிறப்பு.

வள்ளுவனின் குறள் இதோ 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். (திருக்குறள் - காமத்துப்பால்-குறிப்பறிதல்-1094 )

https://www.youtube.com/watch?v=hJVHq886BOE NETRU VARAI -- VAZH PADAGU KD VR PBS

இசை அமைப்பில் எண்ணற்ற பரிமாணங்கள் இன்றைய பதிவில் . அவற்றை ஆழ்ந்து கவனியுங்கள். மேலோட்டமாகப்பார்த்துவிட்டு கடந்து செல்லாதீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னரே இசை எட்டிய உயரம் எத்தகையது -யோசியுங்கள்

நன்றி அன்பன் ராமன்  

*****************************************************************************

Tuesday, December 9, 2025

LET US PERCEIVE THE SONG -50

 LET US PERCEIVE THE SONG -50

பாடலை உணர்வோம் -50

  சின்ன சின்ன இழை [புதையல் 1957] பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா

திடீரென்று ஏன் இந்தப்பாடல் என்போருக்கு--- இப்பாடல் பல விளக்கங்களையும் விந்தைகளையம் அள்ளி அள்ளி தரும் வல்லமை கொண்டது.  அப்படி என்ன இப்பாடலில் என்கிறீர்களா. அதாவது தமிழ்த்திரை இசையை ஆழ்ந்து அலசுவோருக்கு தெரியும் தமிழ் சினிமா இசையை பலகட்டங்களாக பிரிக்கலாம் அவற்றில் சில ஜிராமநாதனுக்கு முன், ஜி ராமநாதனுக்குப்பின்

புதையலுக்கு முன், புதையலு க்குப்பின்

விஸ்வநாதனுக்கு முன், விஸ்வநாதனுக்குப்பின்,

இளையராஜா வுக்கு முன், இளையராஜாவுக்கு பின் என்ற வகையில் பார்க்கலாம்.

அதன் பிறகு மெல்ல மெல்ல இசை பெரும்பாலும் ஓசை என்ற பின்னோக்கிப்பயணத்தை தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன.

உனக்கென்ன தெரியும் என்று சிலர் கொந்தளிக்கலாம். ஆம் எனக்கு ஒன்றும் தெரியாது அதே சமயத்தில் பிந்தைய கால பாடல்களில் இசையே தெரியவில்லை எனக்கு-ஆம் எனக்குதான் சொல்கிறேன்.

ரசனை மாறுகிறது என்ற நிலையை கடந்து ரசனை நாறுகிறது என்பதே எனது நிலைப்பாடு. அது எப்படியோ போகட்டும்.

 தொடங்கிய புள்ளிக்கு வருவோம்.

அந்நாளில் மெல்ல பாடல்கள் அன்றாட வாழ்வியல் நிலைகளை எட்டிப்பார்க்க துவங்கிய  காலம். சாஸ்திரிய சொல்லாடல், ராகபாவம், தாளம் என அனைத்துமே மாறத்துவங்கி வேறுதிசையில் பயணித்த வரலாற்றின் ஆரம்பகட்டம் "புதையல்" என்பது எனது புரிதல் 

ஒரே படத்திற்கு 5 கவிஞர்களின் பாடல்கள் [சுப்ரமணியபாரதியார், ஆத்மநாதன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி மற்றும் தஞ்சை ராமையதாஸ் ] அதில் பட்டுக்கோட்டை எழுதிய 3 பாடல்கள் . அந்த மூன்றில் முக்கியமான பாடல் "சின்ன சின்ன இழைப்பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி" என்று பிறந்த அன்றே ஊரெங்கும் புகழ்மணம் பெற்ற வெகு நேர்த்தியான பாடல். 

முக்கிய தகவல்

1 பட்டுக்கோட்டை . சுந்தரம் தனிக்காட்டு ராஜா.

2 .பாடல் புனைய நேரம் எடுத்துக்கொள்வார். அவர் பாடலில் கை வைக்க இயலாது .அவ்வளவு ஆழமும் அழகும் சமுதாயப்பார்வையும் பின்னி கிடைக்கும்.

3 ட்யூனுக்கு பாடல் எழுதவே மாட்டார் , நான் பாடல் தருகிறேன் அதற்கு ஏற்ற ட்யூன் 'நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியது' தேவைப்பட்டால் சிறு மாற்றம் செய்யலாம் வேறுவேறு  ட்யூனுக்குள் கருத்தை திணித்து பாடல் எழுத முடியாது  என்று ஆணித்தரமாக ஒரே பிடியில் நிற்பார்.

ஆனாலும் பட்டுக்கோட்டை . சுந்தரம் எழுதிய பாடல்கள், எப்போதும் வெற்றி ப்பாடல்களே. பாவம் -29 வயதில் மறைந்தார். [இப்போதும் சிலர் சொல்வதுண்டு பட்டுக்கோட்டை இருந்திருந்தால் கண்ணதாசன் பெரிதும் போராட வேண்டி இருந்திருக்கும் 'என்று ] நான் கவிஞர்களை தரம் பிரித்து பேசவில்லை எனினும் பட்டுக்கோட்டை எட்டியிருந்த புகழ் காரணமாக அவரை      பா ட்டுக்கோட்டையார் என்றும் புகழ்வார்கள்.

இப்போதுதான் சுவாரஸ்யம் துவங்குகிறது.

பாடல் சூழல் அன்று புதுமையானது. கைத்தறி தொழில் செய்யும் குழுவினர் பாடுவதாக பாடல் அமையவேண்டும். கிட்டத்தட்ட மண்டையை பிய்த்து க்கொண்டார்கள் பட்டுக்கோட்டையாரும, விஸ்வநாதனும்.. இது என்ன அமைப்பில் வரவேண்டும் என்ற குழப்பம்.

அப்போது கவிஞர் பாரதிதாசன் பட்டுக்கோட்டையாரிடம் சொன்னாராம் எங்காவது நெசவுக்கூடத்தில் போய்   என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் ஏதாவது நல்ல கரு கிடைக்கக்கூடும் " என்று.

இப்போது விஸ்வநாதன் பட்டுக்கோட்டையாரிடம் -இருய்யா நானும் வரேன் நேர பாத்தா  எனக்கும் எப்படி அரேஞ்மெண்ட் இருக்கணும் னு ஐடியா கிடைக்கும் என்றார். இருவரும் காஞ்சிபுரம் போய் 2,3 நெசவுக்கூடங்களை பார்த்து வசமான பாடலை உருவாக்கி பெரும் புகழ் பெற்றனர்.

அப்போதே பாடல்கள் தேவைக்கேற்ற அணுகுமுறைகள் ஒலி க்கலவைகள், பொருத்தமான கருவிகள், உள்ளார்ந்த உவகை , கசப்பு வெறுப்பு என மனித உணர்வுகளைத்தழுவி ஒரு புதிய அவதாரம் காட்டத் துவங்கின  .அதனால் நான் 'புதையலுக்கு முன், புதையலுக்குப்பின் 'என்று தமிழ்த்திரை இசையை புரிந்து கொள்கிறேன். ஏற்காதோர் அவரவர் நிலைப்பாட்டில் பயணிக்கலாம். 

இப்பாடல் பாடப்பட வசதியாக சிறு சிறு சொற்கள் அடுத்தடுத்து வருவது கிட்டத்தட்ட தறி இயக்கத்தில் இடம் வலம் மற்றும் வலம் இடமாக  மாறி மாறி இரண்டு அடுக்கு நூல் இழைகளுக்கிடையே வேறொரு நூல் இழையை பின்னி ஆடை உருவாக்கும் ஸ்பி ண்டில் போல் அமைந்த கவிதை அதன் ஓட்டத்தை உணர்த்தும் ட்யூன் அமைப்பு கேட்டவுடன் பாடல் மனதில் பதியும் வண்ணம் அமைந்த சொல்-ட்யூன் கூட்டணி 1957இல் . பாடலை வெகுநேர்த்தியாக அமைத்த கவிஞர் இசை அமைப்பாளர் பாடகி சுசீலா அனைவரும் பாராட்டுக்குரியோரே பாடலில் ஒரு நிலையில் ட்யூன் மாறி பயணித்து பின்னர் பல்லவியை துவக்கும் அமைப்பு மிகவும் ரசிக்க வேண்டிய பகுதி . இவை தவிர, கைத்தறி ஆடையின் பெருமைகளை பேசும் அதே நேரத்தில் மனித வாழ்வின் இயல்பான அமைப்புகளை தொட்டுக்காட்டுவதும் கவிதையின் சிறப்பு.

"ஒற்றுமையோடு அத்தனை நூலும்

ஒழுங்கா வந்தா வளரும் ஒரு நூல் அறுந்தா குளரும்

இதை ஒட்டும் இழை கூட்டுறவாலே 

உலகில் தொழில் வளரும் உயரும்

இந்த உலகில் தொழில் வளரும் உயரும்

என்னடி கண்ணம்மா இன்னும் சொல்ல வேணுமா   ஆஅ

வள்ளுவனி ன் வழி வந்த பெரும் பணி

வாழ்வில் நன்மை உண்டாக்கும்

தன்  மானம் காக்கும் தன்  மானம் காக்கும்

புது வகை புடைவைகள்

வித வித பறவைவைகள் போலே

நல்ல நிறம் காட்டும் நாளும் புகழ் நாட்டும்

நல்ல நிறம் காட்டும் நாளும் புகழ் நாட்டும்          என்று சரணம் பாடி மீண்டும்

சின்ன சின்ன இழை பின்னிப்பின்னி வரும் என்று பல்லவியில் நுழைகிறது பாடல்.எளிமையான  இசை அளவான தாளம் என்ற அமைப்பு 1957 ம் ஆண்டிலேயே விஸ்வநாதன் -ராமமூர்த்தி காட்டிய மாறுபட்ட அணுகுமுறை.

பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=m62DD6O0KY8 chinna china izhai pudhaiyal 1957 pattukkottai v r  p s

https://www.youtube.com/watch?v=zH2lJq7amT8&list=RDzH2lJq7amT8&start_radio=1  AS ABOVE =CLEAR PRIINT

நன்றி

அன்பன் ராமன்

BEATS BEAT RETREAT

  BEATS BEAT RETREAT [MILD OR NO BEATS] ஒதுங்கிய / ஒடுங்கிய தாளம் தாளம் திரைப்பாடல்களில் முக்கிய அங்கம் ; அது பல அவதாரங்களை ம...