Wednesday, October 16, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-19

      TEACHER BEYOND YOUR IMAGE-19

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-19

இன்னும் சில அணுகுமுறைகள் /உத்திகள்

BLACK BOARD  AND  WHITE CHALK

கரிய நிற பலகை + வெண்ணிற சாக் எனும்  எழுதுகோல்

ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவது கூட ஒரு முறைப்படி இருத்தல் நலம் அதாவது ஆசிரியர் வலப்புறம் நின்று பேசுபவர் எனில் கரும் பலகையில் இடப்புறப்பகுதியிலும், இடப்புறம் நின்று பேசும் பழக்கம் உள்ளவர் எனில் , பலகையில் வலப்புறமும் எழுதினால் , பயில்வோர் எளிதில் பார்க்க இயலும். எழுதியதை மறைத்துக்கொண்டு நிற்பதால் பயனில்லை மாறாக மாணவ மாணவியர் வெறுப்படைவர். இதை எல்லாம் வெளியில் சொல்லாமல் செய்வது ஆசிரியரின் பிம்பம் பெரிதும் வலுப்பெற உதவும்..

இவ்விடத்தில் ஆசிரியர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதோ, படம் வரையும்போதோ, திடீரென திரும்பினால் சிலர் பேசிக்கொண்டு/ நடனம் ஆடுவதும் கூட நடைபெறும். அந்த நடராஜன்களை -நன்றாக "கவனிக்க" வேண்டும்.

ஒவ்வொருமுறையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறவைத்தால் வேறு  எவனும் நாட்டியம் ஆட முற்பட மாட்டான். இதுபோன்ற 'கீரிப்பிள்ளை' செயல்கள், ஆசிரியப்பணியின் அத்யாவசிய அங்கங்கள்.

கீரிப்பிள்ளை, ஒரு திசையில் பார்க்காது.  பலவாறு திரும்பி குதித்து கொடிய நச்சுப்பாம்புகளைக்கூட சாய்த்து விடும். அதுபோல் பல கோணங்களில் பார்க்கும் ஆசிரியர், மிகவும் ஆபத்தானவர் என்று பயில்வோர் கணித்துவைத்திருப்பர். அதை உங்களின் மரபு ஆயுதம் ஆக்கிவிட்டால், வேண்டாத நடவடிக்கைகள் முற்றிலும் கட்டுப்படும்; மாணவ   மாணவியர் அச்சம் கொள்வர். அதனால்,              

குப்பறைகட்டுப்பாடு சீராக இருக்கும்.

போதனை திறமையுடன் வகுப்பு நிர்வாகமும் இணையும் போது ஆசிரிய பிம்பம் பெரிதும் ஏற்றம் பெறும்

PROPER  USE OF  BLACK BOARD  கரும்பலகையை சரியாக உபயோகித்தல்

கரும்பலகையில் எழுதுவதும் படங்கள் வரைவதும் நன்கு அமைய முறையான பயிற்சி அவசியம். அவ்வப்போது கரும்பலகையில்  எழுதி பயிற்சி மேற்கொள்ள , இவ்விரண்டு பணிகளும் நேர்த்தியாகவும் விரைந்தும் நடை பெறும் . அதனால் கால விரையம் வெகுவாக கட்டுப்படும். அது ஆசிரியரின் திறன் குறித்த பொதுக்கருத்தை மேலும் வலுவாக்கும் 

பலகையில் எழுத்துக்களும் படங்களும் பெரிய அளவில் இருந்தால் எந்த மூலையில் இருப்பவருக்கும் தெளிவாக புலப்படும். எழுத்துகள்/ படங்கள்  பட்டையாக இல்லாமல் மெல்லிய கோடுகள் எனில் பார்ப்பவர் மனதை ஈர்க்கும் . அதனால் எழுதும் சாக் [CHALK ] ஈரமில்லாமல் இருக்கவேண்டும். சிறிது எழுதியபின் முனை மழுங்கும், பட்டை அடிக்க துவங்கும், எழுது முனையை  உடைத்துவிட்டு, உடைந்த சாக் பகுதியின் விளிம்பினால் எழுதினால் , பளிச்சென்று மெல்லிய கோடுகள் உருவாகும்.

நெஞ்சில் ஈரமில்லாமல் சாக்பீஸ் களை உடைத்து எழுத தயக்கம் கொள்ள வேண்டாம். எழுத்து/ படம் இவற்றின் தோற்றப் பொலிவே ஆசிரியரின் பெருமையை பேசும் 

முன்னரே எழுதி வைத்த படங்களை விட , அவ்வப்போது வகுப்பறையில் பயில்வோர் முன்னிலையில் அவர்கள் கண் முன் வரையும்போது , எங்கு துவங்குவது எங்கு செல்வது, எது முதலில் எவை பின்னர் என்ற அனைத்தையும் கண்கூடாக பார்த்துவிடுவதால் , பயில்வோர்,பாட தகவல்கள் போல் பட நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள ஏதுவாகும்.

வகுப்பறையில் இவற்றிற்கெல்லாம் நேரம் இல்லை என்று விளக்கம் சொல்ல வேண்டாம்; மாறாக, முழு படத்தை இல்லாவிட்டாலும் முக்கிய பகுதிகளையாவது முறையாக வரைந்து அவர்களுக்கு அடிப்படை பயிற்சி கொடுத்தால் , அவர்கள் முறையான அணுகுமுறைகளை அறிந்து அவற்றை கைக்கொள்ள பயிற்சி பெறுவர் .

எந்த செயலலோ / பணியோ வெற்றிகரமாக அமைய, மூன்று பெரும் காரணிகளை அடையாளப்படுத்தலாம் . அவை

1 தேவையான தகவல்களை முறையான வரிசையில் நினைவு கொள்ளுதல்

2 அணுகுமுறையில் ஒன்றோ அதற்கு மேலோ  இருப்பின் அவற்றை அறிந்து கொள்ளுதல் ,உகந்ததை பின்பற்றுதல்

3 எதற்கும் பிறரோடு ஒப்பீடு செய்யாமல் , மனோதர்மமாக பணி  செய்தல் . இவற்றில் 3ம் காரணியை எந்நாளும் மறவாமல் , நான் இங்கு வந்ததே 'கற்பித்தல் பணிக்கு ' என்பதையும் அவர்களுக்கு தெரியாது, புரியாது என்று சால்ஜாப்பு சொல்வதையம்  தவிர்த்து, முயன்று கற்பித்தால் பயில்வோர் வெகுவாக உங்கள் பாதையில் பின் தொடர்வர்அதற்குத்  தேவை கவனச்சிதறல் இல்லாமல் ஒவ்வொரு வகுப்பிலும் தீவிர முயற்சியோடு விளக்கி கற்பித்தல்.

கண்டிப்பாக இவை ஆசிரியனை வெற்றி நோக்கி இட்டுச்செல்லும் , வழியில் விட்டுச்செல்லாது

பின்னாளில் ஆசிரியப்பணியில் அமர்வோர், அப்போது போய் இவற்றை அறிந்து வர முடியாது; மாறாக அவர்களும் இந்த வகை நுணுக்கங்களை பயிற்றுவிக்காமல் கட ந்துபோய் , காலப்போக்கில் கல்வியின் மாட்சிமை சிதைவுறும்

எனவே தான் மீண்டும் சொல்கிறேன் ஆசிரியன் முதலில் தனது  பயிற்றுவிக்கும்திறன் உத்தி இவற்றை கட்டமைத்துக்கொண்டு செயல் பட்டால் ,பயில்வோர் உங்களுக்கு தரும் மதிப்பும் மரியாதையும் அலாதி யானவை.; ஆசிரியர் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது மாத்திரமே ஒருவருக்கு ஆசிரியர் என்ற அங்கீகாரத்தை தராது. பதவி "நான் பேராசிரியர்"என்ற அகங்காரத்தை வேண்டுமானால் தரலாம் அங்கீகாரத்தை அல்ல.

இவ்வனைத்தையும் ஒருவர் கைக்கொண்டால் , விரைவாகவே பெரும் அங்கீகாரத்தையம் ஆசிரிய ஆளுமை என்ற பெரும் வரவேற்பையும்தரும் எந்நாளும் அவரை உயர் பீடத்தில் வைத்து கொண்டாடும்

அடிப்படையில் இவ்வனைத்தும் பயில்வோர் நலன் கொண்டதாக இருந்தால் அதுவே ஆசிரியப்பணியின் மகோன்னதம் .

 பிற சில முக்கிய செயல் நிலைப்பாடுகளை பின்னர் காண்போம் .

நன்றி

அன்பன் ராமன் 

Tuesday, October 15, 2024

“LESS” and more of it

 

“LESS” and more of it

English language is quite rich by its terms, their implications if used singly or in conjunction with another term. At times, this comes in the way of ‘non-native speakers’ who attempt to convey something.

In a Restaurant

On an occasion the guest told the waiter to get a cup of coffee sugar less; the waiter placed the cup of coffee and after a sip the guest screamed- it is bitter; the waiter came running and the guest yelled “no sugar in this?” 

Waiter—‘Yes Sir; the guest: -did I not tell you less sugar?

Waiter: Sir, you said sugarless, guest: yes sugar –less

Now the waiter got what was said and brought out one with some sugar in it.

“Less” before a term and the same after a term can mean drastically different things.

In India, further confusion sets in from regional practices in Indian languages. ‘Less’ as used in English, is used less in regional languages. That doesn’t any way mean that ‘less’ is useless; it is used less in Indian languages. In place of “less” different terms are employed to signify the quantity in respect of the specific item or activity.  Several different qualifying expressions in Indian languages ably work in place of ‘less’ as conceived by native speakers of English.

So, languages of either the Orient or the occident are no ‘less’ in presenting an idea. Struggling for the right use generally arises from the user’s familiarity with the culture in a language. Obviously, the one who struggles --[s]he is ‘less’ familiar with  that domain.

It is not our mission to project ‘less’ any less or lesser than its value/ relevance. However, the glory of the word holds its forte in certain typical statements as under

1 He was honoured by no less a person than the President. 2You are required to furnish a certificate of fitness executed by an authorized Medical officer not lower in rank [less] than a Dean of District HQ hospital.

So, the term ‘less’ is no less in laying down stiff restrictions or emphatic stipulations required for an occasion.

Another occasion is when the two antonyms share parity. These are ‘more’ and ‘less’. Each of them signifies respectively ‘higher’ or lower magnitude or dimension. Yet, they enjoy parity in statements suggesting ‘more or less’ as a clarifying component.

The two opponents were more or less identical in talent.

Before anyone starts cursing me more for ‘LESS’, let me take leave of you for now.  

 

SALEM SUNDARI- 58

SALEM SUNDARI- 58

சேலம் சுந்தரி- -58

ஒரு வழியாக அனைவரும் சாப்பிட்டு , கல்யாண பந்தி முடிந்தது.. சேஷாத்திரி ரா சா விடம் மாலைக்கு என்ன என்றான். ராமசாமி சொன்னார் , அநேகமா எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். ஒரு 15 பேர் இரவு சாப்பிடுவார்கள் அதுனால சிம்பிளா நல்ல டேஸ்ட்டா பண்ணிடு. . [சேஷு பார்த்தான் பெரிய கல்யாணத்தில் மாலை ரிசப்ஷன் சரி கொஞ்சம் சில ஐட்டங்கள் எக்ஸ்ட் ரா வா செஞ்சு அதிலிருந்து இங்கே கொண்டுவந்துடலாம். அதிகமா செஞ்சுட்டா [சில ஐட்டம் ] திருடினேன் னு சொல்ல முடியாது. இல்லாட்டி இன்னோர் 3 பேர் வேலை பாத்தாதான், சரிப்படும்.]. சரி தம்பிகிட்ட சொல்லிட்டா அவன் சரியா பாத்துப்பான். என்று முடிவு செய்து சாயங்காலம் காபி ? என்றான். டேய் இப்ப 2 மணிக்கு நாமக்கல் போயிட்டு 7.30- 8.00 மணிக்கு வந்துடுவோம் அதுனால நீ நைட் க்கு ஏற்பாடு பண்ணி வை என்றார் ராமசாமி. பேச்சோடு பேச்சாக, உனக்கு எவ்வளவுடா தரணும் ? என்றார்  ராமசாமி . எனக்கு என்னண் ணா 60, 00/0- மொத்தமா [மளிகை, லேபர் , வண்டி வாடகை எல்லாமா ], குடுங்கண்ணா போறும் என்றான்.

ஜாஸ்தி கேக்கறியே என்றார் ரா சா .

 எண்ண , நெய், சில பருப்புகள் அநியாய விலை யா இருக்கு; வேற ஒன்னும் அதிகப்படியே இல்லை.என்றான் கேப்டன் கு க் .

சரி ஏதாவது ஏடா கூடம் பண்ணின , நீ தப்பிக்க முடியாது என்று எச்சரித்தார்.

அண்ணா , உங்ககிட்ட மாட்டிக்கறதுக்கு நான் என்ன வெளியூர் ஆளா? . நன் லிஸ்ட் தரேன் உத்தேசமா கணக்கு போட்டு பாருங்கண்ணா புரியும் என்றான் கேப்டன் குக்     . இதுவரை எத்தனை டிபன் காபி சாப்பாடு தாம்பூல பை பட்சண பை  + நாளை காலை சில பார்சல் எல்லாம் லிஸ்ட் கொடுத்தான் சேஷு  . ராமசாமி PK இடம் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டே இந்த சாப்பாடு க்கு எவ்வளவு செலவு வரும் என்று பேச்சுக்கொடுத்தார். PK சொன்னார் சார் நல்ல குவாலிட்டி சாப்பாடு, சில ஸ்பெஷல் ஐட்டம் போட்டிருக்கார் சென்னைல னா அது எக்ஸ்டரா னு தனியா 20.-25000/- போட்டு மினிமம் 85-90,000/- வாங்கிடுவாங்க. என்று சொல்லி, இங்க எவ்வளவு கேக்கறார்? என்றார். ராமசாமி - 60, 000/- கேட்டிருக்கார் என்றார்

தாராளமா குடுக்கலாம் ஏன்னா குறையில்லாத சமையல் தாராளமா பரிமாறினாங்க. கங்க்ராட்ஸ் - நல்ல குக் ஏற்பாடு பண்ணிருக்கீங்க என்று கை  குலுக்கி ரொம்பவே பாராட்டினார்.

ராமசாமி, திருப்தி அடைந்தார்.

சுந்தரியிடம் தொகையை சொல்லி , ராத்திரி செட்டில் பண்ணிடலாம் என்றார் ராமசாமி. அப்போது வந்த மாடசாமி எவ்வளடா என்றார்? சுந்தரியே விடை சொல்ல பரவால்ல ரொம்ப நியாயமா தெரியுது; ரொம்ப சுமார் சாப்பாட்டுக்கே 75000/- கேக்கறானுக, சந்தோசமா குடுத்துருங்க என்றார் மாடசாமி. சுந்தரி ரொம்பவே நன்றிப்பெருக்குடன் இருந்தாள்.

மதியம் 1.45 மணி க்கு 3 பெரிய வேன் களில் சுமார் 25-26 பேர் நாமக்கல் சென்றனர் அம்ஜம் இப்போதுதான் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க போகிறாள் , ராமசாமி, மாடசாமி , PK குடும்பத்தினர் , மேடம் சுபத்திரா ஒரு வேனில் ;ஏனையோர் பிற வேன் களில் .அதில் கார்மெண்ட் முதலாளி பத்மாவதி , சுந்தரியின் சித்தப்பா இன்னும், புடவை செட்டியார் + 2 சேலம் உறவினர்கள் அடக்க்கம். சுபத்திரா மேடம் ஏற்பாடு . வேன் சரியாக 1.50 நிமிடத்தில் கோயில் வளாக பார்க்கிங் பகுதியில் நிற்க, அனைவரும் இறங்கி கோயிலுக்கு சென்றனர் . நெடிதுயர்ந்த ஆஞ்சநேயர் கம்பீரமாக கூப்பிய கரங்களில் துளசி மாலையுடன் அனைவரையும் தெளிவாகப்பார்க்கும் விழிகளுடன் , ஒரே பரவசக்காட்சி.

சுந்தரி ஆஞ்சநேயா என்று சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்க, சுப்பிரமணியும், விசாலாட்சியும் எப்போதுமே ஆஞ்சநேய பக்தர்கள் , அவர்களும் பரவசப்பட்டு வணங்கினர். அம்ஜம் , அம்மாடியோ என்று ஒருகணம் தன்னை மறந்தாள் ஆஞ்சநேயரின் ஆகிருதியில் . மொத்தத்தில் ஒரே பக்தி பரவசம் . PK உமா , கல்யாண கோஷ்டியினர் அர்ச்சனை செய்வித்தனர். சுப்பிரமணி பரவசம் கொண்டான் -திருமணத்தன்று ஆஞ்சநேய தரிசனம் அதுவும் நாமக்கல்லில் , விசாலி ரொம்பவே மகிழ்வுற்றாள்.

கார்மெண்ட் முதலாளி, சித்தப்பா , மற்றும் சேலம் உறவினர்கள் "நாங்க இப்படியே பஸ் சேலம் போயிடறோம் 1 மணி நேரத்துல ஊருக்கு போயிடுவோம் என்று . விடை பெற கார்மெண்ட் பத்மாவதி , கலங்கி சிவந்த கண்களுடன் , விசாலு என்னை மறந்துடாத என்று கை கூப்ப, அப்பிடி சொல்லாதேங்கம்மா என்று அழுதபடியே விசாலி வணக்கம் சொன்னாள். இவளுக்கு அந்த அம்மா தான் PK போல இருக்கு என்று அந்த அம்மையாருக்கு மனதார நன்றி சொன்னான் சுப்பு.. பின்னர் ஓட்டலில் காபி சாப்பிட்டு திருச்சிக்கு வந்தனர் மணி 7.50..

இரவு நல்ல சுவையான டின்னர் ; அனைவரும் மகிழ்ந்தனர். இரவு மண்டபத்தில் தங்கிக்குங்க காலைல 7.00 மணிக்கு காலி பண்ணணும் என்று மாடசாமி சொல்லி விட்டு புறப்பட்டார்.

தொடரும்

நன்றி

அன்பன் ராமன் 

TEACHER BEYOND YOUR IMAGE-19

       TEACHER BEYOND YOUR IMAGE-19 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-19 இன்னும் சில அணுகுமுறைகள் / உத்திகள் BLACK BOARD   AND ...