Monday, December 22, 2025

THE DISLOYAL

THE DISLOYAL

நன்றி மறந்தோர்  

நமது நினைவில் 1971 டிசம்பர் மாதம் கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி மேற்கு பாகிஸ்தானியரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு 'பங்களாதேஷ் ' என்ற புதிய நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது. புதிய நாடு புதிய தலைவலி ஆனதும் அதே நிகழ்வினால் தான். அப்போது இந்திய ராணுவ அதிகாரி Lieut.Gen ஜகஜித் சிங் அரோரா விடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி Lieut.Gen A A K நியாஜி 93,000 ராணுவ வீரர்களுடன் டாக்கா வில் சரணடைந்தார் . உலகின் மிகப்பெரிய சரணாகதி இதுவே என்று பேசப்பட்டது. இவ்வளவுக்கும் காரணம் மேற்கு பாக் அதிகாரிகள், கிழக்கு பாக் வளங்களை சுரண்டி பதவிகளை அனுபவித்ததும், ராணுவம் மற்றும் அரசின்  . . உயர் பதவிகள் எதிலும் கிழக்கு பாக் பிரஜைகளுக்கு இடமோ அங்கீகாரமோ இல்லாமல் வெறும் அடிமைகள் போல் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதுவுமே .               

அறிவு என்ற அளவுகோலில் கி.பாக் மக்கள் மேம்பட்டவர் தான். எனவே கிழக்கில் புரட்சி வெடித்து, இந்திய உதவியுடன் கி. பாக் பங்களாதேஷ் ஆனது.   ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மத அடிப்படையில் பங்களாதேசியர்கள் இந்தியாவை ஏற்பதில்லை. மீண்டும் பாக்கின் கொத்தடிமை ஆகவும் தயார் என்ற நிலையில் இயங்கு கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக  பல  முயற்சிகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.அப்படி ஓர் சமீபத்திய நிகழ்வு தான்     12-12 2025 மாலை நடக்கவிருந்த விவாத அரங்கு = அதில் நீ யார் நான் யார் என்ற தலைப்பில் இந்தியவிரோத வசைபாடல் நடக்க இருந்தது.  தீவிரவாத நடவடிக்கையின் மூளையாக செயல் பட்ட பலர் அவர்கள் எந்த நாட்டில் இருப்பினும் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அழித்து ஒழிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுகளில் யார் கொன்றார்கள் என்பதே வெளியில் வருவதில்லை. மேலும் இவற்றின் திட்டமிடல் அவ்வளவு துல்லியமும் நுணுக்கமும் நிறைந்தது. இந்த அணுகுமுறையினால் தீவிர வாத அமைப்பினர் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம்  யார் செய்தனர் என்பது மிகவும் ரகசியமாகவே இருப்பது வெகு சிறப்பு. உளவு நிறுவனங்கள் மேம்பட்ட உத்திகளை செயல்படுத்தி முள்ளை முள்ளால் எடுப்பதையும் தாண்டி உள்ளூர் முள்ளாலேயே எடுக்கும் வித்தையை  அரங்கேற்றி வருவதால் எவரும் எங்கும் உரையாட வோ முறையிடவோ முகாந்திரம் இல்லை.. இதில் சமீபத்தில் களை யப்பட்ட     நபர் பங்களாதேஷி-திரு உஸ்மான் ஹாதி என்பவர் [இளைஞன்]  இவர் ஏற்பாட்டில் அமைந்த விவாத அரங்கின் அழைப்பிதழில் இந்தியாவின் 7வடகிழக்கு  எல்லை மாநிலங்களை பங்களாதேஷின் பகுதிகளாக காட்டும் வரைபடம் [map] வெளியிட்டு    தன்னை பெரும்       புரட்சியாளனாக பிரகடனப்படுத்தியிருந்தார். 

இது சர்வதேச நடைமுறைகளுக்கு எதிரானது மற்றும் மன்னிக்க இயலாத ஒழுங்கீனம். பெரும் நாடுகளே செய்யத்துணியாத அசிங்கம். 

 இவர் அந்த கருத்தரங்க நிகழ்வு மாலையில் நடக்க வேண்டிய அன்று மதியம் சுமார் 2 மணி அளவில் நடுத்தெருவில் அடையாளம் தெரியாத இருவரால் தலையில் சுடப்பட்டு , கோமா நிலையில் ஆழ்ந்து சிங்கப்பூரில் தீவிர சிகிச்சையும் பலன் தராமல் Dec 18ல் மாய்ந்தார். இது மேலோட்டமாக இருந்தாலும், இதன் அடித்தளம் மிக வீரியமானது. அதன் தன்மைகளை மற்றும் நீண்ட வரலாற்றை  திரு ஆசிர்  விளக்குகிறார். கேட்டு அறிய   

இதோ இணைப்பு

இந்தியா செய்த நன்றியை மறந்த பங்களாதேஷ்,தொடர் வன்முறையில் தவிக்கும் அவலம்,ஆப்ரேஷன் சர்ச் லைட் 1971 - YouTube

***************************************************

Sunday, December 21, 2025

THE POT -A GLOBAL DELIGHT

 THE POT -A GLOBAL  DELIGHT 

பூமியை வலம் வரும் மண் பாண்டம்

என்னது மண்பாண்டமா ? என்று யாரும் வியப்போ விசனமோ கொள்ள வேண்டாம். ஆம் நாம் இப்போது சந்திக்க இருப்பது கடம் என்ற பானையைப்பற்றி தான். அட போய்யா கடப்பானையில் என்ன பெரிய விஷயம் இருக்கும் என்று ஏளன முறுவல் பூக்கும் நண்பர்களே , நீங்கள் [என்னையும் சேர்த்துதான் ] நினைத்திராத தகவல் மற்றும் வரலாற்று பொக்கிஷம் தான் -கடம் என்றறியப்படும் இந்த மண் பானை. உலகெங்கும் புகழ்பெற்ற இந்த பணி மற்றும் பானை இரண்டின் தாய் மண் -மானாமதுரை என்ற சிற்றூரே. இது ராமநாதபுர மாவட்டத்தின் ஒரு சில சிறப்புமிக்க ஊர்களில் ஒன்று.. அப்படி என்ன சிறப்பு ?

ஸ்ரீரங்கம் ஒரு தீவு என்றால் மானாமதுரை இரு கூறாகப்பிளக்கப்பட்ட  ஊர். பிளப்பது வைகை நதி . நதியின் இரு கரைகளிலும் இருக்கும் பகுதிகளே  மானாமதுரை.. இரு பகுதிமக்களும் எதிர்ப்புறம் இருக்கும் பகுதிகளை பொது மக்கள் மிகுந்த அக்கறை யுடன் அக்கரை மக்கள் என்று அடையாளப்படுத்துவர்.

கடம் செய்ய வைகை படுகை சார்ந்த பகுதிகளில் எடுக்கப்படும் மண் மிகச்சிறந்தது என்றே வலிமையாக உலகெங்கணும் உணரப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சுமார் ஒரு ஆண்டுகாலத்தேவைக்கு வேண்டிய மண்ணை சேமித்துவைத்துக்கொள்வார்களாம் [RAW MATERIAL PROCUREMENT]

மேலும் பானை வடிவமைப்பில் 5 மண்   வகைகளை முறையான விகிதத்தில்   கலக்க வேண்டுமாம். இந்த மண் வகைகளின் விகிதம், பதம் இரண்டும் பானையின் நாதத்திற்கு அடிப்படை.  இந்த நாத வெளிப்பாடு மண்ணின் தன்மை என்பதால் இந்தக்கலவையை முறையான பக்குவத்தில் உருவாக்கி, முறையாக பாதுகாத்து வடிவமைத்து. தீயில் சுட்டு வலுப்படுத்தினால் தான் பானைக்கு ஆயுள். அது மட்டுமல்ல இதில் பேசப்படும் ஒரு மண் வகை இரும்புத்தாது கொண்டதாம். அதன் விகிதம் தான் பானையின் கணீர் ஒலி க்கு     ஆதாரம்.. அது மட்டுமல்ல பானையின் உடலெங்கும் சுவற்றின் கனம் [WALL THICKNESS] ஒரே சீராக [UNIFORM ] இருப்பது அவசியம். இல்லையே ல்     சுருதி சுத்தம் தகர்ந்து       கட வித்துவான்   மார்க்கெட் நாசமாகும். இத்தனை நிபந்தனைகளையும் ஒன்று கூட பிசகாமல்  வடிவமைக்கும் மனித கைகளின் உரிமையாளர் திரு ரமேஷ் [50] அவர்கள் கடம் செய்வதில் 40+ ஆண்டு அனுபவம் [9 வயது முதல் இதே தொழில்] சுமார் 120 ஆண்டுகால குலத்தொழில் கடம் தயாரிப்பது. உலகெ ங்கும் விரவிக்கிடக்கும் கடவித்தவான்கள் அவ்வப்போது படையெடுக்கும் ஊர் மானாமதுரை மற்றும் அங்கு  உள்ள திருரமேஷ் அவர்களின் தொழிற்கூடம் தான்.  தமிழகத்தின் பெருமை மிக்க கடவித்வான் திரு விக்கு விநாயக்ராம் 3 தலைமுறைகளாக கடம் வாங்குவது திரு ரமேஷ் அவர்களிடம் தான். கட வித்துவான் களுக்கு இணையான நாத ஞானம் திரு ரமேஷ் அவர்களுக்கும்  இருப்பதால் ஒவ்வொரு கட கலைஞருக்கும் தேவையான நாதஸ்வரூபங்களும், TONE எனும் ஒலி அதிர்வுக்கு தேவையான மண் கலவை , பதம், சுட்டு வலிமை ஆக்குவது மற்றும் பானையின் வடிவமைப்பு இவற்றில் சிறப்பான கவனம் செலுத்து வதால் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அனைத்து இசைக்கலைகனர்களும் இவரின் ஒத்துழைப்பே தங்களுக்கு உரிய தொழில் பாதுகாப்பு என்று உணர்ந்துள்ளனர். பானையின் தோள் பகுதி, கழுத்தின் உயரம், வாயின் அளவு இவற்றால் பானையின் த்வனி வேறுபடும். 12 ஸ்கேல் வகைகளின் எப்போதும் கடம் தயார் நிலை யில்  வைத்துள்ளார் திரு ரமேஷ் அவர்கள். அவர் சொல்வது எவ்வளவு முயன்றும் 100% சுத்தமாக கடம் தயாரிக்க இயலவில்லை தற்போது 60% அளவிற்கே வெற்றி எட்டியுள்ளோம் என்கிறார் மேலும் ஒவ்வொரு கடமும் ஒலிஅதிர்வில் 2, 21/2 கட்டை என்பதை விரலால் தட்டி  அடையாளம் சொல்கிறார் திரு ரமேஷ் அவர்கள். இந்த கலை நசித்துப்போகாமல் இருக்க அரசினர் உதவி இருந்தால் நன்கு இருக்கும் எங்கிறார்..  இவரது பட்டறை எளிமையான நாட்டுப்புற இல்லம் தான் ஆயினும் இந்திய ஜனாதிபதியின் விருது பெற்றவர் திரு ரமேஷ் அவர்களின் தாய் என்பது பெருமை தரும் செய்தி அல்லவா? 

விடியோவை ஆழ்ந்து   கவனித்து அறிய தகவல்களை உணரலாம்.  

https://www.youtube.com/watch?v=MmkPBg_Pq-I&t=62s

THE DISLOYAL

THE DISLOYAL நன்றி மறந்தோர்   நமது நினைவில் 1971 டிசம்பர் மாதம் கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி மேற்கு பாகிஸ்தானியரின் பிடியில...