Wednesday, March 18, 2026

KALYAN KUMAR

 KALYAN KUMAR

கல்யாண் குமார்

நடிகர் கல்யாண் குமார் 1960 களின் பிற்பாதியில் தமிழில் நடித்து வெற்றி பெற்ற கன்னட நடிகர். அவர் அன்றைய மைசூர் மாநிலத்தில் பிரபல சூப்பர்ஸ்டார்

தாய்மொழி தமிழ் [மைசூர் ஐயங்கார்]. அதனால் தமிழ் பேசி நடிக்க முடிந்தது. அந்நாளில் சொந்தக்குரலில் பேசவேண்டும். வேறு வசதிகள் இல்லை. எனினும் தமிழில் முதல் படமாகிய "நெஞ்சில் ஓர் ஆலயம் " அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. நெஞ்சில் ஓர் ஆலயம் பல சிறப்புகள் கொண்டது. அதில் கதை , இயக்கம் நடிப்பு, ஒளிப்பதிவு பாடல்கள் இசை காட்சியமைப்பில் கோணங்கள் என பன்முக பெருமை கொண்ட சித்திரம் அவை குறித்த பல தகவல்களை பகிர்கிறார் திரு சுரா அவர்கள். நல்ல விவரங்கள் கொண்ட பதிவு. கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=bFMKPZlRyuU kalyaanakumar –cvs Vincent Sura

Tuesday, March 17, 2026

LET US PERCEIVE THE SONG -61

 LET US PERCEIVE THE SONG -61

பாடலை உணர்வோம் -61

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே [தர்மம் எங்கே - 1972] கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலா

இது போன்ற ட்யூன்களை எப்படி கற்பனை செய்கிறார்     எம் எஸ் வி என்பதே பெரும் கேள்வி மற்றும் சிந்தனைக்குரிய ஒன்று. ஏன் எனில்,  கேட்ட மாத்திரத்தில் ஊது வத்தியின் நறுமணம் போல் விடாமல் வியாபித்து நிரப்புவதைப்போல் காது வழியே நுழைந்து மனதில் நிறைந்து சிந்தனையில் தவழ்ந்து மனதில் சுழன்று கொண்டே இருக்கும் வலிமை -இப்பாடலின் சிறப்பு.

இப்பாடலை அதிகம் கேட்டதில்லை என்போர்கூட ஒரு முறை கேட்ட பின் நீண்ட நெடிய பரிச்சயப்பட்ட ஒலிக்கலவை நம்மை பின்னி படர நாம் வயப்படுவதை உணரலாம். அப்படி என்ன இந்தப்பாடலில் என்றால் சொல்லி விளக்க இயலாது , கேட்டபின் மறக்க இயலாது.

ரீங்காரம் என்பது என்ன என்பது இப்பாடலை கேட்ட பின்னர் குறைந்த பட்சம் உணரவாவது  இயலும்.

இதில் ரீங்கரிப்பது என்ன ?                                                           சொல்லா , சுவையா , ஒலியா , இசையா என்று கேள்விகளால் தேடித்துருவினாலும் எண்ணற்ற விடைகள் தோன்றும

முதலில் உணர்வது இனம் புரியாத வசீகரம் அது அந்த குரல்களின் ஒருங்கிணைப்பில் தோன்றி நெடுகிலும் வியாபிக்கும் ஒரு மென்மையான நாத சாந்தம் என்றே சொல்ல தோன்றுகிறது. அதுவே எம் எஸ் வியின் மந்திர ஜாலம் அவர் ஒரு ம்யூசிக் மெஜீஷ்யன் , நினைத்த படி அவர் நினைத்தபோது கண்ணை மட்டுமல்ல நமது அனைத்து புலன்களையும் எளிதாக கட்டிப்போட்டு விடுவார். அவரின் ஒலிக்கோர்வைகளை ரசித்துப்புரிந்து கொண்ட மனங்கள் வேறெந்த ஆசைக்கும் ஓசைக்கும் அடிபணியாது. அதை அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே புரிந்து கொள்வது சாத்தியம். 

இன்றைக்கும் எம் எஸ் வியின் இசைக்கு இவ்வளவு வரவேற்பு மங்காமல் தொடர்கிறதென்றால், அவற்றின் இசை கட்டமைப்பு வெகு இயல்பும் நேர்த்தியும் பின்னிப்பிணைந்த கலவை என்பதோடு பிசிர் என்ற சொல்லுக்கு  பிசிராளவுக்குக்கூட இடம் கொடாத அற்புத ஒலி ச்சங்கமம். அவரது இசை முரண்கள் இல்லாத ஒலிசாம்ராஜ்யம் அது அவரின் இசைராஜாங்கம். அதில் ஒன்றே இப்பாடல்

ஊடலுக்குப்பின் தொடங்கும் இப்பாடல் கவியரசர் கண்ணதாசனின் யாப்பு , சொல்ல வேண்டுமோ பாடலில் மிதமிஞ்சி ஊடாடும் எதுகை மோனை ஒரு புறம் , மறுபுறம் சிருங்கார ரசம் சொட்ட சொட்ட உதிர்த்துள்ள சொற்கள் 

ஆண் /பெண் பேதமின்றி போட்டியாக விழும் வர்ணனைகள். குரல்களின் நளினத்தில் பாடலை கவனிக்காமல் விட்டு விடுவார்களோ என்ற ஐயம் போலும் பாடல் நெடுகிலும் வீடியோவில் கீழே  கவிதை  பிழையின்றி ஓட வேறு வகை அனுபவம் [பல பாடல்களில் கவிதை தப்பும் தவறுமாக எழுதப்பட்டு கவியை  அவமானப்படுத்தும் அவலங்களை நிறைய பார்த்துள்ளோம். இப்பாடல் அவ்வாறில்லை -நல்ல வேளை] . பாடலின் செம்மையான சுவை கோரஸில்  புதைவந்துள்ளது. இசையை விட கோரஸ் வழங்கியுள்ள ஒலி  ஆதாரம் வெகு அற்புதம்.

பாடல் நெடுகிலும் சிறு மாற்றம் கூட  இல்லாத ஒரே ட்யூன் , பல்லவியில் தொடங்கி இறுதி வரையில் ஒரே சீரான ட்யூன் ஆயினும் கேட்பதற்கு வெகு நளினம் . ஒரே ஒரு உத்தி பாடலில் முதலில் பல்லவியை பாடும் இருவரும் பின்னர் வரும் பல்லவிகளில் பள்ளியறைக்குள் வந்த என்று 'வந்த' என்று சொல்லி இடைவெளிவிட்டு டிஎம்எஸ் தொடர  அதே போல் சுசீலா அள்ளியிறைக்க வந்த என்று நிறுத்திப்பின்னர் கள்ள நகையே என்று தொடர்கிறார். ஆனால் பாடலில் ஓட்டம் வெகு விரைவாக இருப்பது போல் ஐயோ பாடல் முடிந்து விட்டதே என்றே ஏக்கம் கொள்ள வைக்கிறது .

இப்பாடலில் நான் கண்ட  விசேஷம். எந்த வகையான வர்ணனை ஆயினும் கற்பனையாக அமைத்து இப்பாடலின் ட்யூனில் பொருத்திப்பாடிப்பாருங்கள் வெகு சிறப்பாகப்போருந்தும் அப்படி ஒரு சர்வ வியாபி இந்த ட்யூன். பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=mpHuExzw20o                                                   Palli araikkul vandha dharmam enge KD  MSV TMS PS [1972]

Monday, March 16, 2026

THE PRESENT

 THE PRESENT

தற்போது

இன்றைய மேற்காசிய சூழலில் பதற்றம் , பொருள் சேதம், உயிர் சேதம் , அழிவு, மூர்க்கத்தனமான எதிர்வினைகள் , ஒருவரை ஒருவர் போடா சரிதான் என்று சொல்லாத குறையாக நிகழ்வுகள் ஒரு புறம், விமானங்கள் கூட நினைத்த வழித்தடங்களில் செல்ல முடியவில்லை

கடல் வழியை மூடிவிட்டோம், வான் வெளியில் வந்தால் தாக்குவோம் என்று ஒரே எச்சரிக்கை. இவை ஒருபுறம் இருக்க , அசராமல் எப்போதும் போல் இயங்கிவருவது இந்தியா மட்டுமே எனில் தவறல்ல

இவ்வளவையும் தாண்டி பல தலைவர்கள் அவரவர் இருப்பிடங்களிலேயே தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலவரம் . எப்படி பார்த்தாலும் நவீன போர் முறைகள், அறிவுசார் நுட்ப மதியின் துணை கொண்டே முன்னேற்றமும் வெற்றியும் பெறுகின்றன.. இதில் செயற்கை நுண்ணறிவு வேறு பயன் படுகிற நிலை

கருவிகளை விட குருவிகளின் பங்களிப்பே அதிகம் ஆம் உளவுப்பிரிவுகள் எப்படி இயங்குகின்றன எவ்வளவு ஆழ்ந்த திட்டமிடல் மற்றும் தீவிர கவனம் இரண்டும் தொடர்ந்து செயல் பட்டு, எதிர்பாராத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத வேகத்தில் மாற்று சர்வ நாச பலம் கொண்டு அரங்கேற்றப்படும் நவீன முறைகள் என பட்டியல் நீள்கிறது

இவற்றின் வெகு நுணுக்கமான தகவல்களை திரு எஸ் கே [SKA  தனக்கே உரிய தெளிவும் வேகமும் பட்டியலும் கொண்டு விளக்குகிறார். ஊன்றி கவனித்து அவர் தரும் தகவல்களை உள்வாங்கி பயன் பெறுவீர் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Agc7yN5qqj0 the present SKA

                                           ********************

Sunday, March 15, 2026

A SURPRISE IN SRIRANGAM

 A SURPRISE IN  SRIRANGAM

ஸ்ரீரங்கத்தில் ஒரு ஆச்சர்யம்

ஆஹா மதுரை முடிந்துவிட்டது ஐய்யா!!! ஐய்யா! என்று குதிக்க வேண்டாம். எப்படியும் இன்னும் வரத்தான் போகிறது. பின் ஏன் திடீரென்று ஸ்ரீரங்கம் என்கிறீர்களா? அதில் தானே சூட்சுமம் இருக்கிறது . மாலை வேளையில் ஸ்ரீரங்கத்தில் டிபன் என்று தலைப்பிட்டு திரு மனோஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அப்படியா என்று வியந்து ஏமாந்தேன்.இந்த வீடியோ பதிவிட்டவர்கள் :மாலையில் ஸ்ரீரங்கத்தில் டிபன் என்று குறிப்பிட்டதைப்பார்த்து நான் இதை ஆச்சர்யம் என்று பெயரிட்டுள்ளேன் எனினும் மாலையில் என்பது சுமார் 4-30மணி  முதல் 6.00 வரை என்பது பொதுவான புரிதல் . போன வாரம் தான் ஸ்ரீரங்கத்தில் மாலையில் சுமார் 5.00 மணிக்கு ஒன்றும் கிடைக்காது என்று எழுதியிருந்தேன் னால் இப்படி ஒரு வீடியோ வந்துள்ளதே என்று பார்த்தேன். இந்தமாலை உணவு 6.30 மணிக்குமேல் 9,30 மணிக்குள் தானாம் அதானே பாத்தேன் ஸ்ரீரங்கத்துல யாவது .  மாலையில் டிபன் ஆவது . போகட்டும் இந்த அமுது என்ற உணவகம் அம்மாமண்டபம் சாலையில் ஸ்ரீராமபுரம் அணுகுசாலையில் உள்ளதாம்.. அதிலும் வேட்டு  விட்டான் என்பது போல பூரி வடை போன்ற பொறித்து எடுக்கும் உணவுகள் கிடையாது ,இட்டலி ,தோசை ,ரவா தோசை , கொல்லிமலை மிளகு தோசை என்று ஒரே பெருமை. கொல்லிமலை மிளகு இல்லை என்றால் அந்த ஐட்டமே கிடையாது என்று விரதம் பூண்டு        நடக்கும் உணவகம். கல்லின் விளிம்பு வரை ஊற்றப்படும் பெரிய  தோசை, 7 வகை சட்டினிகள், சாம்பார் என்று பெருமைகள் இவ்விடத்திற்கு சொல்லப்படுகிறது.  இப்படி பல விநோதங்கள் கொண்ட உணவகம் இது. .

https://www.youtube.com/watch?v=zKH6QX0t90Y

Sriraamapuram approach road, ammaamandapanm Srirangam

மற்றுமோர் உணவகம் குரு கிருபா ராஜகோபுரத்திற்கு வெளியே காவல் நிலையத்திற்கு எதிர் பகுதியில்.

இதையும் சிலாகித்து வீடியோ வந்துள்ளது. பூண்டு வெங்காயம் அமாவாசை, கிரஹணம் என்ற சாஸ்த்ர ஸம்ப்ரதாயங்களுடன் இயங்குகிறது.

https://www.youtube.com/watch?v=OUXgx6BKqZs  gurukripa near Police station SRGM 

ஆனால் ஒன்று---  இது போன்ற உணவகங்களை பதிவிடும் நபர்கள் கிட்டத்தட்ட எல்லா உணவுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அசராமல் சாப்பிடுகிறார்கள். அதுவே கூட உணவு சுவையாக இருப்பதாக ஒரு எண்ணத்தைதோற்றுவிக்கும். எதுவாயினும் சுற்றுலா வில் வரும் மாந்தர்க்கு இதுபோன்ற வீடியோக்கள் ஒரு உதவியாக இருக்கும்,

நன்றி

அன்பன் ராமன்

 

Saturday, March 14, 2026

Oh Language -22

 Oh Language -22

In addition to what we have so far seen, let us consider the following

‘Unlawful’, ‘Unmindful’, ‘Unnerving’, ‘Unopposed’, ‘Unpardonable’, ‘Unquestionable’, ‘ Unreserved’, ‘Unsolicited’,  ‘Untie’, ‘Unusual’, ‘Unveil’, ‘Unwell’, ‘Unwieldy’, Unwitting’  etcetera. Each is meant to negate its root word. 

‘Unlawful’

The term refers to any act or happening not permissible by law. For instance, ‘to barge into a surgical theatre of any hospital by general public is an ‘unlawful act’.

‘Unmindful’

The term refers to an attitude of not paying attention to all details to understand any prospective possibility. It is a kind of ‘careless disposition’.

‘Unnerving’

The term refers to a mental state where a person is deeply disturbed or fearing of some untoward disturbance upon hearing some information.

‘Unopposed’

The expression indicates a state of unquestioned acceptance. Preferably it is ‘pronounced ‘un- opposed’. Often in India the term is pronounced annapost [the term in Tamil can be misread for a place to eat as it sounds "அன்ன போஸ்ட்" to Tamils] 

‘Unpardonable’

The term suggests the gravity of some action which cannot be forgiven or treated as ‘minor error’.

‘Unquestionable’

The term indicates ‘certainty’ in an observation and that there is no room for ‘doubt’ or suspicion.  

‘Unreserved’

The expression refers to specific arrangement like booking of rooms or seats and ‘unreserved ‘implies not set apart’ for a person or a group’. ‘Unreserved’ can also be used in the context of expressing opinion as in ‘there were free flows of critical comments unreserved [without limit].   

‘Unsolicited’

The term indicates any action performed without a request or call for some intervention. Upon the news of earthquake, funds / dress material stated flooding in ‘unsolicited’. Another situation is “Please avoid tendering advice ‘unsolicited’.

 ‘Untie’

The term refers to the step of relaxing or opening a knot to ‘free’ something from the packing.  

‘Unusual’

‘Unusual’ means not common or expected [not usual ].  

‘Unveil’

To remove the veil or cover and show the object for public view as in “The minister unveiled the statue of the freedom fighter”.

‘Unwell’

‘Unwell’ is a common expression to indicate the state of illness or sickness.

‘Unwieldy’

The term refers to ‘large or big size’ posing problems for easy movement. His luggage was unwieldy and he had to pay a hefty sum to the porters to bring it home. 

‘Unwitting’

The term refers to a state of ‘doing something without a plan or motive’ [not realizing what may happen as a consequence]; People suffer from temptations of promises rather unwittingly.  

                          *************************

KALYAN KUMAR

  KALYAN KUMAR கல்யாண் குமார் நடிகர் கல்யாண் குமார் 1960 களின் பிற்பாதியில் தமிழில் நடித்து வெற்றி பெற்ற கன்னட நடிகர் . அவர் ...