I perceived the song ['Roja malare Rajakumari']
பாடலை உணர்ந்தேன் [
இது ஒரு வினோத சூழல்.
படம் என்ன கதை என்ன காட்சி என்ன எதுவும் தெரியாது. பின் எதற்கு பாடல் ? அதுதான் அன்றைய சோதனைக்களம்.
புதிய இயக்குனர் ஏ சி திருலோகச்சந்தர், பாடல் காட்சியை எடுத்து தன்னை நிரூபிக்க வேண்டும். இது ஏ வி எம் நிருவன த்தில் முதல் வாய்ப்பு ஏ சி டி அவர்களுக்கு..
வந்தார் கவியரசு அங்கே எம் எஸ் வி இருக்கிறார்.
காட்சி?
தயாரிப்புக்குழு விழிக்க கவிஞருக்கோ எதற்கு வரச்சொன்னீர்கள் என்ற கோப முகம், எம் எஸ் வி முறைக்க அவர் எதிர் முறை முறைக்க ஒரே அமைதி.
திரு சரவணன் இப்படி ஆரம்பிக்கலாமே -ஒரு டூயட் தானே என்று 'ரோஜாமலரே ராஜகுமாரி ' என முதல் வரி சொல்ல கவிஞர் பணக்கார இளவரசி --ஏழை காதலா என்று கேட்டுவிட்டு ம ள ம ள என்று கொட்டி தீர்த்த கவிதை இது. எவ்வளவு உண்மைகள் பாடலில்
"-வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது , கோட்டையின் மீதே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது" மற்றும் ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலர் உண்டு" என்று ஆண் தன்னிலை விளக்க
'மன்னவர் நாடும்
மணி
முடியும்
மாளிகை
வாழ்வும்
தோழியரும்
, பஞ்சணை
சுகமும்
பால்
மணமும்
படையும்
குடையும்
சேவகரும்
ஒன்றாய் இணையும்
காதலர்
முன்னே
கானல்
நீர்
போல்
மறையாதோ'
என்ற
தர்க்கம்
பேசும்
பெண்.
இவ்வாறு இருவர் ததத்தம் நிலை உணர்த்த, இசை அமைப்பில் தனக்கென ஒரு இடம் பிடித்த டூயட் இது எனில் மிகை அல்ல. ஆ , அந்நாளில் கேட்டிராத மண்டோலின் , போங்கோ, கோரஸ் ஒலிகள் அதி விரைந்த மீட்டலில் எம் எஸ் ராஜு வழங்கிய மாண்டொலின் இன்றும் கூட பேசு பொருள், போங்கோ இவ்வளவு நெருக்கமாக பாடலில் ஒலித்தது இந்தப்பாடலுக்கே .
அதுவும் இசை கோரஸ், குரல் தாளம் என ஒன்றை ஒன்று வேட்டை ஆடுவது போல் துரத்துவது 1963ல் அரங்கேறிய எம் எஸ் வியின் இசைக்கோர்ப்பு காட்டிய கம்பீரம்.
பாடலின் துவக்கம் ஒரு மாடு
மேய்க்கும் சிறுவனின் புல்லாங்குழல் சுருதியில் இரு மனம் ஒன்றி ஆ ஹ ஹா ஹா ஹ ஹா என்று.
இறுதியிலும் இதே அமைப்பு அந்நாளில் புதுமை. பலரையும் கட்டிப்போட்ட பாடல்
பண்டிட் விஸ்வேஸ்வரன்
இப்பாடலை
'சிரஞ்சீவி'
என்பர்.
நான்
சொல்ல
நினைப்பது
இது
சிரஞ்சீவி
மார்க்கண்டேயன்.
இது
போல்
முற்றிலும்
ஏற்புடைய
டூயட்
இப்போது
சல்லடை
போட்டு
தேடினாலும்
கிடைக்காது.
இப்பாடலுக்கு ஒரு
QFR இணைப்பு
உள்ளது
QFR இணைப்பில்
எனது
இளைய
சகோதரன்
திரு
முகுந்தனின்
புதல்வர்
திரு
அரவிந்த்
அழகாகப்பாடியுள்ளார்.
பாடல்களைக்கேட்டு
புரிந்து
கொள்ளுங்கள்.
கருத்து /
விளக்கம் /
விமரிசனம்
எதையும்
கேட்கவில்லை பாடல்களைக்கேளுங்கள் அவரவருக்கு
புரிந்த
வகையில்
புரிந்துகொள்ளுங்கள்.
வேறு
விளக்கங்கள்
சொல்லி
எழுத
மனம்
இல்லை;எழுதினால்
தான்
என்ன?
பலன்
ஒன்றும்
இல்லை.
நம் மக்கள்
எதை
நாடுகிறார்கள்என்று புரியவில்லை. பிறர்
மனைவி /
கணவனை
அபகரிக்கும்
புரட்சி
நாடகங்களை
நாள்
முழுவதும்
கண்
விழி
பிதுங்க
பார்த்து
அதை
வைத்து
எதையாவது
விவாதிப்பார்கள்.
அவர்களிடம்
கிளைமேட்,
லா
நினா
என்றெல்லாம்
பேசினால்
அவர்கள்
கௌரவத்துக்கு
இழுக்கு
என்பதை
மெதுவாகவே
உணர்ந்தேன்.
நீ
உணர்ந்தால் என்ன உலர்ந்தால் என்ன
என்று
சீரியலில்
தவம்
கிடைக்கும்
மாந்தரிடம்
வேறென்ன
எதிர்
பார்க்கலாம்?
'ஆசை வைக்காதே அவதிப்படாதே' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது
இணைப்புகள் இதோ
https://www.youtube.com/watch?v=pqgAS7mzZjA&t=5s
Roja malare
KD VR PBS PS WATH CG’s bongo play Raju’s Mandolin
https://www.youtube.com/watch?v=WZWbeX-A158
qfr Roja malare Arvind
நன்றி
அன்பன் ம
வ