Thursday, September 17, 2026

NEEM -3

 NEEM -3

The grandeur of Neem is not a matter of any push over in the sense that the tree serves humanity in ways known and unknown to us. Its dimensions include social, cultural, religious, spiritual, medicinal and  ritual facets. Every social arrangement has a place of pride for this tree.

Much of the deep faith placed on this tree is based on its ability to serve as an anti-microbial agent; I would go a little beyond to name its potential as ‘Anti-biotic’, as several insects , bacteria and fungi that readily invade any wood [except Teak and a few other wood types] rarely manage to ‘attack’ even fallen wood of ‘Neem’. So, it holds a wealth of chemical compounds that serve to protect varied items of value to human life.

 Neem gum

It is a well-known natural exudate from living mature trees upon physical injury to the wood. Chemically it is a ‘resin’ used as a binder and in Silk dyeing. Besides, it is an agent used in medicine to serve as a slow-releasing agent and as a film coat.

Pest and disease control

Azadirachtin –a natural compound in ‘neem’ is a powerful insecticide and is sprayed as a water-based product on crops.

Neem cake [solid residue from oil extraction] is used as a fertilizer both to add nutrients to soil and also as repellent of several worms and pests in land.

Bio-pesticide

Neem seed extracts contain limonoid triterpenes that are effective in containing ‘destroying pathogens’. Advanced approaches are used to extract the compound to derive absolutely aseptic products to enhance their efficacy as bio-pesticide.

These are some major aspects for the benefit of humanity from ‘Neem’.

**********************************************************

Wednesday, September 16, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION

 MSV’s APPROACH  TO SONG COMPOSITION  

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்

ஒரு இசை அமைப்பாளரின் தொழில் அணுகுமுறை PROFESSION  APPROACH ] பற்றி அறிந்து கொள்ள

1 தொழில் ரீதியிலான / வர்த்தக முறையிலான தேவைகள் [இசை வகைகள், ஸ்வர ஞானம், ஸ்வர அடுக்குகள் வெளிப்படுத்தும் ராக லட்சணங்கள்] பற்றிய தெளிவு

2 சமகாலத்திய நடை முறை அணுகுமுறைகள் [ஒலி அமைப்பு, கருவிகள், தாள வகைகள் ]

3 அந்த குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பிரத்தியேக விருப்புகள் [ எம் எஸ் வி அவர்களுக்கு பியானோ, போங்கோ, கோரஸ் , ஷெனாய், குழல் மற்றும் பாடுவதில் மாறுபாடு எனும் உத்தி]

4 அந்த இசை அமைப்பாளர் எப்படி ஒரு மந்திர வாதி போல மக்களின் ரசனையை மெல்ல மெல்ல மாற்றி தன் இசை அமைப்புக்கு தயார் படுத்துகிறார்.

[திரு எம் எஸ் வி அவர்கள்சுமார் 3 - 5 ஆண்டு கால இடை வெளியில் வெவ்வேறு இசைக்கோலங்களை அரங்கேற்றியமை அவரின் இசையை கீரிப்பிள்ளை போல் உற்று நோக்கி வந்தவர்களுக்கு விளங்கும்.           ஆனால்  ஏன் எதற்கு என்பதெல்லாம் இறைவனுக்கே வெளிச்சம்.

அவரின் வெற்றி இரண்டு குறியீடுகளால் சிகரம் தொட்டது  ] கடுமையான உழைப்பு ] நான் அப்படி செய்தேன் இப்படி செய்தேன் , இதற்கு முன் யாரும் செய்யாததை நான் தான் செய்தேன் என்று அவரது 60 ஆண்டு இசைப்பயணத்தில்  ஒரு முறைகூட சொன்னதில்லை. ஏதாவது கேட்டால் மேல் வானத்தை நோக்கி கையை காட்டிவிட்டு கடந்து போய் விடுவார்..

இவரை முறையாக அறிந்து கொள்ள எண்ணற்ற தகவல்களையும் நுணுக்கங்களையும் ஒரு சேர இணைத்துப்பார்க்கும் இசைத்திறன் வேண்டும்.

இவை கைவரப்பெற்ற திரு முரளி அவர்களும் இசை கலைஞர் திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்களும் [எவரும் தொடவே பயப்படும்]  'கலைக்கோயில் ' / 'கர்ணன் ' பட  பாடல்களை அலசுகிறார்கள் .

நம்மில் பலர் இவ்விரு ஆய்வாளர்களைக்காட்டிலும் ஆழ்ந்த விற்பன்னர்கள். எனவே அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. 3, 4 நாட்கள் ஆனாலும் இவற்றை [ஏறெடுத்துப்பார்க்க] போகிற போக்கை பார்த்தால்  G-pay / paytm செய்யச்சொல்வார்கள்.போல் தோன்றுகிறது.  அவ்வளவுக்கெல்லாம் வழியில்லை - அது குருடனை ராஜ விழி விழிக்க சொல்வதற்கு ஒப்பானது. ஏற்கனவே விழிபிதுங்க விழித்துக்கொண்டிருக்கிறேன் .

விருப்பமுள்ளோர் பின் வரும் இணைப்பை உபயோகியுங்கள்

https://www.youtube.com/watch?v=xVq2aBQLt6U   MURALI –PRIYA ON KALAIKOIL KARNAN SONGS     


                                                      17-09-26

இன்று அன்னை மீனாட்சியை நினைவு கொள்ளாமல் எப்படி இருப்பது? அவளது திருக்கோயிலில் இன்று குடமுழுக்கு [கும்பாபிஷேகம்]. மனதில் மதுரை நிழலாடுகிறது. அதன் பிரதிபலிப்பாக  திரு கண்ணதாசன் , பி சுசீலா, கே வி எம் பங்களித்த முகூர்த்த நாள் படப்பாடல் -கேட்டு மகிழ்வீர்

         https://www.youtube.com/watch?v=EY929HsSKoY  audio maanikka

நன்றி  அன்பன்


Tuesday, September 15, 2026

PROJECT VISHNU

 PROJECT VISHNU

அதி வேக ஏவுகணை  [விஷ்ணு திட்டம்]

ப்ரஹ்மோஸ் என்ற ராட்சச ஏவுகணையினை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் பராக்ரமத்துடன் உருவாக்கப்பட்டு பலரையும் பீதிக்கு உள்ளாக்கும் வகை ஏவுகணை தயாரிக்கும் திட்டம் தான்  PROJECT VISHNU என்றழைக்கப்படுகிறது.

இதன் செயல் பராக்ரமங்கள் பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. ஏன் எனில் ப்ரம்மோஸ் ரஷ்ய -இந்திய கூட்டு முயற்சி. அதன் அத்தனை சிறப்புகளுடன் மேலும் மேம்பட்ட செயல் திறன் வேகம் வீச்சு என அனைத்திலும் ஏற்றம் கண்டுள்ளதால்  இது ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணை.

சூப்பர்சானிக் ஏவுகணைகள் ஒலி யின் வேகத்தை விட அதிக வேகத்தில் பாய்வன. சூப்பர்சானிக் ஏவுகணையை விஞ்சும் வேகம் கொண்டவை ஹைப்பர் சானிக் ஏவுகணைகள். இவ்வேகத்தின் குறியீடாக MAC /MACH என்ற சொல் பயன்படுத்துவர். MAC 2 எனில் ஒலி யின் வேகத்தை விட இரு மடங்கு வேகம் உடையது .ப்ரம்மோஸ் வகை MAC 3, 3.5 என்ற வேகம் உடையவை. இந்த வேகம் ராம்ஜெட் வகை எஞ்சின் மூலம் கிடைக்கிறது.

இதன் தகப்பன் போன்ற வேகம் கிடைக்க ஸ்க்ராம்ஜெட் வகை எஞ்சின் பயன் படுத்தப்படுகிறது . இருவகை என்ஜின்களும் காற்றை உள்ளிழுத்து இயங்குவன .அதிலும் ஸ்க்ராம்ஜெட்கள் காற்றை வெகு வேகமாக உறிஞ்சி உமிழ்வதால் ஏவுகணை பாயும் வேகம் பன்மடங்கு அதிகரிக்கிறது. 

இதனால் ப்ரம்மோஸ் சுமார் 800 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை அழிக்கும், புதிய வகை [விஷ்ணு] ஏவுகணை 1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கி பெரும் சேதம் விளைவிக்கும். இவற்றை எந்த ராடரும் கண்காணிக்க இயலாத அளவிற்கு ஆற்றலும் ஏமாற்றும் திறனும் கொண்டவை. இவற்றை வாங்கி தங்களை தற்காத்துக்கொள்ள பலநாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன, இவற்றிற்கான இணைப்பு கீழே 

https://www.youtube.com/watch?v=HW-Po9m5ZkE&t=208s hypersonic style Brahmos -INDIGENOUS

நன்றி  

அன்பன் 

மற்றுமோர் எதிரி வீழ்த்தல்

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கை மூலம் அப்பாவி மக்களை கொல்லும் [மும்பை தாக்குதல், இந்திய பாராளுமன்ற தாக்குதல்,  முதல் காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் உயிர்களை கொன்ற தீவிரவாதி சில மணி நேரத்திற்கு முன்பு கராச்சியில் கிழக்கு பகுதியில் மர்ம நபர்களால் பலியானான் என்பது செய்தி. இது குறித்து போலீஸ் மற்றும் அந்நாட்டு அரசு மௌனம் காத்துவருவது மற்றும் இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முடிவை சந்திப்பதும் வெகு துல்லிய நடவடிக்கைக்கு சான்றாக பேசப்படுகிறது . பல விவரங்களை மேஜர் திரு மதன் குமார் விவரிக்கிறார் . இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=qHcxqcaMygk&t=314s MMK

நன்றி அன்பன் ம வ


Monday, September 14, 2026

VAISHNAVISM-6

 VAISHNAVISM-6 [ DA JOSEPH]  

வைணவம் -6  [திரு DA ஜோசப்]

வைணவக்கோட்பாடுகள் குறித்து   திரு ஜோசப் அவர்கள் வழங்கியுள்ள 6ம் தொகுப்பு இன்று இடம்  பெறுகிறது. முன்னரே தெரிவித்திருந்த படி அன்பர்களுக்கு பல விவரங்கள் தெரிந்திருக்கக்கூடும். எனவே 'அதான் எனக்கு தெரியுமே' என்று முகம் சுளிக்காமல் வீடியோ பதிவை பார்த்து மகிழுங்கள். இணைப்பு கீழே  

Part 6 https://www.youtube.com/watch?v=3ePn3G6C_X0&list=PLPj-5KKm3ULagRkOyYJD-4V9PskBXYN7F&index=6

நன்றி

அன்பன்  

Sunday, September 13, 2026

Andaal –Sridharan -2

Andaal –Sridharan -2

ஆண்டாள் -ஸ்ரீதரன் -2

            Special  song     https://www.youtube.com/watch?v=V9BCGZgBKiQ 

ஸ்ரீதரன் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையின் அன்பு பாகன் . அவரது அறிவும் கூர்மையும் இறை பக்தியும் வியத்தகு அம்சங்கள் . பின் வரும் வீடியோ [part 2 ] பல தகவல் தரும் சுரங்கம். இணைப்பை கூர்ந்து பார்த்து பலன் பெறுவீர்

https://www.youtube.com/watch?v=SgdrYYdP7cs  2

நன்றி அன்பன்

Saturday, September 12, 2026

WILLIAM BLAKE-2

 

WILLIAM BLAKE’S QUOTEs-2

Re-visiting Blake’s quotes truly reveals a high order suggestion with apparent simplicity. That I missed understanding this poet to a better extent makes me feel ‘guilty’ though not a culprit myself by design or desire.     I say so because the natural adoration for Blake has been rather in a low key as against the rich adoration of a few others. Better late than never fits the occasion ably well to say the least.

Please read on…..

What is now proved was once only imagined 

This quote, apart from being simple stands to establish the fact that imagination is the seed for a futuristic reality. What looks improbable would turn real later. It also means that human mind is vested with creative thinking and systematic thinking leads to making improved facility by 'organized approach

In the universe there are things that are known, things that are unknown, and in between, there are doors

Humans live in a world of known [things understood] and unknown [things not yet understood /used]. However, life moves on through efforts of finding new options / tools / by exploration [doors]

We are not meant to resolve all contradictions but meant to live with them and rise above them.

This quote is rich by its advisory stature. It suggests that peace does not accrue from our ability to ‘clear’ all doubts and controversies/ contradictions. Trying to accept prevalent things as natural is the simplest approach to be free from stress.

 

Make your own rules or be a slave to another man’s

The above quote is a piece of advice to humans in shaping their life. It says be determined in leading a life that suits your values/ preferences. If you do not frame your way of living , it would be done by others and you would be governed by views of others.

The imagination is not a state: it is human existence itself

This quote clarifies that human life is itself shaped by imagination and that imagination is not a temporary state.

Hope the day’s compilation is eminently informative.

To continue…….

Friday, September 11, 2026

A UNIQUE SONG of Truth and Hilarity

A UNIQUE  SONG of Truth  and Hilarity

பாடலில் எழுந்த விந்தை 

புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை

[இருவர் உள்ளம் 1963] கவியரசு , கே வி எம் , எல் ராகவன் எல் ஆர் ஈஸ்வரி  

பொதுவாக நான் மெல்லிசை மன்னரைத்தாண்டி , பிற இசை அமைப்பாளர்களை மையப்படுத்தி எழுதுவது கிடையாது. இதில் வீண் பிடிவாதம் எதுவுமில்லை. எம் எஸ் வி யின் படைப்புகளை அறிந்துள்ளதைப்போல் பிற ஆக்கங்களை அறிந்தேன் இல்லை. மேலும் ராகம் ஸ்வரம் போன்ற அடிப்படையே தெரியாமல் திரு கே  வி மகாதேவனின் ஆக்கங்களை பேசுவது தவறு. இதை நான் நன்கறிவேன்.

இன்றைய பாடல் இருவர் உள்ளம் படத்தில் கண்ணதாசன் வழங்கிய நகைச்சுவை பாடல் திரு கே வி எம் இசையில் எல் ஆர் ஈஸ்வரி எல் ராகவன் குரல்களில் அந்நாளில் முழங்கிய பாடல்

 நகைச்சுவையை எவ்வளவு கோர்வையாக கருத்து பூர்வமாக பேசியுள்ளார் கவிஞர்.

அசராமல் பிள்ளை பெற்ற அசட்டு ஜோடி

 கவிஞரின் கிண்டல் மற்றும் யதார்த்த உரையாடல் பாடலின் சிறப்பு "-                              

"வருசம் ஒரு பிள்ள பெத்தெடுத்தேன்

இப்போ வயசு 26 ஆச்சு                    [என்று பெண் பேசுகிறாள் ]

 அதே போல்

‘ஆறு பிறந்தது போதும் என்று நான் ஆறு குளம் எல்லாம் மூழ்கி வந்தேன்

"காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் பாழும் காதலினால் திரும்பி வந்தேன்" என்று ஆண் பாட

அவள் "போகாது ஐயா போகாது ,எங்கு போனாலும் ஆசை போகாது " என்று பலவீனத்தை சுட்டும் கவிதை

"நாம ஆசையுடன் பேசி நாளாச்சு " -  பெண்

"ஐயோ ஆபத்து அங்கே தான் உருவாச்சு"- ஆண்

.இது போன்ற பாடல் கூட இனி வருமா என்ற கேள்வி விடையின்றி தத்தளிக்கின்றது.

பாடகர்களின் குரலில் தான் எவ்வளவு பாவம்? திரையில் எம் ஆர் ராதா-முத்துலட்சுமி ஜோடியின் முக பாவங்கள் அவ்வளவு நேர்த்தி.

இரு இணைப்புகள் உள்ளன. ஒன்று இசைத்தட்டு     இரண்டாவது திரைக்காட்சியின் பதிவுடன்

ரசிக்க முடிந்தவர்கள் மனமிருந்தால்  ரசியுங்கள்

இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=4mOyDLk17lY&t=134s  BUDDHI SIGAAMANI PETHTHA LRECORD  AL R LR E

https://www.youtube.com/watch?v=1eGXqrMGJGw  MOVIE SONG KD KV M   LRE, AL R

BONUS
மனங்கவரும் கவியரசு கண்ணதாசனின் யாதர்த்தமான பேச்சு

https://www.youtube.com/watch?v=QyIKBEbnMU4

நன்றி     அன்பன்


NEEM -3

  NEEM -3 The grandeur of Neem is not a matter of any push over in the sense that the tree serves humanity in ways known and unknown to us...