Thursday, December 25, 2025

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-20]

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-20]

நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தது [-20 ]  

சிறிதும் மரபு வழுவாத பூரண சாஸ்திரிய பாடல்களையும் எம் எஸ் வி வடிவமைத்துள்ளார். அப்படி ஒன்று இன்றைய பதிவாக இடம் பெறுகிறது/

வெள்ளை கமலத்திலே [ பாரதியார் ] கௌரிகல்யாணம் , எம் எஸ் வி, குரல் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இந்தபாடகியை , திரு எம் எஸ்வி அவர்கள் அவ்வப்போது நல்ல ராகபாவம் மிகுந்த பாடல்களுக்கு மட்டுமே பயன் படுத்தியுள்ளார். / இது குறி த்து மாறுபட்ட தகவல்கள் உண்டு, எனினும் இது மிகவும்  நேர்த்தியான அமைப்பும் இசை தொகுப்பும் கொண்டு கவிதையை மேலும் அழகுபடுத்தியுள்ளது. மிகவும் அதிகம்  ஒலிக்காத பாடல் .ஆனாலும் கேட்டவுடன் மனம் அமைதியும் குதூகலமும் பெரும் வகையில் அமைந்த பாடல். பாடலுக்கு இணைப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=VBOGSobTaUo&t=80s VELLAI KAMALATHTHILE

GOURI KALYAANAM MAHAKAVI BHARATHI , MS V , SOOLAMANGALAM RAAJALAKSHMI

இப்பாடலின் பல்வேறு தன்மைகளை விளக்குகிறார் QFR சுபஸ்ரீ அவர்கள். அதற்கான இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=u4pQIxffueU  QFR SONG OF THE ABOVE

****************************************************************************

Wednesday, December 24, 2025

A recall substantiated

A recall substantiated

ஊர்ஜிதமான உண்மை

சில நேரங்களில் திரைப்பாடல்கள் நிஜ வாழ்வின் அங்கமாகவே அவதரித்து , பின்னர் திரைக்குள் நுழைந்தது உண்டு. இப்பாடல் வேறு நேரமும் வாய்ப்பும் இல்லாதநிலையில் 'கழுத்தில் ஏறி அமர்ந்த நிலையில் ;தோன்றியதெனில் பொய்யே .அல்ல. 

"அவர்கள்" படத்தில் இடம்பெற்ற 'அங்கும் இங்கும் பாதை உண்டு' என்ற உயிர்நாடிப்பாடல் திடீரென்று மேடையில் பொதுவெளியில் உருவான பாடல். மிக அவசரமாக பாடல் வேண்டும் என கண்ணதாசனை 'இழுத்து வந்து'மேடையில் கச்சேரி செய்துகொண்டிருந்த எம் எஸ்வி, எஸ் பி பி முன்ன நிறுத்தி , இப்போது ஒரு போட்டி , நான் பாடலுக்கான சூழலைச்சொல்வேன், கவிஞர் பாடல் தருவார் , எம் எஸ் வி இங்கேயே இசையும் ராகமும் அமைப்பார் , எஸ் பி பி பாடுவார். அது நாளை ஸ்டூடியோவில் பதிவாகி 'அவர்கள்' படத்தில் இடம் பெரும் என்று கே பாலச்சந்தர் அறிவிக்க அடுத்த 20 நிமிடங்களில் பாடல் தயார். ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் ;ஆனால் ஒரு சிலர் நல்லா நாடகம் ஆடுறானுக படத்துக்கு விளம்பரம் தேடுறார் கே பி என்றெல்லாம் விமரிசனம் எழுந்தது மேலும் வேறொரு நிகழ்ச்சியில் ஒரு மாணவன் எம் எஸ் விஇடம் "ஏன் சார் ஏமாத்துறீங்க , முன்னாலே எல்லாம் செஞ்சு வெச்சுக்கிட்டு என்னவோ இப்பதான் பாட்டு உருவாக்குறதா வேஷம் போடறீங்க என்று சொல்லி அதுவே ஒரு சாலஞ்ச் ஆகி உடனே வேறொரு பாடலை பையன் தர அதற்கும் இசை அமைத்து எம் எஸ் வி அவனது மற்றும் நண்பர்களின் வாயை கான்க்ரீட் போட்டு அடைத்தார் என்ற நிகழ்வும் அந்நாளில் அரங்கேறியது.

அந்த 'அவர்கள்' பாடல் மிகவும் நுணுக்கமும் நேர்த்தியும் அழுத்தமும் கொண்டது..

அது தொடர்பான வீடியோக்கள் கீழே உள்ளன. நன்கு கவனமாக பின் பற்றி தமிழ்திரையின் உண்மையான ஜாம்பவான்களை பற்றிய தகவல்கள் ஊர்ஜிதம் ஆவதை கேட்டு மகிழுங்கள்.

 இணைப்புகள் கீழே       

https://www.youtube.com/watch?v=d5jh-5Tka7o ANGUM INGUM AVARGAL 197 KD MSV SPB ON THE SPOT

https://www.youtube.com/watch?v=djezBs6S6_4 Angum ingum paadhai undu'Annadurai ‘s reminiscences ANNADURAI [KD‘s Son]

https://www.youtube.com/watch?v=xQ3pWdjfkko ANANTHU ON ANGUM INGUM

----------------------------------------------------------------------------

Tuesday, December 23, 2025

LET US PERCEIVE THE SONG -52

 LET US PERCEIVE THE SONG -52

பாடலை உணர்வோம் -52

‘அன்று ஊமைப்பெண்ணல்லோ [பார்த்தால் பசி தீரும் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி           எல் ராகவன் ,பி சுசீலா

இதனுடன் ஒப்பீடு செய்ய  வேறோர் பாடல் உண்டா -தெரிந்தால் சொல்லுங்கள். பாடலின் களமும் கதாபாத்திரங்களும் அரிதானவை. இப்பாடல் ஒரு தனித்துவம் பெற்றது . ஆம் ஒரு பழங்குடியின பெண் நகர வாழ்வில் வளர்ந்த ஆண் இருவரையும் சுற்றிப்படரும் அமைப்பில் விளைந்த கவிதை.   ஆக்கம் கண்ணதாசன் , இசை வி ரா குரல்கள் ஏ எல் ராகவன் , சுசீலா. கணீரென்று ஒலித்த பதிவு. தமிழ் எழுத்துகளை வரிசையாக சொல்லிக்கொடுத்து, அடிப்படை இலக்கணக்குறிப்புகளையும் அவள் மனதி ஏற்றி , பின்னர் வல்லின மெல்லின ஒலிகளின் வேறுபாடுகள் ஒலிக்க  வேறேதும் பாடல் உள்ளதா ? நான் அறிந்தவரை இல்லை. கட்சியில் தோன்றிய காதலர்கள் நிஜ வாழ்விலும் அப்படியே.. இவற்றை கடந்து பாடலில் ஒரு வேற்று மொழி கலாச்சார அமைப்பாக ஒலித்த ஹம்மிங்கில் இசையமைப்பாளரின் தீவிர திட்டமிடல் பளிச்சிடுகிறது.. இசைக்கருவிகளின் தேர்வு  , அவற்றின் நாத வீச்சு இரண்டிலும் வேறொரு பரிமாணம் காட்டப்பட்டுள்ளதை நன்கு உணரலாம். திரு எம் எஸ் வி எங்கே கோரஸ் வைக்க இடம் என்பதை தேடாமலே இயல்பாக கோரஸை  இணைக்கும் வித்தகர்; ஆனால், இந்தப்பாடலில் தனது துறுதுறுக்கும் கோரஸ் தீவிரத்தை எவ்வளவு கட்டிப்போட்டு அடக்கி வைத்திருப்பார் என யோசிக்கிறேன். இது போன்ற தருணங்களில் இயல்பான உணர்ச்சிகளை அடக்கி செயல் படுவது பெரும் வேள்வி எனில் தவறில்லை   என சொல்லிக்கொண்டே போகலாம்.  மட்டுமல்ல அவரது 'ஹோய் ' வெகு நேர்தியானது. ஆம் 'ஹோய் ' இப்பாடலில் உண்டு ஆயினும் அதனை குறிலாக்கி வேறு வித தாக்கம் விளைவித்துள்ள நேர்த்தியை புறக்கணிக்க இயலுமா? திரு ராகவன் பாடும் ஹம்மிங்கின் இறுதியில் 'ஒய் ' என்று முடிப்பதும் பின்னர் இரண்டாம் சரணத்தில் 'காட்டில் வந்த வேடன் மானைக்கண்டல்லோ , மானை கண்ட வேளை மயக்கம் கொண்டல் லோ " முடிக்கும் போதும் இரு பாடகர்களும் 'ஒய் ' என்று குறி லில் பாடியது ஒரு வேறுவகை உத்தி. பாடலின் துவக்கத்தில் வரும்  நீதிநூல், குறள் பாடியிருப்பவர்-திரு எம் எஸ் வி. இப்பாடலில் கருவிகளின் தொகுப்பும் இசைப்பும் வேறு பாடல்களில் இல்லாத   தனித்துவம். இவை என்றோ 62 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்ட புதுமைகள்.  . இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=fE5qtx2PbU4 andru oomai ppasi kd vr alr ps

சரி பிற கருத்துகள் சொல்வதென்ன?

இசை அமைப்பாளர் திரு அமுதபாரதி இப்பாடலை குறித்து பேசுவதை கேளுங்கள் . இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=82OWp2fv90M andru oomai amudhabarathi

QFR 657 ம் பதிவில் சுபஸ்ரீ அவர்களின் கருத்தும் விளக்கமும் பிற அறிய தகவல்களும் பெற இணைப்பு கீழே  QFR 657

QUARANTINE FROM REALITY | ANDRU OOMAI PENNALLO | PAARTHAAL PASI THEERUM | Episode 657

யூ டியூபில் வந்த ஒரு கருத்து

அன.. ஆவன்னா.. என்று தமிழ் உயிர் எழுத்துக்களை காதல் மன்னன் ஜெமினி கணேசனிடம் கற்றுக்கொள்ளும் சாவித்திரி கணேசன்.. ஆத்திசூடியையும்.. திருக்குறளையும் விசுவநாதன் சொல்லித்தர.. வித்தியாசமான அலங்காரத்தில் இருக்கும் மலைஜாதி பெண்ணிற்கு காதல் பாட கற்றுத்தரும் .எல்.ராகவன்... ஊமைப்பெண் சாவித்திரிக்கு பின்னணி பாடும் சுசீலா..... என்றும் நினைவை விட்டு நீங்காத பாடல் இது..

_____________________________________________________________________________

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-20]

  GOOD- BUT A LITTLE OFF MEMORY [-20] நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தது [-20 ]    சிறிதும் மரபு வழுவாத பூரண சாஸ்திரிய பாடல்களையும...