Thursday, July 2, 2026

RUTA GRAVEOLENS

 

RUTA GRAVEOLENS

[The Rue plant] [Arruda or The Herb of Grace]

Tam:  arudam [naagadhaali] Mal: Aruta, Telugu: Sadapa, Hindi: Sadab Kan: Sadabu/ Nagadhali

The plant is a short bushy growing one with deep green or bluish green leaves with yellowish flowers carrying a typical smell partly pungent or oily in character. It is believed to repel snakes and thus the name ‘NAAGADHAALI’.

‘Rue’ is a native of Mediterranean but is well-adapted to grow in most climatic situations –including hill stations. In some countries the plant is used as an insect repellant and in some cultures for aromatic incense [smoke-generating] purpose . In some cultures, rue is used for cooking but sparingly so due to its bitter taste and strong aroma.

In some countries, the dry leaves or slender sticks are used as ‘book mark’ to drive away book insects/silver fish due to its strong aroma. Rue is believed to possess the power of driving away ‘Evil eye’. In some Jewish societies rue clusters are placed near infants to protect them from bad/evil forces.

Rue is consumed in very small quantity as it can be mutagenic and can be hepatotoxic [liver-damaging]. Skin rashes [dermal allergy] can arise from rue for sensitive persons.

Rue oil is carefully used as a repellent of mosquitos/ insects and in treating certain bone damages with very mild dosage. In all, rue preparations are more based on belief /sentiment and not much is known about ‘rue’ in South Indian tradition.

Wednesday, July 1, 2026

Understanding musical frames-2

 Understanding musical frames-2    

Squeezing life is MSV’S NOTE

இசையின் வடிவ அமைப்பை புரிந்துகொள்ள 

-ஊனை உருக்கும் இசைக்குறியீடுகள்-2

'என்னை எடுத்து தன்னைக்கொடுத்து-2

சென்ற பதிவில்  வாலியின் கவிதையாய் மலர்ந்த "என்னை எடுத்து"  பாடலை குரல் வடிவில் கேட்டிருப்பீர்கள்.  ஆனால் திரைப்பாடல்  எனில் அது தனது முழு வடிவும் தோன்ற அதை நாம் கண்டு/கேட்க வாய்ப்பு அமைந்தால் நமது அனுபவமே வேறல்லவா?  ஏன் எனில், இசை தரும் ஆதரவு, மற்றும் ஒலி மூலம் பாவம் உச்சம் பெற கிடைக்கும் நமது மன லயிப்பு  மற்றும் இரண்டு வினாடிகளே ஒலித்தாலும் அந்த நுண் ஒலி கிளர்த்தெழவைக்கும் பச்சாதாபம், பரிவு போன்ற மன நிலையில் பாடலும்  ரசிகனும் சேர்ந்து இயங்கும் ஒன்றிவிட்ட தன்மை இவற்றை குரல் மட்டுமே வழங்கிட இயலாது. அந்த நுணுக்கமான                ஒலிக்கல வையே .பின்னிசை என்ற பெயரில் பாடலை சுமந்து செல்லும் உத்தி.. சொல்லப்போனால் அது பாடலோடு பின்னிப்பிணையும்போது தான் நாம் பாடலுக்கு அடிமை ஆகிறோம்.. அதுபோன்ற  பிணைப்பே இல்லாத ஒலிகளை சிலர் ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கும்போது இவர்கள் நல்ல இசை அமைப்புகளை அறிந்தவரில்லை என்று புரிகிறது.. போகட்டும். இன்றைய பதிவில் திரையில் மிளிர்ந்த வடிவில் பாடலைக்கேட்டு பாடலில் பூரணத்துவம் என்பது என்ன என்று உணரலாம்.

நமது அடிப்படைத்தவறு

நமக்கு பாடல் தெரியும், படம் தெரியும் இடம்பெற்ற கலைஞர்கள் தெரியும் .இவை மட்டுமே பாடல் ஆகிவிடாது ஆனால் நாம் இங்கு 'அதான் எனக்கு தெரியுமே' என்று கடந்து போகவே மனம் முற்படும் . எனது பரிந்துரை வேறு வகையானது. ஆமாம்  அதான் எனக்கு தெரியுமே அதான் எனக்கு தெரியுமே  என்று சொல்லிக்கொண்டே எப்போதும் அறிந்த காட்சியையே மீண்டும்மீண்டும்  பார்ப்பது என்ற செயலால் , பாடலை அக்கு வேறு ஆணி வேறு என்று உள்ளார்ந்த சூட்சுமங்களை ரசிக்காமல் கடந்து போவதை  தவிர்க்கும் வழிமுறைகளை பின் பற்றுங்கள். அதற்காகவே இந்த ஒரு பாடலை 3 வெவ்வேறு வடிவங்களில் தனித்தனி பதிவுகளாக கேட்கும் வகையில் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் உணர்த்த முயல்கிறேன். இன்றைய பதிவு திரை வடிவம்

இதற்கும் முந்தைய பதிவிற்கும் உள்ள 'தாக்க பலன்'’ எப்படி இருக்கிறது உணருங்கள் வேண்டுமானால் இன்றைய பதிவை முதலில் கேட்டு விட்டு , சென்ற பதிவை இன்று கேளுங்கள் இரண்டும் இரு வேறு உலகம் என்பது தெளிவாகும். . இதையும் கடந்து இன்னும் விளக்க விவாதங்கள் மீதம் இருப்பதால் இதே பாடல் அடுத்த பதிவிலும் தொடரும். இணைப்புகள் கீழே

நாம் அறிந்த திரை வடிவம்

https://www.youtube.com/watch?v=v1U8cKAC40ov ennau eduththu val vr ps

பாடல் -வெறும் குரல் வடிவம்

2 https://www.youtube.com/watch?v=BchQc8cucmY  QFR

இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு அல்லது மூன்று முறை ஒரே நேரத்திலோ /இடைவெளிகொடுத்தோ கேட்டுப்பாருங்கள்  வெறும் மேனிக்கும் ஆடை அணிந்த நிலைக்கும் உள்ள வேறு பாடு பளிச்சிடும் 

நன்றி           அன்பன்  

Tuesday, June 30, 2026

A MULTI-PRONGED APPROACH

 A MULTI-PRONGED APPROACH

ஒரு பன்முறை அணுகுமுறை

இது என்ன தலைப்பு ? எதைப்பற்றியது ? என்றெண்ணும் அன்பர்களே இன்றைய பதிவு  இந்திய இறையாண்மை / பாதுகாப்பு அல்லது யுத்த தளவாடங்களில் மேம்பாடு  போன்றவை தானே இடம் பெறும் ? ஆம் அதுவே தான் . வெவ்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருப்பதால் ஒவ் வொன்றாக நாம் பதிவிடுவதற்குள் சுவையும் சூடும் அடங்கி பழைய செய்தியாகிவிடும் . எனவே நமது நாட்டின் தற்கால தேவை மற்றும் நிகழ்வுகளை ஒரு சிறிய பதிவின் மூலமே வெளியிட்டால் கால விரயம் இன்றி விரைந்து தகவல் பரிமாற்றம் நிகழட்டும் என்பதே இம்முயற்சி.  அன்பர்கள் மூன்று தகவல்களையும் தொடர்புபடுத்தி மிக எளிதில் புரியுந்துகொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இவற்றில் முதலாவதாக நாம் பார்ப்பது பாதுகாப்புத்துறையில் நமது போர்க்கருவிகள் குறிப்பாக ஏவுகணைகள் ரேடார்கள் ஒருங்கிணைப்பு எதிரி ராடார்களை குருடாக்குவது அல்லது முடமாக்குவது அல்லது மூளையை நசுக்கி பலனற்றுப்போகச்செய்வது போன்ற நுண் செயல் அமைப்புகளில் இந்திய விஞ்ஞான தொழில் நுட்பம் பலரையும் பதறவைத்து  கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. நம்மையோ நமது நட்பையுமோ விரும்பாதோர் ஒருபுறம் கதிகலங்க , இதுவே வேறு சில நாட்டினருக்கு பெரிதும் மகிழ்வும் நம்பிக்கையும் ஊட்டும் முன்னேற்றமாக பரிணமித்துள்ளது. இதுபோன்ற யுத்தக்கருவிகளை ஐரோப்பா அமெரிக்கா , பிரான்ஸ் போன்ற இடங்களிலிருந்து வாங்குவதை விட நமது கருவிகளின் குறைந்தமுதலீடும் நிறைந்த பலனும் பெரிதும் ஈர்ப்பையும் பாராட்டையும் பெற்று அதன் மூலம் அந்நியச்செலாவணி மற்றும் சந்தையில் இந்தியா விஸ்வரூபம் கொண்டெழுந்ததோடு எவரையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தும் 'பெரியண்ணன்' மனோபாவம் சிறிதும் இல்லாத ஒரு அமைதி பூமி என்பதிலும்   பலருக்கும் நம் மீது மதிப்பும் பொறாமையும் இயல்பாக ஏற்பட்டுள்ளதை உணரலாம். போர்க்கருவி சந்தையில் விற்பனையை மட்டும் எண்ணாமல் இக்கருவிகள் யார் யாரிடம் இருந்தால் நமது பாதுகாப்புக்கு உகந்ததாக அமையும் என்பதையும் ஆய்ந்து செயல் படுவதால் இந்தியா குறித்து தப்புக்கணக்கு போட்டு இருந்தநாடுகள் இப்போது வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்கக்காணலாம் . இந்த யுத்த தளவாட விற்பனை குறித்த சில விவரங்களை திரு நிஞ்சன் அவர்கள் தனக்கே உரிய முறையில் இயல்பாக விளக்குகிறார். கேட்டு உணரலாம்.

நாம் சந்திப்பது பலவகை எதிர்ப்புகள். கொள்கைரீதியான  குற்ற சுமத்தல்கள், குறுகிய அரசியல் நோக்கில் எழுப்பப்படும் ஆதாரமற்ற புகார்கள், அவற்றை ஊதிப்பெரிதாக்கும் சுயநலமிகள் மற்றும் அந்நிய சக்திகளின் தேவையை நிறைவேற்றி வாழ்வு தேடும் உள்நாட்டு திசைபிறழ்ந்தோர் , தீவிரவாத அணுகுமுறைகளில் அப்பாவிமக்களைக்கொன்று அதன்மூலம் இந்தியா ஒரு திறனற்ற நாடு என்று பரப்ப முயல்வது . எனவே தீவிர வாதிகளை தேடிப்பிடித்து ஒழிப்பது ஒரு கலையாகவே இப்போது நிகழ்வதை காணலாம். இவற்றின் மூலம் இந்தியாவிடம் மோதிவிட்டு வெளிநாட்டில் ஒளிந்து கொள்ளும் கோழை களுக்கு இன்னதென்றே தெரியாத திடீர் முடிவு ஏற்படுவது பெரும் வடிவெடுத்து அவர்களும் அவர்தம் தகப்பன்சாமி [GOD FATHER] களும் நிலை குலைந்து சிதறுண்டு துடிப்பதை இரு வீடியோக்களில் உள்ள தகவல்களை புரிந்து கொள்வதன் மூலம் காணலாம், தெளிவு கிடைக்கும்  . வீடியோ இணைப்புகள் இதோ .

https://www.youtube.com/watch?v=7dOk_ZQ7LH8 brahmos, akash  in UAE

https://www.youtube.com/watch?v=u9j0hbr1aXY disappeareing faces kolahalas

https://www.youtube.com/watch?v=tdrBqaagooc HUNT  MMK

நன்றி அன்பன்   

*******************************************************************

RUTA GRAVEOLENS

  RUTA GRAVEOLENS [The Rue plant] [Arruda or The Herb of Grace] Tam:   arudam [naagadhaali] Mal: Aruta, Telugu: Sadapa, Hindi: Sadab Kan:...