Tuesday, December 23, 2025

LET US PERCEIVE THE SONG -52

 LET US PERCEIVE THE SONG -52

பாடலை உணர்வோம் -52

‘அன்று ஊமைப்பெண்ணல்லோ [பார்த்தால் பசி தீரும் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி           எல் ராகவன் ,பி சுசீலா

இதனுடன் ஒப்பீடு செய்ய  வேறோர் பாடல் உண்டா -தெரிந்தால் சொல்லுங்கள். பாடலின் களமும் கதாபாத்திரங்களும் அரிதானவை. இப்பாடல் ஒரு தனித்துவம் பெற்றது . ஆம் ஒரு பழங்குடியின பெண் நகர வாழ்வில் வளர்ந்த ஆண் இருவரையும் சுற்றிப்படரும் அமைப்பில் விளைந்த கவிதை.   ஆக்கம் கண்ணதாசன் , இசை வி ரா குரல்கள் ஏ எல் ராகவன் , சுசீலா. கணீரென்று ஒலித்த பதிவு. தமிழ் எழுத்துகளை வரிசையாக சொல்லிக்கொடுத்து, அடிப்படை இலக்கணக்குறிப்புகளையும் அவள் மனதி ஏற்றி , பின்னர் வல்லின மெல்லின ஒலிகளின் வேறுபாடுகள் ஒலிக்க  வேறேதும் பாடல் உள்ளதா ? நான் அறிந்தவரை இல்லை. கட்சியில் தோன்றிய காதலர்கள் நிஜ வாழ்விலும் அப்படியே.. இவற்றை கடந்து பாடலில் ஒரு வேற்று மொழி கலாச்சார அமைப்பாக ஒலித்த ஹம்மிங்கில் இசையமைப்பாளரின் தீவிர திட்டமிடல் பளிச்சிடுகிறது.. இசைக்கருவிகளின் தேர்வு  , அவற்றின் நாத வீச்சு இரண்டிலும் வேறொரு பரிமாணம் காட்டப்பட்டுள்ளதை நன்கு உணரலாம். திரு எம் எஸ் வி எங்கே கோரஸ் வைக்க இடம் என்பதை தேடாமலே இயல்பாக கோரஸை  இணைக்கும் வித்தகர்; ஆனால், இந்தப்பாடலில் தனது துறுதுறுக்கும் கோரஸ் தீவிரத்தை எவ்வளவு கட்டிப்போட்டு அடக்கி வைத்திருப்பார் என யோசிக்கிறேன். இது போன்ற தருணங்களில் இயல்பான உணர்ச்சிகளை அடக்கி செயல் படுவது பெரும் வேள்வி எனில் தவறில்லை   என சொல்லிக்கொண்டே போகலாம்.  மட்டுமல்ல அவரது 'ஹோய் ' வெகு நேர்தியானது. ஆம் 'ஹோய் ' இப்பாடலில் உண்டு ஆயினும் அதனை குறிலாக்கி வேறு வித தாக்கம் விளைவித்துள்ள நேர்த்தியை புறக்கணிக்க இயலுமா? திரு ராகவன் பாடும் ஹம்மிங்கின் இறுதியில் 'ஒய் ' என்று முடிப்பதும் பின்னர் இரண்டாம் சரணத்தில் 'காட்டில் வந்த வேடன் மானைக்கண்டல்லோ , மானை கண்ட வேளை மயக்கம் கொண்டல் லோ " முடிக்கும் போதும் இரு பாடகர்களும் 'ஒய் ' என்று குறி லில் பாடியது ஒரு வேறுவகை உத்தி. பாடலின் துவக்கத்தில் வரும்  நீதிநூல், குறள் பாடியிருப்பவர்-திரு எம் எஸ் வி. இப்பாடலில் கருவிகளின் தொகுப்பும் இசைப்பும் வேறு பாடல்களில் இல்லாத   தனித்துவம். இவை என்றோ 62 ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைக்கப்பட்ட புதுமைகள்.  . இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=fE5qtx2PbU4 andru oomai ppasi kd vr alr ps

சரி பிற கருத்துகள் சொல்வதென்ன?

இசை அமைப்பாளர் திரு அமுதபாரதி இப்பாடலை குறித்து பேசுவதை கேளுங்கள் . இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=82OWp2fv90M andru oomai amudhabarathi

QFR 657 ம் பதிவில் சுபஸ்ரீ அவர்களின் கருத்தும் விளக்கமும் பிற அறிய தகவல்களும் பெற இணைப்பு கீழே  QFR 657

QUARANTINE FROM REALITY | ANDRU OOMAI PENNALLO | PAARTHAAL PASI THEERUM | Episode 657

யூ டியூபில் வந்த ஒரு கருத்து

அன.. ஆவன்னா.. என்று தமிழ் உயிர் எழுத்துக்களை காதல் மன்னன் ஜெமினி கணேசனிடம் கற்றுக்கொள்ளும் சாவித்திரி கணேசன்.. ஆத்திசூடியையும்.. திருக்குறளையும் விசுவநாதன் சொல்லித்தர.. வித்தியாசமான அலங்காரத்தில் இருக்கும் மலைஜாதி பெண்ணிற்கு காதல் பாட கற்றுத்தரும் .எல்.ராகவன்... ஊமைப்பெண் சாவித்திரிக்கு பின்னணி பாடும் சுசீலா..... என்றும் நினைவை விட்டு நீங்காத பாடல் இது..

_____________________________________________________________________________

Monday, December 22, 2025

THE DISLOYAL

THE DISLOYAL

நன்றி மறந்தோர்  

நமது நினைவில் 1971 டிசம்பர் மாதம் கிழக்கு பாகிஸ்தான் என்ற பகுதி மேற்கு பாகிஸ்தானியரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு 'பங்களாதேஷ் ' என்ற புதிய நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் இந்தியாவின் பங்களிப்பு மகத்தானது. புதிய நாடு புதிய தலைவலி ஆனதும் அதே நிகழ்வினால் தான். அப்போது இந்திய ராணுவ அதிகாரி Lieut.Gen ஜகஜித் சிங் அரோரா விடம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி Lieut.Gen A A K நியாஜி 93,000 ராணுவ வீரர்களுடன் டாக்கா வில் சரணடைந்தார் . உலகின் மிகப்பெரிய சரணாகதி இதுவே என்று பேசப்பட்டது. இவ்வளவுக்கும் காரணம் மேற்கு பாக் அதிகாரிகள், கிழக்கு பாக் வளங்களை சுரண்டி பதவிகளை அனுபவித்ததும், ராணுவம் மற்றும் அரசின்  . . உயர் பதவிகள் எதிலும் கிழக்கு பாக் பிரஜைகளுக்கு இடமோ அங்கீகாரமோ இல்லாமல் வெறும் அடிமைகள் போல் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதுவுமே .               

அறிவு என்ற அளவுகோலில் கி.பாக் மக்கள் மேம்பட்டவர் தான். எனவே கிழக்கில் புரட்சி வெடித்து, இந்திய உதவியுடன் கி. பாக் பங்களாதேஷ் ஆனது.   ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மத அடிப்படையில் பங்களாதேசியர்கள் இந்தியாவை ஏற்பதில்லை. மீண்டும் பாக்கின் கொத்தடிமை ஆகவும் தயார் என்ற நிலையில் இயங்கு கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக  பல  முயற்சிகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.அப்படி ஓர் சமீபத்திய நிகழ்வு தான்     12-12 2025 மாலை நடக்கவிருந்த விவாத அரங்கு = அதில் நீ யார் நான் யார் என்ற தலைப்பில் இந்தியவிரோத வசைபாடல் நடக்க இருந்தது.  தீவிரவாத நடவடிக்கையின் மூளையாக செயல் பட்ட பலர் அவர்கள் எந்த நாட்டில் இருப்பினும் அவரவர் இருக்கும் இடங்களிலேயே அழித்து ஒழிக்கப்பட்டனர். இந்த நிகழ்வுகளில் யார் கொன்றார்கள் என்பதே வெளியில் வருவதில்லை. மேலும் இவற்றின் திட்டமிடல் அவ்வளவு துல்லியமும் நுணுக்கமும் நிறைந்தது. இந்த அணுகுமுறையினால் தீவிர வாத அமைப்பினர் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம்  யார் செய்தனர் என்பது மிகவும் ரகசியமாகவே இருப்பது வெகு சிறப்பு. உளவு நிறுவனங்கள் மேம்பட்ட உத்திகளை செயல்படுத்தி முள்ளை முள்ளால் எடுப்பதையும் தாண்டி உள்ளூர் முள்ளாலேயே எடுக்கும் வித்தையை  அரங்கேற்றி வருவதால் எவரும் எங்கும் உரையாட வோ முறையிடவோ முகாந்திரம் இல்லை.. இதில் சமீபத்தில் களை யப்பட்ட     நபர் பங்களாதேஷி-திரு உஸ்மான் ஹாதி என்பவர் [இளைஞன்]  இவர் ஏற்பாட்டில் அமைந்த விவாத அரங்கின் அழைப்பிதழில் இந்தியாவின் 7வடகிழக்கு  எல்லை மாநிலங்களை பங்களாதேஷின் பகுதிகளாக காட்டும் வரைபடம் [map] வெளியிட்டு    தன்னை பெரும்       புரட்சியாளனாக பிரகடனப்படுத்தியிருந்தார். 

இது சர்வதேச நடைமுறைகளுக்கு எதிரானது மற்றும் மன்னிக்க இயலாத ஒழுங்கீனம். பெரும் நாடுகளே செய்யத்துணியாத அசிங்கம். 

 இவர் அந்த கருத்தரங்க நிகழ்வு மாலையில் நடக்க வேண்டிய அன்று மதியம் சுமார் 2 மணி அளவில் நடுத்தெருவில் அடையாளம் தெரியாத இருவரால் தலையில் சுடப்பட்டு , கோமா நிலையில் ஆழ்ந்து சிங்கப்பூரில் தீவிர சிகிச்சையும் பலன் தராமல் Dec 18ல் மாய்ந்தார். இது மேலோட்டமாக இருந்தாலும், இதன் அடித்தளம் மிக வீரியமானது. அதன் தன்மைகளை மற்றும் நீண்ட வரலாற்றை  திரு ஆசிர்  விளக்குகிறார். கேட்டு அறிய   

இதோ இணைப்பு

இந்தியா செய்த நன்றியை மறந்த பங்களாதேஷ்,தொடர் வன்முறையில் தவிக்கும் அவலம்,ஆப்ரேஷன் சர்ச் லைட் 1971 - YouTube

***************************************************

LET US PERCEIVE THE SONG -52

  LET US PERCEIVE THE SONG -52 பாடலை உணர்வோம் -52 ‘அன்று ஊமைப்பெண்ணல்லோ ’ [ பார்த்தால் பசி தீரும் -1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ரா...