Tuesday, February 24, 2026

LET US PERCEIVE THE SONG -58

 LET US PERCEIVE THE SONG -58

பாடலை உணர்வோம் -58

தேவியர் இருவர் முருகனுக்கு [கலைக்கோயில் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி, குரல் பி சுசீலா.

இது பாடல் என்ற இடம் தாண்டி கதையின் நெருடலான பகுதி என்பதே பொருத்தம்

ஆம், கவியரசர் கதையை உள்வாங்கி கவிதை புனைவது என்ற துறையில் பெரும் 'அதாரிட்டிஎனில் சாலப்பொருந்தும்.

மனிதர் சொற்களில் எவ்வளவு உண்மைகளை தூவி இருக்கிறார்.  பின்னர் வர இருக்கும் பெண் ஒருத்தி துவக்கும் சக்களத்திப்போராட்டம் இது என்பதே அடித்தளம். ஆனால் படம் பயணித்துவந்த கௌரவ பாதையை சிதைக்காமல் புதுப் பெண் [நாட்டிய மங்கை] முதல் மனைவியிடம் முதல் சந்திப்பிலேயே கோரிக்கை வைக்கிறாள் . அதை கவிஞர் 'மரபு வழுவாத நிலை தானே ? என்று எவ்வளவு நாசூக்காக துவங்குகிறார் . எப்படி ?

தேவியர் இருவர் முருகனுக்கு, [வள்ளி, தெய்வானை]

திருமால் அழகன் முருகனுக்கு [ஸ்ரீ தேவி ,பூதேவி ] என்று தெய்வ சந்நிதானங்களை சாட்சி வைத்துப்பாடி ஆடுகிறாள் . அவள்  ஆடுகிறாள் என்பதா "அவனை'  ஆட்டுவிக்கிறாள் என்பதா? எப்படிப்பார்த்தாலும் கேளிக்கை என ஆட வந்தவள் கோரிக்கைதனை பற்றிக்கொண்டு பாடி ஆடுவது காட்சியின் ஹை லைட் .

இங்கே ஒன்றை குறிப்பாக பேசி ஆக வேண்டும். பாடல் என்னவோ ஹை லைட் ஆனால் ஒளிப்பதிவு லோ லைட் [ இந்தப்படத்தில் தான் ஒளிப்பதிவாளர் திரு என் பாலகிருஷ்ணன் ஸ்ரீதர் குழுமத்தில் கால் பதித்தார். அதாவது வின்சென்ட்-சுந்தரம் இருவரும் விலகிவிட்ட நிலையில் ]. பின்னாளில் என் பி பெரும் உயரம் தொட்டார் என்பது சரித்திர நிகழ்வு.]  படத்திலும் முக்கிய பெண் பாத்திரத்தின் வாழ்விலும் இருள் சூழ்ந்த நிலையை லோ கீ [low key லைட்டிங்] பூடகமாக உணர்த்தியுள்ளது.

இந்தப்படத்தின் பல பாடல் காட்சிகளில் இதுவே பயன் படுத்தப்பட்டது. ஆனால் 'நான் உன்னசேர்ந்த செல்வம் ' பாடல் நல்ல ஓபன் லைட்டில் [உரிமையுள்ள நாயகன் -நாயகி பாடல் அது]. எவ்வளவு ஆழ்ந்த திட்டமிடல் ? Photography Terminology [மொழி ]கொண்டு விளக்கலாம் ஆனால் அன்பர்களுக்கு உள்வாங்கிக்கொள்வது இன்னல் நிறைந்ததாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=WEh867LwouE NAAN UNNAI SERNDHA SELVAM

தேவியர் இருவர் முருகனுக்கு,

இப்பாடலில் நாயகனின் சிறப்புகளை விளக்கி பாடும் சரணவரிகள்

கலைகளில் அவன் மறைந்திருந்தான்

கை விரலில் அவன் தவழ்ந்திருந்தான்

இதயத்தைமெல்ல மெல்ல மீட்டி விட்டான்

என்னோடு தன்னை அவன் இணைத்துவிட்டான் என்று செல்கிறது பாடல்

அவன் வீணைக்கலைஞன் என்பதை சொல்லி , இவள் எந்த வகையிலும் கள்ளமற்றவள் என்று சொல்ல

என்னோடு தன்னைஅவன்இணைத்துவிட்டான் என்றுஅவன்மீது பழி.   [இது அநேக பெண்கள் கைக்கொள்ளும் தந்திரம் மனைவி கணவனை சந்தேகிக்க தூண்டுகோலாக அமைந்து , இவள் தப்பித்துக்கொள்ள போடும் நாடகம்]

இறுதி சரணத்திலும் இதே போல்  ஒரு முகம் இரு முகம் அறிமுகம் என்றெல்லாம் விளக்கி தன்னை 'அவன்' மயக்கிவிட்டதாக சொல்லி

எனக்கோர் இடம் நீ தருவாயோ  என்று வாழ்வில் பங்கு கோருகிறாள். . மனம் வெகுண்டு சினம் கொண்டு அலற பாடல் முடிகிறது. இவை ஒரு புறம் இருக்க

இசையில் இப்பாடல் சிகரம் தொட்டது எனில் பிழை இல்லை. ஏனெனில் அவ்வளவு நுணுக்கங்கள்.

ஆலாபனையில் சுசீலா காட்டிய எண்ணற்ற குழைவுகள், ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேண்டிய பாவமும் வேகமும் இப்போதும் கூட பலரால் நினைத்துப்பார்க்க இயலாது.

வீணை சிட்டிபாபு பங்களிப்பு வெகு சிறப்பானது . நேர்த்தியான நாதம், கம்பீர ஒலி மற்றும் சுசீலாவின் குரலுக்கு துணையாக அவ்வப்போது வரும் கார்வைகள் என சிறப்புகள். எம் எஸ் விக்கு கர்நாடக இசை அந்நியம் என்று சொல்வோர் இப்படத்தின் பாடல்களை ஊன்றி கேட்க வேண்டும். .ஸ்ரீதரின் இயக்கம் எப்போதும் வேறு பரிமாணம் உடையது என்று நன்கு விளங்கும். பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=mOJlKA8CUqw

 deviyar iruvar kk kd vr ps chittibabu

QFR குழுவினரின் விளக்கம் மற்றும் பாடல் மேலும் பல தகவல்களை பகிரக்காணலாம்

https://www.youtube.com/watch?v=frzcqarrgwU qfr 559

இது ஒரு வேறு களம் , இசைக்கலைஞர்களால் மாத்திரமே முறையாக விளக்க இயலும். அப்படி ஓர் விளக்கம் தருகிறார் பிரியா பார்த்தசாரதி அவர்கள் வெகு நேர்த்தியான விவரங்களுடன் பாடலை ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=5zaeTTRcta0 deviyar iruvar Priya

நன்றி

அன்பன் ராமன்

LET US PERCEIVE THE SONG -58

  LET US PERCEIVE THE SONG -58 பாடலை உணர்வோம் -58 தேவியர் இருவர் முருகனுக்கு [ கலைக்கோயில் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் - ராமமூர...