Thursday, March 19, 2026

The fruit of labour

The fruit of labour

உழைப்பின் கனி

நெஞ்சம் மறப்பதில்லை [1963] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,           பி சுசீலா 

பாடலும் அதுவே படமும் அதுவே ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று இன்று வரை நின்று கேட்டு ரசிக்க வைக்கும் விந்தையை என்ன சொல்ல?

இது அசுரர்களின்  ஆக்கம் . இது நிகர்த்த இன்னோர் ஆக்கம் இப்போதைக்கு இல்லை -அடித்துச்சொல்ல முடியும். ஆங்கிலத்தில் 'HAUNTING ' என்றொரு சொல்லாடல் உண்டு. அதுதான் இது இப்பாடல் நம்மை உள்ளூர வாட்டிக்கொண்டே இருக்கும். ஆட்டிப்படைக்கும்.  ஏன் ?

சொல் தொகுப்பு அப்படி . இல்லையா பின்னே ? எதை நெஞ்சம் மறந்திருக்கிறது ? மனம் லயித்த எதையும் அது மறக்காது. அதுவே காதலின் அஸ்திவாரம். அதுவே இன்ப-துன்பங்களுக்கெல்லாம் தாய். [ஆம் மனம் தான் தாய்] 

அதை கவியரசர் எவ்வளவு தெளிவாக ஆணித்தரமாக பாடியுள்ளார்.

சரி      மறப்பதில்லை  என்று சொல்லும் போதே ஒரு நீண்ட கால பரிமாணத்தை சொல்லாமல்   சொல்லும் நேர்த்தி.

கவி சொல்லிவிட்டார் .. பாடலில் எப்படி சொல்வது நீண்ட நினைவில் இருந்து காற்றில் தவழ்ந்து வரும் ஹம்மிங் அதைத்தான் காட்டுகிறது. அதனால் ட்யூன் நிதானமாக பயணிப்பதோடு நிறைவாக கண்களும் மூட வில்லை  என்

கண்களும் மூடவில்லை என்றுஏங்கி காத்து இருந்த . துயரை சொல்ல முயல்கிறது. ஒவ்வொரு சரணத்திலும் இதே தகவல் தான்

தாமரை இதழில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்

உன் தோற்றமில்லை ஒரு தூதுமில்லை கண்ணில் தூக்கமும் பிடிக்கவில்லை என்று பேசும் நாயகி இதை செய்த வித்தகம் திரு எம் எஸ் வி வழங்கிய ட்யூன் அதிலும் ஒவ்வொரு சொல்லுக்கும் விசேஷ அழுத்தம் ஒவ்வொரு இல்லை  சொல்லும் போதும் ஏக்கம் தவிர வேறொன்றும் இல்லை என்ற உணச்சிக்கொப்பளிப்பில் சுசீலாவின் குரல் காற்றில் மிதக்கிறது.

அதை செய்வதென்ன எளிதா? இல்லை இசை மங்கி மென் குரலில் தொடர அவ்வப்போது சரோட்  எழுப்பும் மென் அழுகுரல் , குரலின் நிழலாய் துரத்தி வரும் தபலா [அனுமந்தப்பா வின் விரல் வித்தை]

அனைத்தும் சேர்ந்து நம்மையும் பின்னோக்கி இழுத்துச்சென்று நெஞ்சம் மறப்பதில்லை என்று ஆமோதிக்கச்சொல்லும் கந்தர்வ இசை . நான் இப்போது          II B S c  சிறுவனாக மனதளவில் உலவுகிறேன் ]

இதில் பல அசுரர்கள், கவிஞர், விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,சுசீலா , வின்சென்ட் சுந்தரம் [ஒளிப்பதிவு ] அனைத்தையும் ஒருங்கிணைத்த ஸ்ரீதர்

ஜமீன்தார் காலத்திய கதை சைக்கிள் மோட்டார் சைக்கிள் , ஆட்டோ , பஸ் ரயில் எதுவும்  கண்ணில் படாதபடி காடு  மலை வயல்வெளியில் படமாக்கி உள்ள அசுரர் கூட்டம்  

பாடலை ஆழ்ந்து கேட்டு மனதைப்பறிகொடுங்கள். பாடலுக்கு இணைப்பு இதோ 

SONG NENJAM MARAPPADHILLAI  [1963\ KD VR PS  https://www.youtube.com/watch?v=ZYLUUHCMijs

இப்பாடலை சுபஸ்ரீ அவர்களின் விளக்கத்தோ டு கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=I3kkuAaS6GM QFR 197

Wednesday, March 18, 2026

KALYAN KUMAR

 KALYAN KUMAR

கல்யாண் குமார்

நடிகர் கல்யாண் குமார் 1960 களின் பிற்பாதியில் தமிழில் நடித்து வெற்றி பெற்ற கன்னட நடிகர். அவர் அன்றைய மைசூர் மாநிலத்தில் பிரபல சூப்பர்ஸ்டார்

தாய்மொழி தமிழ் [மைசூர் ஐயங்கார்]. அதனால் தமிழ் பேசி நடிக்க முடிந்தது. அந்நாளில் சொந்தக்குரலில் பேசவேண்டும். வேறு வசதிகள் இல்லை. எனினும் தமிழில் முதல் படமாகிய "நெஞ்சில் ஓர் ஆலயம் " அவருக்கு பெரும் வரவேற்பை தந்தது. நெஞ்சில் ஓர் ஆலயம் பல சிறப்புகள் கொண்டது. அதில் கதை , இயக்கம் நடிப்பு, ஒளிப்பதிவு பாடல்கள் இசை காட்சியமைப்பில் கோணங்கள் என பன்முக பெருமை கொண்ட சித்திரம் அவை குறித்த பல தகவல்களை பகிர்கிறார் திரு சுரா அவர்கள். நல்ல விவரங்கள் கொண்ட பதிவு. கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=bFMKPZlRyuU kalyaanakumar –cvs Vincent Sura

Tuesday, March 17, 2026

LET US PERCEIVE THE SONG -61

 LET US PERCEIVE THE SONG -61

பாடலை உணர்வோம் -61

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே [தர்மம் எங்கே - 1972] கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலா

இது போன்ற ட்யூன்களை எப்படி கற்பனை செய்கிறார்     எம் எஸ் வி என்பதே பெரும் கேள்வி மற்றும் சிந்தனைக்குரிய ஒன்று. ஏன் எனில்,  கேட்ட மாத்திரத்தில் ஊது வத்தியின் நறுமணம் போல் விடாமல் வியாபித்து நிரப்புவதைப்போல் காது வழியே நுழைந்து மனதில் நிறைந்து சிந்தனையில் தவழ்ந்து மனதில் சுழன்று கொண்டே இருக்கும் வலிமை -இப்பாடலின் சிறப்பு.

இப்பாடலை அதிகம் கேட்டதில்லை என்போர்கூட ஒரு முறை கேட்ட பின் நீண்ட நெடிய பரிச்சயப்பட்ட ஒலிக்கலவை நம்மை பின்னி படர நாம் வயப்படுவதை உணரலாம். அப்படி என்ன இந்தப்பாடலில் என்றால் சொல்லி விளக்க இயலாது , கேட்டபின் மறக்க இயலாது.

ரீங்காரம் என்பது என்ன என்பது இப்பாடலை கேட்ட பின்னர் குறைந்த பட்சம் உணரவாவது  இயலும்.

இதில் ரீங்கரிப்பது என்ன ?                                                           சொல்லா , சுவையா , ஒலியா , இசையா என்று கேள்விகளால் தேடித்துருவினாலும் எண்ணற்ற விடைகள் தோன்றும

முதலில் உணர்வது இனம் புரியாத வசீகரம் அது அந்த குரல்களின் ஒருங்கிணைப்பில் தோன்றி நெடுகிலும் வியாபிக்கும் ஒரு மென்மையான நாத சாந்தம் என்றே சொல்ல தோன்றுகிறது. அதுவே எம் எஸ் வியின் மந்திர ஜாலம் அவர் ஒரு ம்யூசிக் மெஜீஷ்யன் , நினைத்த படி அவர் நினைத்தபோது கண்ணை மட்டுமல்ல நமது அனைத்து புலன்களையும் எளிதாக கட்டிப்போட்டு விடுவார். அவரின் ஒலிக்கோர்வைகளை ரசித்துப்புரிந்து கொண்ட மனங்கள் வேறெந்த ஆசைக்கும் ஓசைக்கும் அடிபணியாது. அதை அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே புரிந்து கொள்வது சாத்தியம். 

இன்றைக்கும் எம் எஸ் வியின் இசைக்கு இவ்வளவு வரவேற்பு மங்காமல் தொடர்கிறதென்றால், அவற்றின் இசை கட்டமைப்பு வெகு இயல்பும் நேர்த்தியும் பின்னிப்பிணைந்த கலவை என்பதோடு பிசிர் என்ற சொல்லுக்கு  பிசிராளவுக்குக்கூட இடம் கொடாத அற்புத ஒலி ச்சங்கமம். அவரது இசை முரண்கள் இல்லாத ஒலிசாம்ராஜ்யம் அது அவரின் இசைராஜாங்கம். அதில் ஒன்றே இப்பாடல்

ஊடலுக்குப்பின் தொடங்கும் இப்பாடல் கவியரசர் கண்ணதாசனின் யாப்பு , சொல்ல வேண்டுமோ பாடலில் மிதமிஞ்சி ஊடாடும் எதுகை மோனை ஒரு புறம் , மறுபுறம் சிருங்கார ரசம் சொட்ட சொட்ட உதிர்த்துள்ள சொற்கள் 

ஆண் /பெண் பேதமின்றி போட்டியாக விழும் வர்ணனைகள். குரல்களின் நளினத்தில் பாடலை கவனிக்காமல் விட்டு விடுவார்களோ என்ற ஐயம் போலும் பாடல் நெடுகிலும் வீடியோவில் கீழே  கவிதை  பிழையின்றி ஓட வேறு வகை அனுபவம் [பல பாடல்களில் கவிதை தப்பும் தவறுமாக எழுதப்பட்டு கவியை  அவமானப்படுத்தும் அவலங்களை நிறைய பார்த்துள்ளோம். இப்பாடல் அவ்வாறில்லை -நல்ல வேளை] . பாடலின் செம்மையான சுவை கோரஸில்  புதைவந்துள்ளது. இசையை விட கோரஸ் வழங்கியுள்ள ஒலி  ஆதாரம் வெகு அற்புதம்.

பாடல் நெடுகிலும் சிறு மாற்றம் கூட  இல்லாத ஒரே ட்யூன் , பல்லவியில் தொடங்கி இறுதி வரையில் ஒரே சீரான ட்யூன் ஆயினும் கேட்பதற்கு வெகு நளினம் . ஒரே ஒரு உத்தி பாடலில் முதலில் பல்லவியை பாடும் இருவரும் பின்னர் வரும் பல்லவிகளில் பள்ளியறைக்குள் வந்த என்று 'வந்த' என்று சொல்லி இடைவெளிவிட்டு டிஎம்எஸ் தொடர  அதே போல் சுசீலா அள்ளியிறைக்க வந்த என்று நிறுத்திப்பின்னர் கள்ள நகையே என்று தொடர்கிறார். ஆனால் பாடலில் ஓட்டம் வெகு விரைவாக இருப்பது போல் ஐயோ பாடல் முடிந்து விட்டதே என்றே ஏக்கம் கொள்ள வைக்கிறது .

இப்பாடலில் நான் கண்ட  விசேஷம். எந்த வகையான வர்ணனை ஆயினும் கற்பனையாக அமைத்து இப்பாடலின் ட்யூனில் பொருத்திப்பாடிப்பாருங்கள் வெகு சிறப்பாகப்போருந்தும் அப்படி ஒரு சர்வ வியாபி இந்த ட்யூன். பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=mpHuExzw20o                                                   Palli araikkul vandha dharmam enge KD  MSV TMS PS [1972]

Monday, March 16, 2026

THE PRESENT

 THE PRESENT

தற்போது

இன்றைய மேற்காசிய சூழலில் பதற்றம் , பொருள் சேதம், உயிர் சேதம் , அழிவு, மூர்க்கத்தனமான எதிர்வினைகள் , ஒருவரை ஒருவர் போடா சரிதான் என்று சொல்லாத குறையாக நிகழ்வுகள் ஒரு புறம், விமானங்கள் கூட நினைத்த வழித்தடங்களில் செல்ல முடியவில்லை

கடல் வழியை மூடிவிட்டோம், வான் வெளியில் வந்தால் தாக்குவோம் என்று ஒரே எச்சரிக்கை. இவை ஒருபுறம் இருக்க , அசராமல் எப்போதும் போல் இயங்கிவருவது இந்தியா மட்டுமே எனில் தவறல்ல

இவ்வளவையும் தாண்டி பல தலைவர்கள் அவரவர் இருப்பிடங்களிலேயே தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலவரம் . எப்படி பார்த்தாலும் நவீன போர் முறைகள், அறிவுசார் நுட்ப மதியின் துணை கொண்டே முன்னேற்றமும் வெற்றியும் பெறுகின்றன.. இதில் செயற்கை நுண்ணறிவு வேறு பயன் படுகிற நிலை

கருவிகளை விட குருவிகளின் பங்களிப்பே அதிகம் ஆம் உளவுப்பிரிவுகள் எப்படி இயங்குகின்றன எவ்வளவு ஆழ்ந்த திட்டமிடல் மற்றும் தீவிர கவனம் இரண்டும் தொடர்ந்து செயல் பட்டு, எதிர்பாராத நேரத்தில் எதிர்கொள்ள முடியாத வேகத்தில் மாற்று சர்வ நாச பலம் கொண்டு அரங்கேற்றப்படும் நவீன முறைகள் என பட்டியல் நீள்கிறது

இவற்றின் வெகு நுணுக்கமான தகவல்களை திரு எஸ் கே [SKA  தனக்கே உரிய தெளிவும் வேகமும் பட்டியலும் கொண்டு விளக்குகிறார். ஊன்றி கவனித்து அவர் தரும் தகவல்களை உள்வாங்கி பயன் பெறுவீர் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Agc7yN5qqj0 the present SKA

                                           ********************

The fruit of labour

The fruit of labour உழைப்பின் கனி நெஞ்சம் மறப்பதில்லை [1963] கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ,            பி சுசீலா   பாடலும்...