Tuesday, February 3, 2026

LET US PERCEIVE THE SONG -54

 LET US PERCEIVE THE SONG -54

பாடலை உணர்வோம் -54

உள்ளத்தில் நல்ல உள்ளம் [கர்ணன் 1964] கண்ணதாசன்,  விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல் சீர்காழி கோவிந்தராஜன்

என்னது அடுத்த பாடலும் 'கர்ணன்' படத்திலிருந்தா? என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் இப்பாடல் குறித்த திரு அமுதபாரதி அவர்களின் சிறப்பான விளக்கம் விளைவித்த “-இதை உடனே பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் அமைந்தது.” அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.

கணீரென்ற குரலில் ஒலித்த, ஆழமான சோகம். வாழ்வியலின் நுணுக்கங்களை, மானுடன் கர்ணனுக்கு பகவான் கிருஷ்ணன் வழங்கிய விளக்கம் / தெளிவுரை/ அல்லது பெரும் ஆசி என்றும் கூட சொல்லலாம்.. எதுவாயினும், கவிஞர் அதியற்புதமாக மஹாபாரத கதையின்வாழ்வியல் பொருளை எளிய தமிழில் பாடியுள்ளார். எதையும் மறைத்துப்பேசாமல் செஞ்சோற்று க்கடன், நன்றி செலுத்தும் குணம், வஞ்சனைக்கு துணை போகவைத்த அனைத்தையும் நினைவு படுத்தி வஞ்சகன் கண்ணனடா என்று தன்னையும் அடையாளப்படுத்திய கதாபாத்திரம். ஒருவன் நல்லதே செய்தாலும், அவ்வப்போது அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்களுக்கு தண்டனை உண்டு என்பதையம் ஆயினும் இறைவன் துணை நிற்பதையும் வெளிப்படுத்திய பாடல். இப்பாடலின் இசை வெளிப்படுத்திய சோகம் ஆழமானது. அதற்கென ஒலிக்க வைத்த ஷெனாய், சாரங்கி கருவிகளின் உணர்வைப்பிழியும்முயற்சி/ மீட்டல்   இவற்றை நன்கு விளக்குகிறார் திரு அமுதபாரதி அவர்கள். அவரது விளக்கம் முற்றிலும் வேறு கோணத்தில் அமைந்துள்ளது. மேலும் இசையின் நுணுக்கங்களை திறம்பட எடுத்துரைக்கிறார்.. அன்றைய 'கர்ணன் ' பாடல்களுக்கு சாரங்கி சந்தூர் ஷெனாய் இவற்றை கையாள பம்பாய் திரையுலகின் முக்கிய கலைஞர்கள் தென்னகத்து க்கலைஞர்களுடன் இணைந்து பங்களிப்பு வழங்கினர் என்பது அந்நாளில் பேசப்பட்டது.. எனவே முதலில் அவரது விளக்கம் தாங்கி வரும் வீடியோ இணைப்பு இதோ  .  

https://www.youtube.com/watch?v=ZOuKekNXZno ullaththil Amudhabaarathi

ஆழமான புரிதல் தரும் விளக்கத்தை கேட்ட பின்னர் பாடலின் வீடியோ வை பார்த்தால் எவ்வளவு நுணுக்கங்களை 1963-64 கால கட்டத்தில் தமிழ் சினிமா பாடல்கள் வடிவமைப்பில் அமைந்திருந்தனர் என்பது புரியும். இசைக்கருவிகளின் நேரடி பதிவு [live recording] எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்று ரசிக்க திரைப்பாடலின் வீடியோ இணைப்பு இதோ . கண்டு கேட்டு மகிழ்வீர்

https://www.youtube.com/watch?v=Ga8_Sx-nUlY

நன்றி                              அன்பன் ராமன்

Monday, February 2, 2026

COMMANDOS

 COMMANDOS                                       

அதிரடி வீரர்கள்

நாம் அவ்வப்போது கமாண்டோக்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்கால உலகளாவிய தீவிரவாதம், தேசவிரோத கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் முக்கிய விஞ்ஞானிகள், அறிவுசார் துறைகளின் தலைமை போன்ற இடங்களில் தாக்கி தொழில்நுட்ப அமைப்புகளை சீர்குலைப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் அப்பாவி பொதுமக்களை கொல்வது சிறை பிடிப்பது/ வெட்டிக் கொல்லுவது என அழிவு நடவடிக்கைகளில் பல தீவிரவாதிகள்   ஈடுபடுகின்றதை அறிவோம். இவர்களை எதிர்கொள்ள நல்ல திறன், உடற்கட்டு உறுதியான மனம் மற்றும் மின்னல் வேக துரிதம் போன்ற திறமைகொண்டவர்களை, எண்ணற்ற தீவிர நுணுக்கமான பயிற்சிகளுக்குப்பின்னர்  கமாண்டோ எனும் அதிரடிப்ப்படையில் பணி அமர்த்துவார்கள்.  கமாண்டோக்கள் தனித்தும் குழுவாகவும் செயல்படும் உத்திகளை அறிந்தவர்கள். மிகச்சிறிய துப்பாக்கி முதல் இயந்திரத்துப்பாக்கி வரை பயன்படுத்தவும் பராமரிக்கவும், பழுது நீக்கவும் அறிந்தவர்கள். மேலும் எந்த எதிர் தாக்குதலிலும் தயங்காமல் பாய்ந்து எதிரியை முடக்கி ஆயுதங்களை பறிக்கவும் அவர்களை கொல்லவும் தயங்காமல் விரைந்து செயல் படுவர். இவ்வகை கமாண்டோக்கள் ஆகச்சிறந்த போர் வீரர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு எப்போதும் தயார் நிலையில் இருப்பவர்கள். இவ்வகை வீரர்கள் விமானப்படை, கப்பற்படை தரைப்படை இவற்றிற்கென பிரத்தியேகமாக உள்ளனர். இவை தவிர உள்நாட்டு தேவைக்கு முக்கிய அதிபர்கள் பாதுகாப்பிற்கு என வெவ்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன. இவை குறித்து விரிவாக விளக்குகிறார் திரு. ஆசிர்  சாமுவேல் அவர்கள். 

அவர் தரும் நுண் தகவல்களை அறிய இணைப்பு இதோ     

Sunday, February 1, 2026

KERALA INSTRUMENTS

 KERALA INSTRUMENTS                                                                                            

கேரள கருவிகள்

கேரளாவின் முக்கிய ஆலயங்கள், நிகழ்வுகள்  என பல சூழல்களில் செண்டை மேளத்தின் ஒலி நாற்புறமும் தெறித்து ஓங்கி ஒலிக்க கேட்கும்.. ஒரே குழுவில் வெவ்வேறு வகையான தாள ஒலிகள் இணைந்து கேட்பது ஒரு பரவசம்.  செண்டைக்குழுவிலும்  நாயனம் போன்ற ஒரு காற்று வாத்தியம் இசைக்கப்படுகிறது. ஆனால் அந்த நாயனங்களின்  ஒலி  திருவிழா கூட்டத்தில் சிக்கிய பூனைக்குட்டி போல முனகும்.

செண்டையில் சில வினாடிகள் இடைவெளி கிடைத்தால் இந்தப்பூனை ஒலி லேசாக வெளிப்படும்.. எனவே செண்டை இசை என்றாலே இடி முழக்கம் தான் என்று நம்பப்படும் சூழல் தோன்றிவிட்டது.போகட்டும் செண்டை மேளம் என்பது குழு இசை. பலரும் சேர்ந்து சரியான காலப்ரமாணத்தில் இசைப்பது ஒருபுறம் இருக்க அவர்கள் அசுரவேகத்தில்  தாளம் இசைப்பது விளக்கவொண்ணாத ஆச்சரியம். அப்படி ஓர் நிகழ்வின் தொகுப்பு இதோ

[EXTENDED VERSION] Extreme speed Chendamelam! Hefty beats –rapid rhythm play in unison.

பாண்டி இசை /பாண்டி மேளம்

பாண்டி மேளம் என்பதும் கேரளத்தில்   இசைக்கப்படும் ஒரு வகை வாத்திய இசை. இதிலும் தாள க்கருவி என்னவோ செண்டை தான். ஆனால் இந்த இசையில் நாயனம் போன்ற காற்றுக்கருவி முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப்பாண்டி மேளம் -குழல் இசையை தொடர்ந்து வரும் தாள இசை. எனவே பாண்டி மேளத்தில்  அனைத்துக்கருவிகளையும் கேட்டு ரசிக்க வாய்ப்பு தருவது. அவ்வகை நிகழ்வின் வீடியோ இணைப்பு இதோ. கேட்டு ரசியுங்கள்.

Rhythms of Kerala: Pandi Melam | Kerala Tourism priority to wind instruments  PANDI MELAM OF KERALA

நன்றி

அன்பன் ராமன்

LET US PERCEIVE THE SONG -54

  LET US PERCEIVE THE SONG -54 பாடலை உணர்வோம் -54 உள்ளத்தில் நல்ல உள்ளம் [ கர்ணன் 1964] கண்ணதாசன்,   விஸ்வநாதன் ராமமூர்த்தி , கு...