Madurai-12
மதுரை-12
கள்ளழகர் -சிறப்பு தகவல்கள்
கேட்கக்கேட்க பிரமிப்பாக இருப்பதாக பல தருணங்களில் பேசுகிறோம். அப்படி எண்ணற்ற வியப்புகளையும் அதிசயங்களையும் திருமாலிருஞ்சோலை [அழகர் கோயில்] எம்பெருமான் கள்ளழகர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அவ்வளவு சிறப்புகளையும் தங்கு தடை இன்றி தெளிந்த நீரோடை போல மளமள வென்று பிரவாகமாக கொட்டுகிறார் திரு அம்பி பட்டர் அவர்கள்.
இந்த தல வரலாறு மாபெரும் சிறப்புகளை உள்ளடக்கியது.. நான் ஆன்மிக வாதி அல்லன் ;எனினும் புரிந்ததை என்னளவில் முடிந்தபடி தொகுத்து தருகிறேன். பிழைகளும் குறைகளும் அடியேனையே சாரும் . ஏனைய நிறைகள் இறைவனதே .
இத்திருக்கோயில் நான்கு யுகங்களாக இருப்பதாகவும், நிர்மாணித்தவர் யார் என்பதற்கு எவ்வித குறியீடுகளும் இல்லை. எண்ணற்ற காவிய புருஷர்கள் வணங்கி அருள் பெற்ற தலம் அழகர் கோயில் என்கிறார் திரு அம்பி பட்டர் அவர்கள்.. இக்கோயில் வைகானச வழிபாட்டு முறையில், தினம் ஆறு கால பூஜை அனுஷ்டித்து வெகு சிறப்பாக இயங்கி வருகிறது. மூலவர் நேரடியாக பரம பதத்திலிருந்து இறங்கியவர் என்பதால் பரமபதநாதன் / பரமசுவாமி என்ற திருநாமம் கொண்டவர்.
உற்சவர் அழகு ரூபன் -சுந்தரரராஜப்பெருமாள் [அழகர்] என்று திருநாமம் பெற்றவர். இவருக்கு கள்வர் வேடம் அலங்காரம் செய்வதாலும், உள்ளம் கவர் கள்வன் என மங்களாசாசனம் பெற்றதாலும்
இவரை
கள்ளழகர்
என்றும்
உவகையுடன்
அழைக்கின்றனர்..
மேலும்
தென்னாட்டில்
உறையும்
கள்ளர்
இனத்தவருக்கு
குலதெய்வம்
என்பதனாலும்
பெருவாரியான
மக்களால்
'கள்ளழகர்'’
என்றும்
அன்போடு
அழைக்கின்றனர். இவை ஒரு புறம் இருக்க இக்கோயிலுக்கு புராண புருஷர்கள் பலராமன் , பீஷ்மாச்சாரியார் , பஞ்சபாண்டவர்கள் வருகை தந்த நிகழ்வுகளையும் பீஷ்மர் மங்களாசாசனம் செய்ததையும் அம்பி பட்டர் விவரிக்கிறார்.
18 படி கருப்பண சாமி
அழகர்
கோயிலின்
நுழைவுப்பகுதியில் அமைந்த காவல் தெய்வம் கருப்பணசாமி . இவ்விடத்திற்கு 18ம் படி கருப்பு என்று கிராம மக்கள் அழைப்பர். அதற்கு ஒரு வரலாறு உண்டு.
அழகரின்
பெருமைகளை
அறிந்த
கேரள மன்னன்
ஒருவர்
அழகரை
கவர்ந்து
சென்றுவிட
தலை
சிறந்த
மாந்திரீகர்களை அழகர் கோயிலில் தங்கி வசிய வேலைகள் செய்ய ஏற்பாடு செய்திருந்தாராம். அவர்களும் இங்கேயே தங்கி கோயில் பகுதியில் மறைந்திருந்து இரவில் மாந்திரீகம் செய்துவந்தார்களாம். அழகருக்கு அன்றாடம் 6 கால பூஜைக்கும் பலி பீடத்தில் சமர்ப்பிக்கும் உணவு தீர்த்தம் இவற்றை உட்கொண்டு மந்திர தந்திரங்கள் வழியே அழகரை தங்கள் பிடிக்குள் கொண்டு வர எண்ணற்ற உபாயங்கள் மூலம் செயல் பட்டனராம்.
ஆனால்,
கோயில்
நிர்வாகம்
ஏதோ
அசம்பாவிதசம்
நடக்கும்
போல்
இருப்பதை
உணர்ந்து
மிகப்பெரிய
தந்திரிகளைக்கொண்டு நடப்பது என்ன என்பதை புரிந்து கொண்டு அந்த 18 பேர்களையும் சிறை பிடித்துவிட்டார்களாம்
. அவர்களை
நாடு
கடத்த
முனையும்போது
அவர்கள்
பெரும்
பிரார்த்தனை
ஒன்றை
வைத்தார்களாம். இத்துணை நாட்களாக அழகர் தீர்த்தம் பிரசாதம் இவற்றை உண்டு அழகரிடம் மனம் ஒன்றி விட்டோம். எங்களால் அழகர் இல்லாத நிலையில் இருக்க முடியாது. நாங்கள் செய்த பாவத்திற்கு இங்கேயே படிக்கட்டுகளாக இருந்து விடுகிறோம் பக்தர்களின் பாதங்கள் எங்கள் மீது படிந்து சென்று அழகரை சேவிக்கட்டும். அழகர் பிரசாதம் தீர்த்தம் இவற்றை தந்தால்
போதும்
என்று
18 படிகளாக
நுழை
வாயிலில்
இன்றும்
இருப்பதாக
ஐதீகம்.
அந்நுழைவுவாயில் அர்த்தஜாம பூஜைக்குப்பின் மூலவர் பரமசுவாமி தரித்த மாலை இரவில் கதவில் சார்த்தப்பட்டு படிகளுக்கு தீர்த்தமும் பிரசாதமும் நிவேதனம் ஆகிறது..
இந்த
காவல்
பணியை
செய்வது
கருப்பண
சுவாமி
என்றும்
18ம்
படி
கருப்பு
என்றும்,
பெரும்
சக்திவாய்ந்த
தெய்வம்
என்றும்
அழகரின்
பக்தர்கள்
பரி பூரணமாக ஏற்பதை காணலாம்.
மதுரை பகுதியில் யாராவது பொய் பேசினால் 'எங்கே கருப்பண சாமி முன்னால வந்து சொல்லு 'என்று சவால் விடுவார்கள். அவ்விடத்தில் பொய் சொன்னால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அவ்வட்டாரத்தினர் பெரிதும் அஞ்சுவதை காணலாம். அழகர் கோயில் நுழைவாயிலில் இப்படி ஓர் காவல் ஏற்பாடு
ஐந்து வகை ஆயுதங்களுடன் பக்தரை ரட்சிக்க காத்திருக்கும் அழகர் , சக்கரத்தை எப்போதும் நொடியில் இயக்க ஆயத்த நிலையில் வைத்திருப்பதையும் பட்டர் விவரிக்கிறார்.
இக்கோயிலின் மேற்பகுதியில் மலையில் ஊற்றெடுத்து வரும் நூபுரகங்கை வாமனாவதாரத்தின் போது இறவனின்திருவடியில் அபிஷேகித்தநீர் துளி கீழே பாய்ந்து இங்கே நூபுர கங்கையாக ஊறி வருகிறது. எண்ணற்ற மருத்துவ குணங்கள் தாங்கி வருவதால் எண்ணற்ற துயர்களை துடைப்பதாக பெரிதும் போற்றப்படுகிறது.
ஆறுகால
பூஜை
யில்
ஆறிலும்
அழகருக்கு
நைவேத்தியம்
தினமும்
உண்டாம்.
அதில்
மாலையில்
நடந்தேறும்
நித்யானு
சந்தான
வைபவத்தில்
அழகருக்கு
படைக்கப்படும்
தோசை
அழகர்
கோயில்
தோசை
என்று
பெரும்
புகழ்கொண்டனது.
இந்ததோசை
வார்க்கப்பயன்
படும்
கல்
ஐம்பொன்
கல்
, வேறு
உலோகமோ
கல்லோ
கிடையாது.
இது
1 படி
அரிசி
மாவு
கால்
படி
உளுந்துமாவு
இரண்டையும்
கலந்து
[சுமார்
1 3/4 கிலோ
] ஒரே
தோசையாக
வார்க்கப்படுவது.
. அதன்
கனம்
எப்படி
இருக்கும்
என்று
ஊகித்துக்கொள்ளுங்கள் . அழகர்கோயில் தோசை என்று பெரும் மதிப்புக்கொண்டது.
அழகர் பங்கேற்கும் சித்திரை திருவிழா வேறு பல சுவைகளைக்கொண்டது. அதில் முக்கிய நிகழ்வு எதிர் சேவை எனப்படுவது.. அழகர் மதுரை நோக்கி பல்லக்கில் செல்லும் போது அந்தநாளில் மதுரை மன்னன் மலையத்வஜ பாண்டியன் அழருட ன் நடந்தே வருவாராம். அப்போது அழகர் பின்னால் இருந்துகொண்டே சாமரம் வீசி கைங்கர்யம் செய்வாராம். அப்போது இறைவன் , ஏனப்பா நீ பின்னல் நின்றுகொண்டு வருகிறாயே , என் முக தரிசனம் உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டாராம். மன்னன் சொன்னாராம் எண்ணற்ற யோகிகளும் முனிவர்களும் வழிநெடுகில் உங்கள் தரிசனத்திற்கு காத்து நிற்க, நான் முன்னாள் நின்று சாமரம் வீசினால் அவர்களுக்கு உங்கள் தரிசனம் கிடைக்காமல் செய்த அபச்சாரம் /சாபம் எனக்கு சேரும். எனவே அதை தவிர்க்க நான் பின்னால் இருந்தபடியே கைங்கர்யம் செய்கிறேன் என்றாராம் மலத்வஜபாண்டியமன்னன் [மீனாட்சியின் தந்தை]. இறைவன் மனம் இறங்கி இதோ எனது ப்ரதிபிம்பத்தினை எனக்கு முன் காட்டுகிறேன் நீ பின்னல் இருந்து கொண்டே முன்னாள் பார்த்து சேவித்துக்கொள் என்று காட்டியதே 'எதிர் சேவை' என்பது. அதன் வடிவமாக இப்போதும் பல்லக்கில் பெருமாள் எதிரில் ஒரு கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கக்காணலாம்.
திருமலை மன்னர் தான் விழாவை சித்திரையில் அமைத்து
வழியில் தல்லாகுளம் ப்ரஸன்ன வெங்கடாசலபதி கோயிலில்
அழகர் எழுந்தருள செய்தார் என்பது வரலாறு.. இந்த பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் நிர்மாணித்ததும் மன்னர் திருமலை நாயக்கர் அவர்களே. நீண்ட நாட்களாக திருமலை மன்னர்
திருப்பதி பெருமாளை தரிசிக்க காத்திருந்தும் வாய்ப்பு அமையவில்லை. திருப்பதி பெருமாள்
மன்னன் கனவில் தோன்றி ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கே கோயில் எழுப்பு நான் அங்கே உனக்காக
ப்ரசன்னமாகிறேன் என்று சொன்னாராம் அங்கேயே அந்த கோயில் கட்டப்பட்டு இறைவன் ப்ரசன்னமானதால்
அது பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் என்று தல்லா குளத்தில் இன்றும் அருள்பாலிக்க காணலாம்.
நன்றி
அன்பன் ம வ
வீடியோ https://www.youtube.com/watch?v=3JWTR4Pp6sg
AZHAGAR HAATHMIYAM –AMBI BHATTAR