Tuesday, March 10, 2026

LET US PERCEIVE THE SONG -60

 LET US PERCEIVE THE SONG -60

பாடலை உணர்வோம் -60

 பாடல்கள் திரையில் தத்துவம் பேசுவது அவ்வப்போது அமைவது தான். ஆயினும் காட்சியுடன் இணைந்த வகை எனில் பின்னணிப்பாடகர்கள் பாடுவது இயல்பு. இது காட்சியில் இணைந்த பாடலே எனினும் , இதை மெல்லிசை மன்னரே பாடியுள்ளார் [ஒரு வேளை சி வி ராஜேந்திரன் கேட்டுக்கொண்டாரோ என்னவோ].  ஆனால் இப்பாடல் மிகவும் நுணுக்கமான உணர்வுகளை சுமந்து வருவதால் அதை எம் எஸ் வி கையிலெடுத்து குரல் கொடுத்ததால் பாவங்கள் வெகு நேர்த்தியாக ஒலிக்கக்கேட்கலாம் .

வாழ்க்கையே ஒரு சுமை என்ற நிலையில் தவிக்கும் மனம் இது போன்ற தத்துவங்களால் சற்று அமைதியுறும்/ குறைந்த பட்சம் தொடர்ந்து வாழத்தலைப்படும். அப்படியான சொற்கள் இப்பாடலில் ஏராளம்

பல்லவியிலேயே

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே

இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு  மகளே   என்று சொல்லும் கவி [வாலி]

                                        மனதிற்கு தெம்பூட்டும் வகையில்

மனித குல ம்  வாழ்வதிந்த தத்துவத்திலே

அனுபவத்தில் எழுதிவைத்தார் புத்தகத்திலே

பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும்

தாய் இனத்தினிலே

பிறந்தவரில் நீ ஒருத்தி ஆயிரத்திலே

பல்லவி

அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே

அன்னையைப்போல் அன்பிற்கும் அவனிடத்திலே

மகளே உன் மனக்குறையை அவனிடம் கூறு

கருணைக்குத்தான் கடவுள் என்று மற்றொரு பேரு

பல்லவி

தந்தை மறைந்துவிட்டார் ஆனால் மகன் பிறந்துள்ளான் இனி அவனே உனக்கு எல்லாம் என்பதை

அம்மா உன் வேதனைக்கோர் எல்லை வந்தது

சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ

நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ 

 

பல்லவி

இவ்வாறு பாடல் பயணிக்க கேட்பவருக்கு மனம் அமைதிகொள்ளும் அடக்கமான இசை .

இதுபோன்ற பாடல்கள் திரு எம் எஸ் வி குரலில் கேட்டால் உணர்வுகள் நன்கு உணரப்படும்

பாடலைக்கேட்டு அறிய இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=EwsaFvrw5sY inbathilum thunbathilum msv

எம் எஸ் வியை அப்படியே பிரதிபலிக்கும் திரு அனந்து  மேடையில் வழங்கியுள்ள பாடல் இதோ

https://www.youtube.com/watch?v=zzyBbkGc5q4 ANANTHU ON STAGE

1988 ம் ஆண்டில் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேயர் விருப்பமாக தி ரு எம் எஸ் வி அவர்கள் வழங்கிய இதே பாடல்.

https://www.youtube.com/watch?v=CnowqjmiqnA MSV

நன்றி

அன்பன் ராமன்

Monday, March 9, 2026

FACTS ASCERTAINED

 FACTS ASCERTAINED

உண்மை-- உறுதி செய்யப்பட்டது

 அன்பர்களுக்கு  நினைவிருக்கலாம் சில ஆண்டுகள் முன்னம் இந்திய எல்லைக்காவல் படையினர் கொடூரமான தாக்குதலுக்கு பலி ஆனார்கள்.. சுமார் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கண்ணிவெடி தாக்குதலில் மாண்டனர் . அதற்கு உரிய பதில் தரவேண்டிய கட்டாயத்தில் நமது நாடு தள்ளப்பட்டது

ஆனால் தேவையான விமான மேம்பாடுகள் முறையாக செய்யப்படாமல்  இருந்த நிலையில் கையில் இருந்த ஒப்புக்கு உதவும் விமானம் ஏவு கணை கொண்டு எதிர்த்தாக்குதல் தொடுத்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான்

ஆனால் அந்த சூழலில் மனிதனின் போர்த்திற னும் , சமயோசிதமும் மட்டுமே பயன் படும் என்ற நிலையில் நிகழ்ந்த பாலக்கோட் சம்பவம். 

 இழப்பு, சாதுரியம் குறித்த பல தகவல்களை மேஜர் மதன் குமார் விவரிக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து அரிய தகவல்களை தெரிந்துகொள்ள நல்  வாய்ப்பு. இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=4ZrCxGxk6pU op Balacot

Saturday, March 7, 2026

Madurai-5

Madurai-5                                                 

மதுரை -5

என்ன மீண்டும் மதுரையா?  என்று சிலர் புலம்பக்கூடும் . எவ்வளவு சுருக்கினாலும் விவரங்களும் வீடியோக்களும் உலா வரும்போது , இயன்ற வரை எழுதிவிடலாமே என்ற உணர்வு மேலிடுகிறது என்ன செய்ய ? அன்பர்கள் பொறுத்தருள வேண்டும்.

மீண்டும் மீண்டும் நான் ஏதோ மதுரையை உயர்த்திப்பிடிப்பதாக எவரும் எண்ண வேண்டாம். மாறாக வீடியோக்களை ஊன்றி கவனியுங்கள். வெளியூர் ஓட்டல்களில் கொட்டிகொடுத்து  பணம் இழந்து டூரிஸ்டுகள் புலம்பித்திரிவது சர்வ சகஜம் .சற்று விரிவான தகவல்களுடன் மதுரையை சுற்றினால் மன/வயிறு  நிறைவோடு உண்டு மகிழலாம். அதே நேரத்தில் மதுரைக்கென்று சில பிரத்தியேக அடையாளங்கள் எப்போதும் உண்டு-அது தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஏதோ ஒரு சிற்றுண்டிச்சாலை -சிறியதோ பெரியதோ -"வாங்க என்று வாய் நிறைய , கை கூப்பி    அழைக்கும் நிர்வாகிகள் அல்லது அவரின் சார்பாக ஏதோ ஒருவர் என்பது ப்ரத்தியேகம்..

ஒரு நாளின் எந்தப்பகுதியிலும் நேரத்திற்க்கேற்ப தயாராகும் சிறு சுண்டல் முதல் முழு சாப்பாடு மற்றும் நொறுக்குத்தீனிகளின்  தலைமையகம் மதுரை என்று தைரியமாக சொல்லலாம். இவை தவிர வேறெங்கும் கேட்டிராத பருத்திப்பால், ஜிகர்தண்டா, தேங்காய்ப்பால் முறுக்கு,, பீம புஷ்டி ஹல்வா , காலிபிளவர் பக்கோடா, பஜ்ஜி, போண்டா என பட்டியல் நீளும். இவை தவிர இடியாப்பம், தேங்காய்ப்பூ , மல்லி தோசை,, 5 வகை சட்டினிகளுடன் இட்டிலி, தோசை, மஞ்சள்பொடி பனங்கல்கண்டுபால், சோடாவில் இஞ்சி எலுமிச்சைபிழிந்து குடல்  நலம் காக்கும்   சிறிய பெட்டிக்கடைகள். இவற்றிற்கிடையே தேடித்தேடி வாங்கும் நாட்டுப்பழம் என்னும் வாழைப்பழம் மதுரையில் விற்பனை ஆவதுபோல் வட தமிழகத்தில்    இல்லை , சென்னை வாசிகளுக்கு தெரிந்ததெல்லாம் மாடர்ன் பிரெட் , பெரிய விளம்பர ஓட்டல்கள், பழமுதிர் சோலை என்ற பெயரில் பணம் கறக்கும் நிலையங்கள் மற்றும் சில குறிப்பிட்ட உணவக அடையாளங்கள் இவ்வளவே.

ஈவு இரக்கம் இல்லாமல் மாலை 5 மணிக்கு, தோசை, பஜ்ஜி போண்டா இவை இல்லை  என்று    சொல்லி நோகடிக்கும் ஓட்டல்களின்  தலைநகரம் ஸ்ரீரங்கம். . கேட்டால் 3 மணிக்கு பஜ்ஜி, 31/2 மணிக்கு பூரி மசால் 4 மணி யோட முடிஞ்சுடும் என்று பெருமை பேசும் ஓட்டல் சிப்பந்திகள். எல்லா ஊரிலும் மாலை 3 வரை சாப்பாடு சீரங்கத்தில் சாப்பாடு க்கு காலை 9.30 முதல் 12.30-1.0 மணிவரை, அப்புறம் புளியோதரை தயிர்வடை 2.30 மணி வரை என்று வெறுப்பேற்றும் பூலோக வைகுண்ட ஓட்டல்கள். இவை மதுரை வாசிகளுக்கு வியப்பை மட்டும் அல்ல வெறுப்பையும் தரும். இரவிலும் உணவு கிடைக்கும் தூங்கா  நகர் பிரஜைக்கு மாலையில் தோசைஇல்லை  என்பது பேரதிர்ச்சி.

வடை என்பதை ஒரு வேள்வியாகவே பார்க்கும் மதுரையில் வடைகளின் எண்ணிக்கை, வகைகள் இரண்டிலும் தனி முத்திரை பதிக்கும் நகர் மதுரை [வீடியோவில் பாருங்கள் -3 வடை 5 ரூபாய் என்ற அறிவிப்புடன் ]. பொதுமக்களின் வடை குறித்த வாதங்களையும் விளக்கங்களையும் பாருங்கள். வடையில் இவ்வளவு லாஜிக்கா என்று மிரள வைக்கும் விற்பனை கோணங்கள். பார்த்து ரசியுங்கள்.

இது என்ன மதுரை வெறும் தின்னிப்பயல்களின் கூடாரம் போலிருக்கிறதே என்று எவரும் நினைக்க வேண்டாம். மாறாக எல்லா வகை ருசிகளையம் நன்கு பயன்படுத்திக்கொள்ளும் விற்பனை யாளர்கள் மற்றும் உணவு வகை 'மாஸ்டர்கள் ' நிறைந்த ஊர் மதுரை. எனவே தான் அன்றாடம் வந்து போகும் சுற்றுலாப்பயணியார் கூட மதுரையை வியந்து ரசித்து ருசிக்கின்றனர்.

இவ்வனைத்திற்கும் மேலாக வேறு கலைகளையும் போற்றும் ஊர் மதுரை அவ்வகையில் 1960 களிலேயே நாதஸ்வர இசையில் கலக்கிய முதல் பெண்மணி திருமதி பொன்னுத்தாயி மதுரை தந்த வித்தகர். கர்நாடக இசையில் கொடிகட்டிப்பறந்த மணி அய்யர் [மதுரை மணி] எம் எஸ் சுப்புலக்ஷ்மி, திரு டி என் சேஷகோபாலன், திரு ஜீ எஸ் மணி, திரு டி ஆர் மஹாலிங்கம் மற்றும் திரு டி எம் சௌந்தரராஜன் என பெரும் பட்டியலுக்கு மதுரை உரிமை கோரும். பொன்னுத்தாய் அவர்களின் வீடியோ இணைப்பு கீழே. , அனைத்தையும் கண்டு மகிழ்வீர் .

🔥மதுரையில் குறைந்த விலையில் வீட்டுச் சுவை டிபன்! ஸ்ரீ ஈஸ்வரி டிபன் சென்டர் 🍛” /Sudar /Madurai  Can  we imagine ?

மதுரையும் வடையும் - Vadas of Madurai - MSF An endless range of vadais that MADURAI            BOASTS OF 

10 ரூபாய்க்கு 4 வடை | மதுரையின் அதிவேக வடை மனிதர் | MSF

https://www.youtube.com/watch?v=kJciQ879rGI  Madurai Ponnuthaayi.

நன்றி அன்பன் ராமன்

LET US PERCEIVE THE SONG -60

  LET US PERCEIVE THE SONG -60 பாடலை உணர்வோம் -60   பாடல்கள் திரையில் தத்துவம் பேசுவது அவ்வப்போது அமைவது தான் . ஆயினும் காட்சியு...