Tuesday, March 3, 2026

LET US PERCEIVE THE SONG -59

 LET US PERCEIVE THE SONG -59

பாடலை உணர்வோம் -59

தங்க ரதம் வந்தது [கலைக்கோயில் 1964] கண்ணதாசன்     வி- ரா , சுசீலா பாலமுரளிகிருஷ்ணா.

எப்படிப்பார்த்தாலும் இது ஒரு ஒரு யுகப்பாடல் .               என்ன யுகப்பாடலா என்கிறீர்களா ? ஆம் யுக புருஷர்கள் போல யுகப்பாடல் என்பவை எப்போதாவது தோன்றி , எப்போதும் வசீகரிப்பன. அப்படி ஒன்று தான் 'தங்க ரதம் வந்தது வீதியிலே' என்ற கண்ணதாசனின் பாடல். .

வர்ணனைகளை விளக்கவோ சொல்லவோ ஞானம் தேவை, அது அடியேனுக்கு இல்லாத ஒன்று ஆயினும் பாடலை கேட்க கேட்க மேலும் கேட்க தூண்டும் வகை இசைக்கோர்வை , குரல்களின் நளினம் மற்றும் சங்கீத சங்கதிகள். -அனைத்தும் தீஞ்சுவை .

வீணையின் நாதம் கொண்டு துவங்கி மனங்களின் லயிப்பில் மிதக்கும் சொல்லாடல் மற்றும் இசையின் நேர்த்தி. தபலாவில் தான் எவ்வளவு நிதானம் , கேட்டு ரசிப்பதே மனம் விரும்பும் வாய்ப்பு. 'மாங்கனிக்கன்னத்தில் ' என்ற சரண வரியை பாலமுரளி எடுப்பதைக்கேட்கவே அலாதி சுகம்.  

சுசீலா என்ன சளைத்தவரா ? செவ்விளநீரின் கண் திறந்து , செம்மாதுளையின் மணி வாய் பிளந்து ' என்ற பொழுதிலும், முளைவிடும் செந்நெல் கோலமிட்டு ..மூவர் உலா வந்த காலங்கள் போல என்னும் இடங்களில் எந்த வித்வானையும் இடதுகையால் தூக்கி சாப்பிடும் அனாயாசம்  சுசீலாவின் குரலிலும் ப்ருக்கா களிலும் -சொல்லி மாளாது.

எம் எஸ் விக்கு கர்நாடக இசை அந்நியம் என்று சிலர் பிதற்றியதை எப்படி ஏற்பது.? ஆபோகியை பிழிந்து சொட்டச்சொட்டவழி  நெடுகிலும் படர விட்ட இசை அமைப்பாளர் அல்லவா.?  ஓவ்வோர் கருவியையும் உயிர்ப்போடு கையாள்வது என்பது எம் எஸ் வி ஜனன காலத்திலேயே வாங்கிவந்த அப்பழுக்கில்லாத வரம்.        ஒரு சுவையான தகவல்

பாடல் பதிவு முடிந்ததும் பாலமுரளி எம் எஸ் வியிடம் இன்னொரு தடவை நன்றாகப்பாடிவிடுகிறே னே   , சுசீலா வெகு சிறப்பாகப்பாடி விட்டார் அதற்கு ஈடு கொடுக்க தான் கேட்கிறேன் என்று கோரிக்கை வைக்க, எம் எஸ் வி இல்லை நீங்கள் வெகு சிறப்பாகப்பாடியிருக்கிறீர்கள் , நிச்சயம் பாடல் வெற்றிபெறும் என்று ஊக்கம் சொல்லி அனுப்பிவைத்தார் என்று அந்நாளில் கேள்விப்பட்டதுண்டு. எதுவாயினும் இது காலத்தை வென்று களத்தில் நிற்கும் சங்கீத சாம்ராஜ்யம் எனில்  மிகை அல்ல.

பாடலுக்கு இணைப்பு இதோ

TAMIL OLD--Thanga ratham vanthathu(vMv)--KALAI KOVIL - YouTube

இப்பாடலின் பல்வேறு தன்மைகளை விளக்கும் QFR பதிவு இதோ

https://www.youtube.com/watch?v=pcy-qAPGwi4 QFR 226

எம் எஸ் வி யுடன் பயணித்த திரு அன ந்து அவர்களின்தங்க ரத்தம் பாடல் குறித்த விளக்கம் இதோ

https://www.youtube.com/watch?v=-YmcPXN6O08&t=5s  thangaradham Ananthu

Monday, March 2, 2026

IN OUR INTEREST

 IN OUR INTEREST

நமது நன்மை கருதி

இப்பதிவு மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே விலாவாரியாக எழுதவோ பேசவோ தேவை இல்லை உள்ளார்ந்த விவரங்களை புரிந்து கொண்டு தேவையற்ற கருத்து பரிமாற்றங்களை குறைப்பதன் மூலம் பல நன்மைகளை எட்ட /ஈட்ட முடியும். இந்த பதிவை கவனமாக பாருங்கள். இணைப்பு இதோ

 https://www.youtube.com/watch?v=nnX0RYRWyyc our safety

 

Sunday, March 1, 2026

Madurai-4

 Madurai-4                                                   

மதுரை -4

சென்ற பதிவின் [மதுரை -3] தொடர் விளக்கமாக பேராசியர் டாக்டர் வெங்கடராமன் கூறியுள்ள தகவல் இதோ.

மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு கடைசி யில் , புட்டும் ஆப்பமும் கிடைக்கும் .      மற்றொரு  முனையில் ஒரு ரூபாய் இட்டிலி கிடைக்கும். . பை -பாஸ் ரோடில் காலை உணவு மதியம் பிரியாணி , இரவில் இட்லி சப்பாத்தி ரெடி.  என்று ஒரு பட்டியல் தந்துள்ளார் .

பேராசியர் டாக்டர் வெங்கட்ராமன் மதுரைக்கல்லூரியில் சமகாலத்தில் பயணித்தவர். விலங்கியல் துறையில் பேராசிரியர். -பயோகெமிஸ்ட்ரி     [BIO-CHEMISTRY] மற்றும் விலங்கு செயலியல் [PHYSIOLOGY] துறைகளில் நல்ல பாண்டியத்வம் கொண்டவர். இவ்வனைத்தும் அவரது சிறப்புகள் [ஆயினும் எந்த புலமையும் இல்லாத எனக்கு நண்பர் என்பதே வியப்புக்குரியது தான்].

மதுரை -4

நம்மையும் நம்மவரையும் மட்டுமல்ல, மேலை நாட்டவரையும் ஈர்க்கும் சுவையும் எண்ணற்ற உணவு வகைகளும் மதுரையின் பெருமைக்கு அணிசேர்க்க காணலாம் . அவர்கள் நம்மவர்க்கு இணையாக உணவுகளை சுவைப்பதையும் கைகளால் உண்பதையும், ஒவ்வொரு பொருளின் கூட்டமைப்புகளையும் வியந்து பார்ப்பதும், வாழை இலையில் உண்பதன் உள்ளார்ந்த பொருள் பற்றி பேசுவதும் நாமும் கூட  புரிந்துகொள்ள வேண்டியவையே  சந்து பொந்துகளில் பயணித்து வெவ்வேறு இடங்களைக்கண்டு மகிழ்வுறும் மேல் நாட்டவரின் வீடியோ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Q-LwUP3EU_g Western tourists

மற்றுமோர் சுற்றுலா பயணி வாடகை ஆட்டோவில் சுற்றி ஆங்காங்கே உணவுப்பண்டங்களை ருசித்து மகிழ்வதைப்பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=QPaeKQqT90w  another westerner

மதுரையின் மற்றுமோர் பிரத்தியேக அடையாளம் "ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர்" சோடா. இந்தியா சுதந்திரம் பெரும் முன்பே துவங்கி இயங்கிக்கொண்டிருக்கும் சோடா நிறுவனம் சோடா தொழில் நுட்பம் இறக்குமதி ஜெர்மனியில் இருந்து. கோலி  சோடா  காலி பாட்டில் ஒன்றின் விலை 80/- ரூபாயாம் . 10 ரவுண்டு சோடா விற்றால் தான் முதலை மீட்க முடியும் போல் இருக்கிறது. இருப்பினும் சோடா , லெமனேடு , ஜிஞ்சர் , பன்னீர் சோடா என்று கொடிகட்டி பறக்கும் தொழில் இது. இணைப்பைப்பாருங்கள் கண்டு உணர நல்வாய்ப்பு

https://www.youtube.com/watch?v=BT0r5jwOh9U  MAPPILAI VINAAYAGAR                                        நன்றி    அன்பன் ராமன் 

LET US PERCEIVE THE SONG -59

 LET US PERCEIVE THE SONG -59 பாடலை உணர்வோம் -59 தங்க ரதம் வந்தது [ கலைக்கோயில் 1964] கண்ணதாசன்       வி- ரா , சுசீலா பாலமுரளிகி...