Wednesday, March 11, 2026

MELLISAI -A grand dimension

 MELLISAI  -A  grand dimension

மெல்லிசையின் பெரும் பரிமாணங்கள்

இவ்வளவு ஆண்டுகளாக திரைப்பாடல்களை நாம் அறிந்திருந்தாலும், அவற்றின் பல வகை பரிமாணங்களை நாம் அறிந்தோமா / ஆய்ந்தோமா எனில் நேரடி விடை கிடைப்பது அரிது. ஏன் எனில் பாடலில் எந்த குறிப்பிட்ட அம்சம் நம்மை ஆட்கொள்கிறது என்ற கேள்விக்கு விடை தரும் அளவிற்கு தெளிவுள்ள நபர்கள் வெகு சிலரே. அது ஏன் எனில் நம்மை ஈர்த்தது எது என்பதற்கு நமக்கே ஒரு தீர்மானமான  முடிவு எட்டாக்கனி . அப்படி எனில் இது ஆம் /இல்லை என்ற இரு நிலைகளையும் நாம் உணர்வது என்ற வினோத சூழல் தான் காரணம். கிட்டத்தட்ட ஏன் அந்த நபரை காதலித்தாய் ? என்று கேட்டால் பதில் எளிதில் கிடைக்காது ஏன் எனில் காதல் வயப்பட்டவர்கள் பலரும் "அழகு" என்ற அடையாளம் இல்லாத சாதாரண நபர்கள் தாம். எனவே 'ஈர்ப்பு' என்ற ஒற்றை பண்புதான் பலரை ஆட்கொள்கிறது.

திரைப்பாடல்கள் வெளிப்படுத்தும் ஈர்ப்பு அம்சங்கள், கவிதை, குரல், அமைப்பு, இசையின் ஒருங்கிணைப்பு , கருவிகளின் கூட்டியக்கம் என்ற பல காரணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே இவை பாடல் என்ற ஒரு பொருளுக்கானது. இவ்வனைத்தையும் தாண்டி, காட்சி அமைப்பு, திரையில் தோன்றும் பிம்பத்தின் உருவம் தரும் மயக்கம் என பிற காரணிகளால் பாடல் வெற்றி பெரும் நிலை உண்டு.

எவ்வளவோ தத்துவார்த்த நிலைகளை புரிந்துகொள்ள முயன்றாலும், அவ்வனைத்திலும் பாடலின் இயல்பான ஓட்டமும் நளினமும் எடுத்த எடுப்பில் மனங்களை வசீகரிப்பன.. இதுதான் ட்யூன் என்று பொதுவாக அறியப்படுவது. பாடலை காதில் நுழைப்பது ட்யூன் தான். ட்யூன் அழகாக இருந்தால் மேலும் மேலும் கேட்கத்தூண்டும். கேட்டுக்கேட்டு பாடல் மனனம் ஆகிவிடும். அப்போது கவிதையில் உள்ள நயம் ஆய்வுக்குட்படும். இதற்கு  அடுத்த   நிலையில் நம் கவன த்தை ஈர்ப்பது  இசைக்கருவிகளின் பங்களிப்பு. வயலின் புல்லாங்குழல் நாதஸ்வரம் மேளம் தவிர பிற கருவிகளின் பெயர் சரிவர தெரியாததால், அவற்றை யாராவது விளக்கினால் தான் நமது உணர்வுக்கு எட்டும். அந்த அளவு ஈர்ப்பும் , ஒலி  அமைப்பின் . வித்தகங்கள் பல்வேறு கோணங்களில் மிளிர்வதால் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழும். அப்படி தொடர்ந்து புதுமைகளை அரங்கேற்றும் இசை அமைப்பாளர்கள் , இசையை வெவேறு கோணம், பரிமாணம், வியாபகம் என்ற எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போய் ப்ரமிக்கத்தக்க ஆளுமை என்று பெருமையை எய்துகின்றனர். அவ்வகையில் 1960 களில் பட்டையை கிளப்பிய இசை விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் முத்திரை கொண்ட மெல்லிசை எனில் தவறல்ல. பின்னாளில் மென்மேலும் எல்லைகளை விரிவாக்கினார் திரு.எம் எஸ் விஸ்வநாதன்.  அவரது இசை அமைப்பின் நுணுக்கங்களை திரு என் ஒய் முரளி அவர்கள் தீவிரமாக விவாதிக்கிறார்.

எண்ணற்ற தன்மைகளை முறையான உதாரணங்கள் கொண்டு அழகாக விளக்குகிறார் திரு என் ஒய் முரளி அவர்கள். அவ்விளக்கங்கள் நமது பார்வையை மேம் படுத்தும் எனவே ஆழ்ந்து கவனியுங்கள், விடீயோவிற்கான இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=FNqQRCDdI_A A GRAND DIMENSION OF MSV  NYM describes.

நன்றி

அன்பன் ராமன்

Tuesday, March 10, 2026

LET US PERCEIVE THE SONG -60

 LET US PERCEIVE THE SONG -60

பாடலை உணர்வோம் -60

 பாடல்கள் திரையில் தத்துவம் பேசுவது அவ்வப்போது அமைவது தான். ஆயினும் காட்சியுடன் இணைந்த வகை எனில் பின்னணிப்பாடகர்கள் பாடுவது இயல்பு. இது காட்சியில் இணைந்த பாடலே எனினும் , இதை மெல்லிசை மன்னரே பாடியுள்ளார் [ஒரு வேளை சி வி ராஜேந்திரன் கேட்டுக்கொண்டாரோ என்னவோ].  ஆனால் இப்பாடல் மிகவும் நுணுக்கமான உணர்வுகளை சுமந்து வருவதால் அதை எம் எஸ் வி கையிலெடுத்து குரல் கொடுத்ததால் பாவங்கள் வெகு நேர்த்தியாக ஒலிக்கக்கேட்கலாம் .

வாழ்க்கையே ஒரு சுமை என்ற நிலையில் தவிக்கும் மனம் இது போன்ற தத்துவங்களால் சற்று அமைதியுறும்/ குறைந்த பட்சம் தொடர்ந்து வாழத்தலைப்படும். அப்படியான சொற்கள் இப்பாடலில் ஏராளம்

பல்லவியிலேயே

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே

இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு  மகளே   என்று சொல்லும் கவி [வாலி]

                                        மனதிற்கு தெம்பூட்டும் வகையில்

மனித குல ம்  வாழ்வதிந்த தத்துவத்திலே

அனுபவத்தில் எழுதிவைத்தார் புத்தகத்திலே

பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும்

தாய் இனத்தினிலே

பிறந்தவரில் நீ ஒருத்தி ஆயிரத்திலே

பல்லவி

அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே

அன்னையைப்போல் அன்பிற்கும் அவனிடத்திலே

மகளே உன் மனக்குறையை அவனிடம் கூறு

கருணைக்குத்தான் கடவுள் என்று மற்றொரு பேரு

பல்லவி

தந்தை மறைந்துவிட்டார் ஆனால் மகன் பிறந்துள்ளான் இனி அவனே உனக்கு எல்லாம் என்பதை

அம்மா உன் வேதனைக்கோர் எல்லை வந்தது

சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ

நாளை இந்த மண்ணை ஆளும் மன்னனல்லவோ 

 

பல்லவி

இவ்வாறு பாடல் பயணிக்க கேட்பவருக்கு மனம் அமைதிகொள்ளும் அடக்கமான இசை .

இதுபோன்ற பாடல்கள் திரு எம் எஸ் வி குரலில் கேட்டால் உணர்வுகள் நன்கு உணரப்படும்

பாடலைக்கேட்டு அறிய இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=EwsaFvrw5sY inbathilum thunbathilum msv

எம் எஸ் வியை அப்படியே பிரதிபலிக்கும் திரு அனந்து  மேடையில் வழங்கியுள்ள பாடல் இதோ

https://www.youtube.com/watch?v=zzyBbkGc5q4 ANANTHU ON STAGE

1988 ம் ஆண்டில் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேயர் விருப்பமாக தி ரு எம் எஸ் வி அவர்கள் வழங்கிய இதே பாடல்.

https://www.youtube.com/watch?v=CnowqjmiqnA MSV

நன்றி

அன்பன் ராமன்

MELLISAI -A grand dimension

  MELLISAI   -A   grand dimension மெல்லிசையின் பெரும் பரிமாணங்கள் இவ்வளவு ஆண்டுகளாக திரைப்பாடல்களை நாம் அறிந்திருந்தாலும் , அவற்ற...