Wednesday, February 25, 2026

GUITAR BRILLIANCE -3

 GUITAR BRILLIANCE -3

கிட் டார் ஒலியில் பரவசம் -3

கிட்டார் வாசிப்பில் தனி முத்திரை பதித்த திரு பிலிப் எண்ணற்ற பாடல்களுக்கு இசைத்து அழியாப்புகழ் கொண்டவர். பல இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும் அவரது நெடியபயணம் திரு எம் எஸ் வி அவர்களுடன் தான். அவ்வகையில் அவர்வழங்கிய சில அற்புதங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

குழந்தையும் தெய்வமும் [1966] படத்தில் இடம் பெற்ற  'அன்புள்ள மான் விழியே ' [வாலி ] எம் எஸ் வி இசையில்    டி எம் எஸ் சுசீலா குரல்களில் .

] பாடலின் துவக்கமே விறுவிறுப்பு அதிலும் ட்ரம் வேறு சேர்ந்துகொண்டு ஒரு கலகலப்பான துவக்கம் பாடலுக்கு அமைந்துள்ளது. சரணங்கள் அனைத்திலும் போங்கோ ஒலி க்க பல்லவியில் ஆங்காங்கே இடை இசையிலும் சொக்க வைக்கும் கிட்டார் ஒலி . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=f-fL8CVz-HU ANBULLA MAAN KDEIVAMUM 1965 VALI MSV PS TMS OPENING GUITAR DRUM

களிப்புக்கும் காதலுக்கும் தான் கிட்டாரா ? ஏன் சோகத்துக்கும் கிட்டார் மீட்டலாமே என்ற உதாரணம்

பார்மகளே பார் பாடலில் [படமும் அதே  பெயரில் தான்] 1963 கண்ணதாசன் வி ரா , குரல்கள் டி எம் எஸ்              

 பி பி எஸ்  . பிரிவுத்துயரில் ஒலித்த கீதம். அதிலும் கூட கிட்டார் பேசுகிறது [பிலிப்பின் வாசிப்பை கவனியுங்கள் ] பாடல் நெடுகிலும் ஆறுதலாய் ஒலித்த கிட்டார் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Y-1zfAWkvHY AVAL PARANDHU PONALE  PAAR MAGALE .. KD VR PBS TMS  OPENING GUITAR

ஆடவரலாம் ஆடவரலாம், ஆடவரெல்லாம் ஆட வரலாம் [கறுப்புப்பணம் -1963] கண்ணதாசன், வி ரா, குரல்கள் எல் ஆர் ஈஸ்வரி, எம் எஸ் ராஜு 

பாடல் முழுவதிலும் கிட்டாரின் மேலாண்மை இண்டு  இடுக்கெல்லாம் பயணித்து போதை போல் புகழ் பெற்ற அந்நாளையபாடல். எவ்வளவு நுணுக்கமாக கிட்டார் முழங்கியுள்ளது . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=3mC6U6ftNiM AADAVARALAAM

துள்ளித்துடித்த கிட்டார்--  காதல் பாடலில்

கன்னி வேண்டுமா [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் வி, ரா , குரல்கள் பி பி ஸ்ரீநிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி

காதல் பாடல் அல்லவா ? கிட்டார் பாடல் நெடுகிலும் புகுந்து விளையாடி போங்கோசுடன் கைகோர்க்கும் நளினம் .கேட்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=smW7_8ZYqN4 KANNI VENDUMA PACHAI VILAKKU 1964 – KD VR PBS LRE  GUITAR THROUGH THE SONG

நன்றி

அன்பன் ராமன்

Tuesday, February 24, 2026

LET US PERCEIVE THE SONG -58

 LET US PERCEIVE THE SONG -58

பாடலை உணர்வோம் -58

தேவியர் இருவர் முருகனுக்கு [கலைக்கோயில் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி, குரல் பி சுசீலா.

இது பாடல் என்ற இடம் தாண்டி கதையின் நெருடலான பகுதி என்பதே பொருத்தம்

ஆம், கவியரசர் கதையை உள்வாங்கி கவிதை புனைவது என்ற துறையில் பெரும் 'அதாரிட்டிஎனில் சாலப்பொருந்தும்.

மனிதர் சொற்களில் எவ்வளவு உண்மைகளை தூவி இருக்கிறார்.  பின்னர் வர இருக்கும் பெண் ஒருத்தி துவக்கும் சக்களத்திப்போராட்டம் இது என்பதே அடித்தளம். ஆனால் படம் பயணித்துவந்த கௌரவ பாதையை சிதைக்காமல் புதுப் பெண் [நாட்டிய மங்கை] முதல் மனைவியிடம் முதல் சந்திப்பிலேயே கோரிக்கை வைக்கிறாள் . அதை கவிஞர் 'மரபு வழுவாத நிலை தானே ? என்று எவ்வளவு நாசூக்காக துவங்குகிறார் . எப்படி ?

தேவியர் இருவர் முருகனுக்கு, [வள்ளி, தெய்வானை]

திருமால் அழகன் முருகனுக்கு [ஸ்ரீ தேவி ,பூதேவி ] என்று தெய்வ சந்நிதானங்களை சாட்சி வைத்துப்பாடி ஆடுகிறாள் . அவள்  ஆடுகிறாள் என்பதா "அவனை'  ஆட்டுவிக்கிறாள் என்பதா? எப்படிப்பார்த்தாலும் கேளிக்கை என ஆட வந்தவள் கோரிக்கைதனை பற்றிக்கொண்டு பாடி ஆடுவது காட்சியின் ஹை லைட் .

இங்கே ஒன்றை குறிப்பாக பேசி ஆக வேண்டும். பாடல் என்னவோ ஹை லைட் ஆனால் ஒளிப்பதிவு லோ லைட் [ இந்தப்படத்தில் தான் ஒளிப்பதிவாளர் திரு என் பாலகிருஷ்ணன் ஸ்ரீதர் குழுமத்தில் கால் பதித்தார். அதாவது வின்சென்ட்-சுந்தரம் இருவரும் விலகிவிட்ட நிலையில் ]. பின்னாளில் என் பி பெரும் உயரம் தொட்டார் என்பது சரித்திர நிகழ்வு.]  படத்திலும் முக்கிய பெண் பாத்திரத்தின் வாழ்விலும் இருள் சூழ்ந்த நிலையை லோ கீ [low key லைட்டிங்] பூடகமாக உணர்த்தியுள்ளது.

இந்தப்படத்தின் பல பாடல் காட்சிகளில் இதுவே பயன் படுத்தப்பட்டது. ஆனால் 'நான் உன்னசேர்ந்த செல்வம் ' பாடல் நல்ல ஓபன் லைட்டில் [உரிமையுள்ள நாயகன் -நாயகி பாடல் அது]. எவ்வளவு ஆழ்ந்த திட்டமிடல் ? Photography Terminology [மொழி ]கொண்டு விளக்கலாம் ஆனால் அன்பர்களுக்கு உள்வாங்கிக்கொள்வது இன்னல் நிறைந்ததாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=WEh867LwouE NAAN UNNAI SERNDHA SELVAM

தேவியர் இருவர் முருகனுக்கு,

இப்பாடலில் நாயகனின் சிறப்புகளை விளக்கி பாடும் சரணவரிகள்

கலைகளில் அவன் மறைந்திருந்தான்

கை விரலில் அவன் தவழ்ந்திருந்தான்

இதயத்தைமெல்ல மெல்ல மீட்டி விட்டான்

என்னோடு தன்னை அவன் இணைத்துவிட்டான் என்று செல்கிறது பாடல்

அவன் வீணைக்கலைஞன் என்பதை சொல்லி , இவள் எந்த வகையிலும் கள்ளமற்றவள் என்று சொல்ல

என்னோடு தன்னைஅவன்இணைத்துவிட்டான் என்றுஅவன்மீது பழி.   [இது அநேக பெண்கள் கைக்கொள்ளும் தந்திரம் மனைவி கணவனை சந்தேகிக்க தூண்டுகோலாக அமைந்து , இவள் தப்பித்துக்கொள்ள போடும் நாடகம்]

இறுதி சரணத்திலும் இதே போல்  ஒரு முகம் இரு முகம் அறிமுகம் என்றெல்லாம் விளக்கி தன்னை 'அவன்' மயக்கிவிட்டதாக சொல்லி

எனக்கோர் இடம் நீ தருவாயோ  என்று வாழ்வில் பங்கு கோருகிறாள். . மனம் வெகுண்டு சினம் கொண்டு அலற பாடல் முடிகிறது. இவை ஒரு புறம் இருக்க

இசையில் இப்பாடல் சிகரம் தொட்டது எனில் பிழை இல்லை. ஏனெனில் அவ்வளவு நுணுக்கங்கள்.

ஆலாபனையில் சுசீலா காட்டிய எண்ணற்ற குழைவுகள், ஏற்ற இறக்கங்கள் மற்றும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேண்டிய பாவமும் வேகமும் இப்போதும் கூட பலரால் நினைத்துப்பார்க்க இயலாது.

வீணை சிட்டிபாபு பங்களிப்பு வெகு சிறப்பானது . நேர்த்தியான நாதம், கம்பீர ஒலி மற்றும் சுசீலாவின் குரலுக்கு துணையாக அவ்வப்போது வரும் கார்வைகள் என சிறப்புகள். எம் எஸ் விக்கு கர்நாடக இசை அந்நியம் என்று சொல்வோர் இப்படத்தின் பாடல்களை ஊன்றி கேட்க வேண்டும். .ஸ்ரீதரின் இயக்கம் எப்போதும் வேறு பரிமாணம் உடையது என்று நன்கு விளங்கும். பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=mOJlKA8CUqw

 deviyar iruvar kk kd vr ps chittibabu

QFR குழுவினரின் விளக்கம் மற்றும் பாடல் மேலும் பல தகவல்களை பகிரக்காணலாம்

https://www.youtube.com/watch?v=frzcqarrgwU qfr 559

இது ஒரு வேறு களம் , இசைக்கலைஞர்களால் மாத்திரமே முறையாக விளக்க இயலும். அப்படி ஓர் விளக்கம் தருகிறார் பிரியா பார்த்தசாரதி அவர்கள் வெகு நேர்த்தியான விவரங்களுடன் பாடலை ரசிக்க இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=5zaeTTRcta0 deviyar iruvar Priya

நன்றி

அன்பன் ராமன்

GUITAR BRILLIANCE -3

  GUITAR BRILLIANCE -3 கிட் டார் ஒலியில் பரவசம் -3 கிட்டார் வாசிப்பில் தனி முத்திரை பதித்த திரு பிலிப் எண்ணற்ற பாடல்களுக்கு ...