Tuesday, April 21, 2026

INDIA AND WOMEN

 INDIA AND WOMEN

இந்தியாவும் பெண்களும்

நான்  எண்ணை  செக்கு பற்றி எழுத முனைய  பலர் வீறு கொண்டு எழுத முனைந்த சம்பவம் நம்மை சிந்திக்க வைக்கும். 

சிபி ஐ விசாரணை மாதிரி எது கேட்டாலும் இயற்கைக்காட்சியை ஜன்னல் வழியே பார்க்கும் வாசக அன்பர்கள் இப்போது விமரிசனப்பார்வை வைப்பதை பார்க்கலாம்

ஆஹா என்னே வாழ்த்துரைகள் ?

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒருவர் வழங்கிய பல்கலை நிகர்த்த பட்டம்

கற்பனை வறண்டவன் [மண்டை காய்ந்த நபர்]

அடுத்து வந்த ஒரு பதிவில்

செக்கு மாடு   [ போக வேறு பாதை தேடாமல் சுற்றிசுற்றிவருபவன் அல்லது அரைத்தமாவையே அரைக்கும் சிப்பந்தி ]  இது ஒரு டிப்ளமோ

பின்னர் ஒரு புதிய பட்டம்

கழுதை [எனது  ஒரே ஒரு வருத்தம் -பாவம் கழுதை வருத்தம் கொள்ளுமே என்பது. தான்]. இது [கழுதை]  PG DIPLOMA .

'செக்கு மாடு' , 'கழுதை' இரண்டும் ஆசிரியருக்கு பொருந்தும் என்று வேறு சொல்லியிருக்கிறார்.

சரி வாசகர்கள் என் எழுத்து குறித்து கொள்ளும் ஆய்வு மூலம் உணர்வது என்ன என்று மிகத்தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.  இந்த அடை மொழிகள் எனக்கு புதிதல்ல 37 ஆண்டுகள் கல்லூரிப்பணியில் கேட்காத புதிய பட்டங்கள் செக்கு மாடு மற்றும் கழுதை. . அவையும் இப்போது சூட்டப்பட்டு விட்டன.

 கற்பனை வறண்ட செக்கு மாடு அனைய உள்ளூர் கழுதை  குட்டிச்சுவர் அருகே நின்று கொண்டு வேலை செய்யாமல் ஏய்க்கும் என்றொரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த கருத்து கற்பனை மட்டும் அல்ல உண்மையின் நிழல் கூட படியாத அசல் அக்மார்க் பொய். அந்த கருத்தை நாம் சுமந்தால்   அது கழுதையின் பிழை அல்ல. நாம் விமரிசிக்கும் எந்த உயிரினம் குறித்த்தும் உண்மை அறியாமல்  வசை மொழியாக மட்டுமே அவற்றின் பெயர்களை பயன்படுத்த அறிவோம், விழைவோம் அவசரம் கொள்வோம். .

கழுதை குறித்து கிஞ்சித்தும் அறிய வேண்டுவோர் , எழுத்தாளர் திரு. ஆர்  கே நாராயணன்  எழுத்துகளை  படிப்பது  அவசியம் .

என்னது படிப்பதா ? அது எமது வேலை அல்ல . படிக்க சொல்லி விட்டு அதில் கேள்வி கேட்டால் யாரால் இருக்கு இப்போது பதில் சொல்லிக்கொண்டிருக்க என்று இமய மலை நோக்கி அமர்ந்து "ஓம் நமஸ் சிவாய ,ஓம் நமஸ் சிவாய" என்ற ஓங்கார ஒலி ஒலிக்கத்தொடங்கிவிடுமே.'   என்னே நமது "பாடாண்டிணை" ?

அப்படியே  "பாடாண்டிணை"   என்பது என்ன என்று விளக்கி விட்டு கையோடு ஒரு 10 வரியில் 'கழுதை குறித்து யாராவது ஒரு குறிப்பு வரையுங்கள் பார்ப்போம் அப்போது தெரியும் கழுதை ஒரு 'COMPLICATED SUBJECT ' என்பது.  சரி ஆங்கிலத்தில் ASS மற்றும் DONKEY என்று இரு சொற்கள் உண்டு. அவை  உணர்த்துவது என்ன?.    சரி அப்படியெனில்

கழுதை என்ற   பட்டியலில் என்னை வைக்க எது பொருத்தமான பெயர் ASS என்பதா அல்லது DONKEY என்பதா என விளக்கினால் சில கழுதைகளேனும் அமைதி கொள்ளும்.

செக்கு மாடோ , கழுதையோ , மண்டை வறண்ட [SCLEROCEPHALY ] நபரோ எதுவாயினும்

யாராவது ஒருர்

 "பாடாண்டிணை"   என்பது என்ன என்று விளக்கி விட்டு கையோடு ஒரு 10 வரியில் 'கழுதை  குறித்து   ஒரு குறிப்பு வரையுங்கள் பார்ப்போம்' .

 நன்றி

மண்டை வறண்டோன்

INDIA AND WOMEN

இந்தியாவும் பெண்களும்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட பெண்கள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இந்தியாவின் வான் படையில் போர் பைலட்கள் இயங்குவதை பார்த்தோம். இந்திய ரயில்வே துறையில் பெண் பைலட்கள் சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றனர். சுமார் 1990 களில் இருந்தே எஞ்சின் டிரைவர்களை பைலட் என்றே ரயில்வே துறை பெயரிட்டுள்ளது. இத்துறையில் பெண்கள் செயல் படுவது பெருமைக்கும் வரவேற்புக்கும் உரியது . சமீபத்தில் பெண்கள் தின நிகழ்வாக பெங்களூரு- மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்   பெண்களே இயக்கி பெரும் பேசு பொருள் ஆனது. அவர்கள் இளம் பெண்கள். ஆயினும் உரிய திறனுடனும் நம்பிக்கையுடனும் ஒரு ரயிலை இயக்கியதை பாராட்டாமல் இருக்க இயலாது. அதிலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்  ஒரு சிறப்பான முக்கியத்துவம் கொண்டது.

இவ்வகை ரயில்கள் எஞ்சினை இயக்குவது மட்டும் அல்ல, உரிய நேரத்தில் முறையான பகுதியில் ரயில் பெட்டிகளை திறப்பதும் , உரிய எச்சரிக்கைக்குப்பின் மூடுவதும் பைலட்களின் மேற்பார்வையில் மட்டுமே நடை பெறும். அவ்வப்போது வரும் தகவல் அறிவிப்புகள் வெளியிடுதல்,இருப்புப்பாதை சிக்னல் நிலை தன்னை கவனித்து  எஞ்சினை இயக்கவேண்டும்.மேலும் காஷன் என்னும் எச்சரிக்கை தகவல்கள் வண்டி புறப்படும் முன் பைலட்கள் வசம் தரப்படும் அதில் எந்த இடத்தில் வேகம் குறைந்து எவ்வளவு தூரம் கடந்த பின் வேகம் இயல்பு நிலைக்குவரலாம் என்பன குறிக்கப்பட்டிருக்கும். அதில் எதையும் தவற விடாமல் கவனமாக செயல் படாவிடில் பெரும் விபத்து நிகழும் வாய்ப்பு உண்டு. எனவே விமான ஓட்டியை விட ரயில் பைலட் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும். இவ்வனைத்தையும் நிர்வகிக்க உரிய பயிற்சி பெற்ற  பெண்கள் லோகோ பைலட் பணியில் செயல் பட்ட வீடியோ இன்றைய பதிவில்.

அது ஒரு பெருமைக்கான நிகழ்வு என்பதால் குதூகலமாக சில குடும்ப உறுப்பினர்களுக்கும் இடம் கொடுத்து பதிவிடப்பட்ட காட்சிகள் இவை.  மொத்தத்தில் நமது நாடு முறையான திசைகளில் வளர்ச்சி கொள்வது மகிழ்வு தரும் நிகழ்வே. நன்றி

அன்பன்

   

இணைப்பு இதோ  .

 https://www.youtube.com/watch?v=Zc8tCnPkuyY women VandeBharath pilots women’s day

 

Sunday, April 19, 2026

OIL EXTRACTION TRADITIONAL WAY

 OIL EXTRACTION TRADITIONAL WAY

செக்கு மாடு

என்ன சார்

இந்த வாரமும் மீண்டும் மதுரை தானா என்றார் அன்பர்.                                        நான் ஏன் என்றேன்.

அவர் "இல்லை செக்கு மாடு மாதிரி மதுரையை சுற்றிச்சுற்றி வருகிறீர்களே உங்களுக்கு அலுப்பே வராதா? என்றார்.

நான் 'சார் நான் கழுதை மாதிரி  மதுரையை சுற்றுகிறேன் என்றால் சரி அதெப்படி செக்கு மாடு என்கிறீர்கள் ? என்றேன் .

அவர் " அதாவது வந்து என்னன்னா , ம் ம்  வந்து திரும்பி திரும்பி ஒரே டாபிக் [மதுரையை பற்றி] எழுதறீங்களே அதுனால 'செக்கு மாடு மாதிரி னு சொன்னேன்"  என்று சமாளிக்கப்பார்த்தார்.

என்னதான் கற்பனை வறண்ட sclerotic head ஆனாலும் சிக்கியவர்களை சும்மா விடலாமா. மதுரை பாஷைல "விடமாட்டம் ல்ல "

உமக்கு மதுரையும் தெரியாது, மாடும் தெரியாது செக்கும்   தெரியாது இந்த அழகுல செக்குமாடு எப்படி தெரியும். இப்போ தெரிந்துகொள்ளுங்கள்

இதோ செக்கு மாடு அதுவும் சும்மாவா நிஜம் செக்கு, நிஜம் மாடு , நிஜம் எண்ணை உண்மையான புண்ணாக்கு [தூய தமிழில் பிண்ணாக்கு என்பதே சரி] உங்களுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியாது என்று எனக்கு தெரியும் என்று சொல்லி இன்றைய BLOG பதிவை தொடர்கிறேன்

இந்த செக்கு எண்ணை நிறுவனத்தில் பழைய முறையில் உணவு எண்ணெய்களை செக்கில் பிழிந்து எடுக்கிறார்கள். செக்கு  உரல்= கருங்கல் , குழவி= நெடிய மரம். உரால் நிலையாக நிற்க குழவி சுற்றுகிறது. குழவியை இயக்க மாடுகள் ஒரே வட்டப்பாதையில் சுற்றி  வர, மெல்ல எண்ணை வித்து நசுங்கி கசக்கிப்பிழிந்து எண்ணையும் பிண்ணாக்கும் திரவ மற்றும் திட பொருட்களாக செக்கின் உரலில் சேர்ந்து, எண்ணை பிழியப்படுகிறது

எண்ணைய் பிரியும் நேரத்தில் மாடுகளை வேகமாக இயக்க , பிழிதல்  விரைவாகிறது. முடிவில் செக்கின் அடிப்பகுதியில் உள்ள குழாயில் அடைப்பை நீக்கி எண்ணையை வெளியேற்றி பிடிக்கிறார்கள். இங்கே கடலை , எள் , தேங்காய் [கொப்பரை] மற்றும் பாதாம் [almond ] எண்ணை தனித்தனியே செக்கு முறையில் பிழிந்தெடுத்தல் நடை பெறுகிறது

பின்னர் பிண்ணாக்கை நீக்கி வெயிலில் உலர்த்தி அதையும் விற்பனை செய்கின்றனர். செக்கு மாடுகள் கடமையே கண்ணாக இயங்கக்காணலாம்.

செக்கு மாடு குறித்த ஒரு பதிவு.UNRELATED TO THE VIDEO 

செக்கு முதலாளியின் மகன் பி.காம்.

என்னப்பா எவ்வளவோ மிஷின் வந்திருக்கு இன்னும் மாட்டை கட்டி ஓட்டுறீங்களே.

அப்பா : மிஷின்ல சூடு அதிகமாகி எண்ணை யும் புண்ணாக் கும் வாசனை இல்லாம போகும்.

மகன் நமுட்டு சிரிப்புடன்

மாடு ஒரே இடத்துல ஓடாம நின்னா உங்களுக்கு நஷ்டம் தானே.  

அப்பா

அதான் மாட்டுக்கு கழுத்துல மணிகட்டிருக்கேன்.  ஓடாட்டி மணி சத்தம் நின்னுடும். அப்பா போய் அதட்டினா ஓடும்.

மகன்

சரி மாடு ஓடாம கழுத்தை ஆட்டிக்கிட்டிருந்தா ?

அப்பா

அதுக்குதான் இந்த மாடுகளை நான்  B. Com   சேக்கலை , உன் வேலைய நீ ஒளுங்காப்பாரு .

https://www.youtube.com/watch?v=Aorddt_RD3w Bullock DRAWN ROLLER

Ancient Coconut Oil Extraction… Bulls Still Do This Today!

INDIA AND WOMEN

 I NDIA AND WOMEN இந்தியாவும்   பெண்களும் நா ன்    எண்ணை  செக்கு பற்றி எழுத முனைய  பலர் வீறு கொண்டு எழுத முனைந்த சம்பவம் நம்மை சிந்திக்க வைக...