Wednesday, July 15, 2026

CHANGING TIMES

 CHANGING TIMES 

கால மாற்றம்

 கால மாற்றம் என்ற ஒற்றைச்சொல் பல தருணங்களில் பேசப்படுவது. அது இயற்கையில் நிகழும் மழை வெய்யில் , பனி போன்ற நிகழ்வுகளுக்கும் பொருந்துவது. முன்பிருந்த ஏதோ ஒரு நடைமுறை அறவே மாறிப்போய் ஏற்படுத்தும் புதிய மாறுதல்களையும் கால மாற்றம் என்றே குறிப்பிடுகிறோம். ஆனால் இன்று நாம் பார்க்கஇருப்பது ஒலி /ஓசை/ இசை என்ற செவிப்புலனோடு தொடர்புடைய 'பாடல்' களம் பற்றியது.

இன்றைய தலை முறையினருக்கு சில விவரங்கள் வியப்பை, வெறுப்பை ஏன் கோபத்தைக்கூட கிளறும். ஒரு காலத்தில் நம் வீடுகளில் எலக்ட்ரிசிடி   எனும் மின்சார வசதி இருந்ததே இல்லை, இன்றோ சலவை செய்யும் வாஷிங் மெஷின் இல்லாத வீடுகள் சுமார் 3% தேறுமா என்பதே சந்தேகம்

அன்றைய அமைப்பில் வீடுகளில் மனிதர்கள் தான் அதிகம். கட்டில் மெத்தை  பேன் எல்லாம் பெரும் ஐஸ்வர்ய அடையாளங்கள். அதிலும் பேன் வைத்துக்கொள்ள மின் இணைப்பு வேண்டுமே. பேன் ரயில் நிலையம் திரையரங்கம் போன்ற பொது இடங்களில் உண்டு. கல்யாண மண்டபம் என்ற அமைப்புகளே சமீபத்திய வரவுகள் தான்

இந்நிலையில் பாட்டு என்ற பொழுது போக்கு ஏற்பாட்டிற்கு எலெக்ட்ரிசிடி வந்த பின் அரிதாக சில வீடுகளில் ரேடியோ வைத்திருந்தனர். அவர்களிடம் போய் ரேடியோ போடுங்கள் என்று கேட்கமுடியாது. இந்நிலைலயில் ரேடியோவில் எப்படி பாடல் வரும் என்றால் ஓன்று நேரடியாக பாடுவார்கள்/ பதிவுசெய்த பாடலை ஒலி பரப்புவர்  அல்லது சினிமாப்பாடல் எனில் இசைத்தட்டு மூலம் ஒலிபரப்புவர்.

இசைத்தட்டு என்பது சிறிய வட்ட வடிவ கரிய தகடு போன்றது இருபுறமும் பாடல் இருக்கும். அதை ஒலிக்க வைக்க இருந்த ஒரு கருவிதான் கிராமபோன் என்ற கருவி. அது ஸ்ப்ரிங் [spring ]. மூலம் இயங்குவது. அவ்வப்போது சாவி கொடுத்து ஸ்பிரிங்கை முறுக்கேற்றி இசைத்தட்டை சுழலவிட்டு அதன் மீது கூறிய ஊசி கொண்ட சவுண்ட் பாக்ஸ் அமரவைத்து பாடல் ஒலிபெருக்கி வழியே கேட்கும்

பின்னாளில் திருமண நிகழ்வுகளில் இவ்வகை பாடல் கருவிகள் பலருக்கு வாழ்வாதாரமாய் இருந்தன என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.. ஆனால் ஒன்று --எந்த  எலெக்ட்ரானிக் கருவியையும்விட கிராமபோன் தரும் ஒலி அவ்வளவு துல்லியமும் தெளிவும் நேர்த்தியும் கொண்டது

அப்படி பாடல் பதிவு செய்து சினிமாவில் பெயர் பெற்ற ஜாம்பவான்கள் . -ரெங்கசாமி, சிஈ  பிக்ஸ் , சிவராம்  வேதமூர்த்தி ஜோ அலோஷியஸ் , சம்பத்  என நீண்ட வரிசை உண்டு.

இதையே தொழிலாக செய்த நிறுவனங்கள் HMV, COLUMBIA ODEON.  இவை உபயோகித்த பதிவு முறைகள் RCA அல்லது WESTREX SOUND SYSTEM என்பன. எப்படியோ இசைத்தட்டுப்பாடல்களை அந்நாளில் RECORD என்பர். அது போன்ற தகவல்களை ஒரு ரேடியோ அமைப்பு தொழில் செய்த வரின் பதிவு களை இணைத்துள்ளேன்

அத்துடன் 4 பாடல்களையும் இணைத்துள்ளேன். ஒலியின் தெளிவை கேட்டுப்பாருங்கள். கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள். நீங்கள் சொல்ல மாட்டீர்கள் ஆனாலும் கருத்து கேட்பது எனது கடமை. பதில் சொல்ல எவரும் தயாரில்லை ஆயினும் கேட்டு விடுவதால் என்ன நிகழும் ? கேட்டு தான் பார்ப்போமே. இதில் வேறு நபர்களின் கருத்துக்கு இடம் இல்லை. வீடியோவும் இல்லை

எனவே ஐம்புலன்களில்    செவிக்கு மட்டுமே வேலை சரோஜா தேவி யைப்பார் அந்த கணேசனைப்பார் போன்ற தேடல்களுக்கு வாய்ப்பே இல்லை. இப்போது பார்ப்போம் எப்படி பாடல் கேட்கிறீர்கள் என்பதை. நிச்சயம் கேள்விகள் வரும் -விடைகள் வராது  விடையாவது வடையாவது என்று அமைதிகொள்வர் நமது பார்வையாளர்கள்.

இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=ZumZO-YUokc about gramophone

https://www.youtube.com/watch?v=8lHIyzjfSBs  INIYAVALE RECORD hear  clear percussion

https://www.youtube.com/watch?v=TdtTuRM7OHQ oru pennaippaarththu  grand percussion

https://www.youtube.com/watch?v=ecADfl1Dncw&list=RD8lHIyzjfSBs&index=6  kattodu kuzhalaada

https://www.youtube.com/watch?v=sRoabWMdXCc  CHITHIRAPPOOVIZHI PS LRE VR

நன்றி

அன்பன்    

Tuesday, July 14, 2026

Getting paid back

 Getting paid back

தன்  வினை தன்னைச்சுடும்

இது ஒரு எளிய வாசகம் போல் தோன்றும் ஆனால் இவ்வாசனம் மிகவும் ஆழ்ந்த கருத்துச்செறிவு கொண்டது. ஆம் உலகில் பல தருணங்களில் 'வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது ' என்ற ஒரு அனுபவ வசனமும் பேசப்படுகிறது. ஒரு கட்டத்தில் வேண்டாதவரைப்பழிவாங்க , அரசு இயந்திரங்கள் ஏதோ சூட்சுமமாக செய்து விட்டதாக எண்ணிக்கொண்டு வேண்டாத அமைப்புகளை உருவாக்கி அவற்றை இயக்கி எவருக்கோ இடைஞ்சலும் குடைச்சலும் தோன்றும் வண்ணம் சதித்திட்டம் தீட்டி அதன்மூலம் வெற்றிகொண்டுவிட்டதாக எண்ணி தொடர்ந்து ஈன செயல்களை அரங்கேற்றி ஜனநாயக அமைப்புகளுக்கு தலைவலி தோற்றுவித்து பெரும் ஐவகை கொண்டு திளைத்தனர். இது போன்ற பல்வேறு அமைப்புகள் காலப்போக்கில் பெரும் அவதாரம் எடுத்து அமைதியையும் வளர்ச்சியையும் முடக்குவர். இவர்கள் பெரும் அதிகார பீடங்களாக மாறி அரசுகளை அகற்றிவிடும் அளவிற்கு வல்லமை பெறுவார்.பொதுமக்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வன்மை பெற்று நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க தயங்காத அமைப்பினர். . இது போன்ற குழுக்கள் பன்னாட்டு தொடர்புகளுடன் போதைப்பொருள் விற்பனை மற்றும் கலாச்சார சீரழிவிற்கான பெரும் முன்னெடுப்பகளை அரங்கேற்றி அதன் மூலம் பன்னாட்டு அரங்கில் முக்கிய அடையாளம் பெற்று அதன் மூலம் வெளிநாட்டு நிதிகளைப்பெற்று அவர்களின் தேவைகளுக்கேற்ப மத மற்றும் சமூக நிலைப்பாடுகளை விமரிசித்து பெரும் ஹீரோக்கள் போல உலவுகின்றனர். ஒரு நிலையில் இவர்களின் கட்டமைப்பு சர்வதேச பரிமாணம் பெற்று நிதி மற்றும் பன்னாட்டு ஆதரவு மூலம் இளைய தலை முறையினரை தடம் மாற்றி, அரசினர்க்கே சவால் விடும் அளவு பலம் பெற்று ஜனநாயக அமைப்புகளை வலுவிழக்கச்செய்வர்.

ஒரு நிலையில் அரசு , போலீஸ் எவர்க்கும் சவால் விட்டு பெரும் ராணுவம் போல வியாபித்து அரசுக்கு தொல்லை தர தொடங்கி ராணுவத்தை எதிர்க்கவும் தயங்காமல் செயல் படுவர். இப்படி குழுக்களை வேரூன்ற  வைத்ததே அந்நாட்டு அரசு துறையினரே தான் . இது போல் வளர்க்கப்பட்ட ஆப்கனிஸ்தான் குழுக்கள் இப்போது பாக் ராணுவத்தினரை திணறடித்துக்கொண்டு இருப்பதால் செய்வதறியா கையறு நிலைக்கு போய்விட்டது பாக் அரசு. இதுபோன்ற அங்கீகாரம் பெறாத குழுவினர் ராணுவத்தையே  சிதறி ஓட வைத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் பலனாய் பாக் ராணுவ அமைப்புகள் பெருமளவு தாக்கப்பட்டு அழிக்க படுவதாக தகவல் வந்து கொண்டே இருப்பதை அறிவோம். வினை விதைத்தவன் வினை அறுப்பதை வீடியோக்கள் வாயிலாக அறிய  நல் வாய்ப்பு..  பல முக்கிய தகவல்களை [10-07-26 நிகழ்வுகளை ] மேஜர் மதன் குமார் விளக்குகிறார். இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=_w85lYA4Ago BALOCH AMBUSH PAK ARMY ON HIGH WAY 10-07-26 THAN VINAI THANNAI SUDUM

நன்றி     அன்பன் 

CHANGING TIMES

 CHANGING TIMES  கால மாற்றம்   கால மாற்றம் என்ற ஒற்றைச்சொல் பல தருணங்களில் பேசப்படுவது . அது இயற்கையில் நிகழும் மழை வெய்யில் ...