Wednesday, February 11, 2026

GUITAR

 GUITAR

கிட்டார்

கிட்டார் [Guitar ] வயலினைப்போல இதுவும் ஒரு மேல்நாட்டு இசைக்கருவி தான். ஆனால் இந்தியாவில் இக்கருவி திரையுலகில் பெரிதும் கோலோச்சுவதை மறுப்பதிற்கில்லை

தமிழ் சினிமாவில் கிட்டார் நுழைந்தது 1957-58 காலகட்டத்தில் தான். அப்போதெல்லாம் திரை இசையில் ஆங்காங்கே சிறு துண்டு ஸ்வரங்கள் மீட்டி பாடலை அலங்கரித்தனர்.  1960 களில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இயக்கத்தில் பெரிதும் முன்னுக்கு வந்த கருவிகள், அக்கார்டியன், கிட்டார், சாக்ஸபோன், போங்கோ மற்றும் ட்ரம். இவை வெவ்வேறு  சூழல்களில் களம் கண்டது அப்போதுதான்

திடீரென்று ஒரு நிலையில் மாண்டலின்  சேர்ந்து கொள்ள இடையிசையில் பரிமாணம் வேறு கட்டத்திற்கு முன்னேறியது.. ஆனால் ஒரு போதும் தபலா, டோலக் இரண்டும் முடங்கவே இல்லை. எனினும் கிட்டாரின் தொனி வெகுவாக ரசனையை வயப்படுத்தும். எனவே சினிமா இசையில் கிட்டார் இன்றி இடை இசை அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்

அந்த கிட்டரில் பலவகைகள் உள்ளன .அவை base guitar, lead guitar , rhythm guitar என்று அவற்றின் செயல் அடிப்படையில் அழைக்கப்படுகின்றன.    Base [bass] guitar என்பது ஒலி  குறைவானது ஆனால் ஆதார சுருதிபோல் ஒலித்துக்கொண்டிருக்கும். முன்பெல்லாம் பெரிய வயலின் போல இருந்த அமைப்பு பாஸ் [bass ] எனப்படும்

பேஸ் கிட்டார் முன்னாளில் டபுள் பாஸ் என்ற பெரும் கருவியாக இருந்தது அது கனமான ஒலி  தரும் எனவே பேஸ் எனப்படுகிறது 

ரிதம் கிட்டார் கார்ட்ஸ் எனப்படும் கொத்தாகவோ, தனி தந்திகளை  மீட்டியோ இயக்க முடியும். இந்நாளில் ரிதம் கிட்டார் கூட லீட் கிட்டார் போல இயக்க முடியும். இப்போது அனைத்துமே எலெக்ட்ரிக் வடிவமைப்பில்  வருவதால் கருவிகள் அடக்கமாக உள்ளன.  

லீட் கிட்டார் என்பது பளிச் என்று ஒலிப்பது பாடலின் முக்கிய இடங்களில் தெளிவாக உணர்வுகளை வெளிப்படுத்துவதால் பாடலுக்கு ஒரு அலங்கார இசையாக அமைவது. சொல்லப்போனால் கிடாரின் மாஹாத்மீயம் வெளிப்பட லீட் கிட்டார் தான் பெரும் காரணம்

இந்த லீட் கிட்டார் இயக்குவதில் பெரும் புகழ் அடைந்தவர் திரூ பிலிப் அவர்கள் . எம் எஸ் வி யின் எண்ணற்ற பாடல்களுக்கு தனது விரைவான மீட்டலால் பெரும் வலிமை சேர்த்தவர். சில ஆண்டுகள் முன்னர் மறைந்தகார். அவர் புகழுக்கு மறைவே இல்லை.                                                 Guitarist Philip gave true Fillip to songs.

அவரின் அருமை பெருமைகள் குறித்து சில வீடியோ தொகுப்புகள் [அவர் வாசித்த இசை தொகுப்புகள்] உள்ளன . அவற்றில் கிட்டார் பகுதிகளை மட்டும் தொகுத்துள்ளார். அவ்வீடியோவில் முதல் வரிசை யில் மூவர்  . நடுவில் கிட்டார் பிலிப் [அவருக்கு’The man with Golden Guitar]  என்று திரையுலகில் ஒரு பெரும் அடைமொழியே உண்டு. இடது புறம் மாண்டலின் ராஜு , வலது புறம் அக்கார்டியன் மங்களமூர்த்தி -மூவரும் பெரும் ஜாம்பவான்கள். கேட்டு மகிழ இணைப்பு இதோ . 

https://www.youtube.com/watch?v=R4BC5I_cEtc

RAKU,    ,PHILIP,       MANGALAMURTHI

இதே கிட்டார் கலைஞரைப்பற்றி திரு அமுதபாரதி விவரிக்கிறார் கேட்டு அனுபவியுங்கள். இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=weGn-LdVkF8  AMUDHABARATHI ON PHILIP   

நன்றி அன்பன் ராமன்

__________________________________________________-

Tuesday, February 10, 2026

LET US PERCEIVE THE SONG -56

 LET US PERCEIVE THE SONG -56

பாடலை உணர்வோம் -56

நீ நினைத்தால் [நிலவே நீ சாட்சி -1970] கண்ணதாசன், எம் எஸ்வி,  குரல்கள் எம் எஸ் வி, எல் ஆர் ஈஸ்வரி 

இந்த பாடல் வந்த நாளில் பலரும் முணுமுத்துக்கொண்டிருந்த டூயட். அதாவது குரல்களின் வசீகரம் மற்றும் பாவம் பொங்க ஒலித்த ராக அமைப்பு. இது ஒரு அசாதாரண சூழலில் அமைந்த மனக்குரல்களின் டூயட்.

ஆம் திரையில் இருவருமே வாயசைக்கவில்லை -மனங்கள் மட்டுமே குதூகலிக்கும் அமைப்பில் ஒலிக்கிறது. அதுவும் lift  காட்சி -அது மேலும் கீழும் பயணிக்க ஒவ்வொரு மாடியிலும் ஏங்கி காத்துக்கிடக்கும் மக்கள் .

எம் எஸ் வி யின் குரலில் ஆஹ் ஹா என்று துவங்கியதும் சிருங்காரம் பற்றிக்கொள்ள சற்றே தவித்து பயந்த விஜயா சுதாரித்து தொடர்வதாக காட்சி அமைப்பு..

 'எண்ணங்கள் வெளியே வந்தால் என்னென்ன தருவாயோ' என்று ஏக்கமும் எதிர்பார்ப்பும் காட்டிய ஈஸ்வரியின் குரலில் எவ்வளவு தாக்கம்?

" கன்னங்கள் கனிகள் என்று கை கொஞ்சம் தழுவாதோ, கை தொட்ட வேகம் கண்டு பெண் வண்ணம் மலராதோ" என்று பாடும் போது எம் எஸ் வி எவ்வளவு  லயித்துப்பாடியுள்ளார்?

.  அதே போல் " மூடிய கதவுகள் திறந்திடும் முன்னே முழுவதும் அறிவோமா" என்று பளிச் முத்திரையுடன் சொல்லை நிறு த்தி போதை ஏற்றுகிறார் மன்னர். ஒரு பாடகனாக திரு. எம் எஸ் வி , ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருள் உணர்த்தும் பாவம் காட்டி பாடி இருப்பதை நன்கு கவனியுங்கள்.

ஈஸ்வரி மட்டும் சளைத்தவரா என்ன ? எம் எஸ் விக்கு நிகராக பாவம் காட்டிப்பாடியுள்ளார்.

இந்தப்பாடலின் சிறப்பே யாதெனில் இடை இசையை கவனிக்கவே தோன்றாது. காட்சியும் குரல்களும் நம்மை இயக்குவதை உணரலாம்.

இப்பாடல் வினோதமான சூழலில் விபரீதமான மனநிலையில் நிகழ்வதால், இசையில் மன்னர் இரண்டையும் காட்டியுள்ளார். ஆம் கருவிகளினுந் தொகுப்பு அவற்றின் இயக்கம் இரண்டையும் கடந்து இசையில் ஒரு வேகமும் திகைப்பும் மிளிரும் வகையில் ஒலிக்கும் கருவிகள், மனத்தின் படபடப்பாக ட்ரம் ஒலி யில் ஒரு விரைவு .

யூ ட்யூபில் ஒருவர்இப்பாடலில் என்ன கருவிகள் என்றே புரியவில்லை, ஆனால் 70 களி லேயே பின்னாளைய டிஜிட்டல் வகை ஓசைகளை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர். டெக்னாலஜி அவர் காலத்தில் இருந்திருந்தால் ரசிகர்கள் மயங்கிக்கிடந்திருப்பார்கள்என்னும் பொருள்பட எழுதியுள்ளார்.

பாடலில் ஓர் இடத்தில் இடை இசையில் கர்ர்ர்ர் என்று ஒலித்து . லிப்ட் மோட்டாரை நினைவுகொள்ள வைக்கிறது.  அந்நாளில் இப்பாடலை ரேடியோவில் கேட்ட பலர் , ரேடியோ ஏதோ மக்கர் செய்துகொண்டிருப்பதாக  --- சீ சனியன்---- நேரம் காலம் தெரியாமல் என்று பட் பட் என்று ரேடியோ/ டிரான்சிஸ்டர் மீது அடிப்பார்கள்.

தொடர்ந்து சில முறை பாடலை கேட்டவர்கள் இது பாடலிலேயே வருவது என தெரிகிறது ஆனால் ஏன் என்று தெரியாமல்-- படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்ட நிகழ்வு நினைவில் வருகிறது.

       இப்படத்தின்   பாடல்கள் பெரும் வெற்றி ஈட்டியவை.

பாடலை கேட்டு -உணர்ச்சிகரமாக பாடுவது என்றால் என்ன என்று அறியலாம். ஏன் பல பாடகர்கள், பாடகிகள் எம் எஸ் வி போல் பாட முடியாது என்று சொல்கின்றனர் என்பதும் தெளிவாகும். .

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=RDZoAi6nk0M

 NEE NINAITHTHAAL [NILAVE SATCHI 1970] KD MSV LRE

GUITAR

  GUITAR கிட்டார் கிட்டார் [Guitar ] வயலினைப்போல இதுவும் ஒரு மேல்நாட்டு இசைக்கருவி தான் . ஆனால் இந்தியாவில் இக்கருவி திரையுலகில...