Wednesday, August 26, 2026

I perceived the song

 I perceived the song    

பாடலை உணர்ந்தேன்

“காற்று வந்தால் தலை சாயும்

அன்பர்களே

இன்றைய பதிவு 'பாடலை நான் உணர்ந்தேன்' வகை சார்ந்தது . எனது சிறிய ஆற்றலுக்குள்ளேயே பலர் பல பாடல்களை நினைகூர்வதை பார்க்கும் போது ஒவ்வொருவரும் எவ்வளவு அறிந்து வைத்திருப்பார்கள் என்று வியந்து நிற்கிறேன்

இருப்பினும் சில பாடல்களையாவது ஆழ்ந்து பார்த்தால் தமிழ் சினிமா எவ்வளவு உயரம் தொட்டிருந்தது எவ்வளவு பேராற்றல் கொண்ட மனிதர்கள் இங்கே கோலோச்சி அகில  இந்திய  அளவில் பெரும் பாராட்டும் கௌரவமும் பெற்றனர். ஆயினும் காலப்போக்கில் திரையும் இசையும் திசை மாறி  தறிகெட்டு சீரழி வது காலக்கொடுமை .

 

இன்றைய பாடல் "காற்று வந்தால் தலை சாயும்" இரண்டு முறை வெவ்வேறு காரணங்களுக்காக நானே விவாதித்திருக்கிறேன். எனினும் இன்னும் பல பரிமாணங்கள் பொதிந்துள்ள ஒரு காவியம் இப்பாடல்

இதன் திரைக்காட்சி நடிப்பின் மேன்மையை பறைசாற்ற பிறிதொரு காணொளி [வீடியோ] கவிதையின் சிறப்பையும் இசையின் ஆழ்ந்த பரிமாணங்களையும் விவரிக்க இது போன்ற திறன் களஞ்சியங்கள் ஏன் அமைதிகொண்டன என்ற கேள்வி எழாமல் இல்லை. எப்படி பார்த்தாலும் இழப்பு என்னவோ நல்ல ரசிகர்களுக்கு தான். இரண்டு வீடியோ க்களையும் பார்த்தால் எவ்வளவு தீவிர பங்களிப்பில் பாடல்கள் எழுந்தன என்பது விளங்கும். இப்பாடல் உருவாக்கத்தின்போது எவ்வளவு விரிவான கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது, கவிஞர் எப்படி ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் ஈடு கொடுத்து பாடலை வடிவமைத்தார்  இசை அமைப்பாளர்கள் எவ்வளவு நேர்த்தியாக பியானோ, கிட்டார் மற்றும் அன்றைய புதுவரவான எலெக்ட்ரிக் கிட்டார் போன்ற கருவிகளின் நுண் ஒலியை பாடலின் உயிரோட்டத்திற்கு  கையாண்டனர் போன்ற விவரங்களை சுபஸ்ரீ விளக்கியுள்ளார். மனம் உள்ளவர்கள் கேட்டு ரசியுங்கள்.  

உங்களது விளக்கங்களையோ  வியாக்கியானங்களையோ தேடி இங்கே எதுவும் சொல்லப்படவில்லை.

எனவே அவரவர் தங்களுக்கு  புரிந்தபடி பாருங்கள். ஒன்று நிச்சயம் எவ்வளவு காலம் போனாலும் இனி இது போன்ற திரை வடிவங்களும் இசை வடிவங்களையும் சல்லடைபோட்டு தேடினாலும் பலன் இல்லை.

இணைப்புகள் கீழே

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo&t=160sC kaatru vandhaal kd  vr pbs ps 1963 kaaththirundha kangal

https://www.youtube.com/watch?v=_CsfA2FmfdI QFR

நன்றி         அன்பன்  ம வ  

NEW INPUT -OLD HAPPENING

 NEW  INPUT -OLD HAPPENING 


https://www.youtube.com/watch?v=6boDnJiDvMo


Tuesday, August 25, 2026

ENEMIES UNDER FEAR OF FIRE

 ENEMIES UNDER FEAR OF FIRE    

அடிக்கு நடுங்கும் எதிரிகள்.

இந்தியாவை கிள்ளுக்கீரையாக எண்ணியவர்கள் இப்போது தத்தம் நாட்டில் கீரை பிடுங்கக்கூட வெளியில் வர நடுங்கி ஒடுங்கும் நிலையில் உள்ளனர். திடீரென்று இந்தியா விஸ்வரூபம் எடுக்கும் என்று எவரும் கனவு கூட கண்டதில்லை. இப்போது எண்ணற்ற போர்திறன்கள் ஈடில்லா தொழில் நுட்பம் , குறைத்த செலவு ஆனால் துல்லியம் குன்றாத செயல் திறன் என "வாங்கடா இப்போ " என்ற நிலையில் இந்தியா இப்போது சட்டைக்கையை முறுக்கு வது போல் அசுரபலம் காட்டி இப்போது பேசவே அஞ்சும் நாடுகள். உள்நாட்டில் சில கோளாறு வாயன்கள் இருக்கிறார்கள் விரைவில் அவர்களுக்கும் கிடைக்கவேண்டியது கிடைக்கும்.

இப்போது அக்னி -4 ஏவுகணை வெற்றிகரமாக இயக்கப்பட்டு பலரும் கதி கலங்கி நிற்கின்றனர். இது ஒரு ராட்ஷச ஏவுகணை 4000 கிலோமீட்டர் தாண்டியுள்ள இலக்கை விரைந்து தாக்கி அழிக்கும். இது 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை [அணு ஆயுதங்கள் உட்பட]  வீசி அழிக்கும் பேராற்றல் கொண்டது. இந்திய நுட்பம் சொல்வது என்ன எனில் தேவை என்றால் அணு ஆயுதத்தாக்குதலுக்கு இந்தியா தயங்காது. முன்பு போல் அவர் என்ன சொல்வார் இவர் என்ன சொல்வார் இதெல்லாம் பொருட்டே அல்ல [வாலை  சுருட்டிக்கொண்டு  இல்லாதவனுக்கு செமத்தியாக விழும் ]-என்று தெளிவாக உணர்த்தியுள்ளது  சென்ற ஆகஸ்ட் 8 ம் தேதி நடத்தப்பட்ட சோதனை.  இதன் பல்வேறு அம்சங்கள்  பற்றி விளக்குகிறா மேஜர்  திரு மதன் குமார் அவர்கள் . இணைப்பு இதோ கண்டு விவரங்களைப்பெறுவீர்.

https://www.youtube.com/watch?v=YY7eaOsZ-cc 4k agni 4 1000kg pay load  as on 8-8-26 missile that conforms to definition  movable on train 12th assertion narby hostile groups receive message of caution.

நன்றி அன்பன்

I perceived the song

  I perceived the song     பாடலை உணர்ந்தேன் “காற்று வந்தால் தலை சாயும் ” அன்பர்களே இன்றைய பதிவு ' பாடலை நான் உணர்ந்தேன்...