Monday, July 13, 2026

SCIENCE – V A C C I N E -4

 SCIENCE – V A C C I N E -4

அறிவியல்வாக்ஸின் -4

வாக்ஸின்களின் அடிப்படை த்தேவைகள் :

எந்த வாக்ஸின் ஆயினும் குறிப்பிட்ட காலவரை வரையிலும் அது செயல்திறன் கொண்டு [உயிரோட்டமாக] இருத்தல் வேண்டும் . இதை shelf life என்று குறிப்பிடுவர். அதைக்கடந்தால் EXPIRY DATE துவங்கும்..இருப்பினும் உயிரோட்டம் மிக்க SHELF LIFE காலத்திலும் கூட வாக்ஸின் அதற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குளிர் நிலையில் வைக்கப்பட வேண்டும். இல்லையேல் செயலிழப்பு + மோசமான பக்கவிளைவுகளை வாக்ஸின் தோற்றுவிக்கக்கூடும். இது போன்ற செயல் தேவைகளை [FUNCTIONAL  REQUIREMENTS]  கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்ஸினும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகிறது.

வாக்ஸின்களில் உள்ள முக்கிய பொருட்கள்

1 ஆன்டிஜென் [ANTIGEN]  மிக முக்கிய பொருள் இது தான். அதன் திறன் குன்றாமல் காக்கப்பட்டு தேவையான கால வரையறை முடியும் வரையில் செயல் பட வேண்டும் .

2 SURFACTANTS எனும் புறச்செயலிகள் . வாக்ஸினில்  உள்ள பொருட்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்வினை புரியாமல் [avoiding interaction between components in the vaccine ] தடுக்கும் வேலையை செய்வன .

3 PRESERVATIVES [செயல் நிலை காக்கும் வேதிப்பொருட்கள் [கெமிக்கல்ஸ்] ] பெரும்பாலும் இவை ஆல்கஹால் வகையின . வாக்ஸினின் செயல்பாடு குன்றாமல் காப்பவை [2-phenoxy ethanol]. ஆனால் ஒருவருக்கு மட்டும் பயன்படும் ஒற்றை டோஸ் குப்பிகளில் [vials] preservative சேர்ப்பதில்லை.

4 நிலைப்படுத்திகள் [stabilizers] அதாவது வாக்ஸினில் உள்ள பொருட்கள் சிதையாமல்/ அழியாமல் நிலைப்படுத்துவன. இவை பல வேறுபட்ட sugars /அமினோஅமிலங்கள் / விசேஷ ப்ரோடீன்கள் 

5 பிற உதிரிகள் [Residuals]  மிக நுண் அளவுகளில் ப்ரோடீன், ஈஸ்ட் அல்லது அன்டிபயா ட்டிக்ஸ் மிகமிக நுண் [ppm / ppb  எனும்] அளவில்

6  இணைப்புகள் [adjuvant ] இவை பெரும்பாலும் உப்பு வகையின -அலுமினியம் பாஸ்பேட் /சல்பேட் /ஹைட்ராக்சைடு  அல்லது அலுமினியம் /பொட்டாசியம்  சல்பே ட், இவற்றில் ஏதேனும் சேர்ப்பர் . இந்த இணைப்புகள் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்  immune system செயல்களை தூண்டிவிடும் .

7 நீர்க்க செய்ய diluent : வாக்ஸின்  எந்த அடர்த்தியில் உடலில் செலுத்த வேண்டுமோ அந்த அடர்த்திநிலைக்கு கொண்டு வர மிக சுத்தமான distilled water , diluent ஆக உபயோகிக்கப்படுகிறது .

இவ்வாறு துல்லியமாக கலந்து உருவாக்கப்படும் பல் பொருள் கலவையே வாக்ஸின் என்னும் வடிவம் பெறுகிறது.

ANTIBODY எனும் தற்காப்பு ப்ரோடீன்கள் குறிப்பிட்ட ஆன்டிஜென் களை அழித்தொழிக்க வல்லன .எனவே வாக்ஸின்கள் அந்தந்த நோய்களை எதிர்க்கும் ; ஆகவே பல வித வாக்ஸின்கள் மனித வாழ்விற்கு அவசியம்.

வாக்ஸின்  உருவாக்கத்தில்,   செயலிழக்கச்செய்யப்பட்ட [ATTENUATED] அல்லது சிதைக்கப்பட்ட வைரஸ் பாகங்கள் பயன் படுத்தப்படுகின்றன . இவை VIRAL PLATFORM டெக்னாலஜி என்றழைக்கப்படுகின்றன .அடினோ வைரஸ் என்னும் ஒருவகை வைரஸ்கள் 1953 முதலே வாக்ஸின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடினோ வைரஸ் இனத்தவை மனிதரில் சுவாச நோய் , இருமல் போன்ற இடர்ப்பாடுகளை தோற்றுவிப்பன .

அவை மனிதர்களின் வாழ்வில் நோய்களை விளைவிப்பதால் பலவகை மனிதர்கள் இந்த அடினோ வைரஸ் வகைகளை உடல் ரீதியாக எதிர்கொண்டுள்ளதால் இவை வைரல் PLATFORM கருவிகளாகப்பயன் படுகின்றன.

மேலும் வளரும்

அன்பன் ராமன்

Sunday, July 12, 2026

MADURAI -18

 MADURAI -18

மதுரை -18

SOLAI MURUGAN TEMPLE [PAZHAMUDHIRCHOLAI]  [ALAGAR HILLS] murugan-valli deivaanai

பழமுதிர் சோலை /சோலைமுருகன்

மதுரையை சுற்றி அமைந்துள்ள சிவஸ்தலங்களில் ஒன்று என்பதை விட இது அறு படைவீடுகளில் ஆறாவது. இது அழகர்கோயில் எனப்படும் அழகர் மலையில் அமைந்துள்ளது. .

இவ்விடம் வீற்றிருக்கும் முருகனை சோலை முருகன் என்றழைக்கின்றனர். மிகவும் பழைமையான இடம் என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு இங்கு முருகன் வள்ளி -தெய்வானையுடன் அருள் பாலிப்பது . இயற்கையான சூழலில் இருப்பதால் சோலைமுருகன் என்றும் பழமுதிர் சோலை என்றும் புகழ் கொண்ட இடம். இவ்விடத்தில் அவ்வைப்பிராட்டி இளைப்பாறியபொழுது முருகன் திருவிளையாடல் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

அவ்வையை "பாட்டி சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு முருகன் திகைக்க வைத்த தலம் இதுவே. இன்னமும் அந்த நாவல் மரம்   இங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. பிற நாவல் மரங்கள் எப்படியோ ஆனால் இங்குள்ள ஒரு நாவல் மரம் கந்தசஷ்டி தருவாயில் கனிகளை தருவதாக பெரும் புகழ் கொண்டுள்ளது. இம்மலை முருகனுக்கு வரும் பக்தர்கள் ஏராளம் அதுவும் விடுமுறை தினங்களில் கூட்டம் பெரிதும் வரும்.

இத்தலத்தின் பகுதியில் இருந்து சற்று முன்னேறிச்சென்றால் அழகர் மலையின் புண்ணிய தீர்த்தம் வழங்கும் நூபுர கங்கை அனவரதமும் பிரவாகித்து வர பக்தர்கள் புனித நீரில் நீராடி செல்வது அன்றாட நிகழ்வு.

இங்கே உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நல்ல சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள்  கூ ட்டங்கூட்டமாக  வந்த வண்ணம் இருப்பதைக்காணலாம். மக்கள் நடமாட்டம் இருப்பதால் தின்பண்ட விற்பனை, பழக்கடைகள், பூமாலை அர்ச்சனைப்பொருட்கள் என வியாபாரமும் நிகழ்வதால், குரங்குகளுக்கும் பஞ்சமில்லை.

அழகர் மலைக்குரங்குகள் சிறிதும் அச்சம் கொள்வதில்லை. மாறாக பெண்கள் குழந்தைகள் மீது பாய்ந்து கையில் இருப்பதை பிடுங்கி உண்ணும் தைரியம் கொண்டவை அவை சற்று அடங்கிப்போவது கையில் குச்சி போன்ற நீண்ட கருவிகளுக்கு மட்டுமே. அதனால் பலர் கையில் குச்சியுடன் இருப்பதைக்காணலாம்.

இத்துணை அம்சங்கள் நிறைந்த இத்திருக்கோயிலி ல் சமீபத்தில் கும்பாபி\ஷேகம் நடந்தேறியுள்ளது. இவ்விழாவிற்கு ஒன்றரை டன் மலர்கள் கொண்டு அலங்காரம் நிகழ்ந்ததாக அறிகிறோம்.  இக்கோயிலின் பல விவரங்களை விளக்கும் 5 வீடியோக்களை இணைத்துள்ளேன். கண்டு களியுங்கள். இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=EGoM5y7AEk8 History, related features

https://www.youtube.com/watch?v=vP1JMFTc494

https://www.youtube.com/watch?v=1QLdiNCPV98

https://www.youtube.com/watch?v=o4VheXXcVGE pazhamudhir solai

https://www.youtube.com/watch?v=H1LAqNU26WQ    kumbaabishekam

நன்றி

அன்பன் 

SCIENCE – V A C C I N E -4

  SCIENCE – V A C C I N E -4 அறிவியல் – வாக்ஸின் -4 வாக்ஸின்களின் அடிப்படை த்தேவைகள் : எந்த வாக்ஸின் ஆயினும் குறிப்பிட்ட காலவரை வரை...