Thursday, May 21, 2026

MORINGA OLEIFERA [Drum stick, Horse radish tree]

MORINGA OLEIFERA   [Drum stick, Horse radish tree]

Tamil= Murungai, Tel:Mulakaya Malayal: Munringa, Kannad: Nugge  Hin: Mungana

The plant is a tall shrub growing to 12feet or more and stem is weak, ready to break and can never be climbed on. Branches stretch in different angles/ directions with dense foliage and heavy output of long rod like pods.

Leaf and pods are used as vegetable; hot seasons of climate are the times of fruit-bearing. In South India, fruits are used in ‘Sambar making’ and leaves are used as ‘greens’.

Either has a huge appeal among consumers and ‘moringa products’ appeal as of medicinal value as aphrodisiac materials. Moringa foliage is a good cattle feed too. In some parts,  moringa is used for water purification.  Seeds of ‘moringa’ can yield oil that is used in cooking and in cosmetics.

Contents [per 100 g ]include water= above 76%, energy- 37 k cal , Carbohydrates =8.53%, Dietary fibre=3.2%, fat =0.20%

Leaves of ‘moring’ are the most nutritious, as they provide good quantities of Vitamins-B, C,K , Beta carotenes, Manganese and Calcium[= 430 -1050mg per 100g ]

In all, ‘Moringa’ is a very common leaf/fruit vegetable that easily replenishes essential mineral components of value to human health.

Wednesday, May 20, 2026

MSV REMEMBERED BY Mr. AVM KUMARAN

 MSV REMEMBERED BY Mr. AVM KUMARAN

மெல்லிசை மன்னரை நினைவு கூறும் திரு குமரன் அவர்கள்

திரு வி எம் குமரன்.

வி மெய்யப்ப செட்டியாரின் புதல்வர்களில் ஒருவர் [2 ம் புதல்வர்].  இவருக்கு இசையில் மிகுந்த நாட்டம் உண்டு. சொல்லப்போனால் அவர்கள் படங்களில் பாடல் உருவாகும் போது நிச்சயம் திரு குமரன் அவர்கள் நாட்டம் செலுத்தி நல்ல பாடல்களை வாங்கி படங்களின் வெற்றிக்கு பெரும் பங்களித்தவர். நீண்ட காலம் திரு எம் எஸ் வி யுடன் பழகியவர். எண்ணற்ற பாடல் ஆக்கங்கள் குறித்து அவர் வழங்கிய கருத்துகள் இப்பதிவில் உள்ளன . அந்நாளில் திரைப்பட துறையின் ஈடுபாடு எவ்வளவு இருந்தது என்பதை அவர் பேசப்பேச வியப்பும் மரியாதையும் அதிகரிப்பதை உணரலாம். அதிலும் சில குறிப்பிட்ட பாடல்களின் உருவாக்கத்தில் எம் எஸ் வி வழங்கிய பங்களிப்பை அவர் நேர்த்தியாக்க வெளிப்படுத்துகிறார். கேட்டு பயன் பெறலாம். அந்த நடை முறைகள் இல்லாத இன்றைய    சூழலில்  தயாரிப்பு நிறுவனங்களின் பங்கீடு இல்லாம,ல் ரெடிமேட் இசை வழங்கி பாடல்களை முற்றாக அழித்து விட்டனர். எந்த தொலைகாட்சி பாடல் நிகழ்ச்சிகளிலும் இன்றளவும் பழைய பாடல்களே முன்னிலை வகிப்பதை எவராலும் தடுக்கவோ தவிர்க்கவோ இயலாது "உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்" என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்க வேண்டும் என தோன்றுகிறது வீடியோ இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=YfyoRHrwnz4&t=248s AVM KUMARAN ABOUT MSV

அவளுக்கென்ன [சர்வர் சுந்தரம்] பாடல் குறித்து திரு எம் எஸ் வி சொல்வதைக்கேளுங்கள். அவரும் சில முக்கிய கருத்துகளை பகிர்கிறார். கேட்டு உணர இணை ப்பு இதோ

https://www.youtube.com/watch?v=1wZpc6YLqfE MSV ON AVALUKKENNA

நன்றி

அன்பன்

Tuesday, May 19, 2026

A HUGE LEAP

 A HUGE LEAP                               

தீவிர பாய்ச்சல்

இன்றைய பதிவில் தேச நலன் சார்ந்த பல தகவல்கள் இடம் பெறுகின்றன சில நமது தற்காப்பு தொடர்பானவை. குறிப்பாக வரும் காலங்களில்  எதுவும் நடக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கும் வரை நமது ஆயத்தங்களும் அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பது மட்டுமல்ல , முறியடித்து காத்துக்கொள்வதே சாலச்சிறந்தது. அதையும் கடந்து உன்னை உன் இடத்திலேயே முடக்குகிறேன் என்ற ஆயத்தம் மிகவும் துல்லியமும் ஆழ்ந்த புலனாய்வு உத்திகளும் பின்னிப்பிணைந்த ஒரு  அசாதாரண சூழல். அதை நோக்கி நமது முன்னேற்பாடுகள் நகர்வதை உணர முடிகிறது அதே நேரத்தில் சற்று கவலை அளிக்கக்கூடிய தகவல் தான் இவை. என்ன செய்ய? கையை கட்டிக்கொண்டிருந்தால் எவனும் அமைதியாக வாழ இயலாதே -எனவே தான் இவை தேவை  ஒரு கன்னத்துக்கு அறை விழுந்ததும் மறு கன்னத்தைக்காட்டினால், என்னடா கன்னத்தைக்காட்டுகிறாய் , சட்டையை கழற்றி விட்டுட்டு முதுகைக்காட்டு என்பான் வந்தவன்.அறை விழும்முன் மண்டையை  உடைப்பவன் தான்  இனி பிழைக்க முடியும். இதை நவீன இந்திய உணர்ந்திருப்பது மட்டும் அல்ல , அதற்கான முறையான முன்னெடுப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதையும் அறிகிறோம் இப்போதும் சிலர் இந்தியாவுக்கு எதிரான அவதூறுகளை பரப்பி அகமகிழ்கின்றனர். அவர்கள் ஏன் தங்கள் மனம் கவர்ந்த நாடுகளுக்கு சென்று மன நிறைவுடன் வாழக்கூடாது? அங்கு சென்றால் தான் தெரியும் இது போல் பேசிக்கொண்டிருந்தால் கம்பி தான் என்ன வேண்டி வரும் என்பது. சகிப்புத்தன்மையை மதிக்கத்தெரியாதவர்கள் எதிர்பாராத இன்னல்களில் சிக்கி சிதைவது இயற்கையின் தீர்ப்பு. எனினும் ஒரு நாடு ஆயத்தப்படுத்திக்கொள்வதை புரிந்து கொள்ளவும் அறிவு தேவை. அவ்வகையில் பல தகவல்களை இன்றைய இணைப்பில் மேஜர் திரு மதன் குமார் அவர்கள் விளக்குகிறார். செய்திகளை எழுதுவதை தவிர்த்துள்ளேன் எனவே அவரவர்  தனித்தனியே வீடியோ மூலம் அறிதல் நல்லது  நன்கு கவனித்து புரிந்து கொள்ள /அறிய வாய்ப்பு.  இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=pthaZ5eokIU Major Madhan Kumar [08-05-26 –info]

நன்றி    அன்பன்  

Sunday, May 17, 2026

MADURAI-10

 MADURAI-10

மதுரை -10

முக்கியத தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயரால் வழங்குவது ஏன் எனில் கோயில் தொடர்பான சுவாமி புறப்பாடு  அந்தந்த மாதங்களில் அந்தந்த பெயர்கொண்ட வீதிகளில் நடை பெறும். . ஒரு விதி விலக்கு  சித்திரை திருவிழா மாசி வீதிகளில் நடப்பது தான். இதற்கொரு வரலாறு உண்டு.

சித்திரை திருவிழா என்ற பெயரே பின்னாளில் உருவானதாக புரிந்துகொள்ளலாம். இந்த விழா அழகர் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்து மீனாக்ஷி கல்யாண வைபவத்திற்கு எழுந்தருளுவது புராதன வரலாறு..ஆனால் இந்தநிகழ்வு மதுரை அருகே உள்ள சோழவந்தான் பகுதியில்" மாசி "மாதத்தில்  நிகழ்ந்து வந்ததாக பதிவுகள் உண்டு.  அப்போது அழகரை வரவேற்க சோழவந்தான் பகுதி பெருமாள் ஸ்ரீ ஜனகநாராயணன் எதிர்கொண்டு அழைப்பது என்பது வரலாறு. விழா சிறப்பான ஒன்று என்றாலும் கிராமப்பகுதியில் நடந்ததால் மக்கள் கூட்டம் மிகக்குறைவாகவே அமைந்த 'மாசித்திருவிழா ' என்ற நிகழ்வு.

அந்த விழாவை க்கண்ட மதுரையின் நிர்வாகி திருமலை நாயக்கர் , இந்த நிகழ்வு ஏன் பெரும் ஆரவாரமின்றி மக்களே பங்கேற்காமல் இருக்கிறது என்று ஆய்ந்ததில் விழா 'மாசி”'யில் நடப்பதே காரணம். ஏன் மாசி மாதம் விவசாயப்பணிகள் தீவிரமாக இருக்கும். கிராமமக்கள் வெளியூர் போவதை தவிர்ப்பார்கள். எனவே என்ன முயன்றாலும் மக்கள் திரளாக பங்கேற்க இயலாது என்று உணர்ந்தார். எனவே இவ்விழாவை மதுரைப்பகுதியில் அதே வைகை ஆற்றில் நடத்தலாம் என்று பெரும் ஆவல் கொண்டு அவ்வாறே உத்தரவிட்டார். ஆனால் சிக்கல் எழுந்தது . கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .அழகர் எங்கள் ஊருக்கு வரமாட்டார் எங்கள் ஊர் பெருமாளும் அழகருக்கு வரவேற்பு தரும் நிகழ்வை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது என்று கடுமையாக எதிர்த்தனர். திருமலை நாயக்கர் மதுரையின்  நிர்வாகி அல்லவா. அவர் ஒரு ஏற்பாடு செய்தார். உங்கள் பெருமாளுடன் நீங்களும் மதுரைக்கு வாருங்கள்,உங்கள் பெருமாளை மதுரையில் திரளான மக்கள் வரவேற்கட்டும்.  மதுரையில் அழகருக்கு நாம் அனைவரும் வரவேற்பு தருவோம். இதை செய்ய ஏதுவாக இவ்விழாவை சித்திரை  மாத பௌர்ணமியில் வைத்துக்கொண்டால் விவசாய வேலைகளுக்கு இடையூறின்றி சித்திரைத்திருவிழாவாக நடத்துவோம் என்று ஏற்பாடு செய்ய அவ்வாறே, சித்திரைத்திருவிழா 10 நாள் உற்சவமாக நடக்கிறது. அந்நாளில் இவ்விழா 'மாசி' மாதத்தில் நடந்ததால், புறப்பாடு, வீதி உலா , தேர் , திக் விஜயம், போன்ற அனைத்தும் இன்றும் மாசி வீதிகளிலேயே நடை பெறுகின்றன. மேலும் , நீள -அகல பரிமாணங்களில் , சித்திரை வீதிகள்சிறியவை ஆனால் மாசி வீதிகள்  மிகப்பெரியவை. [ஏன் எனில் , அவை கோயிலு க்கு வெளியே மூன்றாவது சுற்றில் இருப்பவை]. எனவே தேரோட்டம், வீதி உலா மற்றும் எண்ணற்ற திரு உருவ ஊர்வலங்கள் எளிதில் நடத்தலாம், மக்கள் வெள்ளம் சிரமமின்றி கடந்து  செல்லவும் நடைபாதைகளில் ஒதுங்கி நிற்கவும் போதுமான இடம் உண்டு. எனவே முந்தைய மாசித்திருவிழா , சித்திரைத்திருவிழா ஆன போதிலும் ஊர்வல நிகழ்வுகள் மாசி வீதிகளிலேயே நடை பெ றுவது சரிதான் என்பது புரி கிறது.

இவ்விழாவை மாசி மாதத்திலிருந்து சித்திரை மாதத்திற்கு மாற்றி பெருவாரியான மக்கள் விழாவாக அமைத்ததுடன், திருக்கல்யாணம், தேரோட்டம் திக் விஜயம் போன்ற சிறப்பான கொண்டாட்டமாக மாற்றியதால் சித்ராபௌர்ணமிக்கு கூடும் கூட்டம் உண்மையிலேயே சில லட்சங்களை எட்டும். ஆற்றில் நிகழ்வதால் எவ்வளவு ஜனத்திரள் வந்தாலும் இடப்பிரச்சினை இன்றி நடந்தேறும் விழா. மற்றுமோர் சிறப்பு பல இடங்களிலும் அழகரை வரவேற்று உபசரிப்பது மதுரையின் பெருமை. புதூர் பகுதியில் பல அரசு அலுவலகங்கள், காவல் துறை உயர்மட்ட அலுவலகம், மின் துறை அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை, பல்கலைக்கழகத்தின் நகர் கிளை ,5 நட்சத்திர ஓட்டல்கள், பலதரப்பட்ட சமூக கூடங்கள் ஒவ்வொன்றிலும் அழகர் மண்டகப்படி நடக்கும். மக்கள் வந்து வந்து அழகரை சேவித்து குதூகலமாக இயங்குவது கண் கொள்ளா  காட்சி.

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு

இவ்விழா ஒரு சமுதாய விழாவாகவும் வடிவம் கொண்டுள்ளது. அழகரை குலதெய்வமாக வணங்கும் பல பிரிவினர் விசேஷ வேடமிட்டு சலங்கை கட்டி ஆடிப்பாடுவதும் , பெரும் தோல் பைகளில் வைகை நீரை நிரப்பி பக்த கோடிகள் மீது பீய்ச்சி அடிப்பதும் ஏன் அழகர் வரும் குதிரை உள்ளிட்ட வாகனம், உற்சவர் பட்டர் உள்ளிட்ட அனைவர் மீதும் பீய்ச்சி அடிப்பது இறைவனுக்கு வெய்யில் நேரத்தில் [சித்திரை வெய்யிலில்] நிறைவேற்றப்படும்  ஒருகைங்கரியமாக வே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவை தவிர அழகருக்கு நேர்த்திக்கடனாக முடி செலுத்துவதும் [மொட்டை போடுதல் ] இவ்விழாவின்  மற்றுமோர் சிறப்பு  எனவே. இதை வடிவமைத்த மன்னர் திருமலை நாயக்கர் இன்றும் மதுரைமக்களின் ஏகோபித்த அன்புக்கு பாத்திரமானவர்.  மேலும் தகவல்களை வரும் பதிவுகளில் காணலாம் மதுரை, இப்போதைக்கு உங்களை விடப்போவதில்லை . எனவே மீண்டும் மதுரையா ஐயோ என்று யாரும் அலற வேண்டாம்.

https://www.youtube.com/watch?v=RcLdm-hUsPM CHITRA FESTIVAL MADURAI 2026 நன்றியுடன்   அன்பன் .

MORINGA OLEIFERA [Drum stick, Horse radish tree]

MORINGA OLEIFERA   [Drum stick, Horse radish tree] Tamil= Murungai, Tel:Mulakaya Malayal: Munringa, Kannad: Nugge   Hin: Mungana The pla...