Thursday, April 2, 2026

LET US SEE -2

LET US SEE -2                                          

எங்கே பார்ப்போம்-2 

மனைவி அமைவதெல்லாம் [மன்மத லீலை -1976] கண்ணதாசன் எம் எஸ் வி,       கே ஜெ ஜேசுதாஸ்

பல முறை கேளுங்கள். பல முறை கேளுங்கள். பல முறை கேளுங்கள். என்று சொல்லி தான் இப்பாடலை பற்றி கருத்து சொல்லக்கேட்டேன்.

கருத்தாவது , குருத்தாவது போய்யா  என்பது போல் இருக்கும் சூழல். இது எதிர்பார்த்தது தான் ஏன் என்றால், நமது அன்பர்களுக்கு முக்கியமான வேலை இப்போது மேற்காசிய போர் நிறுத்த ஒப்பந்தம் தயாரிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறது. மேற்காசிய போர், 'மனைவி அமைவதை' விட  முக்கியமான தேவை அல்லவா? எனவே பாடல் பற்றி கவலைகொள்ள மாட்டார்கள்.  இவ்வாறிருக்க  சென்ற பதிவில் நான் அறிவித்திருந்த படி ‘உங்கள் விடையை பொறுத்து இந்த பாடலோ வேறு பாடலோ அடுத்த பதிவில் இடம் பெற லா ம். . பார்ப்போம்

.   இப்பாடலின் பல பரிமாணங்களை சென்ற வீடியோவில் அறிய முடியாத வற்றை இன்றைய வீடியோவில் அறியலாம். விருப்பமுள்ளவர்கள் வீடியோவை பார்த்து உணர இணைப்பு இதோ. நன்றி  

https://www.youtube.com/watch?v=PnijcdEVqAQ&list=RDPnijcdEVqAQ&start_radio=1  manaivi amaivadhellaam  KD NSV KJJ

இது ஒரு அசாதாரண வில்லங்கப்பாடல். ஆம் அவன் ஒரு பெண் பித்தன் அவன் எப்படியும் பெண்ணை குருவி பிடிப்பது போல் வலையில் வீழ்த்தும் வித்தகன். கவியரசர் சாதுர்யமாக பல தகவல்களை பித்தன் வாய் மொழியாகவே பேசுகிறார். ஆனால் பித்தன் காரியத்தில் குறியாக அலைகிறான். மணமான பெண்ணை [ஆடு நனைகிறதே என்று வருத்தம் கொள்ளும் ஓநாய்] உத்தியை பாடி வீழ்த்துகிறான் இறைவன் கொடுத்தவரம்  -மனைவி அமைவதெல்லாம் என்று குடியில் வீழ்ந்த வனுக்கு மனைவி என்ற வரம் மற்றும் கணவன்  மனைவிக்கு பலன் தரவில்லை என்று அவளை அடைய முற்படுகிறான் பித்தன் . அதன் முதல் படியாக விரும்பிக்கேட்ட நேயர்கள் பட்டியலில் அவள் பெயரையும் சொல்லி அவள் தன்னை மறந்து சிரிக்கிறாள் [குருவி வலையில் சிக்கி விட்டது என்று பாடல் உணர்த்துகிறது. . அடுத்து

இரவில் நிலவு ஒன்று உண்டு , உறவில் சுகம் ஒன்று உண்டு என்று அவளுக்கு வாய்க்காததை உணர்த்துகிறான் அதோடு மனைவியின் கனவொன்று உண்டு --எனக்க து புரிந்தது இன்று என்று சொல்லி 'உன் தேவையை நான் புரிந்து கொண்டேன் என்று ' தொடாமல் தொடுகிறான் பித்தன் [இவன் ஏற்கனவே மனமானவன் ]. இப்படி வலை விரிப்பதே தொழிலாய் வேறொரு வீட்டில் பாடுகிறான்  குடிகாரன் நிலையை தனக்கு சாதகமாக்கி " பொருத்தம் உடலிலும் வேண்டும் , புரிந்தவன் துணையாக வேண்டும் என்று பல்பொருள் உணர்த்துகிறான்.'புரிந்தவன்' என்ற சொல்லுக்கு உள்ளார்ந்த அர்த்தம் வேறு. அதை கவிஞர் அதியற்புதமான சூழலுக்கு உபயோகித்துள்ளார்.

இதற்கிடையே இன்னொருவரின் வீட்டில் இருந்து கொண்டு ஆபீசில் ஓவர் டைம் பார்ப்பதாக புளுகி 'மனைவி அமைவதெல்லாம் றைன் கொடுத்த வரம் என்று போனில் உயர்த்திப்பாடி அவளை[மனைவியை] யும் பிடியில் வைத்துக்கொள்ளுகிறான் இறுதியாக

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல் என்று பிரம்மாஸ்திரத்தை வீசி உன் கணவனுக்கு உன்னை விட குடியே முக்கியம் ஆனால் நான் அப்படி அல்ல என்பதை 'அழகினைப்புரியாத பாவம் [கணவன்] அருகினில் இருந்தென்ன லாபம்? நான் உன் அழகை ரசிப்பவன் என்று சொல்லாமல் சொல்லி அவளின் உள்ளார்ந்த உணர்வுகளை கிளறுகிறான். மீராவின் பாத்திரம்  போல   உனக்கு கணவன் அமைந்துள்ளான் , நீ நினைக்கும் கண்ணன் நானே என்று பித்தன் அவள் மனதில் இடம் தேடும் காட்சிதான் இப்பாடல்.

முற்றிலும் மாறுபட்ட இசை.  பல்லவி மட்டுமே ஒரே வடிவில்.

சரணங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ட்யூன் அமைப்பில். சாதாரணமாக தெரியாது. ஆழ்ந்து கேட்டால் தெரியும் ஒவ்வொரு சரணமும் வெவ்வேறு ட்யூன் அமைப்பில். அதற்கு காரணம் பித்தன் பல உத்திகளாக வலை விரிப்பது தான். சான்று வேண்டுமா ?

ஒவ்வொரு சரணம் முடிந்ததும் பாடல் நின்று பின்னர் துவங்குவது --தெரிகிறதா?  ஒவ்வொரு ஸ்டெப் [step ] ஆக பித்தன் வலை விரிக்கிறான். அதனால் இடை இசை அனைத்தும் வெவ்வேறானவை. ஒன்று போல் ஒன்றில்லை. பித்தனின் உத்திகள் பலவிதம்  ஆனால் குறிக்கோள் ஒன்றே எனவே பாடல் மெதுவாக நகர்ந்தாலும் தபலா பரபரக்கிறது ஏன் [பித்தன் மிகுந்த துடிப்புடன் இருப்பதையும்-பெண் ,மன அதிர்வு எனும் படபடப்பையும்  தபலா [அனுமந்து ] நேர்த்தியாக பேசியுள்ளது. மெல்லிசை மன்னரா  கொக்கா? 

எவ்வளவு நுணுக்கம் இப்பாடலில்.?  சரி இவன் என்ன பித்தனா என்று கேட்டால் பின் வரும் பாடலை கேளுங்கள் இவன் தேர்ந்த வித்தகன் என்று புரியும் எல்ஆர் ஈஸ்வரி  சும்மா ஜமாய்த்துள்ளார் . பிற விவரங்கள் பின்னர்

ஹலோ மை டியர் ராங் நம்பர் https://www.youtube.com/watch?v=C9aQGlObyl4

Wednesday, March 25, 2026

I S MURUGESH -02

 

Meesai again    I S MURUGESH -02

  எஸ் முருகேஷ்-02

திரு முருகேஷ் அவர்களின் பல திறமைகள் ஒரு புறம் இருக்க, சங்கர் -கணேஷ், தாயன்பன் போன்றோர் திரு முருகேஷ் அவர்களின் அருமை பெருமைகளை அஞ்சலியாக  வழங்கக்காணலாம் [இரண்டாவது வீடியோ வில் ]

அந்த காலத்து ரசூல் பூக்குட்டி | சிறப்பு சப்தம் : மீசை முருகேசன் | Foley Artist | Vasanth tv MEESAI MURUGESAN

https://www.youtube.com/watch?v=RhmrU2qdJn4

LET US PERCEIVE THE SONG 63

 LET US PERCEIVE THE SONG 63               

பாடலை உணர்வோம் –63

பேசுவது கிளியா [பணத்தோட்டம்-1963] கண்ணதாசன்,விஸ்வநாதன் -ராமமூர்த்தி , குரல்கள் டி எம் எஸ், சுசீலா 

இது ஒரு அதிசயமான பாடல். சமூக கதைக்களத்தில் அமைந்த அரச வகை டூயட். அது என்ன அரச வகை ? என்கிறீர்களா . ஆம் கவிதை வடித்தவர் கவியரசர் , இசை அமைத்தோர் மெல்லிசை மன்னர்கள் , காட்சியில் நாடோடிமன்னன் பட ஜோடிகள். எப்படி பார்த்தாலும் ராஜீய உறவுகள் தோன்று வதனால்  இது அரச வகை டூயட் எனில் தவறாகாது என்றெண்ணுகிறேன். அது மட்டுமல்ல பாடலில் ஆங்காங்காங்கே சேரனுக்கு உறவா , செந்தமிழன் நிலவா என்ற வினாக்கள் வேறு. மேலும் எதுகை மோனை விளையாடல்களில் ராஜ கம்பீரம் சொல்லிலும் இசையிலும்  . ஆக ஒரே ROYAL PLAY இந்த பாடல் முழுவதிலும்

பேசுவது கிளியா  இல்லை பெண்ணரசி மொழியா

பேசுவது கிளியா  இல்லை பெண்ணரசி மொழியா

கோயில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா ஹோய்

[பெண்ணரசி என்று அரசபீடம் பெண்ணுக்கு]

பல்லவி

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா

சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய் 

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை

கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை

கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா

பல்லவி

வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா

வில்லேந்தும் காவலன்தானா வேல்விழியாள் காதலன்தானா

சொல்லாமல் சொல்லும் மொழியில் கோட்டை கட்டும் பாவலன்தானா

பல்லவி

மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா உள்ளம்

வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா     ஹோய்

செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா

செந்தூரம் கொஞ்சும் முகத்தில் செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா

பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா

சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா

கோயில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா ஹோய்

ஹோய் ஹோய் ஹோய்

பாடலின் உள்ளார்ந்த குதூகலம் சொல்லில் தவவழ்வது தெரிகிறது எனினும் அதை வெகுவாக உயர்த்திய உத்திகள் ஏராளம் இப்பாடலில் .

இந்த மன ஓட்டத்தை இசை பேசுகிறது

பாடலின் துவக்கத்தில் வரும் "ஹோய்" அசல் எம் எஸ் வி முத்திரை . ஆம் காதல் பாடல்களில் "ஹோய் ' என்ற ஒலி யை குதூகலத்தை குறிக்கும் மன ஒலியாக செதுக்கியவர் எம் எஸ் வி ஒருவரே. வேறெந்த இசை அமைப்பிலும் இந்த உத்தியை காண இயலாது. இந்த 'ஹோய்' சரியாக செதுக்கப்படாவிட்டால் பாடலை சிதைத்துவிடும். அது போன்ற உணர்வின் ஓசைகளை எம் எஸ் வி போல் கையாண்டவர் அநேகமாக வேறெவரும் இல்லை என்றே சொல்லலாம் 

சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ஹோய் ஹோய் ஹோய் ஹோய்  என்று எவ்வளவு குதூகலம் ?

கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா இல்லை

கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா

சொல்லாமல் சொல்லும் மொழியில்

கோட்டை கட்டும் பாவலன்தானா

செந்தூரம் கொஞ்சும் முகத்தில்

செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா

இந்த சாய்வெழுத்து பகுதிகளில்  வரும் சொற்கள் பிரித்துப்பாடப்பட்டு பாடலில் ஒரு உணர்வு மேலோங்கும் குதூகலகம் தோன்றக்காணலாம் அதே போல ஒவ்வொரு ஹோய் ஹோய் பகுதியும் வெவ்வேறு விதமாக பாடப்பெற்று சொல் இல்லாமலே சுவை கூட்டும் நளினம் அரங்கேறி உள்ளது  இப்பாடலில் மேற்கத்திய வடிவமைப்பின் அடையாளங்கள் அக்கார்டியன், ஸ்ட்ரிங்ஸ் எனப்படும் கிட்டார் மாண்டொலின் மற்றும் காங்கோ , பாங்கோ மற்றும் டபிள் பேஸ் எல்லாம் வெகு நேர்த்தியாக இணைந்த ஒரு மெல் இசை இப்பாடலின் அடையாளம் ஆரம்பத்தில் ஒலித்த போங்கோ பின்னர் அடங்கி ஒலிக்க பாடலை சுமந்தது குரல்களின் திறனும்  காட்சியில் கலைஞர்களின் முக பாவமும் மற்றும் ஹோய் என்ற ஈர்ப்பு ஒலி யும் தான் . .   அந்நாட்களில்  திரை இசை வேறோர் பரிமாணம் காட்டத்துவங்கிய நிலையில் விஸ்வநாதன் -ராமமூர்த்தி பாடல்களில் ஒரு விசேஷ கவனம் செலுத்தி , தமிழ் சொற்கள் சிதையாமல் பாடவைப்பது, கருவிகள் புதிய ஓசை தர ஒவ்வொரு பாடலும் ஒரு வசீகரம்என்ற பெயர்  பெற வைத்தனர். இதைத்தான் எம் எஸ் வி பழமை மாறாத புதுமை , mortal men ,immortal songs [இறக்கும் மனிதர்கள் இறவா ப்பாடல்கள்] என்று சொல்வார். இப்பாடலுக்கு இன்றைய வயது சுமார் 64 -பாடலின் இனிமை துடிப்பு குதூகலம் எதுவும் பொலிவிழக்காமல் ஊஞ்சலாடுவதை என்ன சொல்ல?          

பாடலுக்கு இணைப்பு இதோ

  63 https://www.youtube.com/watch?v=2bnsOiS57zI  pesuvadhu kiliya kdvr tms ps  PANATHOTTAM 1963]

https://www.youtube.com/watch?v=bq7nsNE3okg

இப்பாடலின் எண்ணற்ற சிறப்புகளை சுபஸ்ரீ விளக்க அவர்களின் குழுவினர் வழங்கியுள்ள பாடல் இதோ

Quarantine from Reality | Pesuvathu Kiliya | Panathottam | Episode 231 - YouTube

LET US SEE -2

LET US SEE -2                                            எங்கே பார்ப்போம்-2   மனைவி அமைவதெல்லாம் [ மன்மத லீலை -1976] கண்ணதாசன் எம் ...