Thursday, August 31, 2023

CINE DIRECTION/ DIRECTOR-5

 CINE DIRECTION/ DIRECTOR-5

திரை  இயக்கம் / இயக்குனர்-5

இயக்குனர் இன்னும் சிலரின் பங்களிப்பை ஏற்றுத்தான் பரிமளிக்க முடியும். அவர்களில் தலையாய இருவர் நடன இயக்குனர் [CHOREOGRAPHER], நிழற்படப்பதிவாளர் [STILL PHOTOGRAPHER ] .இவர்கள் கிட்டத்தட்ட பாடல்காட்சிகளில் படக்குழுவினருடனேயே தொடர்ந்து இயங்குவர். அதிலும்  நிழற்படப்பதிவாளர் படப்பிடிப்பு தளங்களில் [CINEMATOGRAPHER] ஒளிப்பதிவாளருக்கு அருகில் நின்று நிழற்படங்களை சுட்டுத்தள்ளுவார்.

நடன இயக்குனர் FIELD க்கு வெளியே [அதாவது படப்பிடிப்பு காமெராவின் கண்ணில் /பார்வையில் படாமல்] உதவியாளர்களுடன் இருப்பார்.

அது ஏனெனில் பாதி கலைஞர்ளுக்கு நடனம் வேப்பங்காய் . ஆனால் படத்தில் நடித்து பொருள் குவிக்க ண்டும் எல்லா சமரசங்களையும் ஏற்று சாமரம் வீசி கதாநாயகி ஆனபின் இனி டைரக்டர் தான் சமரசம் செய்து கொள்ள [மற்றும் ரசிகர்களை கொல்ல ] வேண்டும். எனவே நாயகியின் நடன அசைவுகளை field [காமெராவின் எல்லை]க்கு வெளியே நடன இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர்கள் செய்யசெய்ய  அதைப்பார்த்து நாயகி அபிநயிப்பார்.ஆகா நாட்டிய தாரகை , ஊட்டியின் அழகி உல்லாசக்கிளி ஜிலுஜிலு ஸ்ரீ யின் நடனம் கொள்ளை அழகு என்று விமரிசனம் தூள் பறக்கும் [அங்கே நடனக்குழுவினர் குமுறிகொண்டிருப்பார்கள் -"களுதைக்கு ஆடவே தெரியாது  என்று]

யார் எப்படிப்போனால் என்ன சுட்டுத்தள்ளு   என்று கருமமே கண்ணாக ஸ்டில் எடுப்பார் still photographer . இவர் சினிமாட்டோகிராபரின் கோணத்திலேயே still எனும்  அசையாப்படங்களை எடுப்பார். அப்போதுதான் விளம்பரங்களில் , படக்காட்சிபோலவே படங்களை வெளியிட்டு மக்களைக்கவர முடியும். திரை அரங்குகளில் சிலர் முண்டி அடித்து க்கொண்டு ஓட , சிலர் லாபி பகுதியில் ஸ்டில்ஸ் பார்த்து ,            இங்க பார் ஜிலு ஜிலு அங்கபார் கொழுகொழு என்று அலை மோதி சுய விளக்கங்களை அள்ளிவீச அதை நம்பிக்கொண்டு என்று சிலர் அலைய, படம் லாஸ் தேன் என்று வரவு   செலவு பேசித்திரிவதைக்காணலாம் . இதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல ;தேவைப்பட்டால் அடி தடி யிலும் இறங்குவார்கள்.

இது ஒரு புறம் இருக்க படப்பிடிப்பில் இயக்குனர் என்ன செய்வார் என்பதை அறிய முயலுவோம்

ஒவ்வொரு காட்சியையும் முறையாகப்படம் எடுக்கவும் , குழப்பமில்லாமல் விரைந்து செயல் பாடவும் உதவுவது                                                                 திரைக்கதையே  . எனவே திரைக்கதை தொகுப்பு , இயக்குனரிடம் இருக்கும் ; ஒரு சிலர் அதை உதவி இயக்குனர் பொறுப்பில் கொடுத்துவைப்பர் .எப்படியாயினும் படப்பிடிப்பு திரைக்கதையின் அமைப்பிலேயே நகர்வது எளிதாக இருக்கும் .  தலைமை ஒளிப்பதிவாளர் , லைட்டிங் எனப்படும் ஒளி அமைப்புக்கு , கதாபாத்திரங்களின் நகர்வுகளுக்கு ஏற்ப  செயல் பட திரைக்கதையை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வார் , அதாவது                    அடுத்த 3 ஷாட்  எவ்வாறு அமையவேண்டும் என்பதை முதல் முதலில் உள்வாங்கிக்கொள்பவர் தலைமை மற்றும் செயல் ஒளிப்பதிவாளர் [operative camera man]. பெரும்பாலும்  தலைமை +செயல் ஒளிப்பதிவாளர் இருவரும் தொழில் ரீதியாக இணக்க மானவர்கள் . என்ன லென்ஸ் , field view , perspective எனும் சரியான கோணம் அனை த்தையும் செயல் ஒளிப்பதிவாளர் [operative camera man] துல்லியமாக செய்துவிடுவார். சில விசேஷ வகை கோணங்கள்/ ஒளி அமைப்புகள் இவற்றை தலைமை -செய்து பின்னர் படப்பிடிப்பை தொடர ச்சொல்வார்.இது அனைத்தையும்  இயக்குனர், தலைமையுடன் முன்பே   தீர விவாதி த்திருப்பார் . களத்தில் அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படியே ஏதேனும் தேவைப்பட்டால் , குறிப்பால் உணர்த்துவார்கள் ;எல்லாம் பயங்கர கில்லாடிகள்.

ஒவ்வொரு நடிகை நடிகருக்கும் உதவி இயக்குனர்கள் தனித்தனியே வசன பயிற்சி உச்சரிப்பு எல்லாம் சொல்லிக்கொடுத்து , அழைத்துவருவர்..

தயாராக படத்தின் பெயர் சீன்  எண் , ஷாட் எண் எல்லாம் உரக்க சொல்லி கிளாப் அடிக்க   10-20 வினாடிகள் முன் காமெரா ஓடத்துவங்கும்.  டைரக்டர் "ஆக்ஷன்" என்பார்.  உடனே நடிப்பு /நடனம்/ வசனம்/ சிரிப்பு /விசும்பல் எதுவோ ஒன்று துவங்கி பொருத்தமான ஏற்ற இறக்கங்களுடன் நடிக்க துவங்குவர். 2 உதவி இயக்குனர்கள் முகபாவங்களை கூர்ந்து கவனிப்பர் ,    ஒருவர் வசனம் பேசுவதை கூர்ந்து சரிபார்த்துக்கொண்டே வர, யாராவது சொதப்ப,  கட் என்று அலறுவார் இயக்குனர். உடனே காமெரா நிறுத்தப்படும். இயக்குனர் ஓடிச்சென்று என்ன குறை என்பதை விளக்கி , சில சமயம் தானே நடித்துக்காட்டுவார். உடனே டச் அப் [பவுடர் பூச்சு] சரி செய்யப்பட்டு மீண்டும் தொடங்கும். இப்படியே எல்லா காட்சிகளும்  பதிவிடப்பட்டு  படம் ஷுட்டிங் நிறைவடையும் . அவ்வளவு தானா என்றால் இல்லை. படக்குழு ஸ்டூடியோ வை விட்டு வெளியேறும். முக்கிய தொழில் நுட்ப கலைஞர்கள் அடுத்த கட்டப்பணிகளை நிறைவேற்றத்துவங்குவர். 

வாடகைக்கு வாங்கி வந்த காமெரா , வாடகையுடன் உரிய றுவனத்திற்கு திருப்பித்தரப்படும். பிலிம் சுருள்கள் பிராசஸிங் lab க்கு அனுப்பப்படும்.. முக்கிய ஒளிப்பதிவாளர் என்ன வகை ஒளிப்பதிவில் படம் பிடித்திருக்கிறார்  image density எவ்வளவு வரும் வகையில் process செய்யப்படவேண்டும் என்பதை குறிப்பு எழுதி அனுப்புவார்.[இதை gamma value என்பர் ] பின்னர் இந்த காமாவை விளக்குகிறேன். பிராச ஸ் முடிந்து வந்ததும் எடிட்டிங் என்னும் பட த்தொகுப்பு துவங்கும்.

வளரும்

அன்பன் ராமன்

 

Wednesday, August 30, 2023

CINE MUSIC –V DECORATIVE STRATEGIES

 CINE MUSIC –V    DECORATIVE STRATEGIES

திரை இசை - 5   அலங்கார உத்திகள்

திரைப்பட பாடல்கள் முன்னர் நாம் அறிந்திராத சொல்லமைப்புகளுடன் காட்சிக்கேற்ற உணர்வுகளை சுமந்து வருவன . எனவே இசை அமைப்பாளனின் பங்களிப்பு அபரிமிதமானது. நம்மை ஒவ்வொரு பாடலையும் கேட்கத்தூண்டும் வகையில் பாடலை ரசிகனின் காதுகளில் ரீங்கரிக்கச்செய்ய வேண்டும் அதுவும் படத்துக்குப் படம் , பாடலுக்குப்பாடல் இந்த நிலைப்பாடே நிரந்தரம் என்பதை யோசித்தால் இசை அமைப்பாளர் மீது வைக்கப்படும் சுமை எவ்வளவு கொடூரமானது என்பது விளங்கும். அதனால் தான் ஒவ்வொரு இசை அமைப்பாளரும் ஏதாவது ஒரு "அக்மார்க்" முத்திரையால் இது அவரது பாடல் என அடையாளப்படுத்திவிடுகிறார். ஆனால் இந்த அக்மார்க் வித்தையெல்லாம் ஒருவர் புகழ் எய்திய பின்னர் பயன்படும். ஆனால் துவக்கத்தில் ஒவ்வொரு இசை அமைப்பாளரும் தன்னை வேரூன்றிக்கொண்டு தழைக்க படாத பாடு பட வேண்டியிருக்கும் .

இரண்டாவதாக,  கால ஒட்டத்தில், இசைக்கருவிகள், ஒலிக்கோர்வைகள் அவ்வப்போது வெவ் வேறு  அவதாரம் தரித்தால் தான் தொடர்ந்து திரை இசை கேட்பவரை வசீகரிக்கும் . இசைமாற்றம் அவ்வப்போது ஒலிக்கும் பழைய பாடல்களில் இருந்த கட்டமைப்பில் பின்னர் நுழைந்து விட்ட மாற்றங்கள் இசையின் metamorphosis என்னும் உருமாற்றத்தை நினைவூட்டுகிறது. ஒரு அடிப்படை வித்தியாசம் பழைய பாடல்கள் குரலை வெளிப்படுத்த , பின்னர் வந்தவை ஒலியையும் , கருவிகளில் பிசாசுத்தனம் அதிகரித்திருப்பதையும் வெளிச்சம் போடுவதையும் நன்றாக உணரலாம் .

எப்படியானாலும் பாடல் கவனத்தை ஈர்க்க வேண்டும் ; அதை நிறுவுவதே இசை அமைப்பாளாரின் திறமை ;ஆகவே பல உத்திகளை கைக்கொள்வார் இசையமைப்பாளர். அவற்றுள் எளிய உத்தி ரிதம் என்னும் தாள அதிர்வில் தோன்றும் வசீகரத்துள்ளல் . கேட்பவரை தாளமிடத்தூண்டும் beat என்னும் நரம்பை முறுக்கேற்றும் உத்தி. இந்தவகைப்பாடல்கள் அவை வந்தவுடன் பெரும் வரவேற்பைப்பெறும் . உதாரணம்

 

1 யாரடீ நீ மோஹினி – ‘உத்தமபுத்திரன் - ஜி. ராமநாதன்

2 மாமா மாமா மாமா – ‘குமுதம் - கே .வி. மகாதேவன்

3. அடி  என்னடி ராக்கம்மா – ‘பட்டிக்காடா பட்டணமா - எம். எஸ். விஸ்வநாதன்

4 கண்ணாடி மேனியடி –‘கொடிமலர் -எம் எஸ் விஸ்வநாதன்

5. அம்மனோ சாமியோ, அத்தையோ , மாமியோ – ‘நான் - டி . கே ராமமூர்த்தி

6 மச்சானப்பாத்தீங்களா – ‘அன்னக்கிளி - இளையராஜா

ஆனால் பாடலின் சொற்கோர்வை மற்றும் காட்சியின் தன்மை இவை பொருந்தி வராமல் , தாளத்தை வைத்துக்கொண்டு பாடலை கரை சேர்க்க முடியாது. ஆரம்ப நாட்களில் தூக்கலான லயம் [தாளம்] கொண்ட பாடல்கள்                            டப்பாங்குத்து ப்பாடல்கள் என்பதாக விமரிசர்கள் குரல் எழுப்பி வந்தனர் . இப்போது பெரும்பாலும் டப்பாங்குத்து , பிளவுபட்டு டப்பாவும் குத்தும் என்று ஆகி  குத்துப்பாடல்கள் , ஏனைய டப்பாப்பாடல்கள் என்றே ஆகிவிட்டதை என்ன சொல்ல? இப்போது எந்த விமரிசகனும் வாயை என்ன , எதையும் திறப்பதில்லை

பிற வகை பாடல் கட்டமைப்புகள் யாவை என்று பார்ப்போம் . நான் இசை அறிவு இல்லாத பாமரக்கூட்டத்தில் ஒருவன் . எனவே கலைச்சொற்கள் மற்றும் ராக நாமதேயங்கள் குறித்துப்பேசும் தகுதியும் தெம்பும் எனக்கில்லை. பாடல்களை உன்னிப்பாக கவனித்து அவற்றின் தூக்கலான தன்மைகள் கொண்டு எழுத முற்படுகிறேன். பிழை இருப்பின் பொருத்தருளவும்

ராக அமைப்பில் பொருத்தப்பட்ட பாடல்கள் எளிதில் வெற்றி பெறுவதையும் காணலாம்

அவற்றில் சில

முல்லை மலர் மேலே [அம்பிகாபதி] ஜி ராமநாதன்

ஏரிக்கரையின்  மேலே [முதலாளி ] கே வி மகாதேவன்

சிங்கார வேலனே தேவா [கொஞ்சும்  சலங்கை ]எஸ் எம் சுப்பையா நாயுடு

மன்னவன் வந்தானடி [திருவருட்செல்வர்] கே வி மஹாதேவன்

ஒருநாள் போதுமா [திருவிளையாடல் ] கே வி மஹாதேவன்

ஆடாத மனமும் உண்டோ [ மன்னாதி மன்னன் ] விஸ்வநாதன் -ராமமூர்த்தி

தங்கரதம் வந்தது [கலைக்கோயில் ] விஸ்வநாதன்- ராமமூர்த்தி                                                                                  

மனமே முருகனின் மயில் வாகனம் [மோட்டார் சுந்தரம் பிள்ளை ] எம் எஸ் விஸ்வநாதன்

முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை ] எம் எஸ் விஸ்வநாதன்

மாதவிப்பொன் மயிலாள் [இருமலர்கள் ] விஸ்வநாதன்

7 ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் [அதிசய ராகம்] எம் எஸ் விஸ்வநாதன்

மல்லிகை என் மன்னன் மயங்கும் [தீர்க்க சுமங்கலி] எம் எஸ் விஸ்வநாதன்

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே [நூல் வேலி ] எம் எஸ் விஸ்வநாதன்

என்று ஏராளமான பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம் -அதுவும் பழைய திரைப்படங்களில் அள்ளக்குறையாத செல்வ ஊற்றாக பொங்கி பிரவகிக்கும் ராகக்குவியல்கள் ஏராளம்.

அதிலிருந்து அமைதியாக மெல்லிசை என்ற புதிய இசை வடிவத்தை வெளியே எடுத்தவர்கள் விஸ்வநாதனும் -ராமமூர்த்தி யு ம் என்பதை அறிவோம்.

அப்போது ஏராளமான உத்திகளை தமித்திரையில் கம்பீரமாக ;லவவிட்டவர்   எம் எஸ் விஸ்வநாதன் என்பதை செம்மையாக நிறுவிட பல சான்றுகள் உளபார்ப்போம்

வளரும்

அன்பன் ராமன்  

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...