Thursday, February 22, 2024

S. JANAKI [POSTING NO. 900]

S. JANAKI

எஸ் ஜானகி                                       POSTING NO.   900

ஆந்திர மாநிலத்தவர் . தென் இந்திய மொழிகள் அனைத்திலும் குரல் பதித்தவர், தனித்தும், டூயட் வகை ப்பாடல்கள் பலவற்றிலும் சிறப்பாகப்பாடும் வல்லமை படைத்தவர். மேலும் குழந்தை குரலிலும் பாடக்கூடியவர். சில ஆண்டுகளாக பாடுவதை நிறுத்திவிட்டார். திரை கானத்தில் ஆழ்ந்த அனுபவஸ்தர் . எண்ணற்ற பாடல்கள் அவரின் புகழுக்கு  கட்டியம் கூறும் வகையின.. . சரி உலகின் திறமைசாலிகள் பல காலம் நிழலில் இருந்து மிக தாமதமாக எலுமிச்சை ஒளிக்கு [LIME LIGHT ]வருவது ஏன் --புரியாத புதிர்.. இது வேறு சிலருக்கு 'சுய தம்பட்டம் வாசிக்க பெரிய வாய்ப்பாகப் போய்விடுகிறது..  இருக்கட்டும் அதை  பிறகு பார்ப்போம்

1 'போக்கிரியோ சாக்கிறியோ'-அடுத்தவீட்டுப்பெண் -பாடல் ராமையா தாஸ் --- இசை ஆதிநாராயண ராவ் , குரல் எஸ் ஜானகி.

இசை அமைப்பாளர் திரு ஆதி நாராயண ராவ் நடிகை அஞ்சலி தேவியின் கணவர்

எந்த காலகட்டத்தில் ஜப்பானிய வகை இசையில் பாடி இருக்கிறார். ஜானகி.

அன்றைய அவரது குரல் மிக எளிதாக பொருந்துவது பாடலுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.. கேட்டு மகிழ 

https://www.youtube.com/watch?v=NUZuedMq3Ow&list=PLylD6xtQiKW6_mZ_thzbw4he5SEnKIDqk&index=8 POKKIRIYO

2 'சிங்காரவேலனே தேவா' 'கொஞ்சும் சலங்கை ' [1961] பாடல் கு. மா பாலசுப்பிரமணியம், இசை எஸ் எம் சுப்பையா நாயுடு, குரல் எஸ் ஜானகி , நாதஸ்வரம் =காருகுறிச்சி அருணாச்சலம் வண்ணம் டெக்னி கலர் .

 கால காலத்துக்கும் வியப்பின் விளிம்பிலேயே நம்மை நிறுத்தும் பாடல். 1961 இல் ட்ராக் வசதி இல்லாத நாளில், குரலும், நாதஸ்வரமும் தனித்தனியே பதிவிட்டப்பட்டு பின்னர் மிக நேர்த்தியாக இரண்டும் இணைக்கப்பட்டு ஏதோ ஒரே சமயத்தில் இரண்டு கலைஞர்களும் அருகில் இருந்து பாடியது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் பாடல்.

அதிலும் காருகுறிச்சியார் தனது பங்கை வாசித்தபின் , ஜானகி வந்து பிசகாமல் பாடி பதிவாகியுள்ள விந்தை. சுப்பையா நாயுடு எவ்வளவு நுணுக்கமாக மேற்பார்வை செய்திருப்பார் -சற்று யோசிப்போம். இது போல் வாய்ப்பு ஜானகி க்கு கிடைத்ததை பிறர் நினைக்காமலா  இருப்பார்கள்?. கேட்டு மகிழ

https://www.google.com/search?q=singara+velane+deva+song+video+tamil+download&newwindow=1&sca_esv=85d58da520b30782&sxsrf=ACQVn09YenBQS2tS7zXwBVPb3rJWm-xw2Q%3A1708646389927 singara velane deva 1961 konjum salangai

3 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி [1962] -பாசம் - பாடல் கண்ணதாசன் -  இசை வி-ரா, குரல் ஜானகி.

ஒரு தார் சாலையில் பயணிக்கும் இரட்டை மாட்டு வண்டி அதற்கெ ன வடிவமைத்த பாடல் . அனாயாசமாகப்பாடி வெற்றி ஈட்டிய பாடல் . கேட்டு மகிழ

https://www.google.com/search?q=sjal+jal+jal+ennum+salangai+oli+video+song+download&newwindow=1&sca_esv=87825aabcf9e96cb&cs=1&biw=1600&bih=773&sxsrf=ACQVn0_Z65zIJUqTwtbmhpMkxK pasam 1962 kd v r

4 பொன்னென்பேன் -போலீஸ்காரன் மகள் -1962 கண்ணதாசன் -வி, ரா, குரல்=பிபி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி.                                    ஒரு மென்மையான ஆனால் மேன்மையான டூயட் . மிக மிக நளினம் சொல், குரல் இசை , பயணம் அனைத்திலும் அன்பு தவழும் பாடல் கேட்டு மகிழ -

https://www.google.com/search?q=ponnenben+siru+poovenben+video+song+download&newwindow=1&sca_esv=dfe26d33caab7b7d&sxsrf=ACQVn09gT3tk8E9jH6KCipnZ_akm3czYeA%3A1708647119736& ponnenben 1963 police kaaran magal

https://www.youtube.com/watch?v=bRiMRm4kpsw PON ENBEN

5"நினைத்தால் போதும்" -நெஞ்சிருக்கும் வரை 1967,கண்ணதாசன், விஸ்வாநாதன், குரல் எஸ் ஜானகி

நாட்டியப்பாடல் எளிதல் பாடிவிட்டு முடியாத வேகமும், சங்கதிகளும் ஏற்ற இறக்கங்கங்களும், மனப்போராட்டம் வெளிப்படும் வகை இசையும் தாங்கி வந்த காவியப்பாடல் எம் எஸ் வி யின் கற்பனையில் உதித்த நளினம் இது. கேட்டு மகிழ  

https://www.google.com/search?q=ninaiththaal+podhum+paaduven+video+song+download&newwindow=1&sca_esv=dfe26d33caab7b7d&cs=1&biw=1600&bih=773&sxsrf=ACQVn0-zqCbia9ki_iwKlq7xM9j ninaithaal podhum paduven 1967

6 'பௌர்ணமி நிலவில்' [கன்னிப்பெண் -1969 ] வாலி , விஸ்வநாதன் குரல்-எஸ் பி பி , எஸ் ஜானகி. மின்னல் வேகத்தில் எம் எஸ் வி மெட்டமைத்த 5, 6 வகைகளில் எதை விடுவது என்று அனைவரும் குழம்பி இறுதியில் இடம் பிடித்த பாடல் அல்லவா ?சோடை போகுமா -ஒரு நாளும் போகாது.

இந்தப்பாடல் ஒரு இளமைத்துள்ளல். இன்றைய சூரியாவை அன்றைய சிவகுமாரில் காணலாம். நிர்மலா சிறப்பாக ஈடு கொடுத்து நடித்திருப்பதும், பாடலின் வேகத்துக்கும் தாள ஜாலத்துக்கும் பாடகர்கள் வெகு நேர்த்தியாக பங்களித்துள்ளது -இன்றும் கூட வெகு சிலரால் மட்டுமே சத்தியம் . ஒரு இளம் காதலர் டூயட்டுக்கு இலக்கணம் சொல்லும் பாடல் . கேட்டு மகிழ

https://www.dailymotion.com/video/x4od9o5 pournami nilavil vaali msv, spb sj

https://www.google.com/search?q=qfr+pournam+i+nilavil+video+song+kannippen&oq=QFR+POURNAM+I+NILAVIL+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigA   QFR

திரை உலகம் கண் மூடித்தனமாக கோட்டை விட்ட ஏதாவது ஒன்றைச்சொல், என்று கேட்டால் நான் சொல்வேன் கண்ணதாசன்- விஸ்வநாதன் இனைந்து பாடல் உருவாக்கும் நேர்த்தியை காட்சியாகப்பதிவு செய்யாமல் ஒரு யுகத்தில் இடம் பெற்ற அபூர்வத்தை இழந்து நிற்பதுதான்.

குறைந்த பட்சம் பிந்தைய தலைமுறையாவது 'நாம் ஒன்றும்  பெரிய வித்தகர்கள் அல்ல என்ற உண்மையையாவது உணர்ந்திருக்கும்; அதுபோன்ற நிகழ்வுகள், கம்போசிங் , டிஸ்கஷன் , சந்தத்துக்கா சொந்தத்துக்கா , செட்டியாரே, டேய் சும்மாஇருடா போன்ற வாத மோதல்கள் இப்போது பார்த்தால் எவ்வளவு படிப்பினையாக இருந்திருக்கும். பாடல் ஆக்கம் மூடு மந்திரம் அல்ல என்பது செம்மையாக நிறுவப்பட்டிருக்கும். ஒரு யுக பாவத்தை செய்துவிட்டது தமிழ் திரை உலகம்.

 ஒரு சிறிய பிராயச்சித்தமாக வந்த பாடல்.

7 சிப்பி இருக்குது 'வறுமையின் நிறம் சிவப்பு' கண்ணதாசன், விஸ்வநாதன், எஸ்பி பி , எஸ் ஜானகி . பெண்பாத்திரம் எம் எஸ் வி யையும், ஆண் பாத்திரம் கண்ணதாசனையும்  நினைவூட்டும் அமைப்பில். மிகவும் பேசப்பட்ட பாடல்.

இணைப்பிற்கு

https://www.google.com/search?q=sipi+irukkudhu+muthu+irukudhu+video+song&oq=sipi+irukkudhu+muthu+irukudhu+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGA            vis u  spb sj

இவ்வளவு பாடல் வகைகளை என்றோ தமிழ் திரை ஜானகியின் வாயிலாக பதிவிட்டுள்ளது. சிலர் ஏதோ தாங்கள் தான் ஜானகியை கண்டெடுத்து போல் உளறுவது , ஆத்திரத்தை கிளறுவது மட்டும் அல்ல இது என்ன பிக்காரி வேலை என்று கேட்கத்தோன்றுகிறது.

நன்றி

அன்பன் கே. ராமன்


3 comments:

  1. காருகுறிச்சி அருணாசலத்தை ஜானகி பார்த்ததில்லை ;ஜானகியை அருணாசலம் பார்த்ததில்லை, ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்து சிங்கார வேலனே பாட்டைப்பாடியிருக்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அருமையான பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  3. https://youtu.be/5NFHfM7lvE0?si=NAwJO8nd6TGzBiSS

    Another lovely song by Janaki. மலரோடு விளையாடும் தென்ரலே வாராய்.....

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...