A M RAJAH
ஏ
எம் ராஜா
Chittor , AP 01-07-1929
- 08-04-1989 at Valliyoor Nellai
Dt].
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியினர். இளம் வயது முதல் சென்னையில் இருந்தவர். மென்மையான குரலும் வேறு எவர்க்கும் கி
ட்டாத குரல் வசீகரம் , பலருக்கும் [சிவாஜி, ஜெமினி, எம் ஜி ஆர் எல்லா நாயகர்களுக்கு பாடி யாவர் , மேலும் நல்ல இசை ஞானம் கொண்டவர் . இயக்குனர் ஸ்ரீதரால் இசை அமைப்பாளராக உயர்ச்சி பெற்றவர். பின்னாளில் அவருடனே கருத்து மோதல் கொண்டு , விரைவிலேயே தனது பிடிவாதத்தால் எட்டிய உயரங்களில் இருந்து சரிந்தார். எனினும் அவர் குரலின் வசீகரம் இறைவன் தந்த வரம். அவரின் பாடல்களை காண்போம்
சிற்பி செதுக்காத [ எதிர் பாராதது -1954] கே
பி காமாட்சி சுந்தரம் , இசை
சி என் பாண்டுரங்கன் , குரல் ஏ எம் ராஜா
மிகவும் வசீகரப்பாடல் பத்மினியின் நடன அசைவுகளை ரசிக்கும் நாயகன் ஜெமினி கணேசனுக்கு நேர்த்தியாகப்பொருந்திய குரல், என்று கேட்டாலும் நின்று கேட்கச்சொல்லும் குரல் வசீகரம் பாடலை ரசிக்க இணைப்பு இதோ
Sirpi chedhukkaadha –edhir
paaraathadhu 1954 KP KAMAKSHI SUNDARAM MUSIC c n p, AMR
அருகில் வந்தாள் [களத்தூர் கண்ணம்மா ] கண்ணதாசன் , இசை
ஆர் சுதர்சனம் , ஏ எம் ராஜா
மிகவும் உணர்ச்சிக ரமான சொற்களும், அதற்கேற்ற இசையும் இணைந்து வெற்றிகொண்ட பாடல்.நீண்டா நாட்கள் வானொலியில் ஆதிக்கம் செலுத்திய பாடல் . கேட்டு மகிழ இணைப்பு இதோ
Arugil vasndhaal kalathur
kannamma K D R Sudharsanam –AMR
கலையே என் வாழ்க்கையின் [மீண்ட சொர்கம் ] சலபதி ராவ், குரல் ஏ எம் ராஜா , சுசீலா
வெகு ரம்யமான பாடல் குரல், சொல் இசை
அனைத்திலும் கலையின் கம்பீர நடனம் , ராஜாவின் குரல் மேலும் வளம் சேர்க்க, சுசீலாவின் ஹம்மிங் அழகூட்ட . அந்நாளில் பலரை ஆட்கொண்ட அற்புதம் . பாடல்கள் அனைத்திலும் கமெராவின் பங்களிப்பு சிறப்பாக அமைந்து ஒரு புதிய பரிமாணம் விளைந்தது . பாடலுக்கு இணைப்பு இதோ
KALAIYE EN VAAZHKKAIYIN –MEENDA
SORGAM 1960 – AMR PS
ஆசையினாலே மனம் [ கல்யாண பரிசு 1959] பட்டுக்கோட்டை , இசை : ஏ எம் ராஜா , குரல் ஏ எம் ராஜா , சுசீலா
இளம்காதலர் மன
ஓட்டம் ,ஊ ட்டம் , ஆட்டம் , நோட்டம் எல்லாம் பட்டுக்கோட்டை சொல்லில் மிளிர, இசையில் ஏ
எம் ராஜா வின் பங்களிப்பு ஆரம்பம். சீரான நடையில் பாடல் அவ்வப்போது சாரி, ஓ
ஐ ஸீ போன்ற ஒற்றை சொற்கள் பொருத்தமாய் ஒலித்து கிறக்கம் தந்த டூயட் . கேட்டு மகிழ இணைப்பு இதோ
AASAIYINAALE MANAM KLTAANA PARISU
1959 PATTUKKOTTAI, AM RAAJAH, PS
கொடுத்துப்பார் பார் [விடி வெள்ளி] பட்டுக்கோட்டை, இசை ஏ எம் ராஜா ,குரல் ஏ எம் ராஜா , பி சுசீலா , திருச்சி லோகநாதன்
பிக் னிக் வகை
கும்மாளப்பாடல், வெகு விறுவிறுப்பான பாடல் கம்பீர இசைக்கோர்வைகள், தாளம் கிளாப் என மிரட்டிய பாடல். கேட்க குதூகலம் தரும் வகை ப்பாடல். கண்டு மகிழ இணைப்பு இதோ
KODUTHTHU PAAR PAR [VODIVELLI
1960] Pattukkottai amr AMR PS T LOGANATHAN
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment