AM RAAJAH -2
ஏ
எம் ராஜா-2
எண்ணற்ற பாடல்களை வழங்கியுள்ள ஏ எம் ராஜா அவர்களின் மங்காப்புகழு க்கு அடித்தளம் அவரின் மென்மையான வசீகரக்குரலும் , பாடும் திறனும் எனில் ஐயமில்லை. அவருக்குப்பின் அது போன்ற குரல் அமையாமல் போனது ஒரு வருத்தமான நிலையே. ஆனால் திடீரென்று ஒரு இளைஞர் இப்போது பல மேடைகளிலும் அச்சு அசலாக
வையே கொண்டுவந்து நிறுத்துகிறார் . அவர் பெயரும் ராஜா தான். ஆனால் சி ராஜா . நெடிதுயர்ந்த உருவம் , குரலால் கேட்பவரை கட்டிவிடும் லாவகம் , மேலும் ஏ எம் ராஜாவின் பரிபூரண ரசிகர். ஆங்காங்கே அவரின் பாடல்களையும் இணைத்து தருகிறேன்.
முதலில் மிஸ்ஸியம்மா படத்தில் இருந்து இரு பாடல்கள்
பழக
தெரியவேணும் பாடல் : தஞ்சை ராமையா தாஸ் இசை எஸ் ராஜேஸ்வர ராவ் குரல் ஏ எம் ராஜா
வெகு நேர்த்தியான பாடல் , அறிவுரை சொல்வது போல் சாவித்ரிக்கு எரிச்சல் ஊட்டும் சொல்லாடல். ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலும் சாவித்ரி தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை அந்தநாளிலியே பதிவு செய்துல்களார் .எஸ் ராஜேஸ்வரராவ் அவர்களின் நேர்த்தியான இசை அமைப்பு அதுவும் அந்தக்காலத்திலேயே பியானோ இசை ஊடாடிய பாடல்ககில் கேட்டு மகிழ இணைப்பு
PAZHAGA THERIYA VENUM
MISIYAMMA-1956 , RAMIAH DAS RAJESWARA RAO
AMR
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் : தஞ்சை ராமையா தாஸ் இசை எஸ் ராஜேஸ்வர ராவ் குரல் ஏ எம் ராஜா
மற்றுமோர் வசீகரப்பாடல், பியானோ இசையுடன் , வெகு ரம்மியமான சொல், இசை, பாடல் நடனம் என பல்வேறு ஈர்ப்புகள் நிறைந்த பாடல் ; என்று கேட்டாலும் அலுக்காத சலிக்காத குரல், இசை மற்றும் காட்சி. இணைப்பு இதோ
BRINDHAVANAMUM AMR, PS [note bush shirt]
கண்மூடும் வேளையிலும் [மஹாதேவி -1957] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி
, ஏ எம் ராஜா ,பி சுசீலா
மிகவும் ரம்மியமான சொல் அமைப்பில் , தூங்கும் பெண்ணை எழுப்பி பாடப் படும் பாடல். குரல், இசை காட்சி அனைத்திலும் மிகுந்த கௌரவம்
, இசையிலும் அதே கம்பீரம் கேட்டு மகிழ இணைப்பு இதோ
Bing
Videos kanmoodum
\இதே பாடல் மேடை நிகழ்வில் இசைக்குழுவினருடன் சி ராஜா பா டக்காணலாம் கேட்டு மகிழ இணைப்பு
kan moodum velaiyilum
https://www.youtube.com/watch?v=96_ySA9rS2I
மேலும் வளரும்
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment