Friday, September 18, 2026

MSV’s APPROACH TO SONG COMPOSITION [ A sample]

MSV’s APPROACH  TO SONG COMPOSITION  [ A sample]

எம் எஸ் வி அவர்களின் இசை அணுகுமுறைகள்         [ஒருசான்று ]

இது வரை எம் எஸ் வி யின் இசையின் உள்ளார்ந்த நுணுக்கங்களையும் வெகு பொருத்தமான ஸ்வர அமைப்புகளையும் வைத்து இயல்பாக பாவத்தை முன்னிலைப்படுத்தும் அதீத சரஸ்வதி கடாக்ஷத்தையும் இரு விற்பன்னர்கள் விவாதிக்க கேட்டீர்கள். அந்த கருத்துகள் எல்லாமே எம் எஸ் வி அவர்களின் இசையின் வெற்றிக்கான பின்னணி என்பதை என் போன்ற பாமரனும் அறிவான்.

இதை நான் சொல்லித்தான் நமது blog விற்பன்னர்கள் அறிந்து கொள்ள வேண்டுமா என்ன ?

அவை அனைத்தையும் அறிவர் அதற்கு மேலும் அறிவர். என்ன --அவர்களுக்கு நேரம் ஒதுக்க வோ கேள்விகளுக்கு விடை சொல்லவோ அவகாசம் /ஆர்வம் இரண்டும் இல்லை. எனினும் பதிவுகளை வழங்கி வருகிறேன். போகட்டும்,

திருமதி பிரியா பார்த்தசாரதி அவர்களும் திரு முரளி அவர்களும் விளக்கிய கருத்துகளை அசை போட்ட பொழுது

மூன்று தெய்வங்கள் படத்தில் எம் எஸ் வி இசையில் கண்ணதாசனின் 'வசந்தத்தில் ஓர் நாள் ' பாடலின் இசைத்தட்டு வீடியோ கிடைத்தது. கவிஞர் மரபு சார்ந்த சொற்களை கையாள்வதில் வித்தகர்

வைதேஹி என்ற பெயரை  நான் பார்த்தவரை கண்ணதாசன் தான் அதிகம் கையாண்டவர் ; இதே பாடலில் அவர் இறுதியில் சீதையை வாழ்த்த வந்தாரோ என்று வைதேஹி யார் என்று சொல்லாமல் சொல்லும் நேர்த்தியை காணலாம்.

மெல்லிசை மன்னர் இப்பாடலில் எவ்வளவு மென்மையான ட்யூன் கொடுத்து அதை எளிதாக வெற்றிபெறச்செய்தார் என்பது கவனத்திற்குரிய ஒன்று. 300, 400 இசைக்கலைஞர்களை கட்டி ஆண்ட சேனாபதி திரு எம் எஸ் வி அவர்கள்.

ஆனால் இப்பாடல் முழுவதிலும் 4 கருவிகள் மங்கல ஒலி வழங்கும் குழல், தபலா,  நாதஸ்வரமும் தவிலும், தான்.

குரலோடு ஒலிக்கும் தாளக்கருவி தவில் மட்டுமே .அதையும் அடக்கி வாசிக்க வைத்துள்ளார் .இடை இசையாக  முற்றிலும் ஒலிப்பது நாதஸ்வரம்.

எவ்வளவு கவனமாக இசையைதொகுத்துள்ளார் என்பதோடு எவ்வளவு பொருத்தமாக பாடலைக்கட்டமைத்துள்ளனர் இந்த மூன்று தெய்வங்கள், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் பி சுசீலா அவர்கள்.

செய்வன திருந்தச்செய் அதையும் பொருந்தச்செய்   என்ற மரபில் வாழ்ந்தவர்கள் அவர்கள்.

திரு முரளி- திருமதி பிரியா பார்த்தசாரதி வீடியோ விற்கு  மேலும் ஒரு சான்று என்றெண்ணி இதை பதிவிட்டுள்ளேன். தவறெனில் மன்னிப்பீர் .இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=7z5UxZJKR6w vasanthaththil or naal                 

https://www.youtube.com/watch?v=uYr6uI824U8&t=149s QFR 188                 

 நன்றி  அன்பன்

3 comments:

  1. நல்ல பாடல்களை ரசிப்பதே எனது நோக்கம். நுணுக்கங்களைப்பற்றி னக்கு க்கவலை இல்லை

    ReplyDelete
    Replies
    1. நுணுக்கங்கள் பற்றி நீவிர் சொல்வது இது தான் . நுணுக்கங்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று சொல்ல ஒன்று நுணுக்கங்கள் அனைத்திலும் கரைகண்டவராக இருத்தல் வேண்டும் அல்லது நுணுக்கங்கள் பற்றிய கவனம் இல்லாத ஒருவராக இருத்தல் வேண்டும். எந்த குழப்பமும் புரிதலில் ஏற்படும் தடுமாற்றத்தினால் விளைவதே. கவலை இல்லாத உம்மால் எப்படி நல்ல பாடல் என்று உணர முடிகிறது? .

      Delete
  2. As you rightly said, Prof, this song is one of very many, which will prove how abundant was Saraswathi Kataksham on MSV !!!
    How he could give such a mesmerising number, just in a flash of a moment, has no answer. Amazing to enjoy how nicely and mildly blended Nadaswaram and davil in this melody. That is possible by the one and only MSV and none else in the universe. I used to sing song during Oonjal of all marriages of all relatives and friends.

    ReplyDelete

WILLIAM BLAKE -3

  WILLIAM BLAKE -3 Quotes -3 Another set of quotes from William Blake form the day’s blog. Curiously, these are a little longer than wha...