Sunday, April 6, 2025

AVOIDING MISTAKES-4

AVOIDING MISTAKES-4     

பிழை தவிர்த்தல் -4

பிழைகளுக்கு குறைவு இல்லை ஆனால் பிழை சொன்னால் ஏற்போர் இல்லை. மாறாக பொருளற்ற விளக்கம் தர எவரும் தயங்குவதில்லை. இது ஏன் நிகழ்கிறது என்று கவனமாகப்பார்த்தால் சில உண்மைகள் தெரிகின்றன.

1 தவறு என்று தெரியாமலே கற்பிக்கும் சில ஆசிரியர்கள் , அதை முற்றாக ஏற்கும் மாணாக்கர்கள்.

2 பல நாட்களாக தவறையே   பேசி / எழுதி வந்தவர் தனது நிலைப்பாடு பிழையானது என ஏற்க மறுக்கிறார்.

3 பலரும் ஒரே மாதிரி பிழையை வெளிப்படுத்துவதால், சுட்டிக்காட்டப்படும் 'திருத்தம்' அவருக்கு நம்பிக்கை தரவில்லை.

4 சரி வா பார்த்துவிடுவோம் என்று உரிய அகராதி யை நாடி உண்மை அறிய பலர் முயல்வதில்லை அது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை. டிக்ஷ்னரி, தெசாரஸ் போன்ற நம்பிக்கைக்குரிய தகவல் களஞ்சியங்கள் பற்றிய புரிதலே இல்லாமல் ஒரு பெரும் கூட்டம் பட்டதாரிகள் என்று உலவி வருவதை என்னென்று சொல்ல? இவ்வனைத்துக்கும் காரணம் verification என்னும் சரிபார்த்தல் செயலை பள்ளி நாட்களிலேயே பழகிக்கொள்ளாமல் உயர்கல்வி வரை வந்துவிட்டவர்களால், சரிபார்த்தல் மேற்கொள்ள நாட்டம் இல்லை.. இவை எல்லாம் வேரூன்ற வைத்த அவலம் ஒன்று உண்டென்றால், அது நோட்ஸ் என்னும் கறிக்குதவாத பொருள் எனில் மிகை அல்ல.

முன்னாட்களில் ஆசிரியர் வாய் வழி சொல்லாட , பயில்வோர் எழுதிக்கொள்வர். ஸ்பெல்லிங் போன்ற விவரங்களை டிக்ஷனரி கொண்டு சரி செய்து வந்தோம்; எனவே தவறாக எழுதாமல் -------------- இடம் விட்டு எழுதி பின்னர் முறையாக நிரப்பிக்கொள்வோம். இந்த நடை முறைகள் எதையும் அறியாமல், நோட்ஸ் படிக்கும் செயல்பாடு வேரூன்றிப்போய், முறையான நூல்களை நாடி பாடங்களைப்படிக்கிற குழந்தைகள் எது சரி, எது தவறு என்றுணராமலேயே /நுனிப்புல் மேய்வோராக வலம் வருகின்றனர்.

REGARDLESS என்று சொல் வழக்கில் உள்ளது. அது REGARD என்ற சொல்லுக்கு எதிர்மறை பொருள் தரும். அதையும் மீறி  IRREGARDLESS  என்று எழுதுகின்றனர் இது ஒரு இந்தியக்குழப்பம் , பின்னர் விரிவாக அலசுவோம்

REGARD என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் மாறுபட்ட பொருளில் இயங்குவது.

YOU SHOW REGARD எனில் நீ கவனம் /அன்பு செலுத்து என பொருள்படும்.

WITH REGARDS எனில் நிறைந்த அன்பு/ பாசத்துடன் என பொருள் படும்.

AS REGARDS  / WITH REGARD TO எனில் 'இது' சம்பந்தமாக அல்லது இது தொடர்பாக என்று ஒரு பீடிகையாக பொருள் தரும். சான்றாக, AS REGARDS MY VISIT TO  DELHI  [WITH REGARD TO or REGARDING   MY  DELHI VISIT,  ] , NO DECISION HAS BEEN TAKEN YET  எனும் வாக்கியம் தரும் பொருள்

எனது டெல்லி பயணம் குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறாக பிரிட்டிஷ் வகை ஆங்கில சொல்லாடலி ல்  REGARD என்பதும் REGARDS என்பதும் உணர்த்தும் பொருள் / PREPOSITION  வெவ்வேறு . ஆனால் அமெரிக்க ஆங்கில மரபில் REGARD என்பதும் REGARDS என்பதும் கிட்டத்தட்ட ஒன்று என்பது போல் பயன்படுவதைக்காணலாம்.

 நமது நாட்டு ஆங்கில செய்தி ஊடங்கங்கள் அமெரிக்க மரபு சொல்லாடல்/ பிரிட்டிஷ் வகை சொல்லாடல் இரண்டையும் கையாள்வதால் சற்று தெளிவின்மை தலை தூக்குவதை க்காணலாம் . -ம் . WITH REGARDS TO LANGUAGE BILL , NO ANNOUNCEMENT FROM PRESIDENT TILL  NOW என்று தலைப்பிடுகிறார்கள் . இது போல் போகிறபோக்கில் எழுதி/ பேசி, மொழியில் தெளிவின்மையை விதைக்கிறார்கள்.

சரி, சில சொல் அமைப்புகளை கூர்ந்து கவனிப்போம்

பிரிட்டிஷ் ஆங்கில மரபில்

AS REGARDS = WITH REGARD TO; அதாவது AS REGARDS TO என எழுதுவதோ, பேசுவதோ தவறு WITH REGARDS = அன்புடன் என்று உணர்த்துவது; WITH REGARD TO என்பது 'இது தொடர்பாக ' என பொருள் படும். இணைப்பு சொற்கள், சில இடங்களில் இரண்டும் பயன்படும் [WITH REGARD TO ] சில இடங்களில் ஏதேனும் ஒன்றே அமையும் [WITH  REGARDS ] 

இது போன்ற விதிமுறைகள் பிரிட்டிஷ் ஆங்கில இலக்கணத்தில் அதிகம் ஆனால் துல்லியம் வெகு வலுவானது.. நம்மவர்கள்  'அதனால் என்ன ஒரு 'S ' தானே, WITH , OF , AT இவைகள் தானே என்ன பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது ? என்று சமாதானம் பேசுவர்.

 நண்பர்களே மொழி விதிகள் கடைபிடிக்கும் வரையே அம்மொழியின் சிறப்பு நிறுவப்படும். எந்த மொழியையும் சிதைப்பதற்கு நாம் யார்? ஆனால் அறியாமையை மூடி மறைக்க ஏதேதோ பேசி தற்காப்பு தேடுகிறோம். தமிழில் "பொர்க்கை பாண்டியன் கர்க்க போனான்" என்று எழுதிவிட்டு நியாயப்படுத்த  இயலுமா?

 இன்னும் சில

[S ]he  is good at english  என்பதை [S ]he is  good   in english என்றுசொல்லி அதனில் என்ன தவறு   என்று       நியாயப்படுத்துகிறோம். வெவ்வேறு மொழிகளில், சொற்களும், சொல்லாடலும் வேறு நடைமுறைகளில் அமைவன. . நமது மொழி அமைப்பில் சரியாக இருக்கும் சொல் வரிசை வேறு மொழியில் வேறு வகையினதாக இருக்கும். அவற்றின் செயல் வடிவங்கள் அந்தந்த மொழியின் மரபு ஒட்டி பயன்படுத்தப்படும் போ து தான் , நம் அந்த மொழியை அறிந்தவர் என்ற தகுதியை பெறுகிறோம். I fear God என்பது வேறு,I FEAR FROM GOD என்பது வேறு. முன்னது[ I  fear God] இறைவன் மீது இருப்பது  மரியாதை கலந்த  பயம். பின்னது [FEAR FROM] என்பது பாம்பு, சிங்கம் புலி போன்றவற்றை குறித்து எழும் அச்சம் போல இறைவன் துன்பம் விளைவிப்பான் என்ற எண்ணத்தினால் தோன்றும் அச்சம் மட்டுமே. பலரும் ,I FEAR FROM GOD என்று பெருமிதத்துடன் சொல்லுவதை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்?

எனவே CONJUNCTION , PREPOSITION , இவை குறித்த செயல் முறை சட்டங்கள் பற்றி தெரிந்து செயல் படுவதே சரியான அணுகுமுறை . CONTINUAL / CONTINUOUS இவைகளும் ஒரே பொருள் தருவன அல்ல.. JUDICIOUS / JUDICIAL   இரண்டும் வெவ்வேறு. SUPERFICIAL மற்றும் SUPERFLUOUS இரண்டும் ஒன்றல்ல. இன்னும்   நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டிய மொழி சார்ந்த விதி முறைகள் எண்ணற்றவை.

தொடரும்

அன்பன் ராமன்

Saturday, April 5, 2025

IS IT A MEAN ITEM? ASS / DONKEY

 IS IT A MEAN   ITEM?  ASS / DONKEY   

As and when convenient, we use the term Ass or Donkey as the case may be. In either case the animal is the same. Then why we call something Ass or Donkey? Ironically, we castigate someone as Ass or Donkey merely to show our displeasure about the person or his/her styles of functioning.

To be called an Ass or Donkey is insulting to the person while the animal in this name roams about as the happiest one. If only the animal gets to know with whom we equate its name, it may too feel insulted; till then it stays insulated.

All attempts to delineate the two names to distinguish the animal as ASS or DONKEY remain futile; yes, the dictionary states that the two are synonymous and that Ass is an old term. It doesn’t anyway mean that a Donkey is more modern an animal than the Ass. Only the name is old for the Ass and the name Donkey is less old.

I too have observed that old timers  liberally use the term ‘Ass’ than the other option. That way the term ‘Ass’ seems to enjoy preference over its later name. In fact in the British parliament, once a member was called an ‘Ass’ and the observer faced pressure to tender an apology. The person elegantly extricated self, telling “I said the honourable member is an Ass and I feel sorry for it”. Apparently, it is an apology; but is more a reiteration, if one carefully observes the phraseology.

Leaving aside such animals and utterances, we have enough to understand of the quality of the animal.

Asses roam in the hot Sun –no matter how harsh the summer is. While Horses and Asses are domesticated, their cousin ZEBRA is not easy to handle and so hard to domesticate. Except in Zoo houses or in Circus circuits where zebra herds run around a central arena, the animal is not an item of  common sight.

Relative size of the donkey stands the animal in advantage, lest, humans should have readily tagged it to a cart for ferrying men and material. Why I feel so? Donkey is an inexpensive animal demanding no food or rest from the master. You may be surprised to learn that –beyond certain volume of work/ time, horses may refuse to work and may even destabilize the cart and its contents including all passengers; once it turns reluctant it will refuse to work, unless the animal is used to work at those hours. A cart-tied Horse may simply raise its forelegs menacingly high, tilting the cart to a steep incline to discard all men and material inside like a pack of cards. Any attempt to punish the horse would cause even harsher responses including ‘biting’ the men around.

To  continue ……

Friday, April 4, 2025

CONFIDENCE BUILDING

 CONFIDENCE BUILDING

Confidence building ought to be a natural corollary to the process of education. That people are not confident after acquiring degrees / titles up to and beyond the level of post-graduation suggests a few important things. What are those?

Confidence is essentially, a state of mental composure, as borne out by clarity in perception and comfort in presenting those ideas in a forum of technical personnel. Obviously, such components of composure are products of comprehensive education. Everything is rooted in the refined methodologies of teaching/learning. We need to assess the shortfall that hinders mental composure. 

1 Learning has not been on the right lines.  2  A mere ‘tentative’ memorizing  is generally being used as a strategy for ‘remembering’ a few essential items considered important for facing ‘examination’.  3 The examination process has not ‘probed’ the knowledge component of the examinees. 

4. A cursory approach by way of ‘answering’ the question[s] has fetched tall scores far disproportionate to the mental skills of the examinees. 5 A clear bandwagon approach has been in vogue at all levels of Teaching/ Learning / Evaluation. 6 A glaring absence of ‘enthusiastic teaching’ triggering inquisitive pursuit of ‘understanding’ the theme of any lesson [at all stages of learning ] for the students is visible.   It results in human products of ‘cumulative defects’ of biologically grown personnel, oblivious of the skills anticipated and the ones acquired segregated by an unfathomable gulf.  

A catastrophic outcome is- the candidates are ego-enriched; The edifice of ego  collapses during evaluation in a job-seeking effort, throwing open all inadequacy ending up in frustration.  Well, the frustration referred to here is for both the job-seeker and the job-provider, for having undertaken an unproductive exercise of conducting an interview.

Of late, employers do not wish to spend time on viewing the candidates; they are ready to invest money on ‘selection firms’ which assess candidates for varied job profiles and furnish a shortlist of a few prospective candidates worthy of a trial by appropriate experts  on the suitability of ‘employability’.  

Shamelessly our agencies project narratives that we provide ‘quality’ education of contemporary relevance. Those ‘derivatives’ of the ‘quality education’ so imparted, are visibly nervous at the mere suggestion of terms ‘competitive examinations’, ‘;Group discussion’ and ‘personal interview’ at some prestigious campus. They literally shiver and tremble in their shoes

What bucks them? Just they need to speak, speak fluently but precisely to the point. Speaking to the point appears formidable for them. These seem to be anathema to our graduates after a 15-16 year tenure of education in English medium.  What has gone wrong? The answer is --nothing went right along the course of this form of education. 

To  continue ….

Thursday, April 3, 2025

P B SRINIVAS -9

P B SRINIVAS -9

பி பி ஸ்ரீனிவாஸ் -9

தென்னங்கீற்று [பாதை தெரியுது பார் -1960] ஜெயகாந்தன் , எம் பி சீனிவாசன் , பி பி எஸ், எஸ் ஜானகி

வெகு இயல்பான கிராமீய மணம் கொண்ட பாடல் -எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆக்கம் ; நேர்த்தியான உணர்வுகளுடன் பி பி ஸ்ரீனிவாஸ் -ஜானகி குரல்களில் . கிராமியப்பாடலுக்கும் ஜானகியின் திறமைக்கும் பங்கு கோரும் அன் பர்கள் , இவை 1960 இல் உருவான பாடல் மூலம் எப்போதோ ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக ளை ப் பெற்ற இனிய பாடல்கள் என நினைவு கொள்ளுதல் நன்று. பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=thennankeetru+solaiyile+video+song&oq=thennankeetru+solaiyile+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRiPAtIBCTQxMzI4ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:7dcc6fc8,vid:OGkebWnTk-o,st:0  PAADHAI THERIYUDHU PAAR 1960

T JAYAKANTHAN, MB SRINIVASAN , PBS S JANAKI

நான் பாடிய பாடல் [வாழ்க்கை வாழ்வதற்கே -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா

இது ஒரு நாடகக்காட்சியில் அமைந்த பாடல். நாடகத்தனம் இல்லாமல் நேர்த்தியாக அமைந்த சொறிகளும் இசையும், பாடலின் போக்கும் கேட்க ரம்மியமானவை . பலருக்கும் இந்தப்பாடல்கள் தெரிவதில்லை. இதே படத்தில் நல்ல பாடல்கள் பல உள . பாடலுக்கு இணைப்பு இதோ 

NAN PADIYA PADAL MANNAVAN KETTAN VAZHKAI VAZHVADHARKE -1964 ,KD V R , PBS PS

https://www.google.com/search?q=naan+paadiya+paadal+mannavan+ketan+video+song&newwindow=1&sca_esv=6a9fea083e3aea47&sxsrf=AHTn8zo9EmXxefJwWdNjFgIqhvOmeDkceQ%3A1743581995700&ei=K_PsZ-i_KoLsg8UPj5WByAM&oq=NAAN+PAADIYA+PAADAL+MANNAVAN+KETTAAN+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJU5BQU4gUEFBRElZQSBQQUFEQUwgTUFOTkFWQU4gS0VUVEFBTiAqAggAMgcQIRigARgKMgcQIRigARgKSKinAVAAWJyIAXABeACQAQCYAcIBoAGPKKoBBDEuMza4AQHIAQD4AQGYAiagAqgrqAIUwgIHECMYJxjqAsICBxAuGCcY6gLCAhAQABgDGLQCGOoCGI8B2AEBwgIQEC4YAxi0AhjqAhiPAdgBAcICDhAAGIAEGLEDGIMBGIoFwgIUEC4YgAQYsQMY0QMYgwEYxwUYxwHCAg4QLhiABBixAxjRAxjHAc

ஆத்தோரம் மணல் எடுத்து [வாழ்க்கை வாழ்வதற்கே -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா

சிறு பிராயத்தில் பாடிய பாடலை பின்னாளில் பெரியவர்கள் சோகமாக படுவதாக அமைந்த காட்சி. திரைப்படங்கள் வர வர செயற்கைத்தனமாக ப்போய் விட்டதை இது போன்ற பாடல்கள் வலியுறுத்துவது வலிக்கத்தான் செய்கிறது. சொல்லிலும் இசையிலும் வேரூன்றிக்கிடக்கும் இல்லச்சூழல் ;இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. பாடலுக்கு இணைப்பு இதோ

AATHORAM MANAL EDUTHU  V V -1964 , KD V R , PBS PS

https://www.google.com/search?q=AATHORAM+MANAL+EDUTHTHU++video+song&newwindow=1&sca_esv=6a9fea083e3aea47&sxsrf=AHTn8zrpZbxA3YBFK2OaIaeUFeQfQmszlA%3A1743583652818&ei=pPnsZ-7fMbPgseMP3fjjsA8&ved=0ahUKEwjuwYyi-7iMAxUzcGwGHV38GPYQ4dUDCBA&oq=AATHORAM+MANAL+EDUTHTHU++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiI0FBVEhPUkFNIE1BTkFMIEVEVVRIVEhVICB2aWRlbyBzb25nMgUQABjvBTIFEAAY7wUyBRAAGO8FMgUQABjvBTIFEAAY7wVIu3hQAFjDTXAAeACQAQCYAYcCoAGIIKoBBjEuMTcuN7gBDMgBAPgBAZgCFKACgBnCAgkQABgHGMcFGB7CAgsQABiABBixAxjHBcICBhAAG

சித்திரமே சொல்லடி [வெண்ணிற ஆடை- 1965] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பிபி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி

ஸ்ரீகாந்த் வெண்ணிற ஆடை நிர்மலா பங்கு கொண்ட டூயட், பிபி எஸ் வெகு அன்பாக துவங்க நளினமாக பயணித்த பாடல். . முக்கியமாக, பல்லவி, சரணம் அனைத்தும் நிதானமாக பயணிக்க , இடை இசையில் வரும் கிடார் குழல் , ட்ரம்ஸ் போங்கோ அனைத்தும் வேகம் கொண்டு பாய பாடலின் விறுவிறுப்பு வேறு நிலையை எட்டி கேட்பதற்கு இனிமையான அனுபவம். பாடலுக்கு இணைப்பு இதோ

CHITHIRAME SOLLADI [VENNIRA AADAI-1965] KD VR PBS S J

https://www.google.com/search?q=CHITHIRAME+SOLLADI++++video+song&newwindow=1&sca_esv=6a9fea083e3aea47&sxsrf=AHTn8zotKCjn-ttVbe16ij2FhQ117Zv9Lg%3A1743584156102&ei=nPvsZ9r3BbygseMP8NXv0QM&ved=0ahUKEwjatYqS_biMAxU8UGwGHfDqOzoQ4dUDCBA&oq=CHITHIRAME+SOLLADI++++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIENISVRISVJBTUUgU09MTEFESSAgICB2aWRlbyBzb25nMgUQABjvBTIFEAAY7wUyBRAAGO8FMgUQABjvBTIFEAAY7wVIpbABUABY2kpwAHgAkAEAmAHGAaABpxaqAQQxLjE5uAEMyAEA-AEBmAIToAKzFsICBBAjGCfCAhA

நீ சொல்லு, நீயே சொல்லு [குமரிப்பெண்  -1966] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் , பிபி ஸ்ரீனிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி

ஒரே பாடலில் குறும்பும் , கரும்பும் சேர்ந்தார் போன்ற நளினம். அதிலும் எல் ஆர் ஈஸ்வரிசரியான பிச்சில் பாடி, பட்டையைக்கிளப்பி நீ சொல்லு , ஹூம்ஹூம் நீயே சொல்லு என்னும்போது தோன்றும் வசீகரம் ஒருவகை எனில் பி பி எஸ் பாடும் சரண சங்கதிகள் வெகு நேர்த்தி மற்றும் துடிப்பு நிறைந்தவை . இருவரும் சைக்கிளில் பயணித்து ப்பாடிய அந்நாளைய டூயட் . அதிலும் வி-ரா பிரிந்து எம் எஸ் வி , டி கே ஆர் என்று ஆனநிலையில் இது  ஜெயலலிதா வின் 4வது படம் குமரிப்பெண் ; தயாரிப்பு டி ஆர் ராமண்ணா , எனவே பாடல்களில் இசையின் தாக்கம் இருப்பதில் வியப்பென்ன ? மொத்தத்தில் அருமையான காட்சி, மற்றும் பாடல் . இணைப்பு இதோ

NEE SOLLU [KUMAREUPEN 1966] KD, MSV , PBS LRE 

https://www.google.com/search?q=NEE+SOLLU+NEEYE+SOLLU+++video+song&newwindow=1&sca_esv=6a9fea083e3aea47&sxsrf=AHTn8zryYa0C2DmnptfI_m5uqHvM9gPzSA%3A1743583980062&ei=7PrsZ_HNA8GsseMPta-ViQ8&ved=0ahUKEwjx85G-_LiMAxVBVmwGHbVXJfEQ4dUDCBA&oq=NEE+SOLLU+NEEYE+SOLLU+++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiIk5FRSBTT0xMVSBORUVZRSBTT0xMVSAgIHZpZGVvIHNvbmcyCBAhGKABGMMESMdlUABYhEpwAHgAkAEAmAHiAaABlRmqAQYyLjIwLjG4AQzIAQD4AQGYAhWgAvoXwgIEECMYJ8ICEBAAGIAEGLEDGEMYgwEYigXCAgkQABgHGMcFGB7CAg0QABiABBixAxhDGIoFwgIGEAAYBxgewgINEAAYgAQYsQMYgwEYDcICCRAAGIAEGAIYDcICBxAAGIAEGA3CAggQABgHGAgYHsICChAAGIAEGM

வளரும்

அன்பன்

ராமன்

CHANGING TIMES-6

  CHANGING TIMES-6    கால மற்றம் -6 பழைய பாடல்களின் வளம் ஏன் பேசு பொருள் ஆகிறது என்ற கேள்வி எழுவது இயற்கை தான் . அதற்கான அ...