Tuesday, August 29, 2023

EDUCATION - 5

 EDUCATION - 5

கல்வி-5                                                               

 இந்தக்காலத்தில் யாரை மணக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பும் தீர்மானத்தை ஏற்கும் நிலை வெகுவேகமாக வீழ்ச்சி அடைந்து வருவதைப்பார்க்கிறோம். அப்போது பெற்றோரின் பிடிவாதம் தூக்கி எரியப்படுவதைக்கண்டு துயருறும் பெற்றோர் அவன்/அவள் மீது கல்வியில் உங்கள் விருப்பத்தைத்திணித்தீர்கள். உங்கள் ஆளுமை இப்போது ஜகா வாங்குகிறதே ஏன்? அவன்[ள் ] உங்களை சார்ந்து இருந்தான்[ள்]. இப்போது தன்னிறைவு பெற்றுவிட்டதாக     நம்புகிறான்/ள் . அதுனால உங்கள் பப்பு வேகலை. ஒரு கட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கு செவி சாய்த்தான்/ள், என் விருப்பத்திற்கு செவி சாயுங்கள் என வற்புத்துகிறான்/ள். சொல்லப்போனால் கல்வி குறித்து தீர்மானிக்கும் திறமையும் ஆழமான புரிதலும் அநேக பெற்றோருக்கு இருப்பதில்லை .அதே சமயத்தில் நல்ல கல்வியுடன் உயர் பதவிகளில் இருக்கும் பெற்றோர் வீட்டில் குழந்தைகளை எப்படி வழி நடத்துகிறார்கள் என்று கவனித்தால் ஓரளவு புரிதல் ஏற்படும். நான் சொல்வது தர்மம்/ நியாயங்களைப்பின பற்றும் பெற்றோர் வீட்டுக்குழந்தைகள் பற்றித்தான்   லஞ்சத்தில் திளைப்போரைப்பற்றி அல்ல.. லஞ்ச ஊழல் வழியே வாழும் பெற்றோர் ஒருநாளும் குழந்தை களின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தர இயலாது. ஏனெனில் கல்விக்கு த்தேவை நல்வழி ஒன்றே. கல்வி என்பது பட்டம் பெறுதல் அன்று. மாறாக எந்த நிலையிலும் புரிதலும் , குழப்பங்களுக்கு விடைகாணவும் தேவையான தெளிந்த  சிந்தனையும் தேவை .  இவற்றைப் பெற மனம் ஒன்றிக்கற்ற கல்வி உதவி புரியும். ஏனைய அட்டைகளும் பட்டங்களும் பட்டயங்களும் “ஷோ கேஸ்’களை  அலங்கரிக்க வேண்டுமானால் பயன்படும். . . செயல் ஆக்கங்களுக்கு உதவாது. எனவே இப்போது நாம் அறிய வேண்டியது முறையான கல்விக்கான சரியான அணுகுமுறைகள் குறித்தே..

வளரும் பருவத்தே விதைக்கப்பட வேண்டியது தான் கல்வி. கல்வி வேறு நாம் வேறு அல்ல. நமது உடல் ஆரோக்கியம் எப்படி நம்முடனே தொடரும் ஒன்றோ அது போன்றதே கல்வி; அது   நம்முடனே வளர வேண்டும். பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்பது "திருமணம்" போன்ற நிகழ்வுகளுக்கு சரியாக இருக்கும் கல்விக்கு அல்ல. கல்வி அவ்வப்போது பழுது நீக்கி தயார் நிலையில் இருக்கவேண்டிய யுத்த தளவாடம் போன்றது. 

படியுங்கள்                                                            

எனவே பாடங்களை புத்தகங்களிலிருந்து படித்து புரிந்துகொள்ளத் துவங்குங்கள். தொடர்ந்து படிக்கப்படிக்க புரிதல் அதிகமாகும். அப்போது "உள்வாங்குதல்" இயல்பாக அமைந்து விடும். மனப்பாடம் செய்து உள்வாங்க இயலாது. எனவே மனப்பாடம் செய்வதை தவிருங்கள் மனதில் அழுத்தம் குறையும். பாடங்களையும் புத்தகங்களையும் பற்றிய அச்சம் விலகும்.

அச்சமும் சஞ்சலமும் கற்றலின் எதிரிகள். அவற்றை விரட்டி அடிக்க "புரிதல்" ஒன்றே வலுவான ஆயுதம். எனவே எந்தப்பாடத்தையும் தொடர்ந்து படிக்கப்படிக்க புரிதல் விரைவாகும்  

படித்தும்புரியாவிட்டால்?                                               

இதுதான் உங்களின் நிலையை உணர்த்தும் கட்டம். ஆம் .இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் . 1 . இந்த  குறிப்பிட்ட பாடப்பகுதி இன்னும் வகுப்பில் கற்பிக்கப்படாமல் இருக்கலாம் . அல்லது 2  ஆசிரியர் சொல்வதை செவிமடுக்காமல் வேறு எங்கோ கவனம் செலுத்தி , இப்போது படித்தாலும் புரியவில்லை / .புரிவதில்லை . இந்த "புரியவில்லை" யின் அடிப்படையை புரிந்துகொள்ளாமல் ட்யூஷன் வகுப்புக்கு ஏற்பாடு செய்யும் பெற்றோர் எளிய மொழியில் சொல்வதானால் "வெறும் அவசரக்குடுக்கைகள் ". ட்யூஷன் வகுப்பு புரியவில்லை / .புரிவதில்லை என்ற  அங்கலாய்ப்பை மழுங்க வைக்கும் ஆனால் புரியவைக்காது . அநேக ட்யூஷன் வகுப்புகள் 30-40 பேர் கூடும் இடம் அது இன்னொரு வகுப்பறை போன்றது. புரியவில்லை என்ற அவலத்தை நாமே வளர்த்துக்கொண்டு ட்யூஷன் வைத்துக்கொண்டால் படித்துவிடலாம் என்ற மாயையில் சிக்குண்டு அல்லல் உறுகிறோம்.   சொற்கள், அவற்றின் பொருள் இரண்டையும் புரிந்து கொள்ளாமல் ஒரு கருத்தைப்புரிந்து கொள்ளுவது எளிதன்று. அதற்கான தீர்வு யாது?             

தொடரும்

அன்பன் ராமன்   

Monday, August 28, 2023

5 He

 5 He

5 அவன்

காலை 11.00 மணிக்கு சென்னை வந்தான் . பரிச்சயமான இடத்தில் ரூம் ஏற்பாடு செய்துவிட்டு மணி பார்த்தான் 11.23. விறுவிறுஎன்று எதிர் platform சென்று பஸ் ஸில் ஏறினான். 40 நிமிடங்களில் காலனி க்கு வந்தான். வெய்யில் மண்டையைப்பிளக்கிறது, சரி என்று ட்ரை சைக்கிள் வியாபாரியிடம் இளநீர் வாங்கிக்குடித்தான் 40/- ரூபாய் . மெல்ல நடந்தான் .எல்லா தெருவும் ஒரே மாதிரி     இருந்தது முன்பு ஒரு  முறை  பார்த்த அடையாளங்கள் மனதில்  வந்துபோக             ஒரு தெம்புடன் நடந்தான்.

பெரு நகரங்களில் நேற்று இருந்த அமைப்பு நாளை தொடராது. எனினும் மனம்  உந்த தெருத்தெருவாக அலசியாயிற்று . ஒன்றும் இது வரை பிடிபட வில்லை. திடீரென்று ARISE AWAKE STOP  NOT UNTIL GOAL IS REACHED எனும் வாசகம் உந்திய அழுத்தத்தில் வீறு கொண்டு தேடினான் . நேரம் நகர்ந்துகொண்டே போக மணி மூணு . இன்னும் சாப்பிடவே இல்லையே என்று கடிகாரப்பசி அவனை துரத்தியது ..சரி இந்த பகுதியில் ஹோட்டல் இருக்குமே போய் சாப்பிடுவோம் என்று இப்போது ஹோட்டல் தேடலில் இறங்கினான் . ஒரு 4 தெருக்களைத்தாண்டி 5 வதில் நுழையும் வேளையில் சுமார் அரைக்கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சந்து முனையில் அம்புக்குறி நடுவில் ஓட்டல் என்று எழுதி இருக்க அம்பு சந்துக்குள் இடம் காட்ட வேகமெடுத்துப்போனான் .                                       

சந்துக்குள் பெரிய பச்சை நிற போர்டில் ஹோட்டல் ரஹ்மானியா ஆம்பூர் பிரியாணி ரெடி என்று ஒரு சிதிலமடைந்த பலகையில் எழுதி    கு ஸ் கா தயார் என்று இடுக்கில் வாசகம். வாசலில் 5, 6 பேர் இடம் இன்றி காத்துநிற்க நம்ப ஹீரோவோ சைவ உணவுக்காரன் . இத்தனை களேபரத்துக்குப்பின் மனம் சோர்ந்து சரி திரும்பிப்போவோம் என்று வந்த வழியே மீண்டான். சுமார் 20 அடி தூரத்தில் "அவள்" . ஒலிம்பிக் வீரனைப்போல ஓடி விஜி என்று அலறினான். விஜி முகம் திருப்ப அதிர்ந்தான். அவளுக்கு இரண்டில் ஒன்று அரைக்கண் ஆம் அவள் ஒன்றரைக்கண்ணினள் . இப்போது அவன் தனது இருகண்ணும் ஒன்றைநோக்கி ஒன்று திரும்ப இவனுக்கே ஒன்றரைக்கண் போல காட்சி அளித்தது . ஹி ஹி ஹி தப்பா கூப்பிட்டுட்டேன் என்று மன்னிப்பு கோரினான் . பரவால்ல சார் என்றது 1 1/2. இவன் பஸ் ஸ்டாப் எங்கிருக்கு என்று  விசாரித்து ஸ்டாப்பை அடைந்தான். LIC இலக்கு கொண்ட பஸ்                        

 நாம் போகவேண்டிய இடம் போகுமா ? ஒரே குழப்பம் . ஒரே வினாடி தான் ஓட்டம் நடையுமாக கருத்த கண்ணாடியும் விரித்த கூந்தலுமாக இவன் தேடி அலைந்த விஜி . அவள் பாய்ந்து பஸ் படிக்கட்டில் நிற்க மீண்டும் 'விஜி' என்று அலறினான். கூலிங் கிளாசை உயர்த்தியவள் ஹாய் , பை என்று கை அசைக்க இவனுக்கு துக்கம் கொப்பளித்தது. இது போன்ற விலாசமில்லா தேடல்கள் இனி கூடவே கூடாது என்று சபதம் எடுத்து ஆட்டோவில் மயிலாப்பூர் சென்றான். முதல் வேலையாக சரவணபவனில்  டிபன் சாப்பிட்டான் . சிறிது நேரம் குளக்கரையில் நின்றான் எப்போதும் போல் பல வண்ண மாமிகள். இன்னொரு ஆட்டோவில் சென்ட்ரல் போய் ரயிலைப்பிடிக்க வேண்டும் . ஜில்லென்று மாலை நேரக்கடற் காற்று சுகமாக வீச தெற்கு பக்க வானில் வெண் மேகம்  . அண்ணாந்து ரசிக்க பாக்கெட்டில் கை விட்டுக்கொண்டு வாய் பிளந்து சிரிக்கும் ராமசாமியாய் தெரிந்தது கஸ்தூரி ரெங்கனுக்கு. ராமசாமி யின் சிரிப்பில் பல அர்த்தம் .

அன்பன் ராமன்

Andaal –Sridharan -2

Andaal –Sridharan -2 ஆண்டாள் - ஸ்ரீதரன் -2             Special   song       https://www.youtube.com/watch?v=V9BCGZgBKiQ   ஸ்ரீதரன் ...