Wednesday, January 18, 2023

CALL THAT HORSE

 CALL THAT HORSE

கூப்பிடுங்கள் அந்தக் குதிரையை

7. 50 PM 10-01-2023

ஹலோ ,  கால் FROM டெல்லி ,மிஸ்டர் ராமசாமி ப்ளீஸ் என்றது பெண் குரல்  கஸ்தூரிரெங்கன் போனை எடுத்து டெல்லிலிருந்து லேடி பேசறா என்றான். "டெல்லி -- லேடி னா எனக்குதான் சிபிஐ அதிகாரியா இருக்கும்" என்று ஓடி வந்தாள் அம்ஜம்.

"இல்ல, அவா,   சார் பேரை சொல்லி கூப்புட்டா" என்கிறான் . ரெ 

அம்ஜம் உஷாரானாள் கழுகு லேசுப்பட்ட ஆள் இல்ல டெல்லி லேந்து லேடியாமே லேடி -யார் அவ என்று  நறநறத்தாள் அம்ஜம்.  

ராமசாமி ஓடி வந்து ஹலோ என்று ஆரம்பித்து அப்படியா? குதிரையா? நான் சொன்னா எங்க வேணாலும் வருவா

[அம்ஜம் படபடத்தாள் -ஐயோ இது என்ன புது ராமாயணம் எங்க வேணாலும் வருவ ளாமே  -fan சுற்ற  விட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தாள் ].

கழுகு தொடர்ந்தான்

இப்ப அவ புதுக்கோட்டையில் ஒரு யூனிவர்சிட்டி ப்ரோக்ராம் இருக்கா ராத்திரி 11 மணிக்கு மேல தான் வருவா நாளைக்கு அவளை கூப்பிட்டு சொல்லிடறேன் இன்னிக்கு ஒரு நாள் வெய்ட் பண்ணுங்கோ, தேங்க்ஸ் என்றான்.

 [இந்த மனுஷன் எவ புதுக்கோட்டைக்குப்போறா .எவ கந்தர்வகோட்டைக்குப்போறா னு டைம் டேபிள் போட்டு வெச்சுண்டு படுத்தறது - அவ தானாகட்டும் நேரப்பேசிக்க வேண்டியது தானே , ஒருத்தொருத்திக்கும் இவர் தான் லயேசன் ஆபீசர்  -ஒரே திருதராஷ்ட்ர கூட்டம் என்று மனதுக்குள் அங்கலாய்த்தாள் அம்ஜம் ].

டெல்லில உங்களுக்கு தெரிஞ்சவா இருக்காளா சார் என்றான் க. ரெ . அவனுக்கு எப்படியாவது சென்ட்ரல் கவர்மெண்ட் வேலைல சேர்ந்து விடவேண்டும் என்ற எண்ணம் / கவலை.

"டேய் உனக்கு அப்ளிக்கேஷன் அனுப்பிச்சாரே அவர் ஒய்ப் தான் பேசினா . ஏதோ ரொம்ப முக்கியமான ஏற்பாடு கவனிக்க ணுமாம் , சுபத்திரா வுடன் பேசணும் னு நம்பர் கேட்டா , நாளைக்கு மறக்காம சுபி ய காண்டாக்ட் பண்ணி பேசச்சொல்லணும் காலம்பற ஞாபகப்படுத்து "-- கழுகு

 [குதிரைக்கும் கழுதைக்கும் எதோ சுபி, சுப்பி னு செல்லப்பெயர் வெச்சு... -பயங்கரமான ஆள் இந்த ராமசாமி , நல்ல வேளை , டெல்லில இல்ல , இல்லேன்னா இந்தியாவையே புரட்டி எல்லா பெண்கள் போன் நம்பர் அட்ரஸ் னு டைரக்டரியே போட்டிருப்பார்  என அம்ஜம் சிந்தனையை ஓடவிட்டாள்] .

சார் நான் போய் படிச்சுட்டு சாப்பிடணும் வரேன் சார் என்று ஓடினான் ரெ .

அம்ஜத்தின் பக்கம் திரும்பி “என்னனு கேக்கலியே ?” என்றான் கழுகு

‘எவ  எவளோ உங்களோட பேசுவா அதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா -நீங்க கிருஷ்ண பரமாத்மா -ஆபத்பாந்தவர் , பேரு தான் -ராமசாமி, கிருஷ்ணசாமின்னு வெச்சிருக்கணும் , தப்புபண்ணி ட்டா’ என்று பொடி வைத்துப்பேசினாள்  இப்ப என்ன கெட்டுப்போச்சு ?    நீ தான் வெச்சுடேன் -கிருஷ்ணசாமி னு என்றான்

"நான் சாமின்னு வெக்கமாட்டேன் , க்ரிஷ் இல்லேன்னா கிட்டு என்று தான் வெப்பேன் என்ன Mr கிட்டு? என்றாள் . இதுக்கு ராமசாமியே பரவால்ல என்றான் கழுகு.

கழுகு எமகாதகன்  அம்புஜத்தின் கோபம் நியாயமற்றது , பெண்களுக்கே உரிய POSSESSIVE TRAIT என்பதை நன்கறிவான். சாப்பிட்டு விட்டு படுத்தாலும் அம்ஜம் உறங்காமல் இருந்தாள் ; பின்னர் யோசித்தாள் , தவறான நடவடிக்கையில் ஈடுபடுபவன் "என்னனு கேக்கலியே’’ என்று பேச வர மாட்டான் நாமாக ஏதாவது கேட்டாலும் பேச்சை மாற்றுவான் , ரெ விடம்  சொன்னாரே வேதாந்தம் மனைவிதான் பேசினாள் என்று. நாமாக எதையாவது நினைத்து குழம்பக்கூடாது .பகவான் நமக்கு தீங்கு வர விடமாட்டார் என்று அப்படியே உறங்கி காலை 5-10க்கு அரைமணி லேட்டாக கண்விழித்தாள்

தொடரும்   

அன்பன் ராமன்   

1 comment:

  1. ராமசாமி இப்போ கிருஷ்ணசாமி, கிருஷ், கிட்டு, கிச்சாமி, கிச்சாவானது வேடிக்கைதான்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...