Tuesday, February 28, 2023

SAMIs COME TOGETHER -2

 SAMIs COME TOGETHER -2

சாமிகள் சங்கமம் -2

சனி இரவு 7. 40 க்கு ராமசாமி போன் செய்தார் சுபி என்னும் சுபத்திரா வுக்கு

 நானே வரணும் னு நெனச்சேன் என்ன சார் விசேஷம் என்றாள் சுபி . விஷயத்தை  ராமசாமி சொன்னதும் அதிர்ந்தாள் சுபி. சார் போன்ல யோ வீட்டு;லயோ பேச வேண்டாம் சார் உங்க நண்பருடன்  பொது டம் - ஏதாவது கோயில் வளாகத்துக்கு வாங்க மூவரும் மீட் பண்ணலாம் . நாளை ஞாயிறு மாலை 3.00 க்குப்பின் தயவு செய்து கன்பர்ம் பண்ணுங்க பேசுவோம் என்றாள் சுபத்திரா . என்னடா இவ பிகு பண்றா என்று நினைத்தார் ராமசாமி . சரி காரியம் ஆகணும்னா அவங்க சொல்படி செஞ்சாதான் சரிப்பட்டு வரும் என்று முடிவெடுத்தார்.

டேய் மாடசாமி நாளை 3-15 மணிக்கு வீட்டுக்கு வா நீ சொன்ன மேட்டர் பற்றி ஏற்பாடு செஞ்சுண்டிருக்கேன் கண்டிப்பா வந்துடு என்று கட்டளையாகவே சொல்லிவிட்டார் ராமசாமி . மாடசாமி OK என்று சம்மதம் தெரிவித்தார். சுபி க்கு 3.30 ஞாயிறு கோயில் தாயார் சன்னதி பகுதியில் சந்திக்கலாம் என்று தெரிவிக்க அவளும் சரி என ஒப்புக்கொண்டாள் .

குறித்த நேரத்தில் மா சா  ரா சா , சுபி  தாயார் சன்னதி மண்டபத்தில் சந்தித்தனர் . சுபி ராமசாமிக்கு வணக்கம் சொல்லி நிமிர்ந்ததும் MEET  Prof . SUBHADHRA என்று ராமசாமி தெரிவிக்க , மாடசாமி கூனிக்குறுகி மிகுந்த பவ்யமாக உடலை வளைத்து ஏதோ சமயத்தலைவரை வணங்குவது போல் மிகப்பணிவாக வணக்கம் தெரிவித்தார். சுபத்திரா ஏன் இவ்வளவு அடக்க ஒடுக்கம் என்று வியந்தாள்.                                                                   மாடசாமி மனதில் "இந்த ராமசாமி    வ்வளவு  பெரிய ப்ரொபஸரை கோயிலுக்கு அழைத்து வந்துவிட்டானே என்னை ஏதாவது தப்பாக எண்ணிவிடப்போகிறார் ப்ரொபஸர்" என்று கலங்கினான்.

எங்காவது உக்காரலாமே என்றாள் சுபி   ' ' என்றார் ரா சா .மா சா மட்டும் ஒருவித கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தார் . சும்மா உக்காருங்க சார் நாமெல்லாம் FRIENDS . ராமசாமி சார் எங்க அண்ணன் மாதிரி , நீங்களும் அப்படியே தான் எனக்கு என்றாள்  சுபி. மாடசாமி சற்று தெளிவும் அமைதியும் பெற்று ராமசாமி அருகில் அமர சுபி " விஷயத்தை சொல்லுங்க” என்றாள். மாடசாமி தயங்க , ராமசாமி சுருக்கமாகஇவன் மருமாள் [அக்கா பெண் ] TRADITIONAL ஆர்ட்ஸ் உங்க யூனிவெர்சிட்டில படிக்கணுமாம் , உன் உதவி தேவை” என்றார். சுபிஎல்லா பர்டிகுலர்ஸ் AGE , DOB , COMMUNITY CERTIFICATE , PARENTS ' ANNUAL INCOME CERTIFICATE, PHOTO COPIES FORM FEE [400/-] குடுங்க எல்லாம் காதும் காதும் வெச்ச மாதிரி செய்யணும் BEFORE கமிங் WEDNES DAY . வெளியிலே மூச்சு விடாதீங்க. நான் FORM  + BOOK ரெண்டும் அனுப்பறேன் நீங்க யாரும் வீட்டுக்கோ யூனிவெர்சிட்டிக்கோ வர வேண்டாம் ஏனென்றால் நான் யாருக்கும் influence seat அனுமதிக்க மாட்டேன் அதனாலே நான் எங்க மாட்டுவேன் னு காத்துக்கிட்டிருக்காங்க. இவங்களை சமாளிக்க எனக்கு தெரியும், சரி பொண்ணு என்ன முடிச்சிருக்கா” ? சுபி

மாசா : B .Sc  Chemistry + Diploma in French  Diploma in  German +பரத நாட்டியம் + SILAMBAM Grade - III

சுபி : நல்ல ELIGIBILITY இருக்கு எண்ட்ரன்ஸ் ALL INDIA LEVEL எழுதணும் நான் அனுப்பும் புக் இருக்கும் டீ டைல்ஸ் நல்ல படிக்க சொல்லுங்க . டைரக்ட் செலக்ஷன் கெடச்சா SCHOLARSHIP சுளையா 50 000/- [P/A] கிடைக்கும் இல்லேன்னா SPONSORSHIP SEAT  போடலாம் SCHOLARSHIP குறையும் அல்லது NIL கூட ஆகலாம் ஆனா SEAT ALLOT ஆகும்.

எனக்கு SPONSOR  யாரையும் தெரியாதே என்றார் மாசா . உங்களுக்கு தெரியாட்டி என்ன இதோ நம்ம அண்ணன் ராமசாமி சார் ஒரு வார்த்தை சொன்னா அவ்வளவு தான் மறுநாளே SPONSOR ஆயிடுவா அந்தப்பொண்ணு , ஆங் அவ பேர் என்ன என்றாள் சுபி - 'கௌரி கல்யாணி ' என்றார்  மாடசாமி.

பாக்கி எல்லாம் புதன் நைட் ராமசாமி சாருக்கு வந்துடும் மிச்சத்தை போக போக பாத்துக்கலாம் . தாயார் சன்னதியில் பேசி இருக்கோம் நல்லதே நடக்கும் . இன்னோர் தரம் மீட் பண்ணனும்னா வேற இடம் பாப்போம் அது தான் SAFE என்றாள் சுபி

என்னம்மா சொல்ற -sponsor அது இதுனு எனக்கு எப்படிம்மா தெரியும் என்று ராமசாமி நடுங்க .சார் எங்கிட்டயே சொல்றீங்களா ? நீங்க வேதாந்தம் சார் கிட்ட ஒரு வார்த்தை சொன்னா வேலை முடிஞ்சுடும் சார் -சுபி.

வேதாந்தம் என்ன செய்யமுடியும் ? -ராமசாமி            சார் நீங்க ஒண்ணு அவரா செய்வார் அவர் ஒய்ப் செய்வாங்க என்றாள் சுபி . ரா சாஅப்படியா என்று வியந்தார்     . சார் அந்த அம்மாவுக்கு டெல்லில எவ்வளவு செல்வாக்கு இருக்குனு நினைக்கறீங்க சும்மா அப்பிடின்னு தலையை அசைச்சாங்கன்னா PMO officers எல்லாரும் கட்டுப்படுவாங்க . இந்த scholarship -- defence அகாடமி/ NIA கட்டுப்பாட்டுல இருக்கு defence அகாடமி அம்மா ஒரு முக்கிய தலைவி -ஆமாம் அதுனால நீங்க சொன்னா முடிஞ்சாச்சுனு அர்த்தம். நான்                 [யூனிவர்சிட்டி நாமினி]   சொல்லக்கூடாது ஆனா opinion கேப்பாங்க கொடுக்கலாம்னு ஆதென்டிகேஷன் சொல்லிட்டா முடிச்சுடுவாங்க நீங்கபேசிப்பாருங்க   எல்லா டீடைல்ஸ்சும் கிடைக்கும் .

ஏய் நம்ப வேதாந்தம் ஒய்ப் பா அவ்வளவு பெரிய போஸ்ட்ல இருக்காங்க என்று மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டார் மாடசாமி . ரா.சா "ஆமாம்" என தலை அசைத்தார்

சரி தெளிவா அதையும் விசாரிச்சுடறேன் , என்றுசுபி யிடம் சொல்லிவிட்டு, மாடசாமியிடம்  நீ அவங்க கேட்டதெல்லாம் ரெடி பண்ணி செவ்வாய்க்கிழமை கொண்டு வா மிச்சத்தை படிப்படியா முடிச்சுடலாம் எல்லாம் பெருமாள் பார்த்துப்பார் என்று ரா சா சொல்லி அனைவரும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.

தொடரும்    ராமன் 

Monday, February 27, 2023

PHOTOGRAPHY-27

 PHOTOGRAPHY-27

The Leading Lines

Any artist desires ‘grand acceptance’ of the view presented. But then how to ensure ‘acceptance’ ? The simplest of suggestions would be 1] avoid presenting many items in a frame, 2] Use objects on the scene to ‘advantage’ by making the observer confine his/ her viewing to the ‘point of interest’ as conceived by the presenter. Item 2 tries to ‘compel’ the viewer to see what is important. It is here that “LEADING LINES COME INTO PLAY”. Simply a line or a slender object ‘guiding’ us into the picture is named the leading line. A road traversing the picture area can be profitably ‘availed of’ to drive the view into the intended zone. It heed not terminate at the ‘point of interest’; instead it may just lead us to the spot and genrly fade off thereafter. Say a curve along the road can be judiciously handled by taking a view of the road  so as to remain unobtrusively influential. In plain terms, do not make the road, the centre element on the lower end of the picture; instead let the lower road endof the road be more to left or right of the centre from where it curves off to the opposite end. At the lower end of the road leave some margin that makes a telltale entry for the road [ include some non-road mud exterior to the black top] by introducing an element of life –the natural earth. The road performs the role of leading the view to that spot that the presenter wishes to suggest. It could be Moon shielded by hazy cloud with a bird or two flying back to nest . The curvature  on the road leads us to the distant moon and tiny birds in flight and the road itself fades off without leading us any further.The placement of moon need not be the dead centre on the horizon but a little off to right or left to allow the road a free escape. Also leave a little space along the top edge of the frame –a freedom that eyes generally enjoy forescaping only to return to the interest spot with absolute freedom.

 Items placed in a triangular format look balanced as the broad base forms the bottom with the lateral ones converging into the picture. Very long roads tend to present convergence as a natural component of perspective. Likewise shots made using Tele lenses present low depth unlike those made using Wide Angle lenses.However the ‘emphasis ‘ is A PRODUCT OF WELL PLANNED placemet of objects ultimstely ending up in the key item.

By virtue of their innate shallow depth Tele lenses ably handle portraits ; the keenest spot of focus in a portrait is obviously THE EYE BALL –the element of life in a picture. Exceptional clarity by focussing the eye ball makes all other features sink into subordination, even as they play down skin blemishes, moles / warts in the facial area. With intense focus on the eye ball, items inhces from eye socket progressively show up details and features a little away from eye socket progressively decline in focus . This adds value to a portrait by laying the right emphasis on relevant features.

Wide angle lenses render greater depth by shrinking the images and accommodating substantial area in a frame. It helps to capture vast stretches like seashore/ forest floor / temple corridors presenting an imposing appearance by sheer ‘coverage’.  It is for the craftsman to plan a picture for its value as a treasure for nostalgia through one’s life.

K.RAMAN

 

 

 

Sunday, February 26, 2023

SAMIs COME TOGETHER

 SAMIs COME TOGETHER

சாமிகள் சங்கமம்

இது என்ன வட இந்திய கும்ப மேளா போல் இருக்கிறதே என்கிறீர்களா ? இல்லை இல்லை இது நம்மூர் [உள்ளூர்] கும்ப மேளா தான். .சரி அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? இல்லாவிட்டால் என்ன நிகழ்வுகளைப்பார்ப்போம். மாதத்தின் 4 ம் சனிக்கிழமை காலை சுமார் 7. 30 மணி தட தட தடவென பாய்ந்து வந்த மோட்டார்சைக்கிள் சற்று வேகம் குறைந்து வழியில் ஒருவரை நிறுத்தி விசாரிக்க , பாதசாரி அதோ அந்த வீடு என்று கை காட்டி வாசலில் பூக்கடைக்காரர் சைக்கிள் நிற்கும் வீடு என அடையாளம் காட்ட , தேங்க்ஸ் என்று பைக் ஆசாமி அந்த வீட்டை அடைந்து -சார் என்றார் . உள்ளேயிருந்து அம்புஜம் யாரோ ஒரு பயில்வான் வரார் என்று கிசுகிசுத்தாள் .மிரண்டுபோன ராமசாமி எட்டிப்பார்த்து வாடா வாடா என்று குஷி ஆனார். வந்தவர் சாக்ஷாத் மாடசாமி யே தான். 

ஏய் என்ன இப்படி என்ன காப்ரா படுத்திட்டே இவர் என் friend 'மாடசாமி ' என்று அறிமுகம் செய்வித்தார். சரி காபி கொண்டுவா என்று சொல்லி இருவரும், மா /ரா கூடத்து அறையில் புகுந்து கொள்ள , எட்டிப்பார்த்த அம்ஜம் கண் ஜாடையில் ராமசாமி யை உள்ளே அழைத்தாள் .       என்ன -? ரா.சா

இந்த 2 காபியை எடுத்துண்டு போங்கோ என்றாள் . நீ கொண்டுவரக்கூடாதா என்றார் ரா சா. போங்கோ அவர் மீசையைப்பாத்தா எனக்கு கதி கலங்கறது என்றாள்  அம்ஜம். அடச்சீ சும்மா வா என்று ரா சா அம்புஜத்தை காபி எடுத்துவர சொல்லி முன்னே சென்றார்.. காப்பியை கொடுத்துவிட்டு ஓடி விடநினைத்த நொடியில் சார் என்றொரு குரல். எட்டிப்பார்த்த அம்ஜம்  ஏற்கனவே 2 சாமி இருக்க 3 வதா ஒரு ஆசாமி வேறே வரார் என்று கஸ்தூரி ரெங்கன் வருகையை அறிவித்தாள்  உள்ளே வந்த      ரெ, மா சா வைப்பார்த்ததும் அவர் பாதம் தொட்டு வணங்கினான்.   மா சா  அம்புஜத்தைப்பார்த்து, அம்மா அவனும் ஒரு சாமி தான் [ஏன்னா  பிராம்மணர்களை ]. நாங்கசாமின்னு தான் சொல்லுவோம் எனவே 3 சாமி இங்கே என்றார்.

அதற்குள் ரா சா,  டேய் இப்ப இவன் கைல பணம் இருந்தா உனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திப்பிடுவாண்டா இவன் என்று ரெ வை காண்பித்தார்.. உடனே ரெ சார் தினமும் பெருமாள் சேவிக்கச்சே உங்களை எல்லாம் நெனச்சு பெருமையும் நன்றியுமா இருக்கேன் என்று கை கூப்பியபடியே தெரிவித்தான்.. சரி என்ன விஷயம் என்று கஸ்தூரி ரெங்கனை ரா சா கேட்க அவன் சார் அந்த கேப்ரியல் சார் HO இன்னொரு லெட்டர் தரமுடியுமா னு கேட்டார். என்ன சொல்றது தெரியல அதுனால செக்ஷன் கேட்டு சொல்றேன்னு  சொல்லிட்டேன் அத சொல்லத்தான் வந்தேன் என்றான் ரெ . கர்ரக்ட் YES . NO எதுவோ நீயா சொல்லாத நான் வந்து என்னனு பாத்து சொல்றேன் அப்புறமா பதில் சொல்லு என்றார் ரா சா. பாஸ் வேணுன்னா தந்துருவார் , ரிசேர்வேஷன் ? என்றார் ரா சா.     மா சா சொன்னார் டேய் அடுத்த வாரம் தானே   லோகு வும் ரியாஸ் ம் தான் நம்ப குரூப் லிருந்து போறாங்க . வேணும்னா சொல்லு நான் செட் பண்ணித்தரேன் . சரி என்ன எதுன்னு பார்த்துட்டு முடிவு பண்ணுவோம் என்றார் ரா சா  நன்றி தெரிவித்து விடை பெற்றான் கஸ்தூரி ரெங்கன்.

நம்ம வீட்டுல சாப்பிட்டுட்டு போயேன் என்றார் ரா சா. இல்லடா தில்லைநகர் ஆஸ்பத்திரியில அத்தைய அட்மிட் பண்ணனும் அதுனால உன்னை காலையிலேயே பாத்துரணம் னு வந்தேன் என்றார் மா சா.

சரி என்ன விஷயம் என்றார் ரா சா  

டேய் எங்க அக்கா பொண்ணு B .Sc முடிக்கப்போறா அப்புறம் யூனிவெர்சிட்டில PG படிக்கணுமாம் . சரி அதுக்கென்ன? ரா சா

என்ன அதுக்கென்னவா? அவ குதிரைக்கொம்பு  மாதிரி கேக்கறா -மாசா . என்னவாம்  -ரா சா ?

டேய்  ALL INDIA  எண்ட்ரன்ஸ் எழுதி செலக்ட் ஆனா 50, 000/-ஸ்காலர்ஷிப் வாங்கி இந்தியன் ட்ரடிஷனல் ஆர்ட் கோர்ஸ் பண்ணனுங்கறா..அந்த  H OD  பயங்கர TOUGH னு சொல்றாங்க, உன்னால ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா கொஞ்சம் பண்ணித்தாடா என்றார் மாடசாமி. சரி  H OD யாருனு விசாரிச்சியா என்றார் ரா சா.

ம்ம் என்று யோசித்து ஏதோ சுமித்ரா வோ சுஜாதாவோ பேர் சொன்னாங்க என்றார் மாசா .

டேய் சுபத்திராவா? என்றார் ராசா. அவங்க தாண்டா அவங்கதாண்டா இதிலெல்லாம் நீ பயங்கர கில்லாடி டா என்று வியந்தார் மாடசாமி.. சரி எல்லா பர்டிகுலர்ஸும் பேப்பர்ல குறிச்சுக்குடு MONDAY நைட் போன் பண்ணு என்று நம்பரை தந்தார்  ராமசாமி.. இதபாரு  நான் மேக்சிமம் ட்ரை பண்றேன்  -பெருமாள் பார்த்துப்பார் என்று தெம்பூட்டினார் ராசாமி. நன்றிப்பெருக்குடன் விடை பெற்று அம்மா போயிட்டு வரேன் என்று அம்புஜத்துக்கு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து அகன்றார் மாடசாமி. கழுகு களம் இறங்கிவிட்டது

தொடரும் அன்பன் ராமன்  

 

Saturday, February 25, 2023

Why is cinema infirm?

 Why is cinema infirm?

சினிமா ஏன் தடுமாறுகிறது ?- 4

சினிமாவின் வீழ்ச்சிக்குக்காரணம் அந்தத்துறை குறித்த ஆழ்ந்த புரிதலும், முறையான திட்டமிடலும், சரியான செயல் திட்டங்களும் வகுக்காமல் 'நானும் படம் தயாரிக்கிறேன்' என்று கிளம்பிய அரைகுறை அறிவாளிகளும், பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள தயார் நிலையில் இருக்கும் ,இடைத்தரகர்களும், நடிக்கத்தயார் --அதனால் தாயார் ஆனாலும் தயார் எனக்கிளம்பிய பெண்களும், பரட்டைத்தலை,  வாயில் பீடியை இடம் வல மாகத் தள்ளுபவனும்,   காரணமின்றி மூக்கை உறிஞ்சுபவனும், கழுத்துஓடிந்தவன் போல கோணப்பார்வைபார்க்கும் கோணங்கிகளையும் கதாநாயகன் நிலைக்கு உயர்த்தியது 'நானும் படம் தயாரிக்கிறேன்' வகை தயாரிப்பாளர் அன்றி வேறுயார்?

அது மட்டுமா ? திடீர் இட்லி போல கிளர்த்தெழும் இன்னோர் பட்டாளம் இயக்குனர் என்று வந்துவிட்ட நபர்கள். நான் பல கனவுகளோடு சாதிக்க வந்திருக்கிறேன் என்று பேட்டி கொடுத்து, [சுமார் 20 நாள் தாடியுடன்] எங்கோ வானத்தைப்பார்த்தபடி பூப்பூவாய் அச்சிட்ட துணிச்சட்டை அணிந்து படம் -பார்ப்பவன் பைத்தியக்காரன் என்ற தீர்மான உணர்வோடு இந்த சமுதாயத்தை த்திருத்திக்காட்டுகிறேன் என்று முழங்கும் இளைஞர்கள்.

இவர்கள் சமுதாயத்தைத்திருத்திக்காட்டுவது என்ன வெனில் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடி மணம் முடித்து , வேரூன்றிய நடைமுறைகளை எதிர்த்து கனல் தெறிக்கும் வசனங்கள் பேசி விசனித்து விக்கித்து இறந்து போவான் ஹீரோ இறுதிக்காட்சியில். பட்ட மரம் ஒன்று ஓரமாக நிற்க இறந்தவன் மீது ஈக்கள் மொய்க்க , இந்நிலை தொடர வேண்டுமா ? என்ற டைட்டில் கார்டு படத்தை முடித்துவைக்க -இதுதான் இவர்கள் கனவோடு வந்த லட்சணம்.

இந்த லட்சண புருஷர்கள் , தம் வீட்டு பெண்ணை ஒருவன் [பிற சமுதாய குறியீடுகள் கொண்டவன்] காதலித்துவிட்டால் கொந்தளிப்பதைப்பார்க்க வேண்டுமே --சமுதாயமாவது கத்தரிக்காயாவது , பிழைப்புக்கு பெனாத்தும் இவர்களை இயக்குனர் என்று அங்கீகரித்தால் நாம் தான் மடையர்கள் --வேறென்ன சொல்ல. சொந்த வாழ்வில் ஜாதிப்பிடியில் இருந்து வெளிவர இயலாதவர்கள் 'சமுதாயத்தை . மாற்றிக்காட்டுகிறேன் என்பதை என்ன வென்பது?  ஒரு வேளை,  வரும் பொழுதே சமுதாயத்தை ஏமாற்றி காட்டுகிறேன் என்று சொன்னதை சமுதாயத்தையே  'மாற்றிக்காற்றிக்காட்டுகிறேன்' என்று நாம் நினைத்துவிடுகிறோம். இது தவிர இதை எளிதில் விளக்க முடியாது.

இந்தப் படத்தின் இறுதிக்காட்சியும் வசனங்களும் தான் யதார்த்தம் என்று நம்பிய இளைஞர்கூட்டம் வீட்டில் குழந்தைக்குப் பால் வாங்கித்தராமல் கட் அவுட் எனும் ஆளுயர அட்டைப்படத்துக்கு பால் குடம் சுமந்து , அதன்  மீதேறி , மூங்கில் முறிந்து கீழே விழுந்து மண்டைபிளக்க 'தலைவா' என்று [ஆதிமூலமே வுக்கு ஒப்பாக] அரற்றி உயிர் நீப்பது புதுப்படங்கள் தரும் வெகுமதி.. இந்த அவலத்தை அரங்கேற்றும் கூட்டத்தினர் அவ்வப்போது தெரு முனையில் வித விதமாக முகபாவங்களில் தங்களின்  FLEX BOARD நிறுத்தி "ஆணையிடு தலைவா " என்று சும்மாதிரிந்தவனை  அரசியல் அபிலாஷைகளுக்கு ஆட்படுத்தி [அப்படியே அந்த ஆளையும் படுத்தி] சொந்த வாழ்க்கையைத்துறந்து மதுக்கடை வாடிக்கையாளனாகி - பஞ்சபராரியாகி இன்னும் சினிமா போஸ்டரை வெறித்துப்பார்க்கும் சில கிறுக்கர்களை பல ஊர்களிலும் தமிழகமெங்கும் காணலாம். இது போன்ற உப்பு சப்பில்லாத கதைகளை உயர்த்திப்பிடிப்பது பஞ்ச் டயலாக் எனப்படும் பஞ்ச டயலாக்.

அதாவது இவன் படிக்கவோ பணிக்கோ போக மாட்டான் ஆனால் இவனது அவலத்திற்கு அம்பானியும் அதானி யும், டாடாக்களும் காலில் மிதிபடுவார்கள் வசனங்கள் வாயிலாக .

 உதாரணத்திற்கு ஒன்று பஞ்சத்தில் சிக்கியவன் பேசினால் பஞ்ச [பன்ச்] டயலாக்

உனக்கு எப்படி இவ்வளவு செல்வம் குவிந்தது ? நீ ஏழைகளை அட்டை போல் உறிஞ்சுகிறாய் , எங்கள் உழைப்பை சுரண்டுகிறாய் என்று வேலைக்கே போகாதவன் சூளுரைத்து , ரத்தம் கக்கி மயங்கிச்சரிவான். இது போல் பஞ்ச டயலாக் [அதான் பன்ச் டயலாக்] எழுதுபவன் மிக கவனமாக இந்தியநாடு  முழுவதும் அந்த முதலாளிகள் உருவாக்கிய தொழிற்சாலைகள், அவற்றில் முதலீடுகள், அவை தரும் வேலை வாய்ப்புகள் பற்றி மூச்சு விடமாட்டான். அதே சமயத்தில் அரசியலில் மிதக்கும் பண முதலைககள் அவர்களின்  கண்ணுக்கு சமுதாய சிற்பிகளாக தெரிவார்கள். அந்த முதலைகள் பற்றி மூச்சு விட்டால் , மறுநாளே எழுதியவனுக்கு மூச்சில்லாமல் செய்து விடுவார்கள் என்பதை உணர்ந்து 'நெளிவு சுளிவுடன்' வசனம் எழுதி பிழைப்பை தக்கவைத்துக்கொள்வான். செல்வந்தர்களை வசை பாடியவன் எடுக்கும்  படத்தில்  செல்வச்  சீமானின் மகள்  ஷீலா வை [ III B .Sc Comp  .Sci ] மூன்றாம் பிறை போன்ற அழகியை,  3ம் கிளாஸ் drop out முத்துப்பாண்டி விழுந்து விழுந்து முழுநேரப்பணியாக காதலிப்பார். அவளுக்கோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தாலும் மூளை மழுங்கி , மு. பா எப்போது வருவான் என்று ஜன்னலில் நின்றுகொண்டே இருப்பாள் . செல்வச்சீமான் வீட்டில் ஜன்னலுக்கு கதவே இருக்காது -மு பா காதலிக்க வேண்டாமா? -  இது தான் சமூக சிந்தனை கொண்ட பார்வை.

பணக்காரி -ஏழை பேதம் காதலுக்கு கிடையாது , அது வசனத்துக்குத்தான். இப்படிப்பட்ட இயக்குநர்களைப்பெற என்னதவம் செய்தோம்?

இது போன்ற மாய் மாலங்கள் , அவற்றை தூக்கிப்பிடிக்கும் ஊடகங்கள், பாலுணர்வே சினிமா என்றே தீர்மானித்துவிட்டவர்களை ஆதரிக்கும் வரை சினிமா பிழைத்து எழ வாய்ப்பு இல்லை என்பது நிதர்சனம். 

 

                                  நிறைவு

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...