Tuesday, May 2, 2023

RENGAA RENGAA -23

 RENGAA RENGAA -23

ரெங்கா ரெங்கா 23

குறித்த நாளில் காலை டெஸ்ட் முடிந்து உணவு இடைவேளைக்குப்பின் ரெ வை அழைத்து,  போக வர ரிசேர்வஷனுடன் 2 டிக்கட் தந்தார் புஞ்சாபகேசன் . 3 மணிக்கு சம்பளம் உங்கள் கிளாஸ்ரூமில் தரப்படும் லெட்ஜ்ர் இல் கையெழுத்து போட்டு ஸ்டாம்ப் fee 1/- ரூபாய் தந்து விட்டு பணம் பெற்று எண்ணி பத்திரமா வைத்துக்கொள் டிக்கெட் 1970/- இன்றோ திரும்பி வந்தோ கொடு என்றார். இன்றே தருகிறேன் சார் என்றான் ரெ . சொன்னபடி பணம் 27000+ வந்தது .அவ்வளவு பணம் ஒரே நேரத்தில் அவன் பார்த்ததில்லை .இதைக்காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டுமே என்று கை கால் நடுங்கியது. . அதைக்கண்ட கேஷியர் புஜங்கரவ் ஒரு கவர் தந்து அவரே 7000/- அவன் கையில்கொடுத்துவிட்டு மீதியை கவரில் வைத்து இதை பத்திரமாக வைத்துக்கொள் என்று இங்கிலீஷ் ல் சொன்னார் . தேங்க்ஸ் என்றான் ரெ . தனது பையில் கவரை பத்திரப்படுத்திவிட்டு , பஞ்சாபகேசன் அறைக்கு ஓடினான் உள்ளே இருவர் இருந்தனர் .10 நிமிடத்தில் அவர்கள் வெளியேறினர் ரெ உள்ளே சென்று 2000/- ரூ தந்தான் அவர் உடனே 30/- ரூ தந்துவிட்டு ரயிலில் கவனமாகப்போ யாரிடமும் பேசாதே. ஊரில் மாடசாமியை நான் ரொம்ப கேட்டதாக சொல் அவனைப்போல் எல்லோரும் நேர்மையாக இருந்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறி இருக்கும் என்றார் . கே மீண்டும் ஒருமுறை மாடசாமி தெய்வமாக தெரிந்தார் ரெ வுக்கு. வண்டி 12.30க்கு வரும் , நீ மதியம் க்ளாஸ் 2.30க்கு வந்துவிடலாம் என்று அனுப்பி வைத்தார் . நன்றியுடன் வெளியேறி சுப்ரமணிக்காக காத்திருந்தான். சுப்பிரமணி 3.20 க்கு வந்தான் உடனே அவனுடன் டவுனுக்கு போனான் . போகுமுன் ரூம் வாடகை 500/-ரூ கொடுத்தான். சுப்பிரமணி தேங்க்ஸ் சார் எங்களுக்கு 1ம் தேதி  சம்பளம் அதுவரைக்கும் இது ரொம்ப உபயோகமா இருக்கும் என்று நன்றி தெரிவித்தான் . டவுன் அம்பிகா விலாஸ் ஹோட்டலில் நுழைந்து சார் இன்னிக்கு 20/-ரூ காபி சாப்பிடுங்க முதல் சம்பளம் என்றான். ரெ சொன்னான் நீங்களும் சாப்பிடுங்கோ நான் வாங்கித்தரேன் என்றான் சூடாக காபி நன்றாக இருந்தது .சொந்தக்காசில் காபி சாப்பிட்டா ரொம்ப ஜோராத்தா ன் இருக்கு என்று அக மகிழ்ந்தான். சார் இங்க ஒரு ஸ்வீட் ஸ்டால் தேங்கா பர்பி சூப்பரா இருக்கும் 1 கிலோ 400/- ரூ வாங்கி ஊர்ல குடுங்க என்றான் சுப்பிரமணி. சரி 4 கால் கிலோ வாங்கினா ரா சா, மாசா , அம்மா , ரயில்வே அதிகாரி 4 பேருக்கு குடுக்கலாம் என்று எண்ணினான். சரி சார் அப்படியே செய்வோம் என்று வாங்கிவிட்டு பக்கத்து சந்தில் சென்றான். ரெ பின் தொடர்ந்தான். அது சுப்பிரமணி வீடு தாயார் மாவரைத்துக்கொண்டிருந்தாள் .மாலையில் வெளியே ஸ்டூல் போ ட்டு மாவு விற்பாராம் . வாங்க தம்பி என்று எழுந்து தன் புடவையை சரி செய்துகொண்டாள்   காபி சாப்பிடுங்க என்றார் தாய் . இப்பதான் சாப்பிட்டோம் என்று சொல்லிக்கொண்டே ஒரு கெட்டியானTRAVEL BAG எடுத்து கொண்டுவந்தான் சுப்பிரமணி . அம்மா 3 நாளைக்கு சார் ஊருக்குப்போறார் இந்த பையை கொண்டு போயிட்டு வரட்டும் என்றான் சு. ம  அம்மா சரிப்பா என்று சிரித்து விடை கொடுத்தார்.

சார் உங்க பை பணம் கொண்டு போக லாயக்கில்லை , பூட்டவும் முடியாது . இது நல்லா பத்திரமா பணம் , துணி, ஸ்வீட் எல்லாம் கொண்டு போலாம். நீங்க ஊருக்கு போயிட்டு வாங்க அங்க அபூபக்கர் கடைல நல்ல BAG நியாயமான விலைல வாங்கி வெச்சுக்குங்க மாசா மாசம் உபயோகப்படும் என்று பேசிக்கொண்டே மாமிக்கு இப்போ வா அப்புறமா என்றான் சு. ம . இப்பவே கொடுத்துட்டா அவாளும் சந்தோஷப்படுவா என்றான் க. ரெ . சரி வாங்க என்று மெ ஸ் ஸுக்கு வந்தனர். மாமி கணக்கு 2700/-ரூ அதைக்கொடுத்துவிட்டு டிபன் இருக்கா என்றதும் சேவை வெச்சிருக்கேன் 5 நிமிஷத்துல எலுமிச்சம்பழ சேவை பண் ணி கொடுக்கறேன் உக்காருங்கோ என்றாள் . இதை அடுத்தகணக்கின் ஆரம்பமா வெச்சுக்குங்க என்று சுப்பிரமணி சொன்னான். மாமி அடுத்த பக்கத்தில் மெட்ராஸ் சார் என்றெழுத கஸ்தூரி ரெங்கன் என்று தன்  பெயரை பக்கத்தில் எழுதி வைத்தான். 7 நிமிடங்களில் பொட் டலத்தை வாங்கிக்கொண்டு ரூம் வந்தனர் மணி 6.20. முகம் கழுவி , பொருட்களை நல்ல பையில் மாற்றிக்கொண்டு . பணத்தை பத்திரப்படுத்தி , பொட்டலம் தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு பிளாட் பாம் வந்தனர் . சரியான கோச்சில் சுப்பிரமணி ஏறி பெர்த் பார்த்து க ரெ வின் உடமைகளை வைத்துவிட்டு இறங்கி நல்லபடியா போயிட்டு வாங்க என்று விடைபெறவும் வண்டி நகர்ந்தது.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

WILLIAM BLAKE -3

  WILLIAM BLAKE -3 Quotes -3 Another set of quotes from William Blake form the day’s blog. Curiously, these are a little longer than wha...