Wednesday, May 31, 2023

RENGAA RENGAA- 41

 RENGAA RENGAA- 41

ரெங்கா ரெங்கா -41

சுப்ரமணியின் இயக்கத்தில் இயங்குகிறான் ரெ . ஆம் 5.40க்கே அனுமார் சேவித்தாயிற்று . சிறிது நேரம் குளக்கரையில் அமர்ந்து காற்றாட நினைத்தனர். தெற்கே வானில் மேகக்கூட்டம், ஒயிலாக தலைவரிக்கொள்ளும் ராமசாமியின் முகம் போல் தோன்றியது ரெ வுக்கு.

ராமசாமி வெகுதூரம் விலகிப்போய்விட்டார் போல் ஒரு உருவ விளக்கம் இது என்று மனதில் பட்டது. தனக்குத்தானே பேசிக்கொண்டான் ரெ . என்னசார் மேலிருந்து கண்காணிக்கறீங்களா என்றான். . மேகம் லேசாக கலைந்து , உங்களால் என் உருவம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று பதில் சொல்வதாக உணர்ந்தான். மேலும் என்னைக்காப்பாற்றிக்கொள்ளவே வழியின்றி தடுமாறுகிறேன் , உன்னை கண் காணிப்பதா என்று சொல்லிக்கொண்டே மேகம் உருவம் கலைந்து சிதறியது . ரெ மனதில் குழப்பம் -இதென்ன உணர்த்த வந்த மேகமா , இல்லை தற்செயல் நிகழ்வா -தலை வெடித்துவிடும் போல் இருந்தது. மீண்டும் அனுமார் சேவிக்க சற்று அமைதி வந்தது. ஆனால் தன் மீதே வெறுப்பு வந்தது கஸ்தூரிரெங்கனுக்கு.

ஐயோ ஊருக்குப்போக இன்னும் டிக்கெட் வாங்கலியே என்று பதற்றம் . டிக்கெட் கவுண்டர் 8 மணி வரை இருக்கும் இல்ல என்றான்  சுப்பிரமணிஇடம். . .இருக்கும் சார் ஊருக்கு தானே , நீங்க சார் கிட்ட பணம் கொடுத்து கொஞ்சம் ஏற்பாடு பண்ணித்தாங்கனு  கேளுங்க . கோவிச்சுக்க மாட்டார் ஈசியா முடிஞ்சுடும் . நம்ப போனா பிகு பண்ணுவானுங்க டிக்கெட் இல்லைம்பானுங்க ,ac இல் இடம் full அப்பிடி இப்பிடி னு அலைய விடுவானுக.

சார் பியூன் போய் வாங்கிக்கொடுக்க வெச்சுருவார். நீங்க தைரியமா கேளுங்க இல்லைனா எப்பவுமே கூட்டமா இருக்கு னு    சொlல்லிக்கேளுங்க கண்டிப்பா செய்வார் . கே வை அங்குலம் அங்குலமா அளந்து வெச்சிருக்கார் இந்த சுப்பிரமணி என்று மலைத்தான் ரெ

சுப்பிரமணி சொன்னபடி கே வை சந்தித்து , சார் ஒரு உதவி என்றான் ரெ . என்னப்பா? என்றார் . கே சார் ஊருக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ணப்போனா ரொம்ப கூட்டமா இருக்கு க்யூ வில நின் னா க்ளாஸ் மிஸ் ஆகும்போல இருக்கு என்று இழுத்தான். சரி போன தரம் போன ட்ரெயின் சரியா இருந்ததா ? அதே மாதிரி பண்ணிடலாமா என்று --ஆங் இந்த மாசம் உங்களுக்கு ஒரு 4 நாள் லீவ் கொடுக்கவேண்டி வருது. அதாவது டெல்லியில ஒரு 2 நாள் கான்பரன்ஸ் வருது ,எல்லா ஸ்டாப் ம் போயிடுவோம் .அதுனால சம்பளம் கொடுத்துட்டு அடுத்தநாள் முதல் 4 நாள் லீவ். சம்பள அன்னிக்கு நைட் திருச்சி ட்ரெயின் , அங்கிருந்து 4 வது நாள் மாலை ரிட்டர்ன் -டிக்கெட் வாங்கிடலாமா ? என்றார் சரி சார் என்றான் ரெ . நான் வாங்கிடவா இல்ல நீ பணம் தரயா என்றார் கே. இதோ தரேன் சார் என்று 2000/- ரூபாய் தந்தான் ரெ . நீ க்ளாஸ் க்கு போ நைட் க்குள்ள டிக்கெட் வந்துரும் என்றார் . கே . நீ ஊருக்கு போற  நாள் மாலை என்ன பாத்துட்டு போ . மாடசாமி க்கு ஒரு பாக்கெட் தரேன் பத்திரமா கொண்டு போ , திரும்பி வரும்போது அவர் ஏதாவது பேப்பர் கொடுத்தா கவனமா கொண்டு வா , மூச்சு விடாத போய்வா  முக்கியமான விஷயம் என்று எச்சரித்தார்  சரி சார் என்று பவ்யமாக நின்றான்        . ரெ உன்கிட்ட மாடசாமி போன் நம்பர் இருக்கா என்று கேட்டு வாங்கி நம்பர் அருகில் IHCURIT IMASADAM என்று தலைகீழாக டைரியில் குறித்துக்கொண்டார். இந்த மாதிரி நுணுக்கங்களில் பஞ்சாபகேசன் ஒரு பீஷ்மர். சட்டென்று எந்த நபர்பெயர்  அல்லது நம்பர் அவரிடமிருந்து அபகரிக்க முடியாது . ரெ வுக்கு தலையோ வாலோ  புரியவில்லை நமக்கேன் வம்பு அவர் சொன்னதை செய்வோம் என்று வகுப்புக்கு போனான் . .

மாசா வுக்கு போன் போட்டு கே பேச , மாசா ஆடிப்போனார் -என்னவோ ஏதோ என்று.. நான் ஒரு பாக்கெட் அனுப்பறேன் அவனிடம் [ ரெ விடம் ] இருந்து ஸ்டேஷனிலேயே வாங்கிக்கொண்டு , எனக்கு வேண்டிய தகவல்களை உங்கள் பைலில் இருந்து தொகுத்துத்தந்தால் உங்கள் தரப்பு நியாயத்தை வெற்றிபெறச்செய்து விடலாம் . என்னால் ஆனதை கண்டிப்பாக செய்கிறேன்    -குட் லக் என்றார் கே. மிக்க நன்றி சார் என்று அன்புடன் வணக்கம் சொன்னார் மாடசாமி.

சொன்னபடி டிக்கெட் வாங்கித்தந்தார் . கே .                                  சார் பாக்கெட் ஏதோ தரேன்னீங்களே என்றான் ரெ . கே பயங்கர பீஷ்மர் . அவரிடம் பாக்கெட் இப்போதே தயார். ஆனால் இவன் பொது  இடத்தில் தங்குகிறான். அதுவோ ஒரு பூகம்ப பேப்பர் . ஏதாவது கசிந்தது என்றால் ,மா சா , கே உள்ளிட்ட அனைவருக்கும் பயங்கர இடைஞ்சல் ஏற்படும் ;அதனால் , நீ ஊருக்கு போகும் முன் ட்ரைனில் உன்கையில் நானே தருகிறேன் மூச்சு விடாதே. அதே போல் நீ வீட்டிற்கு போகு முன் மாடசாமியை ஸ்டேஷனில் வரச்சொல்லி , கொடுத்துவிட்டு தான் வீட்டிற்கு போக வேண்டும் .இதில் எந்த தளர்வும் வரக்கூடாது கவனம் என்றார் . கரெக்ட்டா நீங்க சொன்னபடி கொடுத்து விட்டு அப்புறம் வீட்டிற்கு போகிறேன் என்று அவருக்கு உறுதியளித்தான்  ரெ

சம்பளம் வாங்கியதும் முதலில் ரூம் வாடகை , மாமி மெஸ் கணக்கு முடித்துவிட்டு பாங்கில் கணிசமான தொகையை கணக்கில் சேர்த்து விட்டு ஒரு 6000/-ரூபாய் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ரெ . ரெ வின் புதிய பெட்டியை சுப்பிரமணி சுமந்து வந்து நிற்க ரயில் மெல்ல நின்றது குண்டூரில் . உரிய பெட்டியில் ஏறியதும் இந்தா கவர் என்று ஜன்னல் வழியே தந்தார் .கே . பெட்டிக்குள் வை என்றார் அவ்வாறே உள்ளே வைத்துக்கொண்டான் ரெ . கவனம் என மீண்டும் எச்சரித்தார் கே . ரெ தலை ஆட்டினான் , அதே சமயம் சுப்பிரமணி கை அசைத்து விடை கொடுத்தார் கஸ்தூரி ரெங்கனுக்கு..        காலை 7.30க்கு திருச்சி ஜங்க்ஷனில் ரெடியாக மாடசாமி நின்றிருந்தார் . கே வின் பாக்கெட் நினைவுக்கு வர அதை கவனமாக மா சாவிடம் தந்தான் ரெ . அவர் கை குலுக்கி பின்னர் பார்ப்போம் என்று விடை பெற்றார்.

வெளியே வந்த ரெ இந்த சீரங்கே சீரங்கே என்று கூவும் பஸ்சில் போகக்கூட்ட்து என்று காத்திருக்க 5 நிமிட இடைவெளிக்குப்பின்  அரசாங்க பஸ் வந்தது அதில் பயணித்தான் .சரியாக 40 நிமிடங்களில் வந்திறங்கி வீட்டுக்கு  சென்றான் கஸ்தூரி ரெங்கன்.

தொடரும் அன்பன் ராமன்

1 comment:

  1. Namarataknev இவருடைய போன் நம்பர் உம்மிடம் இருக்கா?

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...