Friday, June 30, 2023

SAMIs COME TOGETHER -52

 SAMIs COME TOGETHER -52

சாமிகள் சங்கமம் -52

நாட்கள் நகர நகர தேர்வு பயம் அதிகரிக்க ஒரு சிலர் நீங்கலாக பலருக்கும் உள்ளூர ஒரு கவலை அரித்தது, நான் பாஸாயிடுவேனா ? இதுநாள் வரை இப்படி பயம் வந்ததில்லை இந்தப்பாழய்ப்போன PG இல் தெரியாத்தனமா சேர்ந்துவிட்டேன் அதுக்காக FAIL ஆனா யார் ஒத்துக்குவாங்க எல்லாரும் கேலி பேசுவாங்க என்று பட்டினி கிடந்த எலிகளைப்போல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தனர்.5, 6 பேர் எப்போதும் போல சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். . இந்த எலிக்கூட்டத்தின் மனம் சரியில்லை என்று மிக எளிதாக மேடம் கண்டுபிடித்தார். சரி இவர்களை இப்படியே விட்டால் குழம்பித்திரிவார்கள் எனவே மாலை 4.30க்கு வகுப்புகள் முடிந்ததும் அனைவரும்  [ I  PG ]ரூம் எண் 16 க்கு வாருங்கள் -இருக்கு உங்களுக்கு என்று எச்சரித்தார்.

ஐயோ இருக்காமே , சுந்தரம் தப்பிச்சுட்டான் -நாம ? இதுபோல் அவ்வப்போது புளிகரைத்தல் சடசங்கு செய்யவில்லை என்றால்              ஏனோ தானோ என்று திரிவார்கள் . மேடம் பார்முலா ஒரு புளிகரைத்தல் சடங்கு= 30 நாள் சுறுசுறுப்பு.. அந்த வகுப்புக்குப்போகும் பிற 3 பேராசிரியர்களும் மாலை 4.30 -5 வர முடியுமா என்று கேட்க அவர்கள் வருகிறோம் என்றனர். அப்போது பேரா ராஜன் கேட்டார் ஏன் மேடம் நல்லா  தானே படிச்சுக்கிட்டு வராங்க அப்புறம் எதுக்கு இன்னிக்கு மீட்டிங் ?

மேடம்: திடீர்னு ஒரு தொய்வு இருக்கு LATER PORTIONS ஒழுங்கா CONCENTRATE பண்ணாம புத்தி WORKSHOP பத்தியே சிந்தனைல இருக்கு அதுனால ஒரு 6 பேருக்கு SCREW வை TIGHT பண்ணனும் .அவங்களுக்கு வெக்கற TIGHT எல்லாரும்சரி ஆயிருவாங்க வேற ஒண்ணும் இல்ல CRITICAL MONITORING இருக்குன்னாலே எல்லாம் சரி ஆயிடும்..நம்ப எல்லாரும் போனாலே சரி டிபார்ட்மெண்ட்டே நம்பள வாட்ச் பண்ணுதுனு ஒரு caution  வரும் அதுக்கு தான் ,I  am sure , you recognize the value என்றார் மேடம் 

குறித்த நேரத்தில் அனைவரும் வந்தனர் . பேராசிரியர்களை மேடையில் அமரவைத்து கையில் குறிப்பேடுகள் தந்து குறித்துக்கொள்ளச்சொன்னார். ஒரு 4 ஆண்கள் 2 பெண்கள் மேடையின் கீழே நிற்க வைத்து ஏன் நீங்க திடீர்னு சரியா கவனமில்லாமல் இருக்கீங்க? 3 பேராசியர்களையும் தலா 2 பெயர்களைக்குறித்துக்கொள்ள ச்சொன்னார் .உங்கள் தேவை எதுவாயினும் நீங்கள் இந்த பேராசிரியரைத்தான் தொடர்பு கொண்டு பாடசந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். வார துவக்கத்திலும் ,லாஸ்ட் வீக் டே தவறாமல் பேராசிரியரை சந்தித்து பேசுங்கள்..அதைவிட்டுவிட்டு மரத்தடியில் என்ன பேச்சு? இன்னும் கொஞ்சப்பேருக்கும் வைத்தியம் பண்ணனும் பாக்கறேன் நீங்கல்லாம் என்ன பண்ணி க்கிட்டு இருக்கீங்கன்னு. தெரியும். எதுவாக இருந்தாலும் வாய் விட்டு கேட்ட தான் யாராலும் உதவி செய்ய முடியும் இல்லைனா  முடியாது. .தினம் மீட் பண்றவங்க தானே நாமெல்லாம் ? பேச என்ன தயக்கம்.?

கேன்டீன்ல உக்காந்து காது பிஞ்சுபோற மாதிரி வாயடிக்கிறீங்க ,இப்போ என்னவோ பேசா மடந்தை மாதிரி அமைதியா தலை குனிஞ்சு நிக்கறீங்க. படிப்புக்கு உதவ எப்போதும் நாங்க தயார் ANY DOUBT , NEVER HESITATE . TO DISCUSS WITH US , OK ? அனைவரும் தலை ஆட்டி ஒப்புதல் அளித்தனர் .யாராவது ஒழுங்கா இல்லேன்னா எனக்கு அலெர்ட் பண்ணுங்க என்று பேராசிரியர்களிடம் வேண்டுகோள் வைத்து, சரியில்லேன்னா எப்பிடி நிமித்தணு ம் னு தெரியும் பாத்துக்கறேன் னு மிரட்டினார்.

அடுத்த வினாடியே அனைவரும் மேடம் உள்ளிட்ட 4 பேராசிரியர்களையும் சூழ்ந்து கொண்டு சந்தேகங்களைக்கேட்டனர். உடனே விடை கிடைக்க , டெய்லி கேட்டுக்கலாமா என்றனர் அதானே சொல்றோம் என்றதும் அனைவரும் குஷி ஆயினர் .இனிமே பயமில்லாம  படிச்சுடுவோம் மேடம் என்றனர்.  எல்லாம் செயல் இருக்கணும் என மீண்டும் வலியுறுத்தினார் மேடம். பின்னர் விடை பெற்று சென்றனர்.                   தொடரும்   அன்பன் ராமன்

 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...