Wednesday, November 29, 2023

CINE MUSIC SOFT MELODIES

 CINE MUSIC      SOFT MELODIES

மென்மையான பாடல்கள்

திரைப்படப்பாடல்களில் மனதை மயிலிறகால் வருடும் வகைப்பாடல்கள் அவ்வப்போது வருவதும் பின்னர் சில ஆண்டுகளுக்குப்பின்னர் மீண்டும் வருவதும் உண்டு. ஆனால் அவை தோற்றுவிக்கும் ஒரு மன நிறைவும் அமைதியும் அலாதியானவை,. அவை நமக்குப்பிடிக்கும் என்பதைத்தாண்டி அவை நம்மை பீடிக்கும் [அதாவது முற்றாக ஆட்கொள்ளும் என்பதே உணர்த்தப்பட வேண்டிய சிறப்பு என்று எண்ணுகிறேன்]. அப்படி சில பாடல்களை இன்றைய பதிவில் காணலாம்   

1 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே [ஆலயமணி - 1962]

கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி - எஸ் ஜானகி

அற்புதமான கவிதை, எளிய தமிழில் கவிஞர் பாடிய தாலாட்டு. இதை இசைத் தொட்டிலில், அல்ல அல்ல இசைத்தூளியில்   மெல்லிசை மன்னர்கள்,மெல்ல உறங்கவிட்டிருக்கும் நேர்த்தியை என்ன சொல்ல?  மிகக்குறைந்த இசைக்கருவிகள் ஆனால் ஒரே சீராக மிதக்கும் ட்யூன், அதில் ஏற்படும் நளினமான அசைவில் உறக்கம் தழுவிக்கொள்ளும் ஆதிக்கம் இந்தப்பாடலின் அமைப்பின் தனிச்சிறப்பு.

மனம் சஞ்சலம் கொள்ளாமல் வைகைறைப்பொழுதின் உறக்கம் போல உள்ளத்தை வருடுகிறது . பாடல் இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=thookam+un+kangalai+video+song+download&newwindow=1&sca_esv=580785707&sxsrf=AM9HkKm6oMz27ONMTlfG5EabpptnDYr thookkamun kangalai

 2 யார் அந்த நிலவு [ சாந்தி -1965] கண்ணதாசன் -விஸ்வநாதன் ராமமூர்த்தி ,டி எம் சௌந்தர்ராஜன்

சிம்மக்குரலோன் என்ற சிவாஜிக்கென அவரே விடுத்த சவால் விளைவித்த இந்த மேன்மையும் மென்மையும் இணைந்த பாடல் TMS அவர்களின் குரலில்.                  ELVIS PRIESTLY பாணியில், MSV வடிவமைத்து மிகமிக அடக்கி வாசித்த பாடல். டி எம் எஸ்ஸின் [இனி குறைந்த தொனிப்பாடல்கள் மட்டுமே பாட வேண்டி வருமோ என்ற] அச்சத்தை தவிடு பொடியாக்கி மேலும் அவரின் புகழை வெகுவாக உயர்த்திய பாடல் . கிட்டார் சிணுங்கலும் ட்ரம்மின் மென் ஒலியும் இப்பாடலின் முத்திரை. இந்தப்பாடலுக்கென்றே சிவாஜி அவர்கள் கவனம் செலுத்தி சிகரெட் புகைத்தது., இந்தப்பாடல் சிவாஜி மீது ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இப்பாடலை நமக்கு வழங்கிய பெரும் ஆளுமைகள் இன்று நம்மிடையே இல்லை, ஆனால் பாடல் தவழ்ந்துகொண்டே இருக்கிறது பாடல்

இணைப்பிற்கு  https://www.google.com/search?q=YAR+ANDHA+NILAVU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=585225403&sxsrf=AM9HkKkgA0Pex-0lM9wTICqlVdjoehMkGQ%3A17  YAAR ANDHA NILAVU

3 மௌனமே பார்வையால் [கொடிமலர-1966] கண்ணதாசன் - எம் எஸ் விஸ்வநாதன் , பி பி ஸ்ரீனிவாஸ்

ஒரு அமைதியானமுதலிரவுப்பாடல். நாயகி வாய் பேச முடியாத பெண,. எனினும் கணவன் அவள் மீது அன்பைப்பொழிவதான நயமிக்க சொற்கள். PBS குரலின் அமைதியான தொனி பாடலுக்கும் , உணர்வு களுக்கும்  மிக சிறப்பான இசை வடிவில். சொல்லி விளக்குவது எளிதன்று . கண்டு ரசிப்பதே பேரின்பம். பாடல் இணைப்பிற்கு இதோ

https://www.google.com/search?q=mouname+paarvaiyaal+video+song+download&newwindow=1&sca_esv=585342624&sxsrf=AM9HkKlbi_Oqsr6MOPBgyIKsFs7L7f11yw . MOUNAME PARVAIYAL   PLEASE ACCESS THROUGH “GOLDEN CINIMA” LIMK FOR TOTAL SCENE.

பாடல் காட்சியில் ஸ்ரீதர் எவ்வளவு நேர்த்தியாக கோணங்கள் அமைத்துள்ளார். ஒளிப்பதிவு .N .பாலகிருஷ்ணன்

அடுத்து நாம் பார்க்க இருப்பது ஒரு இசைப்புரட்சியின் துவக்கம் என்று பெயரிடும் அனைத்து கட்டமைப்புககும் தகுதியுடைய சிறப்புகள் கொண்ட படம் "பாவ மன்னிப்பு". பாவ மன்னிப்பு ஒரு மைல் கல்., ஆம் தமிழ் திரை இசையை "பா  "க்கு முன் "பா " க்கு பின் என்று பிரிக்கலாம். அதாவது பாடல் வடிவம் , கவிதை நயம், இசையின் ஆளுமை , கருவிகளின் எண்ணிக்கை, ஒருங்கிணைப்பு என்று தமிழ்த்திரை ப்பாடல்களை மாறுபட்ட புதிய யுகத்துக்குள் அழைத்து வந்த பெருமை கொண்டது. அது இந்த படத்திற்கும், இசை அமைப்பாளர்களுக்கும் மாபெரும் மகுடம் சூட்டி , திரை இசையின் தாக்கம் மிக வலுவானது என்பதை ஐயம் திரிபற பறைசாற்றிய பெட்டகம். பாடல்களை  ரசிக்கவே  கூட்டம் கூடியது என்பதே இசை ஏற்படுத்திய தாக்கம் மற்றும் இசை அமைப்பிற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, தவிர்க்கவொண்ணாத சக்திகளாக வடிவெடுத்தனர் என்ற வரலாற்று உண்மையை கல்வெட்டுபோல் பறைசாற்றியது  பாவ மன்னிப்பு .

அவை குறித்த நீண்ட விளக்கங்கள் தர வேண்டியிருப்பதால் பாடல்கள் அடுத்த பதிப்பில் தொடரும்.

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. தனிமையிலே இனிமை காண முடியுமா
    நிலவே என்னிடம் நெருங்காதே
    கண்ணாலே நான் கண்ட கனவே
    போன்ற பாடல்கள் என்றும்
    அழியாத்து

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...