Tuesday, November 28, 2023

SOWING THE SEEDS FOR APT LEARNING

SOWING THE SEEDS FOR APT LEARNING

புரிதலுக்கு வித்திடுதல்

புரிதலுக்கு வித்திடுதல் எனில் எதையோ ஒன்றை விற்று புரிதலை வாங்கிக்கொள்ளுதல் என்று எண்ண  வேண்டாம் . புரிதல் என்பது சீராக வேரூன்றி மரமாக வளர்ந்து வியாபித்து சொந்த முயற்சியில் விஸ்வரூபம் கொள்ளுதல்..எனவே முதலில் புரிதலை புரிந்து கொள்ள வேண்டும். கேட்கின்ற /பார்க்கின்ற/ படிக்கின்ற எதையும் விரைவாக உள்வாங்கும் தன்மை என்பதே 'புரிதல்'. அது எப்போதும் ஆரவாரம், விளம்பரம் ,வாய்ச்சொல் ஜம்பம் இவற்றை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்த முயலாது. புரிந்தவன் அடக்கமாக தெரிவான் எனவே அவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதுவோரே  " ஒன்றுக்கும் உதவாதவன்/ள்"  என்ற பெயருக்கு முற்றிலும் தகுதி படித்தவர்கள்."Staying hollow / shallow, billowing venom and spreading vituperation are integral to idiocy " என்பது நான் அறிந்த உண்மை. விளக்கம் வேண்டுவோர், நல்ல சொல் அகராதி மூலம் விளங்கிக்கொள்ளுங்கள். அப்படியாவது, டிக்ஷனரி எவ்வளவு தேவையானது என்று நேரடியாக புரிந்துகொள்வோமே என்றே இதை ஆங்கில வாக்கியமாகத் தந்துள்ளேன்.

குழந்தைகளுக்கு இந்த புரிதலை 'விதைக்க' வேண்டுமே அன்றி மிரட்டி / அடித்து, துன்புறுத்தி படி என்று காது கன்னம், முதுகு இவற்றை இசைக்கருவிகள் போல திருகுவதோ மீட்டுவதோ -மிஸ்ரசாபு , கண்ட சாபு  , ஆதி தாளம் போன்ற வகைகளை முதுகில் அரங்கேற்றுவதோ மாபெரும் 'அஸ்திவார ப்பிழை : அஸ்திவாரமே பிழையானபின் பின்னாளில் பிழைப்பது எவ்வாறு? எனவே புத்தகங்களின் மீது நாட்டம் கொள்ள செய்தலே புரிதலை விதைக்கும் பயிற்சி/ முயற்சி.இதை பெற்றோரே துவங்கிவைத்தால் முன்னேற்றம் விரைவாகும். இதற்கெனவே, வண்ண மயமான சித்திரங்களுடன் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். அனைத்து புத்தக நிலையங்களிலும் கிடைக்கும் இவையே பன்மொழி களிலும் வெளியிடப்படுகின்றன . எனவே ஒரே புத்தகத்தை 3 மொழிகளில் [ஆங்கிலம் /தாய் மொழி /ஏதேனும் மற்றொரு மொழி] வாங்கிக்கொடுத்தால் முதலில் 'பொம்மை பார்க்கும் , பின்னர் இது என்ன அது என்ன என்று கேட்கும். அப்போது பொறுமையாக விளக்குங்கள் 2 வாரத்தில் வேறு புத்தகம் கேட்கும் .அதே மொழிகளில் வேறு புதிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்து மெல்ல மெல்ல அதே மொழிகளில் உள்ள எழுத்துகளை கொண்ட புத்தகங்களை க்கொண்டு எழுத்துகளை கற்கச்செய்யலாம் . புத்தகத்தின் வழ வழப்பும் , வண்ணமும் குழந்தைகளை கவரும் நல்ல உத்திகள். இப்படி புத்தகங்களை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டுமா என்று புலம்பவோ கலங்கவோ வேண்டாம் , ஏனெனில் இது அறிவின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பு. இதில் சுணக்கம் கூடாது. எத்துணையோ வேண்டாத கதைபுத்தகங்களை வரம் 50/- ரூ[ க்கு வாங்குகிறோமே  , அதை நாம் சிந்திப்பதேயில்லை , அது நமக்கு பொழுதைப்போக்க. புரிதல் என்பது பள்ளியில் சேர்ந்தால் வந்து விடும் என்று மனப்பால் குடிக்கிறவர்கள் லட்சங்களில் கொட்டிகொடுத்து LKG யில் இடம் பிடிக்கிறோம் .

அதுவும் இதுவும் ஒப்பிட பார்ப்பது சரியா என்று வாதம் பேசாதீர்கள் .    லட்சங்களில் கொட்டிகொடுத்து, LKG யில் இடம் பிடித்தாலும் "புரிதல்" என்பதற்கு உத்திரவாதம் உண்டா? என்பதே கேள்வி-  ஏன் ?

புரிதல் என்பது தனி மனித சிந்தனைத்திறன் வாயிலாக வேரூன்றுவது, அப்படி,. வேரூன்றுவதற்கு வழி செய்யாமல், வேறு எதையோ விதைத்துக்கொண்டிருக்கிறீர்கள். தானே நடந்து மெல்ல பாலன்ஸ் செய்து கொள்ளும் குழந்தையை விழுந்து விடாமல் தாங்கிப்பிடிக்கும் செயலுக்கு ஒப்பானது தான் இளம் மனங்களில் "புத்தக நாட்டம் ஏற்பட" முறையான முயற்சிகளை கைக்கொள்ளுதல். சரி தான் போய்யா 'எங்களுக்கு தெரியும்' என்போர், தெரிந்து கொண்டு விட்டமைக்கு நன்றி சொல்லி விடை பெறுகிறேன்   

நன்றி அன்பன்  ராமன்

3 comments:

  1. புரிதலே இல்லாமல் மதிப்பெண்களைப்பெற்றுக்கொடுக்கும் பள்ளிகள் ஈரோட்டில் பல உள்ளன.
    பாடத்தை சொல்லிக்கொடுக்காமலே பாராமல் கட்டாயமாகப் படிக்க வைத்து மதிப்பெண்களை பெற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்துவிட பெற்றோர்கள் லட்சத்தை கொட்டத் தயாராயிருக்கிறார்கள்.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...