Friday, December 15, 2023

HARD EFFORT

 HARD EFFORT

கடின முயற்சி 

பல கட்டங்களில் 'அழுதாலும் தொழுதாலும்' என்ற தென் பாண்டி ச்சீமையின் முது மொழியே செயல் படுகிறது. அதன் உள்ளார்ந்த பொருள் முயற்சி தனிமனிதர் தர வேண்டிய பங்களிப்பு - அதை பிறர் வழங்க முடியாது என்பது சொல்லப்படுகிறது.மாணவர் சுய முயற்சியை விடுத்து வேறு வகை உத்திகளை பயன் படுத்தி மார்க் ஈட்ட முடியும் ; ஆனால் கொலைக்குற்றவாளி போல எப்போது வெந்தபியுமானாலும் பிடி படலாம் , எந்த உயர் நிலையிலும் [கல்வியோ / வேலையோ பறிபோகலாம் , கம்பி என்னும் நிலை கூட ஏற்படலாம் ] எனவே சொந்த முயற்சியும் பங்களிப்பும் முழு வெற்றியை தராது போகலாம் .ஆனால் ஒருபோதும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தாது. மேலும், எந்த மதிப்பெண்ணும் என் சொந்த திறனே என பெருமை கொள்ள இயலும்.

 குறுக்கு வழியில் பணம் செலவிட்டு -வஞ்சிக்கப்படலாம்.  உதாரணத்திற்கு ஊழல் ஊழியன் உங்களுக்கே நியாயம் கற்பிப்பான். சார் 66 96 என்று பதிவிட்டு பிடிபட்டால் வேலைப்பளுவினால் நிகழ்ந்த தவறு என்று மன்னிப்புக்கோரலாம். 3 மார்க் 6 மார்க் இதையெல்லாம் எப்படி சார் 96 னு பதிவிட முடியும் - பிடி பட்டா வேலையும் போய் -பாளையங்கோட்டை- திருச்சி, வேலூர் னு ஷேத்ராடனம் போக வேண்டி வரும். மாமனார் காரி துப்புவார் சார்.  ஏற்கனவே மாப்பிளை லூசுப்பய னு ஊர் பூரா சொல்லிக்கிட்டிருக்கார், இன்னம் இந்த மாதிரி ஊழல் மாட்டுனா -வேலை, சம்பளம் பென்சன் எல்லாம் அவுட்டு அப்புறம்மொட்டை அடிச்சுக்கிட்டு திருச்செந்தூர் கோயில்ல் முன்னால பண்டாரங்களோட போய் வரிசை உக்கார்ந்து ஹர ஹர சிவனே னு கத்தி க்கிட்டு வெய்யில் உக்காரவேண்டி வரும்.

இதெல்லாம் தேவையா சார் என்று ரெண்டு மூட்டை புளியை உங்கள் வீட்டு water டேங்கில்    கீழிருந்த படியே கரைப்பார்.அப்போதும் நம்மவர் அசருவதில்லை [மாறாக போன வருஷம் எங்க ஆபிஸ் நண்பர் பொண்ணுக்கு 97.08 % னு மார்க் லிஸ்ட் வாங்கியிருக்காரே என்பார்] . அந்த எழுத்தர் "சார் 35 லட்சம் -40-42 லட்சம் வீசுனா நானே மார்க் லிஸ்ட் தருவேன். அப்ப மாட்டிக்கிட்டாலும் பொண்டாட்டி  பிள்ளைங்களை  அளகா செட்டில் பணி விட்டுட்டு ஒரு 7 வருஷம் கம்பி எண்ணினாலும் குடும்பம் safety யா இருக்கும்ல, .நீங்க பேசற தொகைக்கெல்லாம் போலி மார்க் லிஸ்ட் தான்  கிடைக்கும் , ஈஸியா மாட்டிவிட்டுடும் அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது, எங்கயாவது புண்ணாக்கு வியாபாரம் பண்ணி பொழைக்க வேண்டியது தான் என்று விளக்குவார்.   அப்படின்னா புண்ணாக்கு தான் விக்கணுமா?

ஆமா சார் அதுவும் வேப்பம் புண்ணாக்கு; வேற ன்னா நெறைய பேர் வருவாங்க கண்ணாலே  யே  இவர் தான் மார்க்லிஸ்ட் னு புருவத்தை ஆட்டி ஆட்டி ஊர் பூரா பரப்பு வானுங்க - உங்க கிட்டையேவந்து  யார் கிட்ட பணம் தந்து மாட்டிக்கிட்டீங்க சொன்னீங்கன்னா வேற ஆளை ப் பாத்துருவோம் னு நோகடிப்பாங்க என்று ஊழல் குமாஸ்தா பெரிய தொகைக்கு அடி  போடுவார்

எனவே குழந்தைகளுக்கு எந்த தவறான உத்திரவாதமும் தறாதீர்.  உழை த்துப்படி , என்றுணர்த்தி  நேர்மையாக செயல் படுவதன் வலிமையை புரிய வையுங்கள் . வறட்டு கௌரவமும், திருட்டுத்தனமும் கம்பீர வாழ்வுக்கு வழிசெய்யாது. உழைப்பின் வழியினால் என்ன கிடைக்குமோ அதைக்கொண்டே முன்னேறலாம். முன்னேற்றம் என்பது குறிப்பிட்ட கல்வியினால் ஏற்படுவதில்லை. நேர்மையான உழைப்பு முன்னேற்றம் தரும்.இந்த புரிதல் செம்மையான வாழ்வுக்கு அடித்தளம் என்பதை சிறு வயது முதல் புரிய வைத்தால் சரியான வழிமுறைகளுக்கு அவர்களே திரும்ப உந்து சக்தியாகும், உழைப்போம் வெல்வோம் .

நன்றி அன்பன் ராமன் 

1 comment:

  1. முயற்சி திருவினையாக்கும்
    முயன்றின்மை இன்மை புகுத்திவிடும்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...