Wednesday, July 3, 2024

SM SUBBIAH NAIDU-4

 SM SUBBIAH NAIDU-4

SM சுப்பையா நாயுடு -4

நீல வண்ண கண்கள் இரண்டு [வீராங்கனை -1964] எஸ் எம் எஸ், கேஜே  யேசுதாஸ் ,பி சுசீலா

மிகச்சிறந்த ஒரு டூயட் வகைப்பாடல். இளம் யேசுதாஸ் குரலில் மெல்ல துவங்கி பீடு நடை போட, சுசீலா , என்று ரம்மியமாகஆலாபித்து நுழைய , பாடல் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே, எம் எஸ் வியின் ஸ்டைல் கூறுகளையும் காணலாம். நல்ல அமைதியான இசை, நளினமான போங்கோ தாளம், அவ்வப்போது வீணையின் நாதம்--மீண்டும் கேட்டால் என்ன என்று தோன்ற வைக்கும் பாடல்.. சிறப்பாக வடிவமைத்த எஸ் எம் எஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர் 

ரசிக்க இணைப்பு இதோ https://www.google.com/search?q=neela+vanna+kangal+irandu+video+song+download&newwindow=1&sca_esv=6de66992da2ba51e&sca_upv=1&sxsrf=ADLYWIIfIgWTf1ax_o3-pI6duL0Cr6tguw%3A17198422156

தொட்ட இடம் துலங்க [முத்துச்சிப்பி-1968  ] வாலி, எஸ் எம் எஸ் சீர்காழி கோவிந்தராஜன்

கோயிலில் இருக்கும் அம்மனை வணங்கி துவங்கும் பாடல். அதே காட்சியில் ஜெயலலிதா கோயிலுக்கு வரும்போது பாடுவதாக காட்சி. பெரும் வெற்றி பெற்ற பாடல். மேலும் பின்னாளில் இப்பாடல் ஜெயலலிதாவின் அரசியல் மேடைகளில் பெரிதும் பிரபலம் . கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=thotta+idam+thulanga+varum+song&newwindow=1&sca_esv=79ff9b4c6b5b9f67&sca_upv=1&sxsrf=ADLYWILiUObhAyChZuaUlDH6-L6HA4q1Kg%3A1719287845016&ei=JUB6Z MUTHUCHIPPI  1968 VAALI SMS S G

நீராழி மண்டபத்தில் [தலைவன் -1970] 

எம் ஜியார் படத்தில் காதல் பாடல் நீரில் அமிழ்ந்து பாடுவதாக அமைந்த பாடல் . இளம் எஸ் பி பாலசுப்ரமணியன் , சுசீலாவுடன் சேர்ந்து பாடியுள்ளார். காட்சிக்கான இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=6XlIotFlslo NEERAAZHI MANDAPATHTHIL THALAIVAN 1970

சில முக்கிய தகவல்கள் 

நன் துவக்கத்தில் சொன்னது போல், திருஎ ஸ் எம் எஸ் அவர்கள் தமிழ் சினிமாவில் வெகுகாலம் கோலோச்சியவர்,பலருக்கு ஆசான் சிலருக்கு ஆரம்ப கால வாழ்வாதாரம் [திரு கோபாலகிருஷ்ணன்[போங்கோ/தபலா கலைஞர், திரு எம் எஸ் விஸ்வநாதன், திரு ஜி,கே வெங்கடேஷ் போன்றோர் எஸ் எம் எஸ் அவர்களின் உதவியால் ,கோவை ஜுபிடர் நிறுவனத்தில் சிறுசிறு இசைத்துறை பணியாளர்களாக வாழ்வை துவக்கி யவர்கள்.                    ஒரு கட்டத்தில் பிற நகரங்களில் இருந்த தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை நோக்கி நகர வேண்டிய சூழல் ஏற்பட்டதும் பல நிறுவனங்கள் தத்தம் கம்பெனி களை  கலைத்துவிட்டு, மூலதனத்தை க்கொண்டு சென்னையில் கால் பதிக்க துவங்கினர். அதாவது ஊழியர்கள் அனைவரும், [திரு எஸ் எம் எஸ் உள்பட] ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இது ஒரு முக்கிய நிகழ்வு.

அப்போது விஸ்வநாதன் 17-18 வயது நபர். உரிமையாளர் [ஜுபிடர் சோமு] அவர்களிடம் , எஸ் எம் எஸ் ஒரு வேண்டுகோள் வைத்தார். ஐயா நான் ஏதாவது கம்பெனியில் சேர்ந்து விடுவேன்.ஆனால் இவன் சிறுவன், இவனை யாரும் கம்பெனிகளில் வாய்ப்பு தரமாட்டார்கள்.

ஆனால், இவனிடம் ஆழ்ந்த இசை ஞானம் இருக்கிறது. சொல்லப்போனால், நமது கம்பெனியின் சில  வெற்றிப்பாடல்கள் -இவன் தந்த இசைக்குறியீடுகளால் தான் பெரும் வெற்றி பெற்றன. எனவே இவனை மட்டுமாவது சென்னைக்கு கூட்டிச்சென்று வாழ்வு கொடுங்கள். பாவம் வேறு வழியில்லாதவன் என்று தெளிவாகப்பேசி, எம் எஸ் வி என்ற நபர் துவண்டுவிடாமல் காப்பாற்றினார் எஸ் எம் எஸ்.

அந்த விஸ்வநாதன் தான் பின்னாளில் மெல்லிசை மன்னர் என்று பெரும் புகழ் கொண்டவர். அவர் நன்றி மறவாதவர் என பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பின்னாளில் எஸ் எம் எஸ் தம்பதியினரை எம் எஸ் வி தன்  பொறுப்பில் பாராமரித்ததுடன் , அவ்விருவரின் இறுதிச்சடங்குகளையும் தனது கடமையாக நிறைவேற்றியவர் எம் எஸ் விஸ்வநாதன். இவ்வாறு அந்நாளில் இசைத்துறையில் பெரும் ஆளுமைகளும், போட்டியும் இருந்தது ஆனால் பொறாமை இல்லாமல் இயங்கினர்.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE STENOGRAPHER

  THE STENOGRAPHER Another category of youth, looking for jobs in government offices –either provincial or national were stenographers. Th...