Monday, September 2, 2024

MUSIC DIRECTOR: AM RAJA

  MUSIC DIRECTOR:  AM RAJA

இசை அமைப்பாளர் எம் ராஜா

பலரும் எம் ராஜாவை நல்ல பாடகராகவே அறிந்திருந்த வேளையில், ஸ்ரீதர் என்ற அசுரன் அவரை இசை அமைப்பாளர் நிலைக்கு உயர்த்தி 3 படங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பினையும் அளித்தார். ஸ்ரீதரின் கணிப்பு மிகச்சரியானது என்றே நிரூபித்தார் எம் ராஜா. இசை அமைத்த அனைத்திலும் நல்ல ராகங்களை, இசை வித்தகங்களையும் நேர்த்தியாக உபயோகித்து நல்ல பெயர் பெற்றார். ஆனால் சிறிதும் அனுசரணை இன்றி பலருடனும் வாதிட்டு வாய்ப்புகளை [பாடும் வாய்ப்பு உட்பட]  இழந்தார். ஒரு 10+ ஆண்டுகள் முற்றிலும் மறக்கப்பட்டு மீண்டும் ரங்கராட்டினம் படத்தில் பாடி தன்னை நிரூபித்தார்.ஆயினும் வாய்ப்புகள் இல்லாமல் மங்கிப்போனார் .

ஆசையினாலே  மனம் [கல்யாண பரிசு -1959 ] பட்டுக்கோட்டை / எம் ராஜா குரல் எம் ராஜா, சுசீலா

அதி அற்புதமான டூயட் இளம் வயதினர் என்பதை சொல்லாமல் சொன்ன காமெரா எப்போதும் ஓடிய படி காட்சியை பதிவிட்ட வின்சென்ட் சுந்தரம், படத்தின் ஹை லைட் . சுசீலாவுக்கு பாடும் வாய்ப்பு அதிகம் . ராஜா ஒவ்வொரு சொல் பாடிய புதுமை அதுவும் ஆங்கிலச்சொற்கள் sorry really , I SEE என்று ஹைக்ளாஸ் காதல். அனைத்துப்பாடல்களும் வெற்றி பெற்றன. கேட்டு மகிழ இணைப்பு 

https://www.google.com/search?q=tamil+movie+kalyana+parisu+asaiyinaale+manam+video+song+download&newwindow=1&sca_esv=e30d006cec4fe005&sca_upv=1&sxsrf=ADLYWILkhzveBTHU7MqOO78xZvVj asaiyinale manam ps amr

துள்ளளாத மனமும் துள்ளும் [கல்யாண பரிசு -1959] பட்டுக்கோட்டை , ஜிக்கி

மற்றுமோர் இனிய கீதம்

துள்ளாத மனமும் துள்ளும் . பட்டுக்கோட்டையாரின் பாடல் எம் ராஜா  இசையில் , ஜிக்கி குரலில் ஒலித்த கணம் . அந்நாளில் வெற்றி பெற்ற நளினம். குறிப்பாக இசையின் பண்பினை பேசுவது போல் காதலை வெளிப்படுத்த முயன்ற பெண் [விஜய குமாரி], உடல் நலம் இன்றி வீட்டில் இருக்கும் நாயகன் [ஜெமினி கணேசன்] மீது நாட்டம் கொண்டு பாடியுள்ள பாடல். நல்ல இசை , இசைக்கூறுகள் நேர்த்தியானவை , கேட்டு மகிழ இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=tamil+movie+kalyana+parisu+thullaadha+manamun+video+song+download&newwindow=1&sca_esv=e30d006cec4fe005&sca_upv=1&sxsrf=ADLYWIL8qckn_2n3zDHYGywxwsX

Kalyanaparisu 1959 thulladha manamum –  pattukkottai amr   jikki

கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை [விடிவெள்ளி -1960] எம் ராஜா , எம் ராஜா, திருச்சி லோகநாதன் பி சுசீலா

குதூகலமும் கும்மாளமும் நிறைந்த பாடல்.  மிகவும் நேர்த்தியான நடை மற்றும் வேகம் . அதிலும் குறிப்பாக கைகளை தட்டிக்கொண்டு பாடும் அழகு வெகு சிறப்பு. 4 பேர் பங்குபெற்ற பாடல். இன்று கேட்டாலும் மங்காத இளமை எம் ராஜாவின் இசையில் . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=koduththu+paar+paar+video+song+download&newwindow=1&sca_esv=8e99831eb58f4f25&sca_upv=1&sxsrf=ADLYWIL0ce5-fDNa068xTv-8j4sq8lMmEQ%3A1725011082339&e VIDI VELLI AM R PS T LOGANATHAN

then nilavu 1961 amr 

ஊரெங்கும் தேடினேன் [தேன் நிலவு- 1961] . எம் ராஜா இசையில் ஜிக்கியின் குரலில் பாடல்  

படகில் பயணித்து பாடினாலும், உள்ளார்ந்த சோகம் இழையோடும் பாடல். பலரையும் கவர்ந்த எளிமையான பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=tamil+moviethen+nilavu+oorengum+thedinen+video+song+download&newwindow=1&sca_esv=e30d006cec4fe005&sca_upv=1&sxsrf=ADLYWIIZGv0Sv8CrBPoHjMEHMXwUzCn jikki

காலையும் நீயே மாலையும் நீயே [தேன் நிலவு -1961] எம் ராஜா இசை மற்றும் குரல் உடன் பாடியவர் எஸ் ஜானகி..

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் அந்த 60 களிலேயே ஜானகியின் குரலும் திறனும் நன்குஅறியப்பட்டவை தான். அவரது குரல் சிலருக்கே வெகுவாகப்பொருந்தும்  என்பதால் மிகக்குறைந்த      ஆனால் மிகச்சிறந்த  பாடல்களை ப்பாடியவர் ஜானகி. சிலர் ஜானகி யை தாங்கள் தான் கண்டுபிடித்தது போல் பேசுவது நகைப்பிற்குரியது. இப்பாடலில் ஜானகி அவர்களுக்கு ஹம்மிங் மட்டுமே அதாவது கடைசி முறையாக பல்லவி பாடப்படும் வரை. அதிலேயே புரிந்து கொள்ளலாம் அந்நாளில் இசை அமைப்பில் குரல்கள் தேவை அடிப்படையில் தான் பயன் படுத்தப்பட்டன.. இப்பாடல் எம் ராஜாவின் பெருமையை வானளாவ உயர்த்தியது. . மிகவும் மென்மையான ஆக்கம். கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=tamil+moviethen+nilavu+kaalaiyum+neeye+maalaiyum+neeye++video+song+download&newwindow=1&sca_esv=e30d006cec4fe005&sca_upv=1&sxsrf=ADLYWII9V6OZvAqP50mp-J amr janaki hums and ends in pallavi

https://www.google.com/search?q=tamil+moviethen+nilavu+kaalaiyum+neeye+maalaiyum+neeye++video+song+download&newwindow=1&sca_esv=e30d006cec4fe005&sca_upv=1&sxsrf=ADLYWII9V6OZvAqP50mp- gopal sapthaswaram

ஒரு நல்ல திறமைசாலி, முன் கோபம் மிக்கவர், எளிதில் சண்டையை துவக்குபவர். அதனாலேயே வாய்ப்புகளை இழந்தவர். துயரமான வகையில் ரயிலில் அடிபட்டு மரணித்தார் எம் ராஜா .

அன்பன்

ராமன்

1 comment:

  1. I too like his songs. But there was a difficulty for him to pronounce ல கரம் , ள கரம் &
    ழ கரம்.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...