LET US PERCEIVE THE SONG -8
பாடலை உணர்வோம்-8
Nnaan unnaicherndha
selvam [kalaikoil-1964]
நான் உன்னைச்சேர்ந்த
செல்வம்
[கலைக்கோயில்-1964
]
கவிஞர் கண்ணதாசன்,
விசுவநாதன்
-ராமமூர்த்தி
, பி
பி
ஸ்ரீனிவாஸ்,
பி
சுசீலா
1964
நான் பலமுறை
வலியுறுத்தி
வந்த
தமிழ்திரையின்
மிகப்பெரும்
பாடல்
ஆண்டு
ஒன்றை
தேர்வு
செய்யச்சொன்னால்
உடனே
1964ம்
ஆண்டினை
சற்றும்
தயங்காமல்
குறிப்பிடுவேன்.
எண்ணற்ற படங்கள்,
ஒவ்வொன்றிலும்
8-10 பாடல்கள்,
அனைத்தும்
வேறுபட்ட,
மாறு
பட்ட
தோற்ற
அமைப்புகள்,
எனினும்
95% க்கு
குறையாமல்
வெற்றிகண்டு
இன்றும்
முழங்கிக்கொண்டிருப்பன.
ஆக,
சிறந்த
பாடல்கள்/படங்கள்
என
பார்க்கப்போனால்
1964 ம்
ஆண்டினை
புறக்கணிக்கவே
இயலாது.அந்த
குறிப்பிட்ட
ஆண்டில்
தமிழ்
சினிமாவின்
விஸ்வரூபத்தோற்றம்
தனியாகவே
பேசப்படும்
அளவிற்கு,
தகுதியும்
தகவலும்
நிறைந்தது.
அதற்கெனவே-
ஒரு
பதிவை
வெளியிட்டாலும்
தவறல்ல.
இன்றைய இளைய
தலைமுறை
உண்மை
அறியாமல்
ஏதோ
தமிழ்நாட்டில்
ஹிந்திப்பாடல்கள்
கேட்டு
தான்
பொழுது
புலர்ந்தது
எனும்
அளவிற்கு
பிதற்றுவதைப்பார்த்தால்
என்ன
துணிவில்
பேசுகிறார்கள்
என்ற
ஆய்வுக்கு
வழி
பிறக்கும்.
உடனே
தோன்றும்
விளக்கம்
-அறியாமையின்
உளறல்
இது
என்பது
தான்.
உளறல்களை விலக்கி
விட்டு
உண்மைக்குள்
நுழைந்தால்
வண்ணப்படங்கள்
தமிழில்
பெருவாரியாகக்களம் காணத்துவங்கியது , ஜெமினி
நிறுவனத்தாரின்
வண்ணப்பட
செயலாக்கக்கூடம்
[கலர்
லேப்]
ரசிகர்
கள்/
தயாரிப்பாளர்கள்
அனைவரையும்
ஈர்த்ததும் [1964]
இவ்வாண்டிலிருந்து
தான்
[உபயம்:
காதலிக்க
நேரமில்லை]
இவ்வளவு சிறப்பு
கண்ட
1964 இல்
வெளிவந்த
படம்
"கலைக்கோயில்". பாடலில் உச்சமும்
, வசூலில்
வீழ்ச்சியும்
கண்ட
படம்..
நல்ல
கதை
அம்சம்
கொண்ட
படம்
, காலத்திற்கு
முந்தைய
[ahead of times ] என்ற பெருமையும் அதனாலேயே வசூலில்
தோல்வியும்
அடைந்தது.
நமது களம்
பாடல்
நான் உன்னைச்சேர்ந்த
செல்வம்
[கண்ணதாசன்]
வி
ரா
, பிபி
ஸ்ரீனிவாஸ்,
பி
சுசீலா
குரல்கள்
கவிஞரின் வளமான
சொல்லாடல்,
மங்கலமான
கவிதை,
இறுதியில்
சிலேடை
நிறைந்த
மங்களம்
-இது
பாடலின்
சிறப்பு.
இந்தக்கவி
நினைத்தவுடன்
பாடும்
வானம்பாடி,
இலக்கியம்
இவன்
எண்ணத்திலும்,
இசைச்சந்தம்
இவன்
சொற்கட்டிலும்
இருத்தல் நாம் செய்த
பாக்கியம்.
மிகவும் மென்மையான
கருத்துப்பதிவு
, பாடல்
நெடுகிலும்
தேர்ந்த
சொற்களின்
வியாபகம்
, கவிஞரின்
ஆளுமை
கருத்திலும்
சொல்லிலும்
விரவிப்படர்வதைக்காணலாம்.
அதிலும் இப்பாடல்
ஒரு
தனி
ரகம்
இதே
படத்தின்
பல
ஆர்ப்பாட்டங்களுக்கிடையே
அமைதியாய்
மலர்ந்த
ஒற்றை
டூயட்
வகைக்கவிதை.
முதலில் பாடல்
. பல்லவியில்
இருவரின்
நிலைப்பாடு
வெளிச்சம்
"நான்
உன்னை
சேர்ந்த
செல்வம்
, நீ
என்னை
ஆளும்
தெய்வம்
இனி என்ன சொல்ல
வேண்டும்
, நம்
இளமை
வாழ
வேண்டும்" சிறிய ஆனால்
சீரிய
கருத்து
சரணம் 1
நம் காதல்
உள்ளம்
கலைக்கோயில்,
இரு
கண்கள் கோயிலுக்கு வாசல்,
நமதாசை கோயில்
மணி
ஓசை,
அதில்
அன்பு
வண்ண
மலர்
பூஜை, அதில் அன்பு வண்ண
மலர்
பூஜை,
பல்லவி
சரணம் -2
ஸ்ரீ ராமன்
நெஞ்சில்
நின்ற
சீதை
, மலர்
கண்ணன்
தேடிக்கொண்ட
ராதை
,
மனம் உருகி
சூடித்
தந்த
கோதை,
ஒன்று
சேர்ந்து
வந்தது
இந்தப்பாவை
பெண்
உன் விரல்கள்
என்
அழகை
மீட்டும், உன்
விழிகள்
என்
உயிரை
வாட்டும்
[நாயகன் வீணை இசைப்பவன் என்பதை உணர்த்தும் சொற்கள்]
உன் குரலும்
என்
பெயரை
கூட்டும்
அதில்
கோடி
கோடி
இன்பம்
காட்டும், அதில் கோடி
கோடி
இன்பம்
காட்டும்
பல்லவி
சரணம் -3
உன் அச்சம்
நாணம்
என்ற
நாலும்
[4]
என் அருகில்
வந்தவுடன்
அஞ்சும் [5]
இதழ் பருகும்
போது
நெஞ்சம்
ஆறும் [6]
அது பாடும்
இன்ப
ஸ்வரம்
ஏழும் [7]
அது பாடும்
இன்ப
ஸ்வரம்
ஏழும்
[7]
இறுதி பல்லவியில் இரு
குரல்களும்
இணைந்து
ஒலித்த
பின்
இசைக்கருவிகள்
மெல்ல
அடங்க
கண்ணெதிரே
இருந்த
இன்பம்
மறைந்த
உணர்வு
தரும்
இப்பாடல்
இப்பாடலின் கவிதை
நயம்,
இசை
நயம்,
கருவிகள்
குறித்த
பிற
தகவல்கள்
வரும்
பதிவில்.. அதற்கிடையில் பாடலை
பலமுறை
கேட்டு
ம
கிழ்வீர்
நன்றி
அன்பன் ராமன்
Your memory is phenomenal. The song by balamurali krishna is unforgettable. Thanks. RK
ReplyDelete