RENGAA VENDAAM
ரெங்கா வேண்டாம்...
காலை 7.00 மணி வீடே திமிலோகப்படுகிறது . என்ன? ஆம் ½ ஆண்டு பரீட்சை மார்க் லிஸ்ட் வந்துவிட்டது அப்பா ரெங்கசாமி
[ரெங்கு] கொந்தளிக்கிறார், காபி யுடன் மனைவி மைதிலி நிற்க , காபி காபி என்று அலையும் ரெங்கசாமி கோபம் கொண்டு காபி யாவது பீப்பியாவது -எங்கே அந்தக்கழுதை ?
மைதிலி --‘யாரு’?
‘அவன் தான் அந்தக்கிராதகன்’ - ரெங்கு
‘ஐயோ காலங்கார்த்தால கிராதகன் , பராசரன் ன்னா புரியல்ல’ என்றாள் மைதிலி
‘உனக்கு ப்புரியாது அந்த தடியனுக்கு சோறுபோட்டு பாராட்டி ,
சீராட்டி கெடுத்துவெச்சிருக்க எங்க அந்தக்கழுதை’
?
‘ஐயோ யாரைத்தேடறீங்க;’ என்றாள் -மைதிலி
‘அவன் தான் சந்தானம்’ -ரெங்கு ‘அவன் மாடிலே படிக்கிறான்’ -மைதிலி
‘ஊக்கும் படிக்கிறான் -சும்மா நடிக்கறான்’
-ரெங்கு
“டேய் நானும் ரொம்ப நாளாவே பாக்கறேன் -எல்லாரையும் சீறிப்பாயற , நீ என்ன சிங்கம் புலியா? இல்ல மனுஷனா” என்றார் தாயார் கோமதி.
.
‘ நீ எங்க குறுக்க வர’? -ரெங்கு.
“வீட்டுல என்ன சிக்னல் மாட்டிவெச்சிருக்கியா? , குறுக்க வர, நெடுக்க வர னு ஏதோ சொல்றியே , அப்பிடி எல்லாம் பேசாத .
இப்ப எதுக்கு சந்தானம்”?
‘அந்தக்கழுதைக்கு மார்க் வந்திருக்கு -- எவ்வளவு னு பார்த்து அவனைஅடி நிமிர்த்தணும்’
.
“ரெங்கா வேண்டாம் சொன்ன கேளு”
.- தாயார் கோமதி.
.‘நீ சொல்லி நான் கேட்கணுமா’?
-ரெங்கு
“நீ எப்ப, யார் பேச்சை ஒழுங்கா கேட்டிருக்க சொல்லு” ? “உன் அழிச்சாட்டியம் தாங்காம வெங்கடாச்சாரியார் [உங்க அப்பா] ராவோட ராவா ஊரை விட்டே போய்ட்டார்”
“. ராவோட ராவா வா”-? மைதிலி
“ஆமாம் ஒரே நாள் ல கோவிந்தராவ் , கோபால் ராவ் , இவர் ஓடிப்போனதுனால ராவோட ராவா ஓடினார் னு எல்லாருக்கும் தெரியும். எங்கயோ திருப்பதில இருக்கார் னா சீரடில இருக்கார் னா தேடி தேடி அலைந்துதான் மிச்சம்” என்று சொல்லும் போதே "ப்ரிச்” என்று சத்தம் கோமதி மாமி மூக்கை உறிஞ்சி கோபத்தை /சோகத்தை காட்டினாள்.
‘இப்ப நல்லவன் மாதிரி அவனை ஒதைக்கணும் இவனைக்கொல்லணும் னு அலையற .
அப்பவே உன்னைக்கொன்னிருந்தா இந்த தொல்லையே இருந்திருக்காது. ஒரு சாவோட போயிருக்கும்’
. ‘அப்பா வைக்காணும் ,
நீ பேரனையும் தொலைச்ச்சுடு வ போல் இருக்கு
.. வேண்டாம் கால வேளை ல குழந்தைகளை துன்புறுத்தாதே’ என்றார் தாயார் கோமதி.. தெரியாத்தனமாக கீழே வந்த சந்தானம் வசமாக சிக்கினான் அப்பாவிடம் .
டேய் கணக்குல எவ்வளவு? இந்தக்கேள்வியை 11 ஆண்டுகளாக எதிர்கொண்ட சந்தானம் பனங்காட்டு நரி
“புதுசா என்ன வந்துடும் அதே 32 தான். அதுக்கு மேல இருந்தா நானே சொல்லிருப்பேனே” என்று ஆடிட்டர் மாதிரி பேசினான்..
ரங்குவுக்கு கோபம் தலைக்கேறியது. ஏண்டா நாயே இங்கிலீஷிலே ?
சந்தானம் - 46
அப்பா நீங்க இங்கிலீஷிலே எவ்வளவு. ?-சந்தானம்
“அப்பல்லாம் 60 மார்க்கே போட மாட்டான் ;
பெஸ்ட் மார்க்கே
62-63 தான். .100 லாம் கிடையாது”.
“சரிப்பா நீங்க 63 வாங்கிருக்கீங்களா?” -சந்தானம் கண்ணாடி யணிந்த ஆந்தை போல் பேந்த பேந்த விழித்தார் ரெங்கு .
‘ரெங்கு வேணாம் வேணாம் னு அடிச்சுண்டேனே -கேட்டியா? இப்ப பிள்ளையாண்டான் கேக்கறான் சொல்லு’ என்றார் கோமதி.
. “எதுக்கும்மா பழசையெல்லாம் பேசணும்”. -ரெங்கு.
.
‘ஏன் உனக்கு கூச்சமா இருக்கா. நான் சொல்றேன் ;அந்த சீனிவாசய்யருடைய பிள்ளைகள்
3 அண்ணன் தம்பிகளோடும் படித்த பெருமை உனக்கே .
8ம் க்ளாஸ் ல ஐந்தாண்டு திட்டம் மாதிரின்னா உக்காதிருந்த;அதான் அண்ணா-தம்பி எல்லோரோடும் படிச்ச ,
வெக்கமா இல்லை உனக்கு’ என்றுபொரிந்தாள் கோமதி அம்மாள்.
அப்போது வாசலில் சாமீ , ஏ ரெங்கசாமி என்று குரல் கேட்டது. என்னது ஏ-ரெங்கசாமியா-- என்று குடும்பமே அதிர்ந்தது..
ஏ ரெங்கசாமி, என்ற அந்த
"உரிமைக்குரலை"க்கேட்டு குடும்பமே வாசலுக்கு விரைந்தது. பச்சை சட்டை வெள்ளை வேட்டி, நெற்றியில் விபூதிப்பட்டை நடுவில் வட்ட குங்குமம் இருபுறமும் 3 வரிசை சந்தனக்கீற்று வாயில் வெற்றிலை , வலது கையில் ப்ரேஸ் லெட்,
கை இரண்டும் பின் புறம் ,உடலும் கையும் சேரும் இடத்தில் பாய் ஜமுக்காளம் ,
பாக்கட்டில் தடித்த பிசுக்கேறிய புத்தகம் .
மந்திரவாதி போல் தோற்றம் . இடது கையில்?
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment