Tuesday, November 25, 2025

LET US PERCEIVE THE SONG -48

LET US PERCEIVE THE SONG -48

பாடலை உணர்வோம் -48

ஆலமரத்துக்கிளி [பாலாபிஷேகம் -1977] மருதகாசி , ஷங்கர் -கணேஷ் , வாணி ஜெயராம்

எத்துணை பேருக்கு இப்பாடல் தெரியும் அல்லது நினைவில் இருக்கும் -தெரியவில்லை . ஆனால் சந்தேகமில்லாமல் ஒரு தரமான கிராமீய மணம் கொண்ட பாடல் அதிலும் அசல் அக்மார்க்        தெம்மாங்குப்பாடல் 1977 ல் சங்கர்கணேஷ் இசை அமைத்து வாணி ஜெயராமின் குரலில் பெரிதும் முழங்கிய பாடல். இப்பாடல் இருட்டடிக்கப்பட்டதா? தெரியவில்லை. னால் எப்போது கேட்டாலும் சுவை மாறாத தெம்மாங்கு .

கிராமியப்பாடல் என்பதன் அடையாளம் குறித்த பால பாடம் இப்பாடல் என்று சொல்லலாம்

சரி பாடல் வரிகளைப்பார்த்தால் எதுவும் புரிந்துகொள்ள இயலாது. அதாவது சொற்களை நீட்டி முழக்கி ப்பாடி கிராமீய அமைப்பை மேலிட வைத்துள்ளது இசை அமைப்பு .

பாடல் வரிகளை பார்ப்போம்

 (Pallavi)

ஆல...மரத்துக் கிளி

ஆளப் பார்த்து.. பேசும் கிளி..

வாலவயசுக் கிளி

மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

: ஆல...மரத்துக் கிளி

ஆளப் பார்த்து பேசும் கிளி..

வாலவயசுக் கிளி

மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

 

 (Charanam 1)

முத்து முத்தா பனித்துளியாம்

முகம் பார்க்கும்... கண்ணாடியாம்...

முத்து முத்தா பனித்துளியாம்

முகம் பார்க்கும்.. கண்ணாடியாம்

கொத்துக் கொத்தாய் பழக்குலையாம்

குமரி பெண்ணின் முன்னாடியாம்

குமரி பெண்ணின் முன்னாடியாம்....

Pallavi

Charanam  2

புள்ளையில் ஒசந்தப் புள்ள

பூமியிலே என்னப் புள்ள ஆஆ ஆஆ

புள்ளையில் ஒசந்தப் புள்ள

பூமியிலே என்னப் புள்ள

அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம்

வாரி வழங்கும் தென்னம்புள்ள...

வாரி -------வழங்--கும் தென்னம்--புள்ள

 

 (Charanam 3)

 வாழையடி வாழையாக வாழணுமின்னு

வாழ்த்துறதில் இருக்குது தத்துவம் ஒண்ணு

வாழையடி வாழையாக வாழணுமின்னு

வாழ்த்துறதில் இருக்குது தத்துவம் ஒண்ணு

தாய்மையின் தியாகச் சின்னம்தானே என்னு

குலை தள்ளி தலை சாய்ஞ்ச

வாழை சொல்லுது நின்னு..

குலை தள்ளி தலை சாய்ஞ்ச

வாழை சொல்லுது நின்னு..

 

(Charanam 4)

: நீரிருந்தா ஏர் இருக்கும்

ஏர் இருந்தா ஊர் இருக்கும்ம்ம்ம்

நீரிருந்தா ஏர் இருக்கும்

ஏர் இருந்தா ஊர் இருக்கும்

ஊரிருந்தா உலகத்திலே எல்லாம் இருக்கும்..

உண்மையோடு நன்மையெல்லாம்

நல்லா செழிக்கும்

Pall

ஆல...மரத்துக் கிளி

ஆளப் பார்த்து பேசும் கிளி..

வாலவயசுக் கிளி

மனம் வெளுத்தப் பச்சைக்கிளி

மனம் வெளுத்தப் பச்சைக்கிளி...

பாடலாசிரியர் திரு மருதகாசி அவர்களுக்கு மண்மணம் காட்டும் சொற்களை கையாளுவது, தனிச்சிறப்பு என்றொரு பெயர் உண்டு. அது, இப்பாடலில் தெரிகிறது. பாடலில் அவர் தொடும் கிளி , ஆல  மரம் , வாழைத்தோட்டம் , தென்னந்தோப்பு , நீரோடை வயல் பரப்பு என அனைத்துமே நகரின் எல்லைக்கு வராதவை. அப்படிப்பட்ட குறியீடுகள் ஏராளம் இப்பாடலில்.

எளிமையான ஆனால் வலிமையானஅடையாளங்கள் வாழ்வியல் தத்துவங்கள், [கொடுத்துவாழ்வது, அனைத்தையும் கொடுப்பது, தாய்மையின் சிறப்பு] என உள்ளார்ந்த கருத்துகளை கொண்டது இக்கவிதை.

இவற்றையும் தாண்டி, நன்கு உணரப்பட வேண்டிய திறமை, இசை அமைப்பில் சங்கர் கணேஷ் காட்டியுள்ள சிறப்பான கவனம் மற்றும் சில அனுபவ முத்திரைகள். 

என்ன முத்திரைகளா?  ஆம் , இசை நுணுக்கத்தக்கள் ஆங்காங்கே விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் கட்டுக்கோப்பு. இருவருமே மெல்லிசைமன்னர்கள்  குழுவில் அங்கம் வசித்தவர்கள்.சங்கர் [சங்கரராமன் , சி ஆர் சுப்பாராமனின் தம்பி], கணேஷ் [ஜி என் வேலுமணியின் மாப்பிள்ளை ] மேலும் சிறுவயதிலேயே வி-ரா  இசைக்குழுவில் இணைந்து பாசமலர் படம் முதலே பணியாற்றியவர். நல்ல பயிற்சி ,

இதனாலேயே திரு கண்ணதாசனின் முயற்சியால் சின்னப்ப தேவர் தயாரித்த 'மகராசி' படத்தில் இசை அமைப்பாளர்களாக உருவெடுத்தனர்.

அவர்கள் இப்பாடலில் [ஆல மரத்துக்கிளி ] நல்ல திறமை காட்டியுள்ளனர்.

1 குரல் தேர்வு [வாணி ஜெயராம் ] எம் எஸ் வி வாணிஜெயராமின் சங்கீத ஞானத்தை பயன்படுத்திக்கொண்டார் . இவர்களோ, அவரது குரலில் உள்ள சுருதி சுத்தம், பாவத்தின் வீச்சு ஏற்ற இரக்கம் துல்லியமாக வெளிப்படுத்தும் திறன் இவற்றை சிறப்பாக கையாண்டுள்ளனர். அது தான் இப்பாடல் ஒரு தீர்க்கமான தெம்மாங்காக ஒலிப்பதன் அடித்தளம்.

எப்படி என்று பார்ப்போம் 

பாடலின் பல்லவிக்கு முன்னரே கிளி கீச்சிட்டு நாயகியின் பார்வையை ஈர்ப்பதாக காட்சி. சாட்சாத் சதன் கிளிக்குரல் தந்துள்ளார். பல்லவியின் ஒவ்வொரு வரிக்கும் கிளி பேசுவது நல்ல துவக்கம். அங்கேயே கிராமீய மணம் பாடலில் நுழைந்துவிட்டது. அதன் பின்னர் கிளி பாடலில் இல்லை, நாயகிதான் பாடிக்கொண்டே இடம் பெயர்ந்து விட்டாரே.

இனி பாடல் முழுவதிலும் மனிதக்கிளி [குரலில் வாணி ஜெயராம்],காட்சியில் ஸ்ரீப்ரியா. கிராமீய நடன வகை கால் அசைவுகள், உடல் மொழி, விரைவான நடை மூலம் தோன்றிய கிராமியம் ஒருபுறம், மறுபுறம் செவிப்புலன் வழியே கிராமத்தை விதைத்த இசை நகர்வுகளும்[ சங்கர் கணேஷ் ], வாணி ஜெயராம் குரலில் வெளிப்பட்ட 'பிரித்துப்பாடிய தெம்மாங்கு வடிவமும் பாடலி ன்  சிறப்பு வடிவங்கள் .

தெம்மாங்கு ஜோடனைகள்

பாடும் முறை எப்படி என சொற்களை பிரித்து காட்டியுள்ளேன் கவனமாக ப்பாருங்கள்

ஆல மரத்துக்கிளி                                .....த்து க்கி   ளி

ஆள பாத்து பேசும் கிளி          ஆள பாத்    து பேசும்  ,கிளி

 

வால வயசுக்கிளி                   வா         சுக்  கிளி

 

மனம்  வெளுத்த  பச்சை கிளி    மனம்  வெ   ளூத்த பச்சை    கி ளீ

என்று பல்லவியில் சொல்லை விலக்கி ப்பாடி தெம்மாங்கின் உருவம் வந்துள்ளது                          சரணங்களிலும் இது அழகாக பின் பற்ற பட்டுள்ளது

அவற்றினுள் சில

சரணங்களில் சில முக் கிய இடங்கள்

முத்து முத்தா பனித்துளியாம் என்று 2 ம் முறை பாடிய பின் முகம் .....  ......பார்க்கும் கண்     ணாடியாம் என்றும்  பின்னர் தென்னம் பிள்ளை பற்றிப்பாடும் பொழுது  இறுதிப்பகுதியில்

வாரி       ........ழங்கும் தென் ...னம் புள்... என்று ம்

நீரிருந்தா ரிருக்கும் என்ற சரணத்தில்

அடுத்த பகுதியில்  இருக்க்க்க்க் கூம் என்று நீட்டிப்பாடி  வலுவான தெம்மாங்கு அமைக்கப்பட்டுள்ளது.

வெறும் குழல் டோலக் இவைதான் இடை இசையில் எனினும் பாடல் நன்றாக ஒலிக்கிறது.

இதை ஏன் பேசுகிறேன் என்றால் தமிழ் சினிமாவில் கிராமீய இசை எப்போதும் இருந்துவந்திருக்கிறது.          

 அப் போதெல்லாம் தேவை இருந்தால் தேவைக்கேற்ப வெளிப்பட்டது. பின்னாளில் கட்டுப்பாடின்றி உலாவத்துவங்கி இன்று ?

பாடலை பல முறை கேளுங்கள் இணைப்பு கீழே.

https://www.youtube.com/watch?v=hpqScy9G8hA palabishekam mkasi s g vj

இசை அமைப்பாளர் திரு அமுதபாரதி இதே பாடலை அவரே பாடி விளக்குகிறார் அதையும் கேளுங்கள் இணைப்பு கீழே

https://www.youtube.com/watch?v=HDilrGpb3_o AMUDHA BHARATHI

நன்றி அன்பன்  ராமன்

*****************************************************

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -48

LET US PERCEIVE THE SONG -48 பாடலை உணர்வோம் -48 ஆல மரத்துக்கிளி [ பாலாபிஷேகம் -1977] மருதகாசி , ஷங்கர் - கணேஷ் , வாணி ஜெயராம் ...