Saturday, November 22, 2025

VEENA – A GLIMPSE -2

 VEENA – A GLIMPSE -2

வீணை -ஒரு பார்வை-2

வீணை முற்றிலும் கைகளால் வடிவமைப்பதை சென்ற பதிவிலேயே அறிந்தோம். இனி அவை குறித்த பிற விவரங்கள். பெரும் மரங்களை [பலா] விறகுக்கடை/ மரக்கடை போல் வெட்ட வெளியில் இருப்பதை எடுத்து வந்து அவற்றில் அமைந்த அகன்ற முடிச்சு பகுதியை வீணையின் குடம் அமைக்க எதுவாக அறுத்துக்கொள்கின்றனர். அறுத்த பகுதியில்உருண்டையான அரைக்கோளம் போன்ற குடம்,   நீண்ட தண்டி/ தண்டு மற்றும் யாளி அமைக்க தேவையான பகுதி இருக்கும்படி   வெட்டி க்கொண்ட பின், அந்த                  வீணை மரத்திற்கு  நடப்பது கிட்டத்தட்ட விறகுக்கடை செயல் போன்றே இருக்கிறது.

ஆம், விறகு வெட்டிகள் போல் ஆங்காங்கே வீணை மரத்தை தரையில் கிடத்தி , குடம் அமைய உள்ள பகுதியில் கோடரியில் பெயர்த்துப்  பெயர்த்து பெரிய பள்ளம் [குளம் போல] செதுக்கி க்கொடுக்கின்றனர். பார்ப்பதற்கு ஏதோ 'கண்மூடி' செயல் போல் தோன்றினாலும், யோசித்துப்பார்த்தால் அவர்கள் விறகு வெட்டிகள் அல்லர், நுணுக்கமாக ஒவ்வொரு கோடரி வீச்சும் குடத்தின் உட்பகுதியிலேயே உள்ள மரத்தை செதுக்கும்படி அடிக்கிறார்கள், இது ஒரு துல்லியமான அடியாக அமைய வேண்டும். இன்றேல், மரம் பிளந்து வீணை ஆகாது நிச்சயம் வீணாகும்.

பலா மரம் விறகுக்கு போகும் நிலை உருவாகும். .

எனவே, கோடரியும் கோடரி வீச்சும் அதற்கு கொடுக்கப்படும் தாக்குதலும் அளவு குறை வாகவோ /மிகுந்த வீரியமாகவோ, இருத்தல் கூடாது. விறகு போல் வெட்டினாலும் உருவம் சிதையாமல் மென் சிறகு போல் செதுக்க, கோடரி எவ்வளவு துல்லியமாக 'இறங்க' வேண்டும்?  யோசித்துப்பார்த்தால் ஒவ்வொரு படி நிலையிலும், 'கைகளின் செயல்'-   நுணுக்கம் மற்றும் அதீத கவனம் மிக்கது.

இனி நடப்பவை அனைத்தும் தொழிற்கூடத்தில், மிகுந்த மென்மையும் கவனமும் கொண்டு ஈடேற்றப்படுபவை.

தண்டுப்பகுதியில்   மரத்தின் நடுவில் நீண்ட வாய்க்கால் போல் செதுக்கி விடுகின்றனர்

அது போன்றே குடத்தின் உட்புறம்  கோடரி காயங்கள், பிசிறுகள் இற்றை சிறிய இழைப்புளி /உளி கொண்டு செதுக்கி சமன் செய்கிறார்கள். அத்துடன் அவ்வப்போது குடத்தின் சுவர் எவ்வளவு தடிமனாக உள்ளது என்பதை சுட்டு விரலால் தட்டி இன்னும் எவ்வளவு கனம் குறைக்கப்பட வேண்டும் என இடைஇடையே நன்கு கவனிக்கிறார்கள். இவை குடத்தின் உட்புறம். வெளிப்பகுதியில் அழகான பிசிறில்லா மழமழப்புடன் வெகுவாக இழைப்பது ஒரு பெரும் கவன ஈர்ப்பு பணி எனில் முற்றிலும் உண்மை.

இந்த இழைப்புளி மிகவும் சிறியது கைக்கு அடக்கமானது . எனவே சிறுசிறு பகுதிகளாக இழைக்கப்படுவதால் வெளிப்புறக்குடம் சீரான வளைவு மற்றும் மழமழப்புடன் வெகு நேர்த்தியாக நல்ல ஒலி எழுப்பும் படி வடிவம் பெறுகிறது., தேவையான சித்திரவேலைகள் குடத்தின் வெளிப்புறத்திலும் குடத்தின் மூடிபோன்ற் தட்டுப்பகுதியிலும்  செய்யப்படுகின்றன. அவை பெரும்பாலும் தெய்வ டிவங்கள்/ மயில்/ அன்னம் , சரஸ்வதி, லட்சுமி  ,பாலாஜி என்ற வடிவங்களே. சிறு பூக்கள் போன்ற அலங்கார வேலைப்பாடுகள் ஆங்கா ங்கே , குடத்தின் பகுதியில் காணலாம். இது போன்றே கலைநயம் மிக்க பகுதி வீணையின் இறுதியில் அமைந்த யாளி. யாளி கீழ்நோக்கியமைத்தால் வீணையை த்தூக்கி  எடுத்து  கையாளுவது எளிது மேலும் மேற்புறம் வளைந்த யாளி அமைப்பு இடையூறாக இருக்கும் என்கிறார் திரு வெங்கடேசன்.

வீணைக்குடத்தின் மேல்புற தட்டு தான் மிக முக்கிய பகுதி என்கிறார்  திரு வெங்கடேசன்.. அதுதான் ஒலியை  அமுக்காமல் அதிராமல் வெளிப்படு த்தும். இதன் கனம் சீராக இருத்தல் அவசியம்.. அதை அளக்க ஒரு இரும்பு வில் போன்ற கருவி \150 ஆண்டு பழைய அளவு கோல் . அதை க்கொண்டு ஒட்டு மொத்த கனம்   ஒரே சீராக இருப்பதை கண் காணிக்கிறார்கள். அப்போதுதான்  வீணையின் நாதம் சிறப்பாக அமையுமாம். மேலும் அந்த தட்டு மூடியில் துளைகள் இட்டு ஒலி தெளிவாக கேட்பதை உறுதி செய்கின்றனர். வீணையின் புற  விளிம்பில் சித்திரங்கள் மைக்கப்படுவதும் வழக்கம்.முன்பெல்லாம் அவை மான் கொம்பில் செய்யப்பெற்று வில்லைகளாக விளிம்பில் அமைப்பர்.பின்னர் அவை பிளாஸ்டிக் தகடுகளாக அமைந்தன. அதுவும்   மறைத்து இப்போது அவையும்   மரத்திலேயே செதுக்கப்படுகின்றன.

தண்டுப்பகுதியில் கருப்பு மெழுகு போன்ற பொருளை வைத்து ஆங்காங்கே frets எனும் கம்பிகள் [பித்தளை/ வெண் லம்    கொண்டு செய்யப்பட்டு மெழுகின் மீது சரியான இடைவெளிகளில் பதிக்கப்டுகின்றன. வீணை யின் நரம்பு அல்லது தந்தி இவற்றின் மீது படிந்து அழுத்தி மீட்டப்படும் பொழுது ஸ்வர ஒலி எழும். தந்திகளின் தொய்வை சரிப்படுத்த ஒவ்வொரு தந்திக்கும் பிரத்தியேக திருகு குமிழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தந்திகள் வீணைக்குடத்தின் பின் புறம் ஒரு உலோகப்பிணைப்பில் கிளம்பி ஒரு படிபோன்ற அமைப்பில் ஏறி பயணித்து குமிழ்களில்வந்து இணைகின்றன. . வீணை வாங்குவோரின் ரசனையின் படி வீணையின் வண்ணம் அமைத்து தருகிறார்கள்.

சரியான நாதம் வரும்வரை சிறு சிறு குறைகள் களைந்து பின்னரே, தானே மீட்டிப்பார்த்து முழு நிறைவுடன் வீணையை உரியவரிடம் முறையான பிரார்த்தனைக்குப்பின்னர் வழங்குவேன் என்கிறார் வெங்கடேசன்.. 

வறுமை ஒரு புறம் இருந்தாலும் , தொழில் திறன், செயல் நுணுக்கம், பக்தி , கலை ஆர்வம் உயர் விற்பன்னர்களின் நட்பும் ஆசியும் இவர்களது தனிப்பெரும் சொத்து.

இன்னும் எத்துணை காலத்திற்கு இவர்களால் போராட முடியும்? இறைவன் கண் திறந்தால் சாத்தியம். வீணை இனிது ஒலிக்கட்டும். .

பின் வரும் இணைப்பில் பேச்சு குறைவு செயலே பிரதானம். நான் பார்த்தவற்றை

எழுதியுள்ளேன் குறைகள் இருப்பின் மன்னிப்பீர் .

இணைப்பு கீழே

  https://www.youtube.com/watch?v=j2R4wqcbEPI  veena making

நன்றி அன்பன் ராமன் .  

No comments:

Post a Comment

VEENA – A GLIMPSE -2

  VEENA – A GLIMPSE -2 வீணை -ஒரு பார்வை-2 வீணை முற்றிலும் கைகளால் வடிவமைப்பதை சென்ற பதிவிலேயே அறிந்தோம். இனி அவை குறித்த பிற விவரங்கள். ...