Saturday, January 31, 2026

Oh Language –16

 Oh Language –16

English –as a language is quite versatile, if one knows the real implications of words and styles of using them to advantage. In plain terms it is easy for some while many others dread using the language as they fear of misuse. Such persons are happy with disuse of words and choose to display a broad smile in place of some interactive utterance. Leaving aside such doubting Thomas, better one goes about certain typical characteristics of the culture in word structure.  For every positive word there is a corresponding negative term that suggests the opposite.

There are different expressions like

Opposite, Contrary and Converse   The three terms seem to be similar in effect. Honestly they are not, for, each has a specific purpose  / implication.

‘Opposite’ [n/Adj] refers to the direct reversal as in Night/Day, Cold/Hot, Bitter/Sweet, each pair representing the extremes      

‘Contrary’ [n/Adj] represents a state of opposition or disagreement

‘Learning a language looks difficult; on the contrary it can be a fun and engaging too.   

‘Converse ‘ [Adv] represents a reciprocal or a contrasting situation  as in “ If you run, you reach early” conversely “If you walk, you reach late”      ‘Some go to bed early  conversely Some keep awake till late after midnight and so go to bed late . Such subtleties need to be clearly understood at least to avoid improper examples.   

Improper X Proper, Impossible X Possible, Impertinent X Pertinent                      

Impolite X Polite, Imprudent X Prudent, Immature X Mature, Immaterial X Material  and Impeccable.

Each positive term presented here has a negative form shown by the prefix “Im”. The last term [impeccable] is not a truly negative term as it refers to a positive state of being ‘flawless or perfect’. The term ‘Peccable’ refers to an undesirable trait as it means ‘capable of committing sin[s].  As such ‘Peccable’ as a term has a poor scope of usage.

Incidentally, the prefix ‘Im’ is one form of forming a negative, as other prefixes like  ‘in’ ‘ir’, ‘il’ ‘non’ also help to forming negative words. I trust we are at an interesting phase of discussion. Hopefully these are intelligible. ______________________________________________________

Friday, January 30, 2026

ARECA NUT

 ARECA NUT    [BETEL NUT]

Botanically Areca nut is  Areca catechu –a kind of palm.[Tamil = paakku, Kan =adikke ]

Being a palm the plant  grows tall without branches and has a terminal crown of leaves ; among these emerge the floral branches that bear Areca nut [Betel nut]. Betel nut is the chief ingredient for chewing along with betel leaf / calcium paste and tobacco shreds. On a global estimate, India is a major consumer of betel nut /betel leaf.

Betel chewing turns addictive due to ‘Arecoline’- a stimulant. Any advantage of betel chewing is more psychological than any physiological. In fact several disorders /inflammations can arise from chewing. But ‘addiction’ being what it is people seldom listen to sane advice.

Arecoline is a major alkaloid in areca nut. Other alkaloids are Arecaidin, Guvacine, Isoguvacine, and a major tannin component is Proanthocyanidin +Catechin and areca tannin . two new alkaloids Acatechu-A and Acatechu-B have been identified foe areca nut.

No major advantage has been attributed to the betel chewing habit among villagers of India

However there is an auspicious connotation for betel leaves and betel nuts. Without these items on a platter no auspicious event can be organized. They signify blessing and prosperity. Without them the solemnity of the event is not felt. They mark the holiness of the occasion in the Indian custom. 

----------------------------------------------------------------------------------------------------  

Thursday, January 29, 2026

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-25]

 GOOD- BUT A LITTLE OFF MEMORY [-25]   RICHLY MELODIOUS -5

அமுதவல்லி [1959] திரைப்படத்தில் இடம் பெற்ற ஆடைகட்டி வந்த நிலவோ பாடல்[டி.ஆர்..மஹாலிங்கம்,பி.சுசீலா},குரல்களில்     திரும்பியபக்கமெல்லாம் ஒலித்து மிகவும் புகழ் அடைந்தஒன்று.

இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் என்பது சொல்லாமலே விளங்கும். சொற்கட்டு மாத்திரமல்ல, ட்யூன் என்னும் பாடப்படும் நடையை கவனித்தால் அது எவ்வளவு விரைவாய் பயணித்து மெல்ல வேகம் குறைத்து சரணத்தை நிறுத்தி பின்னர் இடை இசைக்கு இடம் தருகிறது? அது ஏன்? பட்டுக்கோட்டைட்யூனுக்கு எழுதித்தர மாட்டார்.  அவர் எழுதிய வரிகளுக்கு தான் ட்யூன் அமைக்க வேண்டும். அப்படி எனில் ட்யூன் தன்னை அவ்வப்போது வேகமாற்றம் செய்து கொண்டு பயணித்தால் தான் பாடலின் நளினம் காப்பாற்றப்படும்.

நான் சொல்லும் இடம் இதுதான் "'கண்ணாளனுடன் கலந்தே” ' என்று பயணிக்கும் பாடல் வரி மெல்ல வேகம் குறைந்து பல்லவியை இணைக்கும் பகுதி , இசை அமைப்பின் நேர்த்திக்கு சான்று. இதுதான் கவிஞனின் கற்பனைக்கும் இசையை பொருத்தி அமரவைக்கும் உத்தி [அந்த நாளிலேயே எம் எஸ் வி காட்டிய வித்தகம்] பின்னர் வரும் சரணத்தில் முக்கால் பகுதிக்கு பாடகி சுசீலா வுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே கொடுத்து பாடலின் நீளத்தையும், நளினத்தையும் நேர்த்தியாக கையாண்டுள்ள தன்மையையும் கவனியுங்கள்.  ..

அந்த நாளிலேயே துள்ளி சிறகடிக்கும் வேகம் இசைக்கருவிகளின் உயிர்ப்பான பங்களிப்பு அதிலும் போங்கோவின் சீரான ஆனால் விரைவான பயணம்-- பாடலையையும் இசையின் மகத்துவத்தையும் தூக்கி நிறுத்திய ஆளுமை போங்கோவை தமிழ் சினிமாவில் பெரிதும் நிலைப்படுத்திய பங்களிப்பில்             எம் எஸ் விக்கு தான் முதல் இடம் என்பது எனது புரிதல்

கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=T4WR1d9LIBw AADAI KATTI [1959] PATTUKKOTTAI, V R  TRM PS 

சுபஸ்ரீ அவர்களின் QFR ஆக்கத்தில் இதே பாடல் குறித்த நுணுக்கங்களை அறிய இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=AOnQBOrxt5I   QFR

'ஒருவன் காதலன் ஒருத்தி காதலி"

போகிற போக்கில் எழுதிய வாசகங்களை பாடலாக்கி காட்டியிருக்கிறார் திரு எம் எஸ் வி அவர்கள். பின் சும்மாவா சொன்னார்கள்?  என்ன சொன்னார்கள் ? யார் சொன்னார்கள்

கர்நாடக சங்கீத புகழ் திருமதி எம் எல் வசந்தகுமாரி " இப்ப இங்க எம் எஸ் வி இருந்தார்னா கார்  கதவை  திறக்கும் சப்தத்திற்கு 'ஸ்வரம்' சொல்லிடுவார்.

திரு எம் ஜி ஆர் " விஸ்வநாதன் கையில 'தினத்தந்தி' பேப்பர் கொடுத்தால்  கூட அழகா ட்யூன் போட்டுருவார்.

அவர் [MSV] இந்த 'வெண்ணிற ஆடை [” 'ஒருவன் காதலன் ஒருத்தி காதலி"]  பாடலை கையாண்டிருப்பதை கவனித்தால் மேலே உள்ள கருத்துகளில் உள்ள நியாயம் புலப்படும்  வெறும் பாடல் வரிகளில் ஏதாவது கவிதைத்தன்மை தெரிகிறதா ?

ஊஹூம்—ஆயினும், அதை பாடலாக்கிய வித்தகம் நிச்சயம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

துவக்க இசை, இடை இசை அனைத்திலும் கிட்டார் , புல்லாங்குழல், ட்ரம் போங்கோ கருவிகளின் இசைப்பில் சாதாரண உரையாடல் சொற்கள் கவிதை நிலைக்கு உயர்ந்துள்ளதை உணரலாம்.  கேட்டு உணர இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=Fx2EVcsoClI ORUVAN KADHALAN VA KD V R PBS PS

இயற்கை என்னும் இளைய கன்னி [1969] கண்ணதாசன், எம் எஸ் வி, எஸ் பி பி, சுசீலா

எஸ்பி பாலசுப்ரமணியம் என்ற பெயரை தமிழர்கள் முதன்முதலில் அறிந்ததும் அசந்து பார்த்ததும் , இவ்வளவு நளினமாக பாவம் காட்டி பாடமுடியுமா என்ற பலரையும் வியக்க வைத்த குழைந்து குதூகலிக்கும் காதல்           குரலோன் வீசிய வலையும் இங்கே துவங்கியவையே. .

இந்தப்பாடலில் துவக்கத்தில் எழும் ஹம்மிங்கின் ஒலியிலேயே எல்லோரையும் ஈர்த்து மயக்கிய ராக அமைப்பு மற்றும் துள்ளும் இசை ;என்று கேட்டாலும் அதே இளமையும் இசையின் வசீகரமும் பின்னிப்பிணைந்த அற்புதம். கேட்டு கேட்டு இன்புற இதோ இணைப்பு https://www.youtube.com/watch?v=6GoYiIKn9Mg IYARKAI ENNUM  SANTHI NILAIYAM KD MSV SPB PS

அங்கம் புது விதம் [வீட்டுக்கு வீடு -1972] வாலி எம் எஸ் வி எஸ் பி பி எல் ஆர் ஈஸ்வரி

இப்படி குறும்பும் சேட்டையம் பின்னி இணைந்த டூயட் களில் இது ஒரு தனி ரகம். குரல்களில் தான் எவ்வளவு குறும்பு?. பயந்து நடுங்கும் நாயகன் , சும்மா பயப்படாதே நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லும் பெண் -வித்யாசமான ஜோடி.

இசையும் ராகமும் வெகு நேர்த்தியான கலவை அதிலும் பாடல் முடியும் போது குரல்களில் வெளிப்படும் அன்னியோன்யம் என்று பல பரிமாணங்கள். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=JqD6SRwLHuE ANGAM PUDHU VIDHAM VEETTUKU VEEDU VAALI MSV SPB LR E

_____________________________________________________________________________

Wednesday, January 28, 2026

LIGHT MUSIC-- DIMENSIONS

 LIGHT MUSIC-- DIMENSIONS    

மெல்லிசையில் பரிமாணங்கள்

ஏதோ விளையாட்டாக   சினிமாப்பாடல் தானே என்று முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வீடுகளில் சினிமாப்பாடல் என்ற பேச்சுக்கே பெரும் கட்டுப்பாடுகள் சட்ட திட்டங்கள் விதித்து இளம் சிறார்களை அடக்கி வைத்த நிலையிலிருந்து அவர்களாகவே அனுமன் போல் கட்டவிழ்த்துக்கொண்டு, திரை மறைவில் பாடல்கள் குறித்து அறிந்துகொள்ள, விவாதிக்க தலைப்பட்டதேன் என்ற கேள்வி பல விடைகளை உள்ளடக்கியது

ஆம், படங்கள் ஆன்மிகம், காப்பியம் ,ராஜா ராணி, சுதந்திரப்போராட்டம்   வகை கதைகள் காட்சிகள் நிலையில் இருந்து வெளியேறி, சமூக, வாழ்வியல் களங்களை முன்னெடுக்க, காட்சி வசனம் நடிப்பு அனைத்தும் இயல்பு நிலை நோக்கி பயணிக்க, பாடல்களிலும் கதைசார்ந்த  நிலை தோன்றத்துவங்கி, இசை இலக்கண மரபிலேயே புதுவகை ராக மாற்றங்களை கைக்கொண்டு பாடல்கள் வடிவமைக்கப்பட்டு வெற்றியை நிலைநாட்ட திரு ஜி ராமனாதன் அவர்களின் அணுகுமுறைகள் பெரிதும் பேசப்பட்டன. அம்பிகாபதி, உத்தமபுத்திரன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் பாடல்கள் பெரும் பேசுபொருட்கள் ஆனது வரலாறு. அதே சமகாலத்தில் கல்யாண பரிசு , பாச வலை புதையல், பதிபக்தி என புதுவகை இசையில் வெற்றி கொடிநாட்டின. இந்த சூழலில் பெரும் ஆளுமைகளாக வலம் வந்தனர் -விஸ்வநாதன்ராமமுர்த்தி

இவ்விருவரும் பரீட்சார்த்த அணுகுமுறைகளால் திரைப்பாடல்கள் வடிவம், அமைப்பு, இசைக்கோர்வை அனைத்திலும் வடிவமைத்த இசை வடிவம் "மெல்லிசை" என பெயர் பெற்றது. எண்ணற்ற புதுமுயற்சிகள் வி-ரா வின் தனிச்சிறப்பு. மேலும் இசைக்கருவிகளின் புது கட்டமைப்பு , பியூஷன் எனும் இசைவடிவங்களின் கலப்பு அனைத்திலும் கோலோச்சினார்.                             கண்ணதாசன்- வி-ரா அணி நிகத்திய அற்புதங்கள் பல.

அந்த உள்ளார்ந்த நுநுணுக்கங்கள் அறியாத என் போன்ற பலரும் எம் எஸ் வி யின் இசையில் கட்டுண்டு பாடல் இலக்கணம் குறித்த தீவிர கருத்துகள் கொண்ட ரசிகர்கள் ஆனோம். வேறுவகை இசைவடிவங்களால் எங்களை ஈர்க்கவே இயலவில்லை என்பதே சத்திய வாக்கு.

அப்படி எம் எஸ்வி கையில் எடுத்த உத்தி/வித்தகம் யாது என தொடர் விவாதங்கள் இன்றைய காலகட்டத்தில் பொதுவெளியில் பேசப்படுவதிலிருந்தே அந்த வகை இசையின் தாக்கம் எத்தகையது என அன்பர்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த விவாதத்தில் முக்கிய ஆளுமை திரு. என் ஒய் முரளி அவர்கள் [தொழில் முறையில் என்ஜினீயர்] , எம் எஸ் வி யின் இசையில்      தன்னை பறிகொடுத்தவர். அவரது குடும்பமே     எம் எஸ் வி ரசிகர்கள். மகள் [அவரும்  என்ஜினீயர்]கீபோர்ட் கலையில் வித்தகி., மனைவியும் பாடல் ரசிகை/ பாடகி.

திரு முரளி கூறும் கருத்துகளை கூர்ந்து கவனித்து உள்வாங்குங்கள்.அப்போது புலப்படும் நான் என்ன சொல்லி வந்தேன் என்பதன் தெளிவான விளக்கம்    இது வரை இரண்டு பதிவுகள் வந்துள்ளன. இரண்டையும் கேட்டு ரசித்து உணர இணைப்பு இதோ                                                                                  

https://www.youtube.com/watch?v=IssZ3CFwFvk nym 1

https://www.youtube.com/watch?v=zLGt18uv--E ny m 2

நன்றி                           அன்பன் ராமன்

________________________________

GUITAR

  GUITAR கிட்டார் கிட்டார் [Guitar ] வயலினைப்போல இதுவும் ஒரு மேல்நாட்டு இசைக்கருவி தான் . ஆனால் இந்தியாவில் இக்கருவி திரையுலகில...