LET US PERCEIVE THE SONG -56
பாடலை உணர்வோம் -56
நீ நினைத்தால் [நிலவே
நீ
சாட்சி
-1970] கண்ணதாசன்,
எம்
எஸ்வி, குரல்கள் எம்
எஸ்
வி,
எல்
ஆர்
ஈஸ்வரி
இந்த பாடல்
வந்த
நாளில்
பலரும்
முணுமுத்துக்கொண்டிருந்த
டூயட்.
அதாவது
குரல்களின்
வசீகரம்
மற்றும்
பாவம்
பொங்க
ஒலித்த
ராக
அமைப்பு.
இது
ஒரு
அசாதாரண
சூழலில்
அமைந்த
மனக்குரல்களின்
டூயட்.
ஆம் திரையில்
இருவருமே
வாயசைக்கவில்லை
-மனங்கள்
மட்டுமே
குதூகலிக்கும்
அமைப்பில்
ஒலிக்கிறது.
அதுவும்
lift காட்சி -அது
மேலும்
கீழும்
பயணிக்க
ஒவ்வொரு
மாடியிலும்
ஏங்கி
காத்துக்கிடக்கும்
மக்கள்
.
எம் எஸ்
வி
யின்
குரலில்
ஆஹ்
ஹா
என்று
துவங்கியதும்
சிருங்காரம்
பற்றிக்கொள்ள
சற்றே
தவித்து
பயந்த
விஜயா
சுதாரித்து
தொடர்வதாக
காட்சி
அமைப்பு..
'எண்ணங்கள் வெளியே
வந்தால்
என்னென்ன
தருவாயோ'
என்று
ஏக்கமும்
எதிர்பார்ப்பும்
காட்டிய
ஈஸ்வரியின்
குரலில்
எவ்வளவு
தாக்கம்?
" கன்னங்கள்
கனிகள்
என்று
கை
கொஞ்சம்
தழுவாதோ,
கை
தொட்ட
வேகம்
கண்டு
பெண்
வண்ணம்
மலராதோ"
என்று
பாடும்
போது
எம்
எஸ்
வி
எவ்வளவு லயித்துப்பாடியுள்ளார்?
. அதே போல்
" மூடிய
கதவுகள்
திறந்திடும்
முன்னே
முழுவதும்
அறிவோமா"
என்று
பளிச்
முத்திரையுடன்
சொல்லை
நிறு
த்தி
போதை
ஏற்றுகிறார்
மன்னர்.
ஒரு
பாடகனாக
திரு.
எம்
எஸ்
வி
, ஒவ்வொரு
சொல்லையும்
அதன்
பொருள்
உணர்த்தும்
பாவம்
காட்டி
பாடி
இருப்பதை
நன்கு
கவனியுங்கள்.
ஈஸ்வரி மட்டும்
சளைத்தவரா
என்ன
? எம்
எஸ்
விக்கு
நிகராக
பாவம்
காட்டிப்பாடியுள்ளார்.
இந்தப்பாடலின் சிறப்பே
யாதெனில்
இடை
இசையை
கவனிக்கவே
தோன்றாது.
காட்சியும்
குரல்களும்
நம்மை
இயக்குவதை
உணரலாம்.
இப்பாடல் வினோதமான
சூழலில்
விபரீதமான
மனநிலையில்
நிகழ்வதால்,
இசையில்
மன்னர்
இரண்டையும்
காட்டியுள்ளார்.
ஆம்
கருவிகளினுந்
தொகுப்பு
அவற்றின்
இயக்கம்
இரண்டையும்
கடந்து
இசையில்
ஒரு
வேகமும்
திகைப்பும்
மிளிரும்
வகையில்
ஒலிக்கும்
கருவிகள்,
மனத்தின்
படபடப்பாக
ட்ரம்
ஒலி
யில்
ஒரு
விரைவு
.
யூ ட்யூபில் ஒருவர்
“இப்பாடலில்
என்ன
கருவிகள்
என்றே
புரியவில்லை,
ஆனால்
70 களி
லேயே
பின்னாளைய
டிஜிட்டல்
வகை
ஓசைகளை
அமைத்துள்ளார்
மெல்லிசை
மன்னர்.
டெக்னாலஜி
அவர்
காலத்தில்
இருந்திருந்தால்
ரசிகர்கள்
மயங்கிக்கிடந்திருப்பார்கள்”
என்னும்
பொருள்பட
எழுதியுள்ளார்.
பாடலில் ஓர்
இடத்தில்
இடை
இசையில்
கர்ர்ர்ர்
என்று
ஒலித்து
. லிப்ட்
மோட்டாரை
நினைவுகொள்ள
வைக்கிறது. அந்நாளில் இப்பாடலை
ரேடியோவில்
கேட்ட
பலர்
, ரேடியோ
ஏதோ
மக்கர்
செய்துகொண்டிருப்பதாக --- சீ சனியன்---- நேரம்
காலம்
தெரியாமல்
என்று
பட்
பட்
என்று
ரேடியோ/
டிரான்சிஸ்டர்
மீது
அடிப்பார்கள்.
தொடர்ந்து சில
முறை
பாடலை
கேட்டவர்கள்
இது
பாடலிலேயே
வருவது
என
தெரிகிறது
ஆனால்
ஏன்
என்று
தெரியாமல்--
படம்
பார்க்க
வேண்டும்
என்று
ஆவல்
கொண்ட
நிகழ்வு
நினைவில்
வருகிறது.
இப்படத்தின் பாடல்கள் பெரும்
வெற்றி
ஈட்டியவை.
பாடலை கேட்டு
-உணர்ச்சிகரமாக
பாடுவது
என்றால்
என்ன
என்று
அறியலாம்.
ஏன்
பல
பாடகர்கள், பாடகிகள்
எம்
எஸ்
வி
போல்
பாட
முடியாது
என்று
சொல்கின்றனர்
என்பதும்
தெளிவாகும்.
.
இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=RDZoAi6nk0M
NEE NINAITHTHAAL [NILAVE SATCHI 1970] KD MSV
LRE
No comments:
Post a Comment