Tuesday, May 12, 2026

A RABID ACQUISITION and A GRAND RETREAT

A  RABID  ACQUISITION 

வெறித்தனமான சேகரிப்பு

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற முதுமொழி அவ்வப்போது செயல் வடிவம் பெறக்காண்கிறோம். ஆனால் பலமுறை தொடர்ந்து பின்னடைவையே எதிர்கொண்ட பின்னரும் மென்மேலும் அழிவை நோக்கி செல்வது ஏன் என்ற வினா எழத்தான்  செய்கிறது. நான் அப்படித்தான் என்பவனிடம் என்ன மாறுபாடு தோன்றும்.. இன்றைய பதிவில் கவனிக்கவும் கவலை கொள்ளவும் வேண்டிய நுணுக்கங்கள் உள்ளன.   

https://www.youtube.com/watch?v=3mBw799bMpg A SWARM OF DRONES  MAJOR MADHAN KUMAR

 

A GRAND RETREAT

துண்டைக்காணோம், துணியைக்காணோம் வகை ஓட்டம்

சிறிதும் சிந்தனை இல்லாமல் சில இயக்கங்களின் கண் மூடித்தனமாக செயல்பாடுகள் பெரும் அச்சுறுத்தலாக வெகு எளிதில் உருவெடுக்கும். ஆனால் இதை ஒரு பொருட்டாக எண்ணாமல், தங்களை நிலைப்படுத்திக்கொள்ள எத்தனிக்கும் அரசியல் வாதிகள் விளைவிக்கும் துயர்கள் ஆபத்தானவை. இதற்கு சில சாயங்களைப்பூசிக்கொண்டு தாங்கள் ஏழை பங்காளர்கள் என்று காட்டிக்கொள்வார்கள். இப்படி பல ஆண்டுகளாக அண்டை நாடான வங்காள தேசத்தவர் மேற்கு வங்கத்தின் எல்லைகளில் ஊடுருவி பல மாநிலங்களில் இருந்து கொண்டு வேலை செய்து இந்தியப்பிரஜைகள் போலவே சகல உரிமைகளையும் பெற்று வாழ்கின்றனர். இந்தியாவில் நூல், துணி உற்பத்தி , திருப்பூர் உள்ளிட்ட ஆடை வடிவமைப்பு நகர்களில் இவர்கள் பெருமளவில் வேலைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் பாதுகாப்பு துறையினர் வேட்டையாடி இவர்களை கைது செய்ய துவங்கினர். சமீபத்திய 'வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பு'  துவங்கும் போது எதிர்ப்புக்குரல்கள்  தோன்றியதும் , இந்த வகைஒட்டுகள் அகற்றப்படும் என்ற கவலையினால் மட்டுமே என்பதும் நிரூபணம் ஆயிற்று . ஆனால் மேற்கு வங்கத்தில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தவுடன் இந்த வங்காள தேசப்பிரஜைகள் கூட்டம் கூட்டமாக இந்தியாவை விட்டு சொந்தநாடு நோக்கி ஓடுகின்றனர். இங்கேயே தங்கி இருந்து பின்னர் அரசின் பிடியில் சிக்கிக்கொண்டால் என்ன தண்டனை கிடைக்கும் சிறையில் தள்ளிவிட்டால்  என்ன செய்வது போன்ற அச்சத்தினால் இப்போது அவர்களாகவே ஓட்டம் பிடிக்கின்றனர். ஏழைப்பங்காளர்கள் வாய் மூடி அமைதி காப்பது ஏன் என்பது புரிகிறதா?   இவற்றோடு எல்லைக்காப்பு வேலியும் வலிமையாக அமைக்கப்பட்டு வருகிறது மொத்தம் சுமார் 5000 கி மீ நீள  வேலி ;அதை அமைப்பதற்கு ஒத்துழையாமை, எதிர்ப்பு இவை பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு , இப்பிரச்சினையில் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இவை குறித்த பல விவரங்களைமேஜர்  திரு மதன் குமார் விவரிக்கிறார். அதற்கான இணைப்பு கீழே.

https://www.youtube.com/watch?v=CyNMFYfgUak return – Major Madhan kumar

நன்றி  அன்பன்

No comments:

Post a Comment

A RABID ACQUISITION and A GRAND RETREAT

A  RABID  ACQUISITION   வெறித்தனமான சேகரிப்பு ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற முதுமொழி அவ்வப்போது செயல் வடிவம் பெறக்காண்கி...