Tuesday, January 31, 2023

READY TO POUNCE

 READY TO POUNCE

பாய்ச்சலுக்கு தயார்

டில்லி குளிரில் 7.30 வரை சுருண்டு கிடந்தனர் திருச்சி வாசிகள். எழுந்து பல் துலக்கி ரிசெப்ஷனுக்கு போன்       செய் து  காபிக்கு சொன்னார்கள் . பெரிய ஜக் , தம்ளர்கள் ,சர்க்கரை குப்பி , ஸ்பூன்கள் சகிதம் வெயிட்டர் வந்து நமஸ்தே என்று டேபிளில் வைத்துவிட்டு வெளியேறினார்.. ஆவலுடன் காபியை ருசிக்க , அசோகா வாவது, அக்பராவது , எவனும் நம்ம ஊர் முரளி காபிக்கு ஈடாகுமா என்று பெருமூச்செறிந்தாள் சுபி / ஏன் முரளி கடையில் மக்கள் வெள்ளம் குவிகிறது என்பதற்கு சரியான விடை கிடைத்தது .என்ன செய்யமுடியும், வட இந்தியாவில் காபி -அவ்வளவு தான்..குளித்து சிற்றுண்டி சாப்பிட்டனர் ,இட்லி தோசை பரவாயில்லை, மோசமில்லை. .வேண்டிய தஸ்தாவேஜுகள் கையில் உள்ளதா என்று 3 முறை சரிபார்த்தார்கள்.

காலை மணி 9.50, வேலுச்சாமி Good  Morning என்று வணக்கம் சொன்னார் , பதில் வணக்கம் ஆனதும் நலம் விசாரித்தார் வேலுச்சாமி. பின்னர் பேக் ஏதாவது உண்டா என்றார் . 2 பைகளில் தேவையான வற்றுடன் 10.40 க்கு guest house காம்பௌண்டில் வண்டி கம்பீரமாக போர்டிகோ வில் நிற்க வித்யாமாலினி சந்தனக்கலர் புடவையில் , ஒற்றை பின்னல் பாம்பென முதுகில் ஊர்ந்து இடுப்பைத்தாண்டி 10 அங்குல நீளத்திற்கு ஒயிலாக ஆடியது.. கழுத்திலும் இருந்தும் இல்லாத வண்ணம் மெல்லிய தங்க இழைச்செயின் - ஹேமமாலினி யே வெட்கப்படுவார் . குதிரையின் வியப்பு அதிகமானது .இவளுக்கு எந்த ஆடையும் கச்சிதமாகப்பொருந்துகிறதே -என்னே இவள் செய்த பாக்கியம் என்று இறைவனின் கருணையை எண்ணியெண்ணி வியந்தாள்.

சரியாக காலை 11.00 மணி PMO வில் இருந்துஆரம்பிக்கலாம்” என்று சமிஞை வந்தது. வித்யாமாலினி சிறப்பான வரவேற்புரை வழங்கி விருந்தினர்களை அறிமுகம் செய்வித்து , டெமோ தொடங்கலாம் என்று அறிவித்தாள்

தலைவி என்ற முறையில் சுபி பேசினாள்   சுருக்கமாக ஆனால் சுவையாக . பலதரப்பட்ட தென்னாட்டு க்கலைகளில் இறைஉணர்வும் ஆன்மிகமும், பொழுது போக்கும் உடற் பயிற்சியும் எவ்வாறு பின்னிப்பிணைந்து காலங்காலமாக கிராமங்களில் காப்பற்றப்பட்டு வந்துள்ளதுஎன்று விளக்கி , தேவையான வற்றை வீடியோ உதவியில் நுணுக்கமாக விளக்கினாள் . அரசாங்க அதிகாரிகள் , இந்த கிராமீயக்கலைகளில் இவ்வளவு நுணுக்கங்கள் ஒளிந்துள்ளதை இந்தப்பெண்மணிஎவ்வளவு அனாயசமாக ,மீன் குஞ்சு நீஞ்சுவதைப்போல சிரமமில்லாமல் [EFFORTLESS] செயலாற்றுகிறாள் ; இவளை நம்ம டைரெக்டர்  மேடம் எப்படிப்பிடித்தார்கள் என்று ஏகமனதாக வியந்தனர். குதிரையின் உதவியாளர்களும் மிகச்சிறப்பாக விளக்க , G -20 நிகழ்ச்சியில் இந்தியா ஒரு ஆழமான முத்திரையை பதிக்கப்போகிறது என்று பேர் உவகை கொண்டனர்.

மதிய உணவை இங்கேயே வரவழைத்துவிட்டால் மேலும் பல அறிய தகவல்களை சுபத்ரா மேடமிடம் விவாதிக்கலாம் என்று SECRETARY கள்  விரும்பினர். சந்தேகமில்லாமல் குதிரைக்குழு மிக எளிதில் புகழைத்தேடிக்கொண்டது..

சாப்பிட்டுக்கொண்டே பலரும் மடக்கி மடக்கி கேள்விகளைக்கேட்க சுபி ஆணித்தரமான சான்றுகளுடன் இந்தியப்பரம்பரியத்தின் காலை சார்ந்த அறிவூட்டல் என்பதை அட்டகாசமாக நிறுவிட  , அமைச்சராக அதிகாரிகள் வியப்பிலும் பெருமையிலும் ஆழ்ந்தனர்.

அடுத்த பகுதி மாலை 3.30க்கு தொடங்கியது. இப்போது வித்யாமாலினி சிறிய அறிமுகத்துடன் சுபி குழுவினரை டெமோ செய்ய கேட்டுக்கொண்டாள் . ஏற்கனவே தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி யதால் மிகுந்த மரியாதை மற்றும் கவுரவத்துடன் அதிகாரிகள் நடந்துகொள்ள , சுபியின் வேலை எளிதாயிற்று அவள் இப்போது மிகுந்த தெம்புடன் வாதிட்டு இப்போதும் அனைத்து அதிகாரிகளின் நன்மதிப்பையும் பெற்று வித்யாவின் பெருமையும் அதிகார வட்டாரங்களில் பலமடங்கு உயர வைத்து விட்டாள் . சில தினங்கள் முன் வித்யாவிடம் சுபி தெரிவித்த "“இருக்கட்டும் மேடம் ப்ரோக்ராம் நடக்கும் போது பாருங்க , உங்களுக்கு பாராட்டும் ப்ரோமோஷனும் வருதா இல்லையானு.” –  என்ற பொருள் பொதிந்த சுபத்திரா வின் ASSERTION ஆழ்ந்த திட்டமிடல் பயனாக ஏற்பட்டது என்பது " இப்போது வித்யாவின் ஆழ் மனதில் ரீங்கரித்தது. வட இந்தியர்கள் அறிந்திராத மின்னல் சிலம்பம், கரக ஆட்டம் பலத்த வியப்பையும் எதிர்பார்ப்பையும் வீடியோ மற்றும் சுபியின் உதவியாளர்கள் அளித்த விளக்கவுரைகள் வாயிலாக  ஏற்படுத்திவிட்டன. நிகழ்ச்சி நிறைவடையும் போது  [4.20]. வேலுச்சாமி உள்பட பலரும் கையொலி எழுப்பி மகிழ்வை வெளிப்படுத்தினர். புறப்படத்தயாராயினர். அப்போது வித்யாஜிக்கு போன் PMO விலிருந்து .அந்த குழுவினரை PM சந்திக்க வேண்டுமாம் இங்கே அனுப்ப முடியுமா என்றது பெண் குரல். உடனே வேலுச்சாமி மற்றும் சுபி இருவரிடமும் பேசி குழுவினரை PM அலுவலக வளாகத்திற்கு அனுப்பி வைத்தாள் வித்யாமாலினி.

PM அனைவரையும் பாராட்டிவிட்டு சுபி யிடம் கரகாட்டம்  . பற்றி விரிவாக அறிந்து கொண்டார் ; மேலும் இந்த ஆட்டம் பெரும்பாலான மையங்களில் இடம் பெறுவதை தவறாமல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுபி சொன்னாள் "ப்ரோக்ராம் FLEXIBLE FORMAT இல் தான் செய்யப்பட்டுள்ளது, உங்கள் விருப்பப்படியே அமைத்துக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்தாள்.எவ்வளவு எளிதாக முடிவெடுக்கிறாள் இந்தப்பெண்மணி என்று PM அகமகிழ்ந்தார்.

சுபி 'நல்லவேளை மடிசாருக்கு 200/- ரூ வாங்காம விட்டது என்னை PM வரை அழைத்துவந்திருக்கிறதே -எல்லாம் மாரியம்மன் கருணை’ என்று மானசீகமாக சமயபுரத்தில் சன்னிதானத்தில் நின்றாள்

தொடரும்   அன்பன்  ராமன் 

 

VIBRANT REJUVENATION

Monday, January 30, 2023

PHOTOGRAPHY- 14

 PHOTOGRAPHY- 14

Light source

Quite relevant it is to forewarn beginners of the impending damage to picture quality from indiscriminate use or choice of light. This caution tries to ‘restrict’ use of any light, especially for colour photos ; light sources ought to be understood for their energy expressed in Kelvin units or Kelvin degrees. Kelvin values above 5600 are closer to daylight in their spectral component and values below 4500 tend to throw more reddish wavelengths that show off as colour tint not easy to visually accept. All my observations in this regard pertain to Film and honestly I have no idea as to how the situation is handled by Digital scheme of Photography.

Kelvin ratings at or around 6000 are more towards the blue end of the spoectrum- meaning that It simulates mid- day Sunlight; so colour values received by camera nearly match our perception of tints in day light by human brain. On the contrary, values of Kelvin at or below 4000 are unbearably reddish in spectral component and quite some compensation by filtration is essential[use of strong blue filteris advised[. Why use undesirable light and attempt correction?

It was a learned borrowing[ using of balancing filters] from cinematographers  who may have to shuttle between out door and indoor sequences on the same film stock.Even then the most astute among Cinematographers finish indoor needs before moving to out door and vice-versa with due change of appropriate film in place.

Well established Cinematographers could command the right film for use or could abstain from further work on that project citing the ground that “my name/our names is/are at stake[s]and cannot afford to lose label of expertise by compromising on filmstock”. They were well within the domain of fairplay because , any use of improper match like light on studios and film characteristic like response to spectral behaviour of light is bound to destroy image quality. So, friends , let us recognize that film manufacturers used market films T [BALANCED FOR TUNGSTEN inside studios =LOW KELVIN ] and D[BALANCED FOR DAYLIGHT OR HIGHER KELVIN typical of outdoor midnoon light ]. Wrong film in improper light conditions would bring off bizarre colours , bluish shadows , reddish brown hair colour and so on. Any movie-goer would rightaway fix it on the Cinematographer[s] though it was the moviemaker who failed to provide the right kind of film for work [or as in some strange situations the cinematographer hesitated to ask for right film , fearing the prospect of losing the assignment].In such situations balancing filters cannot ensure complete justice to colour rendition. For technical perfection ‘some light is no light ‘ is the watchword.The higher degree of success in colour rendition among later Indian movies was in large measure due to trained technicians brought out through Film Technology institutions  that fed them with sound foundations on LIGHT-FILM- PROCESS relationship + Typical characteristics of FILM BRANDS + THE CODES on them signifying their adaptability to situations. Thus, the industry could bring off movies at par with West in cinematography though widely constrained by ‘not-too –upto-date movie Cameras’.

STILL CAMERAS  Vs LIGHT BALANCING

Still photography too requires a set of lIghting gadgets like lamps kept in right orientation to privide general lighting as in photo studios, in addition to 1 or more lights –Key and Fill-in. These were good enough to help Black and White portraiture. With the advent of colour as the lone medium of image recording , these lights turned irrelevant by their Kelvin values [low end].

Special high Kelvin lamps are installed to handle light requirements for coour work. Curiously all through the history of Amateur photography, light quality in terms of Kelvin has always been a comfort zone in that Flash lights for Cameras throw up light valued at 5500-6000 Ko providing a blue-rich beam of light to safeguard colour characteristics of images as well as spectral requirements of Amateur colur films[unless specified otherwise by film manufacturer.] However in using Flash light overcertain distance can prove to be a menacem especially with lenses Tele/ Zoom. Both are capable of drawing the image closer from objects at a distance. I.E., THE IMAGE LOOKS LARGER ,THOUGH OBJECTS ARE PHYSICALLY AWAY . It means that the beam of light intended to light up image details may turn weak before reaching the object [due to distance] This is ecause , light /intensityof it is governed by”Inverse Square Law

Inversw square Iaw prescribes that

The physical quantum of light  received on a surface is inverely proportional to the square f the distance.

Consider 2 objects at 2 places [distance X] and [distance 2X]

While object at X receives light of some intensity, that at 2X receives only ¼ of what is received at X, due to ‘fall off’ effect. So, while using special optics designed to magnify image, care to send in extralight is a logical need.

To continue

K.Raman

Sunday, January 29, 2023

I MET YOU

 I MET YOU

உன்னை நான் சந்தித்தேன்

கருவிகளையும்  மிருகங்களையும் , பறவைகளையும் ஏதோ சில அறிமுக அடையாளங்களாக உபயோகிக்கப்போக இப்போது எவரும் உண்மைப்பெயர்களை க்கூட தேடுவதில்லை. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் என்ற நிலையில் தான் இந்தப்போக்கு வெகுவாக வளர்ந்துவிட்டது . மெல்ல மெல்ல இதை இயல்பு நிலைக்குத்திருப்பி மனிதர்களை அவர்தம் பெயர்களிலேயே அடையாளப்படுத்த முயற்சிக்கிறேன். மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திருப்புகிறேன் என்று ஏகமாக கதையை நீட்டுவாய் போல் தெரிகிரகிறதே என்று சிலர் நடுங்குவது புரிகிறது.. கவலை வேண்டாம் வெகுவிரைவில் முடித்து விட விரும்புகிறேன். 

டிக்கட் வந்ததால் சுபி குழுவினர் [1+4 } தயாரானார்கள். யூனிவர்சிட்டி விதிகளின் படி "ஆன் ட்யூட்டி " சலுகைகளை பெற்றுக்கொண்டு ஒரு புதன் கிழமை காலை    25-01-23- 7.00 மணி டெல்லி விமானத்தில் பயணித்து மதியம் 1.20 டெல்லி விமான நிலையத்தில் இறங்கி , பரபரப்பாக தத்தம் லக்கேஜ் களை கன்வேயர் பீடத்தில் இருந்து எடுத்துக்கொண்டு பிறரைப் பின்பற்றி வெளியே வந்தனர்.

Dr Subhadra என்ற அட்டையை ஏந்தி நின்றவனை  நோக்கி நகர்ந்து முகம் மலர்ந்தனர் . அவன் இவர்களை வழி நடத்தி டாக்ஸி கூட்டத்தில் நடுவில் புகுந்து ஒரு பெரிய வாகனத்தின் அருகில் சென்று செல் போனில் லோக் ஆயா ' என்றான் அடுத்த வினாடி அம்பு போல் பாய்ந்து வந்த வேலுச்சாமி "வணக்கம் மா " வாஷ் ரூம் போய் வர கொஞ்சம்  லேட்டா ஆயிருச்சு - sorry என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை என்றாள்  சுபி  . இரண்டு வினாடிகளில் லக்கேஜ்  ஏற்றி டிக்கியை மூடி விட்டு , மேடம் இப்ப நீங்க அசோகா ஹோட்டல் ரூம் 205, 206, 207 இல் இறங்கி லஞ்ச் முடிச்சுடுங்க. லஞ்ச் சாப்பிட்டதும் உங்கள ரூமில் விட்டுட்டு , நான் போயி டைரக்டர் மேடம் மற்றும் 1 secretary sir , இரண்டு பேரையும் இங்க கூட்டிக்கிட்டு 4-45 -- 5.00 க்குள்ள கூட்டிட்டு வந்துர் றேன் .

நீங்க கிளம்புங்க நாங்க Dining போய் சாப்புட்டுக்கறோம் என்றாள் சுபி .

 இல்ல மேடம் --இருந்து கரெக்ட்டா எல்லாம் செஞ்சு குடுத்துட்டு தான் வரணும் னு மேடம் உத்தரவு.  அவங்க சொல்லிட்டா அது தான் final ; நான் உங்களுக்கு வேண்டிய எல்லாம் செய்யத்தானே அனுப்பி இருக்காங்க. நீட்டா எல்லா ஏற்பாடும் செஞ்சுடறேன் .  மாலை வரை ரெஸ்ட் எடுங்க , பகலி லயே குளிரும் ஸ்வெட்டர் போட்டுக்குங்க.என்று பவ்யமாக வே பேசினான். சொன்னபடி ரூம், உணவு ஏற்பாடு களை கவனித்து விட்டு, பெரிய மினரல் வாட்டர் பாட்டில்களை 3 ரூமிலும் வைத்து விட்டு அம்மா ஈவினிங் வரேன் என்று விடை பெற்றான் வேலுச்சாமி --மணி 2-43.

3.10 க்கு வேலுச்சாமி வித்யா மேடம் சேம்பரில் போய் அனைத்தையும் சொல்லி விட்டு எப்பம்மா ட்ரிப் எடுக்கணும் என்று கேட்டான் . 4.30 டு 4. 40 க்குள்ள கிளம்பலாம் ,வழியில என்று ஏதோ மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள் [2 , 3--  500/- ரூபாய் நோட்டுகளை கொடுத்து கவனம் என்றாள் -சரிங்கம்மா என்றான் வேலுச்சாமி ]

மாலை 4.35 க்கு கார் புறப்பட்டது ,வழியில் 5 bouquet வாங்கி வண்டியில் வைத்தான் வேலுச்சாமி. மாலையின் நெரிசலி ல்பயணித்து 5 மணிக்கு  அசோகா ஹோட்டல் வந்தனர் வித்யா + செயலர். 205 இன் அழைப்பு மணி ஒலிக்க சுபி வெளிவந்தாள் - சுடிதாரில் குதிரை வால் கொண்டையுடன் நெற்றி மேல் ஏற்றிய கூலிங் கிளாஸ் உடன் ஹேமமாலினி -அதான் வித்யா.

குதிரை சற்று மிரண்டது -எவ்வளவு நேர்த்தியாக தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள் - அதுவும் பெரும் உயரதிகாரி . இவளை இடுப்பைச்சுற்றி எவ்வளவு நெருக்கமாக மடிசார் அணிவித்தேன் இப்போது தொடமுடியுமா -தொட்டால் கம்பி எண்ண  வேண்டியதுதான் என்று மனம் பயந்தது-குதிரைக்கு.

 என்ன எல்லாரும் சாப்பிட்டீர்களா என்று விசாரித்து BOUQUET கொடுத்து வரவேற்றாள் வித்யா. அறிமுகம் முடிந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். நாளை 11.00 மணிக்கு 1 செஷன் , பின்னர் மாலை 3.30 மணிக்கு 2ம் செஷன் -இரண்டிலும் நீங்கள்[ குதிரை]  LEAD பண்ணி ஆரம்பித்து பிறர் விளக்க டெமோ செய்ய வேண்டும். CD -பவர்பாயிண்ட்+ EXPLANATION சுமார் 40-45 நிமிடம் ஒவ்வொரு செஷனும் என்று OUTLINE தெரிவித்து, காலை 10.00 மணிக்கு           ரெடி யா இருங்கள் கார் வரும் , கெஸ்ட் ஹவுஸ் இல் உயர் அதிகாரிகள் முன்பு டெமோ செய்யவேண்டும். கவனம். PM வரமாட்டார்   ஆனால் VIDEO CONFERENCE இல் பார்த்து முடிவு செய்வார். GOOD LUCK என்று விடை பெற்றாள் வித்யாமாலினி .

தொடரும் அன்பன் ராமன் 

Saturday, January 28, 2023

VAIKUNTA EKADHASI

 VAIKUNTA EKADHASI – POSTING  NO. 500

வைகுண்டஏகாதசி  [பதிவு என் -500]

இந்த BLOG பதிவுகள் துவங்கப்பெற்றது 22-09-2021 [ எனது மனைவி மறைந்து 3 வாரங்களுக்குப்பின் ]. இன்று எனது பதிவு,  எண் 500 தொட்டுள்ளது. ஊக்கம் அளித்து வாசித்தவர்களுக்கும், தூக்கம் பெரிதென வாசிக்காமல் விட்டவர்களுக்கும் , வாசிக்காமலே வாசித்தது விட்டதாக சூப்பர் என்று ஒற்றை வார்த்தையில் விட்டவர்களுக்கும் ஒரே மாதிரி நன்றி பாராட்ட விழைகிறேன். எல்லா தகவல்களையும் சீர் தூக்கிப்பார்த்தால் சுமார் 50-55 நபர்களுக்கு அனுப்பினாலும் தவறாமல் படிப்பவர்கள் 10 பேர்கள் மட்டுமே. அவர்கள் என்ன என் போல வேலை அற்றவர்களா ? அவர்களுக்கு பல்லாயிரம் பணிகள் இருக்கும் [அவர்களைக்  குறை காண்பது தவறு]. மாறாக ,அந்த மனித தேனீக்களை தொடர்ந்து துன்புறுத்தாமல் அவர்களுக்கு பதிவுகளை அனுப்பாமல் இருந்தால் -நிச்சயம் மகிழ்ச்சி கொள்வர் / அவர்களின் மகிழ்ச்சிக்கு இடையூறாக இனியும் என்னிடமிருந்து இது போன்ற BLOG POSTS  தொடராது என்று உறுதி அளிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றிகள் . அன்பன் ராமன்

வைகுண்டஏகாதசி

சுறுசுறுப்பும் பரபரப்பும் , கூட்டமும், க்யூ வரிசையும், பட்டாணியும், பாத்திரக்கடையும், கோயிலின் அமைப்பையே அறியாத போலீசும் , ஒழுங்காக போய்க்கொண்டிருப்பவனை , அங்கே போ என்று தவறாக அனுப்புவதும் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பும், பெருமாளைத்தவிர அனைத்து விஷயங்களையும் அலசும் உள்ளூர் கூட்டமும்,சேர்ந்த மொத்த கலவை தான் ஸ்ரீரங்கம் -அதுவும் வைகுண்ட ஏகாதசி காலங்களில் . அதுவும் பரமபத வாயில் நுழைவுக்கு முயற்சிக்கும் பலரும் பலவரிசைகளில் நிற்க கூட்டம் மெதுவாக , நகர திடீரென்று நகர்வு நின்று போய் அங்கிமிங்கும் எட்டிப்பார்க்க சண்டை துவங்கி விடும்,."ஏன்டா என் காலை மிதிச்ச? நான் எங்க மிதிச்சேன்  என்று எதிர் வாதம் ; நீ வெளிய வாடா உன்னைப்பார்த்துக்கறேன். வெளியே வந்தாதான் பாப்பியா நான் இப்பவே பாத்துருவேன் என்று சும்மா உதார் விட்டுக்கொண்டிருக்க பலூன் விற்பவன் பலூனில் கீச் கீச் என்று தேய்க்க இடுப்பில் இருக்கும் சிறுவன் பலூ என்று அழ  , பலூனை வாங்கி சிறுவனும் தேய்க்க பட்டீர் என்று வெடித்து முன்னால் இருந்த கிழவன் காதில் ங்கொய் ய்ய்ய் என்று குடைய , கிழவன் மயங்கிச்சரிய ஒருவன் தாத்தா செத்துட்டாரு என்று பீதியைக்கிளப்ப . வரிசையில் முன்னும் பின்னும் இருந்த 25-30 பேர் சிதறி ஓட பலூன் வெடித்த சிறுவன் அடி  வாங்கி என்று முனக , மூச்சுவிட்ட மென்னியை முறிச்சுருவேன் தாத்தாவ கொன்னுட்டியேடா பாவி என்று நைசாக நழுவி வெளியேற, தாத்தா எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு வேகமாக முன்னேறி ஓட ஒருவன் என்ன தாத்தா பரமபதம் போயிட்டு வந்தாச்சு போலிருக்கு என்று கிண்டல் பேச , நீ தான் கனவுல பரமபதம் போயிட்டு வர அதான் பெனாத்திக்கிட்டிருக்க என்று அவன் வாயை அடைத்து விட்டு வேகமாக முன்னேறி பரமபத வாயில் சமீபம் வந்துவிட , ஒரு பெண்மணி   குண்டு வேகமாப்போஎன்றாள்.

எவடி அவ என்று  'குண்டு' திரும்ப நான் தான் என்று திமிராக பார்க்க, 'குண்டு ' அவள் குடுமியைப்பிடித்துக்கொண்டு கொத்தாக கத்தரிக்காய் போல உயரத்தூக்கி " நீ யாடி எனக்கு சோறு போடற 'குண்டு 'ங்கறியே , குண்டு அடி  எப்படி இருக்குனு பார் ரீ என்று ஒரு அரை விட்டாள்.

அரை வாங்கியவள்பாஸ்கர் இங்க வாயேன் என்று புலம்ப, ஒரு 30 வயது ஆள் ஓடி வந்தான், கழுத்தில் ID அட்டையை தொங்க விட்ட படி. குண்டு சரே ரென்று , பெண்ணை இடக்கையில் பிடித்துக்கொண்டு, வந்தவனின் ID பட்டியை .கழுத்தைச்சுற்றி இறுக்கி , என்னடா பண்ணிப்புடுவ -நான் யார் தெரியுமில்ல என்றாள் பெரிய பத்ரகாளி குங்குமப்பொட்டுடன். இறுக்கிய வலிமையில் பாஸ்கர் என்ற அவன் கண்கள் வட இந்திய காலண்டர்களில் நாம் பார்க்கும் சிவபெருமானின் கண்கள்போல  மெல்லிய கீற்றாகத்திறந்து ஒரு புறம் சொருகிக்கொண்டிருக்க,  இரண்டு கையிலும் தவளை மாதிரி தொங்கிக்கொண்டு இருந்தவர்களை கோயிலுக்கு வெளியே கொண்டுவந்து , ஒரே கையில் பிடித்துக்கொண்டு நையப்புடைத்தாள்; அடி  வேகத்தில் பாஸ்கர் கும்பிடு போட்டான், அந்த பெண் நான் போலீசக்கூப்பிடுவேன் என்றாள் . கூப்புடுறீ   என்றாள் குங்குமப்பொட்டு. போலீஸ் போலீஸ் என்று அலற போலீஸ் ஓடி வந்தவுடன் , குண்டுஎன்ன ரெங்கசாமி உனக்கு கோயில்ல டூட்டியா இங்க எப்ப வந்த ?..

ஆத்தி நம்ம ரெங்கம்மா அது தப்புத்தண்டா வுக்கு போகாதே இவனுக ஏதோவம்பு பண்ணிருப்பாங்க அதான் ரெங்கம்மா சாத்துது என்று ரெங்கம்மாவுக்கு என் ஓட்டு என்பது போல் அகன்று போனான். சிறுகூட்டம் கூடிவிட கீரைக்கார பொன்னம்மா நீ எப்ப டீ  வந்த என்று கேட்க குண்டு [ரெங்கம்மா] காலைலதான் வந்தேன் கொரோனாவுல 2 வருசமா சாமி பாக்கல , குலசாமி ஆச்சே னு வந்தா இவ குண்டுங்கரா அதன் நாலு போட்டேன் , இன்னும் நல்லா சாத்தணு ம் அதுக்குதான் வெளியே கொண்டாந்துட்டேன்.போலிசக்க கூப்புடுவாளா மில்ல. . அவன் என் கடையில இட்லி தோசை திங்கற வன் .ஒன் பப்பு எங்கிட்ட வேகாதுடீ    , என்று முதுகில் அறைந்தாள் ஐயோ என்ன வீட்டிடுங்க என்று கும்பிட்டாள் அந்தப்பெண் -அட  இவ இங்க டீச்சர் இப்படித்தான் வம்பு வளப்பா  இன்னக்கி ஒங்கிட்ட மாட்டிக்கிட்டா என்று பொன்னம்மாள் சொல்ல, எப்போது தன்னை விடுவாள் என்று நடுங்கிக்கொண்டிருந்தான்.  பாஸ்கர் .

அடி  வாங்கியது நீலகண்ட ஐயருடன் தகராறு செய்யும் டீச்சர் . அடித்தது திண்டுக்கல் கும்மாங்குத்து ரெங்கம்மா.. ரெங்கம்மா குடும்பம் ரெங்கநாதரை குலதெய்வமாக வழிபடுவர்கள் அதனால் தான்  அவள் பெயரே ரெங்கம்மா. . இப்படி ரெங்கமாக்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை தான்.  .

அன்பன் ராமன்

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...