Tuesday, October 3, 2023

EDUCATION -10 OPPORTUNITIES

 EDUCATION -10   OPPORTUNITIES

அன்பர்களே 

 இன்றைய கட்டுரை  அடியேனின் 750 வது பதிவு. தங்களின் ஆதரவிற்கு நன்றி 

வாய்ப்புகள்

சென்ற பதிப்பில் ஒவ்வொரு கல்வித்தகுதிக்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து பின்னர் விளக்குவதாக குறிப்பிட்டிருந்தேன . அதன் தொடர்ச்சியாக , மக்கள் பெரிதும் கவனம் செலுத்தாத சில பாடத்திட்டங்கள் என்னென்ன வாய்ப்புகளை உருவாக்கித்தரும் என்று சில தகவல்களை திரட்டியுள்ளேன். அவற்றை இங்கே பார்க்கும் முன்,  ஒரு தெளிவான அறிவுறுத்தல் . ஏனோ தானோ அணுகுமுறை, ஒருநாளும் எந்த படிப்புக்கும் பலன் தராது. எனவே சற்றும் குழப்பமில்லாமல் முறையாகப்படித்து தகவல்களை கற்றால் நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன .

ஆங்கிலம் [ M .A ]

நூல் பதிப்பு [publishing ], நூல் ஆசிரியர் [editing ], சந்தைப்படுத்துதல் [மார்க்கெட்டிங்], இதழியல் [JOURNALISM ] கல்வித்துறை [EDUCATION ] போன்ற துறைகள். இது உயர்கல்வி என்பதால், பேச்சுத்திறன் மற்றும் வாதங்களை வைக்கும் நுணுக்கங்கள், வலியுறுத்தல் , முனைப்புடன் கருத்துகளை பதிவிடுதல், துல்லியமாக ஆய்தல் மற்றும் பல்முனை ஆய்வு நுணுக்கங்கள் உள்ளிட்ட திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன . இத்தகைய வாய்ப்புகளை பயிலும் போதே கற்க , திறன்மேம்பாடு, தன்னம்பிக்கை போன்ற முன்னேற்ற வழிமுறைகளை செயல் படுத்துவது எளிதாகும்  

ஒரு [விதண்டா] வாதம் ஆங்கில இலக்கியம் குறித்து பேசப்படுவது --    ஷேக் ஸ் பியரை படித்து என்ன ஆகப்போகிற து ?  இதற்கு நான் நினைப்பது "எதைப்படித்துதான் என்ன ஆகப்போகிறது?" ஆகவே ஒன்றை கற்பது என்பது 'அந்த ஒன்றை " புரிந்து கொள்ள என்பதாக தோன்றினாலும் , அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளை நுணுக்கமாக அலசும் போது இயற்கையின் அல்லது படைப்பின் வியத்தகு அமைப்பியல் கோட்பாடுகள் நம்மை பிரமிக்க வைக்கும். இயற்கையின் விதி [law of NATURE] என்பதை அறிவியலின் அனைத்து அமைப்பு மற்றும் செயல்களில் காணலாம். எனவே நாம் கற்ற கோட்பாடுகள் துல்லியமான கருவிகள் என்று சரியாகப்புரிந்து கொண்டால் ,அதை எவ்வாறு லாபகரமாக [profitable ]   பயன் படுத்தலாம் என்ற ஞானம் நமக்குள் விருட்சமாக விளைய வேண்டும் . அதுதான் கல்வியின் பயன். 'இதை'படித்தால் என்னை அந்த நிறுவனத்தில் சேர்த்துக்கொள்வார்களா, இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று வேலையை முன்னிறுத்தி கல்விகற்க எத்தனிப்பவர்கள் எதையும் கற்க மாட்டார்கள். -இது நான் கண்ட உண்மை.

மீண்டும் ஷேக்ஸ்பியருக்கு  வாருங்கள்  அவரது மிக நுணுக்கமான சிந்தனை வெவ்வேறு கல்விமுறைகளை உள்ளடக்கி மிளிர்வதைப்பாருங்கள் .

1 A POUND OF FLESH ? ,  2 FAIR IS FOUL அண்ட் FOUL IS  FAIR, 3 YOU WILL BE THE KING ,

1 a  pound of  flesh இது எந்தக்காலத்திலோ ஷேக்ஸ்பியர் உணர்த்திய "கந்துவட்டி " மனோபாவம் "

2 fair is foul and foul is fair என்பது அரசியல் பிழைப்பை சொல்லும் தர்மமும் அநியாயமே , அநியாயமும் தர்மமே என்று எதையும் நியாயப்படுத்தும் மனித வக்கிரம்

3 you will be  the  King   என்னும் ஆழ்ந்த மனோ தத்துவ மூளைச்சலவை உத்தி . பதவி பீடத்தின் அருகில் இருப்பவன் எளிதில் குற்றம் புரிவான் என்ற உணர்த்தல . ஆம் படைத்தளபதியின் மனைவி "நீ மன்னனை கொன்று விடு"     தளபதி "கொன்றுவிட்டால் ?"                                                                                    மனைவி : "நீ மன்னன் ஆகலாம்" என்று மூளைச்சலவை செய்து வெற்றியும் பெறுகிறாள் . இதன் உள்ளார்ந்த பொருள் "நீ மன்னன் என்றால் நானே ராணி "என்று சாதுர்ய திட்டம்.                                                                                 இப்போது சொல்லுங்கள் ஷேக்ஸ் பியர் நாடக ஆசிரியரா , மனித மனங்களை ஆய்ந்த  மனவள ஆய்வாளானா ? என் பார்வையில் அவர் மனித மன வக்கிரங்கள் தலைவிரித்தாடும் களங்களை வெகு சிறப்பாக நாடக வடிவில் வெளிப்படுத்தியவர் எனில் மிகை அல்ல. 

இவ்வகை விளக்கங்களை பயில ஆங்கில இலக்கிய திறனாய்வு ஒரு சிறந்த பயிற்சிக்களம் . ஆங்கிலம் படித்து என்ன செய்வது என்று கேட்போர் , கல்வி என்பது அறிவை செம்மைப்படுத்தவும் , நுணுக்கமான வாதங்களை சிறப்பாகப்பயிலவும் உதவும் . "என்ன வேலைக்கு போகலாம் ? என்று கேட்பவர்கள் , நமது திறமை என்ன ? மொழியின் மீது நமது ஆளுமையும் ஆதிக்கமும் எவ்வளவு பண்பட்டது என்ற வினாக்களுக்கு உங்கள் பதில் என்ன , introspection என்னும் சுய மதிப்பீடு செய்து நமது உண்மையான உயரம் என்ன என அறிந்துகொண்டால். திறமை தான் அளவுகோல் , அறிவு தான் திறவுகோல் என்றுணர முடியும். குறிப்பிட்ட பணிகளுக்கான திறன் மேம்பாட்டில் நாம் கட்டமைக்க வேண்டியன யாவை என்று உணர்ந்து செயல் பட்டால் பலன் உண்டு. நான் MA படித்திருக்கிறேன் என்றால் அடுத்த கேள்வி உங்களால் தகவல் தொகுக்க[INFORMATION COMPILATION]  முடியுமா? CONTENT எடிட்டிங் என்னும் தகவல் சீரமைப்பு செய்து தர இயலுமா? ஸ்கிரிப்ட் EVALUATION என்னும் தகவல் தரம் குறித்த முறையான மதிப்பீடு செய்ய இயலுமா ? என்ற வினாக்கள் சரமாரியாக எழும் . இவை ஒவ்வொன்றிற்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே திறன் மேம்பாடு என்னும் இலக்கை நோக்கி தான் பயணிக்க வேண்டும் . ஏதோ ஒரு டிகிரி முடித்தால் போதும் என்றிருந்தால், டிகிரி முடிக்கத்தான் இயலும்  உயரம் தொட இயலாது. உயரம் தொட உழைப்பே மூலதனம்.     இதனை நன்கு உணர நம்மை பயக்கும் . 

இன்னும் பல துறைகளில் வாய்ப்பு கள் உள்ளன. விரிவாகப்பார்ப்போம் 

தொடரும்

அன்பன்  ராமன்

2 comments:

  1. புதுமண்டபம் புத்தக்க்கடையில நடந்த ஒரு நிகழ்வு.
    MA English Luterature படிக்கும் ஒரு மாணவன் கடைக்கார்ரிடம் கேட்டகேள்வி
    ஐயா MA English க்கு தமிழ்மீடியத்தில் நோட்ஸ் இருக்கா?
    ??????????
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. இதோ என்று 4, 5 நோட்ஸ் வகைகளை காட்டியிருப்பரே
    'நடனசுந்தரம்" புத்தகக்கடையினர் !!!!

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...