Monday, October 23, 2023

IT WOULD PASS BY

 இதுவும் கடந்து போகும்

நல்ல மார்கழி மாதம், ஆங்கிலப்புத்தாண்டு 4ம் நாள், 1 ம் தேதி சனி ஞாயர் என்று வரிசையாக லீவு  இன்று தான ஸ்கூல் காலேஜ் எல்லாம் திறந்து பஸ்ஸில் ஒரே கூட்டம் . ஐயோ அப்பா என்று முனகிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் வெங்கடேசன். பையன் பாலாஜியைப்பாத்ததும் க்ளாஸ் ஆரம்பிச்சாச்சா என்று வந்ததும் வராததுமாக வராஹ அவதாரம் போல் குடைந்தார். பாலாஜிக்கு ஆத்திரமும் அச்சமும் தொற்றிக்கொள்ள  பெயருக்கேற்றாற்போல சிறிதும் சஞ்சலம் இல்லாமல் [திருப்பதி பாலாஜி போல] லோகக்ஷேமம் மஹாம்யஹம் என்பது போல நின்று கொண்டிருந்தான்.

பாலாஜி பேச்சை மாற்றினான் - காபி சாப்பிடல்லையா அப்பா என்றான் காப்பியிருக்கட்டும் என்று வெங்கடேசன் கொந்தளிக்க, சரி அப்பா போன்விட்டாவா என்று கேப்டன் குக் போல ஆரம்பித்தான். வெங்கடேசன் கோபம் கொப்பளிக்க, திருட்டுப்பய பேச்சை மாத்தி தப்பிக்க பாக்கிறாயா இரு வருகிறேன் என்று முகம், கை  கால் கழுவ வீட்டின் பின் பகுதியில் போய்க்கொண்டிருக்க டொட டொய்ங் டோ டா டொய்ங் என்று கூவிக்கொண்டே , பீரோவின் பின்னால் இருந்த சைக்கிள் டயர் + விசிறியின் கைப்பிடி இரண்டையும் நொடிப்பொழுதில் எடுத்துக்கொண்டு ஏர் போர்ஸ் பைலட் போல ஒரே பாய்ச்சலில் அடுத்த தெருவில் இருந்த வித்தைக்காட்டும் இடத்தில் பலரின் கால் இடுக்கில் புகுந்து உள் வட்டத்தில் டாம் டாம் டம் டம் என்று தட்டிக்கொண்டிருந்த பெண் அருகில் அமர்ந்து கொண்டு    டாம் டாம் டம் டம் என்று வாயால் சொல்லிக்கொண்டு,  அக்கா உங்க பேர் என்ன என்றான் பாலாஜி . ஏன் என்ன கல்யாணம் கட்டிக்க போறியா என்றாள் ஷீலா. பேர் சொல்லுங்கக்கா என்றான் பாலாஜி. ஏன், கல்யாணம் கட்டிக்க போறியா என்று ஷீலா கேட்க மீண்டும்பாலாஜி பேர் கேட்டான். என்னகல்யாணம் கட்டிக்க போறியாஎன்று மீண்டும்   கேட்க, இல்லக்கா நீங்க எனக்கு மாச் [match] இல்லக்கா என்றான்.

ஷீலா கோபம் வந்து நீ ரொம்ப அளகாக்கும், போய் கண்ணாடில பாரு.கிஷ்கிந்தை ஆசாமி மாதிரி இருந்துக்கிட்டு என்று கலாய்த்தாள் 

நீங்க கிஷ்கிந்தைக்கு போய்ருக்கீங்களா?     என்றான்.                     

போயிருக்கேன் -ஷீலா,  எதுக்கு ?- பாலாஜி

வயித்துபொளப்புக்கு தான்.என்றாள் ஷீலா.  அங்க போனா சோறு கிடைக்குமா? என்றான் பாலாஜி .அடுத்த தடவை நானும் வரேன் கூட்டிட்டுப்போங்கக்கா என்றான் பாலாஜி.

போயா படிச்சு ஒப்பேருவியா இங்க வந்து டம் டாம்ம்னு தட்டறேங்கரியே. நான்லாம் படிச்சிருந்தேன்னா கலைக்டர் ஆயிருப்பேன், தலையெழுத்து இப்படி மோளம் அடிச்சுக்கிட்டு சோத்துக்கே திண்டாடுறோம் போராடுறோம், போப்பா போய் படிப்பா . படிப்புதான்ப்பா நல்லது அடுத்தவன் கிட்ட கையேந்த வேண்டாம் நல்லா படிப்பா என்று கண்ணீர் சிந்தியபடி சொல்ல, பாலாஜி நெகிழ்ந்தான். நெஜம்மாவா சொல்றீங்க என்றான் பாலாஜி, ஆமாப்பா அதோ கயித்துல தலகீளா தொங்கறாரே எங்க அண்ணன் , அது கிட்ட கேளு படிப்பு எவ்வளவு ஒசத்தினு சொல்லும் . வாழ்க்கையை கெடுத்துடாத நல்லா படி, என்ன விட நல்ல பொண்ணு கிடைக்கும் ,கண்டிப்பா படி என்று அறிவுறுத்த ,பெரும் வீரன் போல் எழுந்தான் பாலாஜி.. சரிக்கா நல்லா படிக்கிறேன் என்று ஷீலாவை கும்பிட்டு வணங்கினான். வறேன்க்கா என்று கிளம்பியவன் -நீங்க பேர் சொல்லவே இல்லையே என்றான்-

சிரித்தபடியே சொன்னாள் "ஷீலா" அவள் பெயரை முணுமுணுத்துக்கொண்டே சைக்கிள் டயரை உருட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றான் கை, கால் கழுவி இஷ்ட தெய்வம் அனுமனை வணங்கினான். வேறேன்ன? 'கிஷ்கிந்தை" வேலை செய்கிறது. புத்தகத்தை எடுத்து ஆழ்ந்து படித்தான், ஷீலாவின் அறிவுரை காதில் ஒலிக்க   சபதம் பூண்டு படிப்பில் இறங்கினான்.

திருட்டுப்பய,   வேஷம் போடறான் என்று வெங்கடேசன் குமுறினார். PROGRESS ரிப்போர்ட் எங்கே ? தரலை என்றான் பாலாஜி. எல்லாருக்கும் வந்தாச்சு எனக்கு தெரியும் என்றார் அப்பா.

எனக்கு தரலை என்றான் பாலாஜி. உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்று பொங்கினார் வெங்கடேசன்.  தரலை என்று ஓங்கிக்கத்தினான் பாலாஜி ஏன் தரலை என்று வெங்கடேசன்  அதிர, பாலாஜி எனக்கு "NO PROGRESS அதுனால NO PROGRESS REPORT என்று முற்றுப்புள்ளி வைத்தான். அப்பா கடுப்புடன் மனைவி மைதிலியிடம் இவனுக்கு சோறு போடாதே என்று அலறினார். அடுத்த டெஸ்ட் நல்லா மார்க் வாங்கி உங்க மூஞ்சில காரியப்பூசல்லன்னா என் பேர் பாலாஜி இல்லை என்று ஆழ்மனதில் சூளுரைத்தான். அனுமனுக்கு அடுத்த இடத்தில் ஷீலா நின்று ஆசிவழங்க வெறி வந்தவன் போல் படித்து ஆசிரியர்களே திக்குமுக்காடினர் பாலாஜியின் வைராக்கியத்தை ப்பார்த்து. லோகக்ஷேமம் மஹாம்யஹம் என்று இருந்த பாலாஜியை எந்த உருட்டலும் மிரட்டலும் அசைக்க முடியவில்லை. ஷீலாவின் அன்புச் சொல்லும் கிஷ்கிந்தை போய் வந்தவள் என்ற மரியாதையும், பாலாஜி யை உண்மையான விஸ்வரூபம் கொள்ள வைத்தது.   மனித மனம் எப்படி திசை மாறுமென்பது ஈசன் விளையாட்டே.

அன்பன் ராமன்   

3 comments:

  1. எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்
    வீட்டுக்கு வீடு வாசற்படி

    ReplyDelete
  2. இந்த கதையின் மூலம் நல்ல அருமையான மெஸேஜ் சொல்லியிருக்கீங்க. உருட்டல், மிரட்டலலெல்லாம் எந்தவிதமான பயனும் தராது. நம்முடைய எதிர்பார்புகளையும் நிறைவேற்றித்; அன்பும் மற்றும் தரிசனமானார் அணுகுமுறையும் நாம் எதிர்பார்பதைவிட அதிக பலனைத் தரும் என்பதற்கான அருமையான கதை

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...