Wednesday, December 27, 2023

CINE DIRECTOR-- K S GOPALAKRISHNAN

K S GOPALAKRISHNAN

கே எஸ் கோபாலகிருஷ்ணன்

ஸ்ரீதரின் சம காலத்தவர் .ஆயினும் இருவரும் பல வகைகளிலும் வேறு பட்டவர்கள்.

நெடிய காட்சி வசனம் என்று குரல் பலமே பட பலம் என்று இயங்கியவர் கே எஸ் ஜி .     இவர் இயக்கிய முதல் படம் 'சாரதா' எஸ் எஸ் ஆர் , விஜயகுமாரி

1 சாரதா'  பாடல் 'ஒருத்தி ஒருவனை ' பி பி ஸ்ரீனிவாஸ், சுசீலா கே வி மஹாதேவன் இசையில் கண்ணதாசன் பாடல் அமைதியான தர்க்கம் ஆயின் நல்ல தாக்கம் தந்த பாடல் . https://www.google.com/search?q=saradha+tamil+movie+songs+video+download&newwindow=1&sca_esv=593882672&sxsrf=AM9HkKnqv0trvSmDEwpIBj86pAcEhMSN oruththi oruvanai saradha

2 பின்னர் 1963 ல் 'கற்பகம்'   பாடல் "பக்கத்துவீட்டு பருவ மச்சான்"-வாலி, வி-ரா, சுசீலா 

கவிஞர் வாலியை வேரூ ன்ற வைத்த படம் படத்தின் 4 பாடல்களுமே வாலி   யாத்தவை , நான்கும் பி சுசீலாகுரலில்  இசை எம் எஸ் வி-ராமமூர்த்தி. அப்போதே, வாலி தேர்ந்த கவிஞன் -அதாவது சினிமா கவிஞன் என்று பதிவு செய்த   விரக தாப சொல்லாடல். உதாரணம்

மாந்தோப்பில் வழி மறிச்சு மயக்கத்தையே வர வழைச்சான்

விடியும் வரை கதை படிச்சு முடியாமல் முடிச்சு வச்சான்

https://www.google.com/search?q=PAKKATHTHU+VEETI+PARUVA+MACHCHAAN+VIDEO+SONG&newwindow=1&sca_esv=593870138&sxsrf=AM9HkKm3OUCELoc3S7q pakkaththu veettu

மற்றுமோர் ஆக்கம்

3 “மன்னவனே அழலாமா -வாலி.எம் எஸ் வி- டி கே ஆர் - பி சுசீலா

இப்பாலில் ட்ரம்பெட் அவ்வப்போது மெல்ல சிணுங்கிய விதம் அந்நாளைய புதுமை .போகட்டும் இந்த பாடலின் மூட் என்னும் மன நிலையை மேலும் உயர்த்திய நுட்பம் பின்னணியில் கிளம்பிய கோரஸ் ஒலிகள் .குழம்பிய நாயகனின் உள்மனமாகஒலிக்கும் இசை--- இவை அப்போதே அரங்கேற்றி ஒரு  தாக்கம் விளைவித்து கே ஆர் விஜயா வை ஒரு முன்னணி நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய பாடல். கேஎஸ் ஜி அவர்களின் சில அறிமுகங்களில் முதன்மையானவர் புன்னகை அரசி என புகழ் பெற்ற KR V .

https://www.google.com/search?q=mannavane+azhalama+video+song+download&newwindow=1&sca_esv=593955280&sxsrf=AM9HkKkgfmmvum-reUDIBzJj7Ul9PCcHi

4 கை கொடுத்த தெய்வம் 1964  "சிந்து நதியின் மிசை நிலவினிலே "

சுப்ரமணிய பாரதி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி எம் எஸ், ராகவலு, எல் ஆர் ஈஸ்வரி . ஒரு தேசிய உணர்வு கொப்பளிக்கும் பாடல், பாரதியே பாடுவதாக கற்பனை. அற்புத காட்சி அமைப்பு., கே எஸ் ஜி யின் பாடல் காட்சிகளிலேயே உயர்ந்து நின்ற பாடல். பாடலில் வரும் தெலுங்கு மொழி வரிகள் ராகவலு /ஈஸ்வரி குரல்களில். இதில் எம் எஸ் வி யின் விஸ்வரூபம் துன் மற்றும் பொருத்தமான இடங்களில் கோரஸ் குரல்கள் எளிதாக பாடலை ஒரு உயர் தளத்திற்கு தூக்குவதை உணரலாம்.. எம் எஸ் வி எந்த பாடலிலும் மிக இயல்பாக கோரஸ் குரல்களை நுழைப்பதில் அதீத வல்லமை பெற்றவர். கேளுங்கள் பாடலை    https://www.google.com/search?q=sindhu+nadhiyin+misai+nilsavinilevideo+song&newwindow=1&sca_esv=593870138&sxsrf=AM9HkKl7vAJUB-LZeZJk6VcuH2_GLdvsVQ sindhu nadhiyin

5 1000 ரூபாய் -1964

1000 ரூபாய் -1964 "பார்த்தாலும் பார்த்தேன் " பிபிஸ்ரீனிவாஸ் ,பி சுசீலா கண்ணதாசன் கே வி மஹாதேவன் .இது ஒரு வில்லங்க பாடல் . நாயகி ஒரு குடிசை வாசி

 நாயகன் உயர் மட்ட வாழ்வில் இருப்பவன். இவர்கள் பாடுவது போல் அமைந்த பாடல்

அவரவர், கள யதார்த்தம்-- பாடலின் சிறப்பு. இசை என்று பெரிதாக விமரிசிக்க வாய்ப்பில்லை ஆயினும் சுசீலா மிகச்சிறப்பாக உச்சரிப்பில் பிரமிக்க வைத்த பாடல் இந்த உச்சரிப்புகளை பாடலில் உன்னிப்பாக கேளுங்கள் சொல் மட்டும் அல்ல பாடும் ஆனாயாசத்திலும் சாவித்ரிக்கு உயிர் கொடுத்து பாடப்பட்டிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரிய ஒரு செயல்.

சட சடத்து வெட வெட த்து படபடத்து போகுது , பக்கத்துல நீ இருந்தா இன்னான்னவோ ஆவுது , பின்னர்  அட ஏதோ ஒண்ணு ஒன்னயும் என்னயும் இப்பிடி புடிச்சு ஆட்டுது என்னுமிடத்தில் சுசீலாவின் பங்களிப்பு மகத்தானது..

https://www.google.com/search?q=AAYIRAM+ROOPAI+TAMIL+MOVIE+VIDEO+SONGS&newwindow=1&sca_esv=593882672&sxsrf=AM9HkKk-VslGM1OjZY04qSeB6Zgy8ZYgw PAATHTHAALUM  PARTHTHEN

6 சித்தி 1966 :     பல பாடல்கள்   வெற்றி அடைந்த படம்.                                                                                                              அவற்றுள் முதன்மை "கால மி து காலமிது கண்ணுறங்கு மகளே"

சித்தி படத்தின் பல பாடல்களில், மிகவும் நுட்பமானது "காலமிது காலமிது " இது கவிஞர் கண்ணதாசனின் பெண்கள் வாழ்வியல் குறித்த ஆழ்ந்த புரிதலை உணர்த்தும் பாடல் . உறக்கத்தை இப்போது விட்டுவிட்டால் எப்போதும் இல்லையடி என்ற ஆணித்தரமான பதிவு மற்றும் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு தூக்கம் பறிபோகும் என்று ஆண்டிராய்டு போன் அறியாத காலத்திலேயே பட்டியலிட்ட கவிஞன் அவன்.                எப்போதுமே, அதனால் தான் கண்ணதாசன் புரிந்துகொண்டது போல பெண்களை பிறர் உணர்ந்திருந்தனரா என்றே பலரும் விவாதிக்க கேட்கலாம்.

சித்தி -1966"காலமிது காலமிது -கண்ணதாசன் -விஸ்வநாதன் பி சுசீலா. இணைப்பு இதோ https://www.google.com/search?q=chithi+tamil+movie+songs+video+download&newwindow=1&sca_esv=593882672&sxsrf=AM9HkKmDtlp2uvUii29_eTd5R5OrNQ0_7A% kaalamidhu

7 மாலதி [1970]  "கற்பனையோ கை  வந்ததோ"  கண்ணதாசன் - விஸ்வநாதன் -SPB -சுசீலா

70 களில் வந்த டூயட் வகை -இளம் பாலுவின் வசீகரக்குரல், படத்திற்கு விளம்பரம் வழங்கிய பாடல். நல்ல சுறுசுறுப்பான நகர்வுகள் கொண்ட இசை. கேட்டு ரசிக்க ' இதோ இணைப்பு 

https://www.google.com/search?q=movie+malathi+video+song+karpanaiyo+KAI+VANDHADHO+video+song+download&newwindow=1&sca_esv=593882672&sxsrf=AM MAALATHI -1970

https://www.google.com/search?q=movie+malathi+video+song+karpanaiyo+KAI+VANDHADHO+video+song+download&newwindow=1&sca_esv=593882672&sxsrf=AM MAALATHI -1970

இது போன்ற பாடல்கள் கே எஸ் ஜி யின் படங்களில் காணலாம். அவர் வசனகர்த்தா மாத்திரம் அல்ல , பாடல் புனையும் திறன் கொண்டவர் எனவே தான் குட்டைக்கவி என்று அறியப்பட்டவர் .

நன்றி அன்பன் ராமன்

2 comments:

  1. பாடல்கள் Music director வசமுள்ளது். ஆனால் வசனம் கோபாலகிரஷ்ணன் கையில்தான.
    நறுக்கென்ற வசனகர்த்தா அவருக்கு நிகர் அவர்தான்

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...