Tuesday, April 30, 2024

COLLECTIVE SURVIVAL- AN INCONGRUITY

 

COLLECTIVE SURVIVAL- AN INCONGRUITY

 கூடிப்பிழைத்தல் -பொருத்தமற்றது

சென்ற பதிவில்  கூடிப்பிழைக்கின்றனர் என்று வாதிட்டு விட்டு இப்போது "கூடிப்பிழைத்தல் அரிது " என்று ஏன் மாற்றி பேசுகிறீர் என்றெவரேனும் கேட்டால் எனது விளக்கம் இதுவே. 

பல அலுவலக பணிகள்/ தொழிற்சங்க நிகழ்வுகளில் எவ்வளவு தான் கூடிக்குலாவினாலும் பெரும் பாலும் தத்தம் பணி என்று வரும்பொழுது அவரவர் தான் செய்ய வேண்டும். ஒரு சில அலுவகப்பணிகளில் கோப்பினை வேறொருவரிடம் கொடுத்து , கருத்துகளைப்பெற்று அவர் தரும் ஆலோசனை அடிப்படையில் கோப்பினை முடித்துவைக்கலாம்.

அடுத்தவர் ஆலோசனை தேடிப்பெறுவதாக அறியப்பட்டாலே அந்த நபர் வேலைக்கு  பொருத்தமற்றவர் என்று விமரிசனம் எழும் . குறிப்பாக ஆசிரியப்பணியில் தனி நபர் தான் வகுப்புகளையும் பாடத்திட்டங்களை யும் கையாள வேண்டிவரும். பாதி செயலில் அவ்வப்போது கருத்தறிந்து வந்து போதிக்க இயலாது.. அவரவர் திறன் அடிப்படையில் அரங்கேறுவதே ஆசிரியப்பணி.. 

ஆசிரியப்பணியில் கூடிப்பிழைத்தல்   என்பது நடவாத செயல். ஆகவே தனி நபர் அறிவும் திறமையும் களப்படுத்தப் படுவது ஆசிரியப்பணியில் தான் என்றே அறுதியிட்டுக்கூறலாம்.

ஆகவே ஒவ்வொரு ஆசிரியனின் செயல் திறனும் அவரவர் கல்விநிலையங்களில் பரவலாக தெளிவாக அறியப்பட்ட ஒன்றே. இதனாலேயே வல்லமை பெற்ற ஆசிரியர்களை பற்றி அனைத்து பயில்வோரும் ரசிப்பது அன்றாட நிகழ்வு.   

சில பழைய சம்பவங்கள் மனதில் நிழலாடுகின்றன . 1970 களில் ஏன் 2000 களில் கூட சில குறிப்பிட்ட விரிவுரையாளர்கள் அவர்களது வகுப்புகளில் சண்டமாருதமெனமுழங்குவதை அவ்வழியே செல்லும் மாணவ மாணவியர் கதவுக்கு வெளியே, ஜன்னல் அருகே நின்று ரசித்துக்கேட்டு இன்புற்று மனமில்லாமல் அகன்று செல்வது அன்றாட நிகழ்வு.

அவ்வகை லெக்சரர்கள் கேண்டீன் பக்கம் போனால் கூட வெவ்வேறு துறை சார்ந்த மாணவ/மாணவியர் கூட மிகுந்த ஆச்சரிய /ஆர்வ / /மரியாதையுடன் பவ்யமாக எழுந்து நின்று தங்களின் உவகையை வெளிப்படுத்தவர். இது போன்ற சமூக அங்கீகாரங்களால் ஈர்க்கப்பட்டு கல்லூரி ஆசிரியப்பணியை தேர்வு செய்த இளையோர் அநேகம்.

அந்நாளில் கல்லூரி ஆசிரியர் சம்பளம் வெகு குறைவு ஆனால் அப்பணியின் கம்பீரம் வெகு அதிகம். அதிலும் மொழிவல்லமை கொண்டோர் ஆசிரியர்களாக எட்டிய உயரம் , அசாதாரணமானது.

இன்றும் கூட தன்னால் இயன்ற அளவு கவனம் செலுத்தி கற்பிக்கும் ஆசிரியர்/ ஆசிரியைகள் மாணவ மாணவியர் தம் நன்மதிப்பைப்பெறுகிறார்கள்.                                     ஏனையோர்க்குறித்து பேசாதிருத்தல் நலம்..

ஆசிரியப்பணி தனி நபர் திறன் சார்ந்தது.

ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு துறையில் 3, 4 ஆசிரியர்கள் திறமையானவர்கள் என்றே அறியப்பட்டாலும் ஒவ்வொரு ஆசிரியரும் தனித்தனியே தான் திறமையை வெளிப்படுத்துகின்றனர். அவ்வாறு செயல் படுவோரில் எந்த இருவரை ஒப்பீடு செய்தாலும் இருவருக்குமிடையே எண்ணற்ற வேறுபாடுகள் புலப்படுகின்றனவே .

எந்த இருவரும் பேசும் முறை , சொல்லாட்சி , வேகம்,, நளினம் ,கம்பீரம் மற்றும் அணுகுமுறை என்று ஒவ்வொன்றிலும் வேறுபட்டு மாறுபட்டு இயங்கினாலும் சிறப்பான திறமையாளர் என்றே அறியப்படுகின்றனர். ஆகவே, ஆசிரியப்பணி இந்தப்பாதையில் , இந்த வேகத்தில், இந்த முறையில் தான் பயணிக்க வேண்டும் என்று வரையறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லாதது.

எனவே ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கு என்று வடிவமைத்து க்கொண்ட செயல்களின் முறைமைகளைக்கொண்டே தனது பங்கை அளிக்கிறார். எனவே காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி என்பது போல் எல்லையில்லா சுதந்திரம்   கொண்டு இயங்குதலே ஆசிரியப்பணி,. கும்மி , கோலாட்டம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கூடி இயங்குதல் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தர உதவும்; ஆசிரியப் பணி  தனி நபர் பங்களிப்பில் பலருக்கும் உதவுவது இங்கு கூடிப்பிழைத்தல் என்பது போதித்தல் பணிக்கு உதவாது. .

நன்றி

அன்பன் ராமன் 

 

 


Monday, April 29, 2024

SALEM SUNDARI -9

 SALEM SUNDARI -9

சேலம் சுந்தரி -9

சொல்லும்மா என்று ஆரம்பித்தார் மாடசாமி .              சார் " கொஞ்சங்கூட யோசிக்காம HR அதிகாரிகிட்ட நீங்க 10.45 மணிக்குக்கூட வேலைக்கு வரல்லன்னு போய் அவசரப்பட்டு சொல்லி அசிங்கப்பட்டுட்டேன் சார். அப்புறம் தான் நீங்க ட்யூட்டி முடியாம ட்ரைன்ல வாரீங்கனு தெரிஞ்சுது சார். எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு சார் .ஏன் இப்பிடி நடந்துக்கிட்டேன் னு என்னால நியாயமான காரணம் னு எதுவுமே சொல்ல முடியல்ல சார். என் மனசே என்னைக்கொன்னுடும் போல வாட்டுது சார் ,என்று ஓ வென்று வந்த அழுகையை அடக்க முயன்று சிறுபிள்ளைபோல் அழுதாள்.

சரி அதுக்கு இப்ப ஏன் அழுவறீங்க ? அதுக்கு நான் என்ன செய்யணும்? என்றார் மாடசாமி. .

நீங்க என்ன மன்னிச்சு தான் சார் என் அமைதியை நீங்க மீட்டு தரணும். தயவுசெய்து என்ன மன்னிச்சுருங்கசார் என்று கெஞ்சினாள். நான் உங்களை கோபிக்கவே இல்லையே ,என்ன சொல்லி மன்னிக்க இயலும். உங்க செயல் தவறுன்னா கோயில் ல போய் ஆண்டவன் கிட்ட அழுது  மன்னிப்பு கேளுங்க ;நான் சாதாரண மனிசன் நான் யாரு அடுத்தவங்களை மன்னிக்க ? . நானே ஏதாவதுன்னா சமயபுரம் மாரியம்மா வை தான் கும்பிட்டு மன்னிப்பு கேப்பேன் . அது மாதிரி உங்க சாமி கிட்ட நீங்க பரிகாரம் தேடுங்க. இதுக்கா 10 நிமிஷம் பேசணும் னு கேட்டீங்க? என்றார் மாடசாமி

மேலும் தொடர்ந்தார் மாடசாமி

ஒன்னு நல்லா புரியுது சீட்டுல ஆள் இல்லன்னா வேலைக்கு வரல்லன்னு நெனச்சுக்கறீங்க. கம்ப்ளெய்ண்ட்பண்ணனும் னு முடிவு எடுக்கறீங்க. அப்பிடி பாத்தீங்கன்னா நைட் ட்ரெயின் ல ட்யூட்டின்னா தூங்கவே முடியாது; அடுத்த பகல் ல தூங்கி மீண்டும் நைட் ட்யூட்டி பாத்திட்டு வருவோம்;  3 நாளா ஊர் சுத்திக்கிட்டு இருக்கான் னு கம்ப்ளெயிண்ட்  குடுத்திடுவீங்க போல இருக்கு.. ஆனா நான் வேலைக்கு வராததாக நீங்க புகார் கொடுத்தா , பாக்கி எல்லாரும் சரியா வேலைக்கு வந்திட்டதா ஒரு தோற்றம் உருவாகி -மாடசாமி ஒரு திருடன் ஊரை ஏமாத்தறான் னு பலர் நினைக்க வழி  ஏற்படுத்தீட்டங்களே னு தான் வருத்தப்படறேன். உங்கள மாதிரி படிச்சிருந்தா நானும் 10 --5.00 FAN கீழ உக்காந்து வேலை பாத்திருப்பேன் படிப்பு அதிகம் இல்ல, அதுதான் நாய் மாதிரி அலைய வேண்டியிருக்கு தென் இந்தியாவுல..

ஆனா .ஒண்ணே ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க விரும்பறேன். இத்தனை பேர்ல ஏன் மாடசாமியை தேர்ந்தெடுத்து புகார் தெரிவிச்சீங்கன்னு சொல்லிட்டீங்கன்னா , இத்தனை நீண்ட சர்வீஸுக்கு அப்புறமும் அப்பழுக்கு இல்லாம எப்படி வேலை செய்யமுடியும் னு தெரிஞ்சுக்குவேன் என்றார் மாடசாமி   . .

மாடசாமியின் பணிவு சுந்தரியின் மீது சாட்டை அடியாக பளிச் பளிச் என்று விழுந்தது. எப்படி கோபம் தொனிக்காமல் கேவலப்படுத்துகிறார் என்று கூனி குறுகிப்போனாள் சுந்தரி. மீண்டும் அழுதபடியே கையைக்கூப்பிக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்தாள் சுந்தரி.

 சற்று நிதானத்தை வரவழைத்துக்கொண்டு பேசினாள் . "உங்களைப்புகார் சொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை . ஆயினும் ஒரு தடுமாற்றத்தினால் இது போல பேதலித்துவிட்டேன்" என்றாள் .

"சற்று புரியும்படி சொல்லுங்கம்மா" என்றார் மாடசாமி.

"அன்று நான் உங்களை சந்தித்து ஒரு முக்கியமான முடிவெடுக்க எண்ணி இருந்தேன்.. என்னுடைய துரதிர்ஷ்டம் நேரம் போய்க்கொண்டே இருந்ததே ஒழிய நீங்கள் வந்தபாடில்லை.. ஒருகட்டத்தில் பொறுமை இழந்து என்ன இவர் ஆபிசுக்குக்கூட வராமல் ஊர் சுற்றுகிறார் என்று ஒரு கண்ணோட்டத்தில் HR அதிகாரியிடம் நேரே சென்று பேசினேன்". அவர் என்னைக்கடிந்து கொண்டார். சுப்புரெத்தினம் சாரும் நீ செய்வது  அளவுக்கு மீறிய செயல் "என்று கண்டித்தார். பின்னர் தான் சுயநலம் கண்ணை மறைக்க நான் நடந்து கொண்டதை இப்போது நினைத்தாலும் கூனிக்குறுகிப்போகிறேன் .தயவு செய்து  என்னை மன்னித்தேன் என்று சொல்லுங்கள்" என்றழுதாள்.

"மன்னிப்பது இருக்கட்டும் .ஏதோ சுயநலம் னு சொன்னீ ங்களே  .   -அதை புரியும்படி சொன்னால் , என் தவறு என்ன என்று புரிந்து கொள்வேன்" என்றார் மாடசாமி.

தொடரும்

அன்பன் ராமன்

 

Sunday, April 28, 2024

TEACHER- PROCEED TOWARD SUCCESS

 TEACHER- PROCEED TOWARD SUCCESS

ஆசிரியர் -வெற்றி நோக்கி பயணிப்பீர்

நமது கண்ணோட்டம் [ஆசிரியப்பணி குறித்து ] என்னவாக இருக்கிறது.? நமது பொதுவான அணுகுமுறை இப்படித்தான்  வடிவு எடுக்கிறது.                  சரி என்ன வேலைக்கு போக முடிவு செய்துள்ளீர்கள் என்று கேட்டால் , 3, 4 வாய்ப்புகளை [அரசுப்பணி/தனியார் பணி /சொந்தத்தொழில் / இன்ன பிற சில வற்றை] பட்டியலிட்டு முடிவில்--- இல்லாவிட்டல் என்ன? இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை என்று முடிப்பார்கள். இதில் வெளிப்படும் ஆழ்ந்த நம்பிக்கையும் மனோபாவமு ம் நாம் ஊன்றிகவனிக்க வேண்டியன.            

 சூளுரைப்பதைப்பாருங்கள்

இல்லாவிட்டால் என்ன ?               இருக்கவே இருக்கிறது     வாத்தியார் வேலை.

ஆழ்ந்த நம்பிக்கை =இருக்கவே இருக்கிறது     .

மனோபாவம் = வேறு வேலை    இல்லாது போனால் =வாத்தியார் வேலை                                                                 மிக கவனமாக மேலே உள்ள உரையாடலை கவனியுங்கள் ; அதை செய்வேன், இதை செய்வேன், வேறு சிலவற்றை பெறமுயற்சி செய்வேன்

இவ்வளவும் கைகூட வில்லையெனில் , இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை.. இந்த இருக்கவே இருக்கிறது வாத்தியார் வேலை என்பது [நான் முயற்சி செய்து பெறப்போவது அல்ல , ஆனால் வழிப்போக்கனாய் சென்று ஆசிரியன் ஆவேன் என்பதே அவர் காட்டும் ஈடுபாடு. வேறு எதுவும் எட்டாக்கனியானா லும்   , ஆசிரியப்பணி வந்தோரையெல்லாம் வாரீர் வாரீர் என்று சாமரம் வீசிக்காத்திருப்பதாகவும் , அதை மிக எளிதாக செய்துவிட முடியும் என்றும் பலர்   ஆழமாக நம்புகிறார்கள். அவர்களைச்சொல்லி குற்றமில்லை. மாணவர் நிலையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்கள் வழிப்போக்கர்களாய் அமைந்து விட --இதுவே ஆசிரியப்பணி யின் தன்மை என்று சிந்தனையே செய்யாமல் நம்புகிறார்கள். 

எனவே இந்த மனநிலை கொண்டு வகுப்புகளை அணுகுகிறார்கள். அதாவது விளக்குவது எனது பணி என்பதை   மறந்து அல்லது மறுத்து, விளங்கிக்கொள்வது 'அவர்கள்' தேவை ; நான் எதையாவது பார்த்து செய்தி வாசிப்பவர் போல வாசிப்பேன். [செய்தி வாசிப்பவர் எந்த செய்தியையாவது விளக்குவது உண்டா?] கேட்பதும் எழுதுவதும் மாணவர் தேவை சார்ந்தது --என்றே ஆசிரியப்பணி குறித்த பார்வை கொண்ட பலர் இன்றைய தமிழகத்தில் எல்லா மட்டங்களிலும் -குறிப்பாக உயர் கல்வி +2 மற்றும் அதற்கு மேலும் பணியில் உள்ளனர். கல்வி நிலைய பொறுப்பாளர்கள் வெற்றி சதவீதம் தான் [% பாஸ்] என்பதையே அளவுகோலாகப்பார்க்கின்றனர் . உண்மையான அளவுகோல் நமது நிறுவன தயாரிப்புகள் [PRODUCTS ] போட்டிகள் நிறைந்த உயர் கல்வி வழங்கும் புகழ்  வாய்ந்த நிறுவனங்களில் ஒவ்வோர் ஆண்டும் எத்துணை  பேர்களால் சோபிக்க முடிகிறது என்று பார்க்கும் நிலை வராத வரையில் -"இருக்கவே இருக்கிறது" என்போர் ஆசிரியப்பணியில் அமர்ந்து சீரிய பணிக்கு பதில்  சிறிய பணியாற்றி --ஆ-'சிறியர் ' களாக வலம் வருவர் அதோடு ட்யூஷன் மூலம் வளம் கொழிப்பர் .

இங்கே டியூஷனுக்கு சாமரம் வீசாத மக்கள் உண்டோ ? எவருக்காவது கல்வியின் உள்ளார்ந்த தரம்/ தேவை /மன வள மேம்பாடு அவற்றை மதிப்பீடு செய்யும் வழிமுறைகள் ஏதேனும் தெரியுமா? இவர்கள் இப்படி இருந்தால் வழிப்போக்கன் ஆசிரியர் ஆவது நிச்சயம் நடந்தேறும் ;ஏனெனில் 'இருக்கவே இருக்கு" தானே நமது தாரக மந்திரம் .                           ஆசிரியப்பணி என்பது மன வளம், புலமை , கருத்துவிளக்கும் திறன் சார்ந்தது. இவை இருக்கவே இருக்கிற வகையில் வருவன அல்ல

சரி உண்மையான ஆசிரியனுக்கு எது வழி முறை?

உண்மையான ஆசிரியன் என்போன் 'போதிக்க வேண்டும்'. செய்தி வாசிப்பவர் அல்லர் அவர் .அப்படி  என்றால் அவர் தன்னை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.? அதில் பெரும்பகுதி மன நிலை வடிவமைப்பில் இருந்து துவங்குவது  இதை பார்த்து என் மீது கோபம் ஏற்படலாம் ;ஆனால் உண்மை கசப்பது இயல்பன்றோ ? மனதளவில் நன்றாக பதிய வையுங்கள்.

1 ஆசிரியர் என்பவரும் பயில்பவரே. ஆம் முதலில் அவர் பயில்கிறார் ;பின்னர் பிறரை பயிற்றுவிக்கிறார்.

2 நன்றாக மனதில் கொள்ளுங்கள். எவ்வளவு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும், பட்டம் பெற . பயின்ற கல்வி முயற்சி , பயிற்றுவிக்க உதவாது.               மாறாக பிறருக்கு பயிற்றுவிக்க , ஒருவர் ஆழ்ந்து பயில வேண்டும். . இது வரை கற்றதை வெறும் அடித்தளம் என்று கொள்க . இனிமேல் நாம் கற்பது/ கற்க இருப்பது வேறு வகையானது. முன்பு கற்றது பொருள் விளங்காமல் விடை எழுதி மதிப்பெண் பெற உதவி இருக்கக்கூடும். அதை வைத்துக்கொண்டு வகுப்பறை செயல்களை நிறைவேற்றலாம் என்றெண்ணினால் , நாம் பணியின் தன்மையையும் வீரியத்தையும் உணரவே இல்லை என்பது பொருள்.. இவ்விரண்டையும் உணராத எவரும் சிறப்பாக பணி புரிவேன் என்று நினைப்பது ஏட்டுச்சுரைக்காயாய் போய்விட க்கூடிய அபாயம் நிறைந்தது.

ஆகவே ஆசிரியர் என்ற நிலையை அடைய நமது புரிதல் செம்மைப்படவேண்டும். இவை எதுவுமின்றி. .நான் சாதிப்பேன்  என்று நினைப்பவர்   ஒருநாளும் ஆசிரியர் என்ற அங்கீகாரம் கொள்ளப்போவதில்லை.

3 செய்ய வேண்டியது என்ன.?

எந்த பாடத்தகவலையும் நான் முன்பே அறிவேன் என்று நினைக்காமல் பலமுறை தொடர்ந்து கூர்ந்து படிக்கப்படிக்க , புதுப்புது பரிமாணங்களும் விளக்கங்களும் [dimensions  and  explanations ] நம் மனதில் ஏற்பட அந்த பொருள் குறித்த நமது பார்வை  விரிவடையும். அந்த பார்வை வேறு பல தொடர்புகளை புரிந்துகொள்ளவும் , அவ்வித தொடர்புகளை மிக எளிதாக விக்கும் ஆளுமையையும் நமக்குள் விதைக்கும் . இது சர்வ நிச்ச்கயம் .

4 இவ்வாறு பல வித பொருள்களை தெளிவாக புரிந்துகொண்டபின், நாம் விளக்க முற்படும் கருத்துகளை   வெவ்வேறு வகைகளில் விளக்கமுற்படும் அணுகுமுறைகள் நமது செயலில் தோன்றும். இதைத்தான் மாணவர்கள் இவ்வாசிரியர் வேறு மாதிரியாக கற்றுத்தருகிறார் என்றுபோற்றி மகிழ்ந்து  மாணவ சமுதாயம் அவ்வகை ஆசிரியர்களை  நன்றியுடனும் ஆச்சரியத்துடனும் நன்றி மறவாமல் போற்றும்.

5 இவை அனைத்தும் நாம் எவ்வளுக்குஎவ்வளவு முனைந்து பயில்கிறோமோ அதற்கேற்ப நமது ஆசிரியத்    திறனை மேம்படுத்தும்

6. இதற்கென நாம் பல புத்தகங்களையும் நூல்களையும் பயன்படுத்துவதால், நமது மொழி ஆளுமை மேம்படும்.. நமது மொழி ஏற்படுத்தும் தாக்கம் மிக வலிமையானது. வலுவான தாக்கம் விளைவிக்க வளமான மொழி ஒரு சிறப்பான கருவி  -அல்ல அல்ல  பலமான ஆயுதம்.

இவ்வனைத்தும் ஒரு ஆசிரியர் தனது முக்கியத்துவத்தை பிறர் புரிந்துகொள்ள ஏதுவாக வடிவமைத்துக்கொள்ளவேண்டிய எளிய ஆனால் தொடர் முயற்சியின் பலனாக கைகூடுவது..

7 என்னை யார் என்ன செய்ய முடியும்”? என்றெண்ணாமல், என்னை நானே செம்மைப்படுத்திக்கொள்வேன்-- என்பவர் மிகப்பெரும் ஆளுமையாக ஆசிரியப்பணியில் விஸ்வரூபம் கொள்வார்.

அவ்வகை ஆசிரியர்கள் ஆசான்கள் என்ற உயரம் தொடுவர் . ஆசான்கள் மறைவதில்லை குறைந்தது கடைசி மாணவர் மறையும் வரையோ அதன் பின்னும் செவிவழிச்செய்தியாக பலகாலம் இத்திருநாட்டில் பேசப்படுவர்.

இவை அனைத்தும் ஆசிரியர் தன் மீது கொள்ளும் அக்கறையும், பிறர் என்னை தவறாக விமரிசிக்க இடம் கொடேன் என்ற சுயமரியாதையின் வெளிப்பாடாகவே அமைந்து பிறர்க்கு எட்டாத உயரத்தை விரைந்து எட்டுகிறார்கள் .                                                                        எனவே,  "இருக்கவே இருக்கு" என்பதல்ல ஆசிரியப்பணி.

தொடர்ந்தும் கற்பேன்,  துவள மாட்டேன் என்போருக்கு மட்டுமே வயப்படும் "ஆசிரியம்" என்னும் ஆளுமை.

                       முயற்சி தன்  மெய்வருத்தக்கூலி தரும் .

தொடரும்            நன்றி                              அன்பன் ராமன்

Saturday, April 27, 2024

FOR OUR OWN GOOD

 

CONVERSATION

Conversation is an informal activity. It provides enough opportunity to grasp others’ points of view and style of expression. But, the opportunity rests on the group into which we enter. Obviously, people from different settings make a better team than those formed by members of like setting and age. Strangely, members of different age groups or social settings do not come together easily. So, one has to consider mingling with members of slightly higher age, as to be in a position to learn faster. There will be restrictions precluding the chance; an attempt to get into such groups is wiser than staying in peer-rich grouping. Though a little degree of freedom may have to be foregone, keeping company with elder groups can help learning expressions faster. It would be better, if such a group is comprised of persons from different language backgrounds.  The spirit of the suggestion is to look for opportunities of learning different forms of expression, as each language has a culture of usages. These reflect in the framing of statements and in the art of employing the vocabulary.

If we happen to get in touch with voracious readers, chances are we can find more avenues of learning, spread over an expanse of knowledge domain. So, the idea of ‘conversation’ is not chatting; rather it is an occasion to learn better ways of expressing ideas. In the final analysis, we are clearly perceived if our ideas are laid out with ease and comfort.  The general trend of indifference to finer aspects of expression is an impediment to ascension, as in official circles, talent of expression counts the most. Those who have managed to stay abreast of language skills are the most sought after and are held in esteem by the authorities. Those who have not equipped themselves with such niceties, tend to brush aside the skilled ones; but inevitably turn to them for help on hours of demand. Therefore, occasions of conversation must be utilized to learn and cultivate sophisticated expressions to perfection. Conversations carry the innate advantage of warding off inhibitions that shroud all formal interactions. Formalized schedules are far less permissive than are conversations.

PICKING UP SKILLS                                                 

Life is a theatre full of opportunities to groom or doom one self.  Yes, the choice rests with the individual. Like in a drama, things unfold ‘later’, by which time the individual is too committed to change course. Pursuing the right course is a superior option to attempting mid-course corrections. My earlier reference to ‘decision-making’ [through analysis and evaluation] holds answers to such predicaments, if we stick to objective assessment. So, the first ever skill to be acquired relates to analysis-based evaluation. It comes by getting to details that may not meet the eye. Yes, it is a process of going beyond the face value. Objectivity requires deciphering the intent as much as the content. It is a skill vested in humans to read all information deep. Those who avail of this skill stand better chances of reading things clearly. Grooming the young minds to ‘process’ information in an objective way is the strategy for all life. Children have enough skills to observe and learn; elders should avoid interpreting ideas and bias the thinking of kids. The kids may err in judgment to start with; soon they would come to terms with items of immediate relevance to them.  Permitting them to tumble and gather themselves up is the exercise of learning by trial. Things personally learnt last longer and serve reminders to avoid pitfalls of judgment.

Having said so, it stands to logic to suggest what the parents need to do. Every parent wishes that the child comes up good in life. So, monitoring the child for his or her associates on or off school is essential. Often it is the social company that shapes taste, attitude and disposition. Personal skills must be ably supported by positive attitudes – helping others or reaching out. These need inculcation from childhood. At this juncture, it is relevant to consider the aspects of learning that hold the key to skill-building.

 

Friday, April 26, 2024

SALEM SUNDARI -8

 SALEM SUNDARI -8

சேலம் சுந்தரி -8

தம்பீ , “இந்த சுந்தரிதான் சும்மா இல்லாம HR ல போயி மாடசாமி இன்னும் டூட்டிக்கு வரல னு போன வாரம் போட்டுக்குடுத்து , அவரு டேவிட் நல்ல திட்டி துரத்திப்புட்டு எனக்கும் போன்ல சொல்லிட்டாரு அந்தம்மாவை ஒழுங்கா இருக்க சொல்லி அட்வைஸ் பண்ணுங்க , ‘மாடசாமிகிட்ட மாட்டுனா ,கொசுமாதிரி கொன்னு போட்டுருவாரு ,கவனமா நடந்துக்க சொல்லுங்க னு சொன்னார்; நான் சொல்றதுக்குள்ள நீங்களே வந்து அந்தம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போய் வந்துட்டீங்க . 

டாக்டர் என்ன சொன்னாரு, ஏன் மயக்கம் வந்துச்சாம்?     -ப்ரெக்னன்சினு ஏதாவது சொன்னாரா? என்றார் சுப்புரத்தினம். 

சுப்புரத்தின் ஒரே கவலை தனது செக்ஷனில் எந்தப்பெண்மணியும் மெட்டர்னிட்டி லீவு போடக்கூடாது . ஏன் என்றால் 3, 4 மாசத்துக்கு ஆள் இல்லாமலே எல்லா வேலையையும் கவனிக்க வேண்டி வரும் என்ற பய உணர்வு.

கோபத்தின் விளிம்பில்  மாடசாமி "ஏன் சார் இந்த சுந்தரிக்கு இன்னும் கல்யாணமே ஆவல்ல அதுக்குள்ள ML அது இதுனு ஆரம்பிக்காதீங்க. " 

சுப்புரெத்தினம்-"அந்தம்மா வகுரு பொடச்சு

[வயிறு வீங்கி ], சும்மாகும் னு இருக்கவும் எனக்கொரு சின்ன சந்தேகம் , அதனால நீங்க பாவப்பட்டு சாத்தாம விட்டுட்டீங்களோ னு தோணிச்சு -அதான் கேட்டேன்"

. மாடசாமி "நான் எதுக்கு சாத்தறேன், சீ பாவம் பொம்பள பிள்ளையை அடிச்சு என்னா ஆவப்போவுது?  ஏதோ கம்ப்ளெயிண்ட் சொல்லுச்சு சொல்லட்டும் ;இப்படியெல்லாம் குடுகுடுன்னு ஓடிப்போய் சொல்லக்கூடாது பெரிய சிக்கல் வந்துரும் னு 4 நாள் கழிச்சு சுந்தரி கிட்ட நானே சொல்லுவேன் -நான் பாத்துக்கறேன் விடுங்க சார். 

கோபமாக உரத்த குரலில் எவளுக்கு எங்க பொடச்சுக்கிட்டு இருந்தா நமக்கு என்ன?” என்று மாடசாமி முழங்க சுப்புரத்தினம் கதி கலங்கி மௌனியானார்.

மாடசாமி மனதில் இப்போது கௌரியின் ஸ்தானத்தில் சுந்தரி.

  ஏதோ அவசரக்குடுக்கையாக புகார் சொல்லிவிட்டால் , ஒட்டு மொத்தமாக ஒருவரை வெறுக்க முடியுமா. எத்தனையோ பேர் மொட்டை கடுதாசியில் புகார் சொல்ல தயார், அவங்களை என்ன செய்ய முடிகிறது என்பது மாடசாமியின் நிலைப்பாடு..

நம்ம ஆபிஸ் அமைதிய இந்தப்பொண்ணு கெடுத்துருமோனு ஒரு பயம் இருக்குது அதுக்கு தான் கவனமா இருங்க னு சொல்ல வந்தேன் என்று சமாளித்தார் சுப்புரெத்தினம். 

கோபமுற்ற அய்யனார் போல் கண் சிவந்த மாடசாமியை எதிர்கொள்ள திராணி அற்றவராக வெற்றிலைபோட கிளம்பினார் சுப்பு ரெத்தினம்..

மாடசாமி சொன்னார்

இருங்க , நம்ம தெளிவா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டம்னா யார் என்ன செய்ய முடியும்? அப்பிடியே ஏதாச்சு வேணும்னா நம்ம பாத்துக்கலாம் -நீங்க பெரியவங்க உங்களுக்கு தெரியாததா? என்று சுப்புரெத்தினத்தின் வாயில் முழு தேங்காயை திணித்ததுபோல் , வாயை அடைத்தார் மாடசாமி.

சுப்புரெத்தினம் உள்ளூர நொந்து போனார் நமக்கு நேரம் சரியில்லை என் பேச்சு எடுபடவே இல்லை அரே தேவுடா என்று வெங்கடாசலபதியை நினைத்து கும்பிடு போட்டார்.

சுப்புராத்தினம் அகன்றதும் ஓடி வந்த சுந்தரி "சார் ஒரு 10 நிமிஷம் உங்களோட பேசணும் ,இல்லாட்டி என் மண்டை வெடிச்சிடும் போல இருக்கு" என்றாள்.

"இப்ப மணி என்ன னு பாருங்க மதியம் 2.45 மணிக்கு கான்டீன்ல இருப்பேன் அந்த சமயம் பாத்து வாங்க  கான்டீன்லயே பேசலாம் வேறெங்கேயும் போய்  ஒளிஞ்சுக்கிட்டு பேச நான் வரமாட்டேன்" என்று கறாராக சொல்லிவிட்டார் மாடசாமி.            

'சரிசார், தேங்க்ஸ் சார்' என்று இருப்பிடத்துக்குப்போனாள் சுந்தரி

சொன்னபடியே கேன்டீனில் மாடசாமி 2.45 க்கு ஆஜர். அவர் கேன்டீன் போகட்டும் என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரி மெல்ல போய் மெதுவாக கேன்டீன் வளாகத்தை அடைந்தாள். அங்கே கேப்ரியல் , ராமசாமி, இன்னொரு போஸ்டல் ஊழியர் இருக்க ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா என்று கேபிரியேல் அதிர்ந்து கொண்டிருக்க , பூனை போல சுந்தரி உள்ளே வர , சரி உங்க staff வந்திருக்காங்க , நாங்க கிளம்பறோம் என்று பிறர் அகல, சரி என்று மாடசாமி கையசைத்து விடைகொடுத்தார்.

தொடரும்

அன்பன் ராமன்

Thursday, April 25, 2024

DIRECTOR P MADHAVAN-3

 DIRECTOR P MADHAVAN-3

இயக்குனர்  பி மாதவன் -3  

தேனும் பாலும் [1971] கண்ணதாசன் , எம் எஸ் வி, குரல்கள் ஜானகி    ஜிக்கி  அந்நாளைய இரு பெண் குரல் வகை பாடல்களில் பரிமளிக்க பாடல்களில் இப்பாடலுக்கு ஒரு தனி இடம், உண்டு . அதுவும் நீண்ட இடை வெளிக்குப்பின்னர் , ஜிக்கி மீண்டும் பாடிய தருணம். நேர்த்தியான கௌரவ நடையில் அமைந்த நன்றி/ பக் தி கலந்த பாடல். இப்போதெல்லாம் இது போன்ற பாடல்களை பார்க்கவே முடிவதில்லை. அவ்வளவு வலிமையையும் நேர்த்தியை யும் குழைத்து கவிதை தரும் பாடலாசிரியர்களை எங்கே தேடுவது? கேட்டு மகிழ இணைப்பு

thenum paalum 1971 https://www.youtube.com/watch?v=7glaIZGNSrE jikki jaanaki kd msv

பட்டிக்காடா பட்டணமா [1972] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ்

இது அன்றைய பிளாக் பஸ்டர் படம். வசூலிலும் சாதனை படைத்த படம். மிகச்சிறந்த பாடல்கள் நிறைந்த படம். இதில் மேல் நாட்டு பண்பு பீடித்த பெண்ணை நையாண்டி செய்யும் பாடல்.. மேல் தட்டவகை இசை, நடன ம்  , உடை என்று மாறுபட்ட தோற்றத்தில் சிவாஜி அபிநயித்துப்பாடிய பாட;ல்  அக்காலத்தில் திரையில் பஜனை போன்ற அமைப்பில் பாடுவது [ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் தாக்கம் ] ஒரு உத்தி. இப்பாடலும் அவ்வகையினதே.  கண்டு மகிழ

https://www.google.com/search?q=NAL+VAAZHTHTHU+NAAN+SOLVEN+video+song&newwindow=1&sca_esv=df9114d5be7f4ca8&sca_upv=1&sxsrf=ACQVn09ogLZAMncoyckPDy3sBdvnHoFYBw%3A 1972 PATTIKAADAPATTANAMA KD MSV TMS

ஞான ஒளி [1972] மண மேடை , கண்ணதாசன், எம் எஸ் வி, பி.சுசீலா

ஒரு மென்மையான காதல் உணர்வு சுமந்த பாடல். பாடுபவள் ஒரு கிருத்துவப்பெண் ;இசை அதை நன்றாகவே வெளிப்படசுத்தும் வகையில் ராக அமைப்பு, கருவிகளில் தொகுப்பு மற்றும் அவ்வப்போது சூழலை நினைவூட்டும் வகை ஏற்ற இறக்கங்கள். அற்புதமான பாடல். கேட்டு மகிழ இணைப்பு 

https://www.youtube.com/watch?v=8TTMY9u0rTY 1972 gnaana oli mana media kd msv ps

தங்கப்பதக்கம் [1974]  தத்திச்செல்லும் முத்து கண்ணன் , கண்ணதாசன், எம் எஸ் வி, வாணிஜெயராம்  சாய்பாபா

 

வெகு சுவையான காட்சியில் சிறுவனைக்கொஞ்சி களிக்கும் பாடல்.

வாணி ஜெயராம் அதியற்புத நெளிவுகளை குழைத்துள்ளார். ஆங்காங்கே வரும் ஆங்கில ரைம் சாய்பாபாவின் குரலில். பாடல் ஒரு நாள் முழுவதும் நம்மை சுற்றி சுற்றி வரும் ஒரு வினோதம்

எளிதில் மறக்கவொண்ணா இசை அமைப்பு. கண்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=MH9R7V7O910 thangapadhakkam 1974 kd msv vj saibaaba

வளரும்

அன்பன் ராமன்

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...