Wednesday, May 22, 2024

SALEM SUNDARI- 17

 

SALEM SUNDARI- 17       

சேலம் சுந்தரி -17

காலை 11.02 க்கு சுப்பிரமணிக்கு அம்மாவுக்கு போன் போட்டுவிட்டு சுந்தரி , அம்மா நீங்க பெரியவங்க பேசுங்கம்மா என்று போனை அம்ஜம் கையில் தந்தாள் .

அம்ஜம்  "ஹலோ , சுப்பிரமணி அம்மாவா சௌக்கியமா இருக்கேளா ? என்றார் அம்ஜம்

மறுமுனையில் டேய் யாரோ ஐயர் வீட்டு அம்மா பேசுறாங்க? அந்தப்பொண்ணு ஐயராடா ? அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வருமாடா , ஏண்டா இப்பிடி பண்ற?

சுப்பிரமணி : சும்மா இரும்மா எனக்கு தெரியாதா என்று சீறி போனில் அம்மா சுப்பிரமணி பேசறேன் என்றான் .சௌக்கியமாப்பா நான்தான் ராமசாமி wife பேசறேன்

நல்ல இருக்கீங்களா ? எங்கம்மா நான் ஏதோ ஐயர் பொண்ண பிடிச்சுட்டேன்னு கத்தறாங்க . அந்த பொண்ணு அக்கா இருந்தா அம்மாட்ட பேச சொல்லுங்க என்றான்.

சுந்தரி நேரடியாக பேசி  தகவல் பரிமாற , போட்டோவுல நல்லா  இருக்குது நேர்லயும் இப்பிடியிருக்குமா என்று சுப்பிரமணி தாயார் கேட்க "நல்லா இருப்பா வீட்டு வேலை தையல் எம்பிராய்டரி எல்லாம் செய்வா  என்றாள் சுந்தரி.

சரி  இப்பவெல்லாம் போன்ல வீடியோ பேசறாங்களே அதுல அந்த பொண்ண வரச்சொல்லமுடியுமா , நான் இவனையும் வேட்டி  கட்டி வரச்சொல்லி நேர ஒரு வாட்டி பாத்துட்டு அப்புறம் முகூர்த்தம் பார்த்துரலாம் என்றாள்  சுப்பிரமணி தாயார்.

அம்ஜம் கல்யாணத்துக்கு பொண் வீட்டுல என்ன செய்யணும் ?

சுப்பு வின் தாய் :நாங்க   வளையலும் தாலியும் செய்வோம். அவங்க தோடு பொண்ணு மாப்பிள்ளைக்கு புடவை வேட்டி

கல்யாணச்செலவு பாதி பாதி அவ்வளவு தான்.

நாங்க ஒரு 5 , 6 பேர் வருவோம். வேற ஒன்னும் வேண்டாம் அவனுக்கு எந்த ஆடம்பரமும் பிடிக்காது  கோயில் ல தாலி கட்டுறான்னா கூட சரி னு சொல்வான் கஷ்டப்பட்டு கரையேறின பையன்  எங்களப்பத்தி சொல்ல வேற என்ன இருக்குது என்றார் சுப்பிரமணி யின் தாயார்.                             சுந்தரி திக்கு முக்காடிப்போனாள் எவ்வளவு கௌரவம் ஏழ்மையிலும் என்று . புதன் வியாழனில் பேச ஏதுவாக போன் நம்பர் தந்தால் வீடியோ வில் விசாலாட்சி யை வரச்சொல்றேன் அல்லது நானே அவளை காட்டுகிறேன் பாத்துட்டு நல்ல தகவல் சொல்லுங்க என்றாள் சுந்தரி.

இப்போது தான் யோசிக்கிறான் சுப்பிரமணி ஆஹா வீடியோ ல வரச்சொல்லிட்டாங்க அம்மா . நம்ம கிட்ட அந்த மாதிரி போன் இல்லையே , அவங்க கிட்டயிம் இருக்கோ இல்லையோ , எதுவும் கேட்டுக்காம ம்ம் வீடியோ ஆடியோ அது இது னு இந்தம்மா பாட்டுக்கு சொல்லிரு ச்சு , ஐயையோ இப்ப மாட்டிக்கிட்டோமே என்று கவலையில் ஆழ்ந்தான். சரி ஆண்ட்ராய்டு போன் வாடகைக்கு கிடைக்குமா அப்படியே கிடைச்சாலும் எவ்வளவு நேரத்துக்கு ? அந்த நேரத்துக்குள்ள டவர் கிடைக்கலைன்னா ரொம்ப சகுனமில்லாம ஆயிரும் ;ஆஞ்சநேயா நீ தான் வழி சொல்லணும் என்று வானத்தைப்பார்த்தான் மேகக்கூட்டத்தில்  பெரிய ராவணன் போல உருவம் தெரிய [1 வினாடி தான் -மாடசாமி, அவரின் உற்ற தலைவர் பி கே என்று மனம் சஞ்சரிக்க , உடனே சைக்கிளில் பறந்தான் பிகே சார் வீட்டிற்கு ;மணி 12 .00 அப்போது தான் அவர் குளித்து முடித்து துணிகளை மாடியில்         

உலர்த்திவிட்டு கீழே வந்தார். வெராந்தாவில் சுப்பிரமணி .

என்னப்பா ஏன் வெளில நிக்கற உள்ள வா என்றார். தயங்கி தயங்கி வந்தான் . ஏதாவது கல்யாணச்செலவுக்கு பணம் வேணுமா? என்றார் பி கே . அதெல்லாம் வேணாம் சார் கடன் வாங்கி கல்யாணம் பண்றதாவது ?            

 அப்பிடியாவது முகூர்த்தம் வேணுமா , இல்ல சார் வேண்டாம் என்றான் சுப்பிரமணி. .

சின்னப்பையனாக இருந்தபோது பிச்சை எடுக்கறதும் பொய் சொல்றதும் பிடிக்காது சார்னு சொன்னான் , இப்ப கடன் வாங்கறதையும் வெறுக்கிறான் -நல்ல குணவான் தான் என்று உள்ளூர மகிழ்ந்தார் பி கே.

சரி இவன் நம்ம கிட்ட பேச மாட்டான் என்று புரிந்துகொண்ட பி கே உள்ளே சென்று மனைவிஇடம்- நீ போய்  பேச்சுகுடுத்து என்னனு கேளு என்று மாமியை அனுப்பினார்.

தொடரும்

அன்பன் ராமன்

 

 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...