Thursday, June 20, 2024

S M SUBBIAH NAIDU-2

 S M SUBBIAH NAIDU-2 

SM சுப்பையா நாயுடு -2

ஈனா மீனா டிக்கா [அதிசயப்பெண்-1959  ] எஸ் எம் சுப்பையா நாயுடு -

கோரஸ் வகைப்படல் . இதே பாடல் ஹிந்தியிலும் வந்தது. இதில் முக்கிய அம்சம் அதிகம் மேலை நட்டு இசை வடிவத்டர்ஹி கையாளாத எஸ் எம் எஸ் அவர்கள் இப்பாடலில் 1959ல் நேர்த்தியாக கிளாப்ஸ் உத்தியை நேர்த்தியாக வழங்கியுள்ளார் . பாடலுக்கு இணைப்பு இது

https://www.youtube.com/watch?v=7TMgOamXFpA eena mina dika PS SMS 1959 WESTERN BEAT

என்னருகே நீ இருந்தால் [திருடாதே -1961] கண்ணதாசன் எஸ் எம் ஸ் , பிபி ஸ்ரீனிவாஸ் பி சுசீலா

 இது ஒரு வெற்றிப்பாடல் , ஸ்ரீனிவாஸ் குரல் எம் ஜி ஆருக்கு , சரோஜாதேவிக்கு சுசீலாவின் குரல். வெகுவாக சிலாகிக்கப்பட்ட பாடல். இது வேறோர் படத்திற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி உருவாக்கியது என்றும் பின்னர் இப்பாடல் திருடாதே படத்தில் சேர்த்துக்கொண்டனர் என்றும் ஒரு தகவல் உண்டு. வி -ரா பெயர் படத்தில் இடம் பெற வில்லை [வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் , எஸ் எம் எஸ்ஸின் சீடர் விஸ்வநாதன்  என்பதால் யாருக்கும் குறை இன்றி நேர்ந்ததாக சொல்லுவர். இதில் எம் ஜிஆர் பாவாடை போன்ற ஆடை உடுத்தியுள்ளார். பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=en+aruge+nee+irundhaal+video+song+download&newwindow=1&sca_esv=b6768ec4eb9a166c&sca_upv=1&sxsrf=ADLYWIIUOpTSXGnvDXUhheA25dc8F0wZGQ%3A1718344314245& thirudathe 1961 kannadasan sms pbs ps [vr?]

நீ எங்கே என் நினைவுகள் அங்கே [மன்னிப்பு ---1970 ] வாலி . சுப்பையா நாயுடு , டி எம் எஸ்

சில ஆண்டுகள் இசைப்பணி இல்லாமல் இருந்த திரு எஸ் எம் எஸ் வெகு சிறப்பாக இசை வழங்கிய படம் மன்னிப்பு. பின்னாளில் திரையில் வேரூன்றிய வாலி யுடன் சேர்ந்து வழங்கிய பாடல். எந்த இசை அமைப்பாளனுக்கும் நான் இளைத்தவன் இல்லை என்று பிரகடனப்படுத்திய எஸ் எம் எஸ் எவ்வளவு நேர்த்தியாக ராக அமைப்பிலும் இசை தொகுப்பிலும் போட்டி போட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முயல்கிறேன் எளிதாக சிறந்த பாடல் வரிசையில் வைத்து பேசப்படவேண்டியப்பாடல் . டி எம் எஸ் அச்சு அசலாக ஜெய்சங்கரை  குரலில் வெளிப்படுத்தி ஜமாய்த்துள்ளார் . கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=nee+enge+en+ninaivugal+angekomala%2C+p+suseelaa+video+song+download&newwindow=1&sca_esv=19e1b63181baf887&sxsrf=ACQVn0-6zC62aIX19tm-ehdXqZ-cfWZ4hQ%3

https://www.youtube.com/watch?v=JyxzeBYUhNY  TMS LIVE  ON STAGE

 வெண்  நிலா வானில் [மன்னிப்பு-1970 ]வாலி , எஸ் எம் எஸ். டி எம் எஸ் சுசீலா

மீண்டும் ஒரு சூளுரைப்பு "வாங்கடா பார்ப்போம்" என்பது போல்  நாயுடு வழங்கிய டூயட் பாடல் "மன்னிப்பு" படத்தில் . வாலி ஒரு முதன்மைக்கவிஞன் என்பதை நிறுவியுள்ள பல இடங்களில் முக்கிய மானவை

வானவில்லின் நிறமெடுத்து மேகம் என்னும் வெண் திரையில்   மற்றும் மின்னல் என்னும் தூரிகையால் என்று ஆண் பாட , பெண் "கன்னி எந்தன்  வடிவமது என முத்தாய்ப்பு

முத்துச்சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க , கொட்டும் மழைத்துளி விழுந்து  ..என்று ஆண் பாட

 பெண் " முத்து ஒன்று பிறந்து வரும் என நிறைவு செய்ய .     சரண வரிகள் இரண்டாம் முறை பாடப்படும் பொழுது

வானவில்லின் நிறம் எடுத்து என்று நிறுத்தி மீண்டும் தொடர்வது           ,

முத்துச்சிப்பி வாய் திறக்க என்று நிறுத்தி மீண்டும் தொடர்வது

இவ்விரண்டு இடங்களும் இசை அமைப்பாளர்களையே சற்று யோசிக்க வைக்கும் , ஏனெனில் ரசிகர்களை கொக்கி போட்டு இழுக்கும் உத்தி அது -பாடலை நன்கு ஆழ்ந்து கேளுங்கள்

போகட்டும் டி எம் எஸ் எவ்வாறு ஜெய்சங்கர் ரூபம் காட்டுகிறாரோ அதற்கு சற்றும் தளர்வின்றி நிர்மலா வே பாடுவதுபோல் குரலை கட்டமைத்துப்பாடிய சுசீலா என்று பேச ஏராளமான நுணுக்கங்கள் -பாடலில் . ஆனால் இப்போது நான் எழுதி வரும் BLOG மற்றும் உறுப்பினர்களின் திரைப்பாடல் குறித்த நிலைப்பாடுகளை கணக்கில் கொண்டால் பெரிதும் விவாதிக்க வாய்ப்பில்லை.

என்ன எழுதினால் என்ன விவாதித்தால் என்ன வாசிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஒரு வேளை வாசகர்களின் அதிகமான தேடலுக்கு என்னிடம் தகவல் இல்லை போலும்

எனினும் இந்தப்பாடலின் பல தன்மைகளுள்  இசை அமைப்பும், கருவிகளின் தொகுப்பும்   சிறப்பானது என்று உறுதியாக சொல்லலாம் . கேட்டு ரசிக்க இணைப்பு 

https://www.google.com/search?q=vennilaa+vaanil+tamil+song+video+download&oq=vennilaa+vaanil+tamil+song+video+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIJCAAQRRg5GJ8FMgkIARAhGAoYoAEyCQgCECEYCh  MANNIPPU 1970 vaali SMS tms ps

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

O K

  O K                                         ஆ கா இது என்ன ஆ கா   என்று தோன்றினால் , இது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என புரிந்து க...