G PAY JEEVAA-5
ஜீ -பே –ஜீவா-5
மெல்ல மிகுந்த முயற்சியில் ஒருவாறு உள்ளே வந்தார்.
மெல்ல ஒரு மேடை மீது அமரவைத்து வலது கால் செருப்பை [விசேஷ வடிவமைப்பில் இருந்தது] கொண்டுவந்து, ஜீவாவே மெல்ல பொருத்தி மேல் பகுதியில் மெல்ல ஜிப் பை பூட்டினான், இறங்கி நடங்க என்றான் .
கால் வெட வெட என நடுங்கியது பூமியில் பாவவே இல்லை; இருங்க இடது காலை நல்லா பதியுங்க, பின்னர் வலது காலை , ஜீவாவே மெல்ல ஒரு கோணத்தில் வளைத்து பதியவைத்தான். 2 நிமிஷம் நில்லுங்க , அப்புறம் இடது காலை பின்னால் வையுங்க, வலது காலை
1/2 அங்குலம் தூக்கி வையுங்க என்றான் .
கூச்சத்துடன் வலது காலை மெல்ல பதித்தார் சிறிதும் வலி இல்லை, புன்னகைத்தார்..
இந்தாங்க சாமி படம் கும்பிடுங்க என்று திரைச்சீலையை விலக்கினான். அனைத்து மத உணர்வுகளுக்கும் தேவையான தெய்வ உருவங்கள்/ அடையாளங்கள் இருந்தன. தனவந்தர் நெகிழ்ந்தார் கைகூப்பி கண்ணீர் சொரிந்தார்.. ஜீவா ட்ரைவரை உள்ளே அழைத்து இந்த செருப்பை காலில் எப்படி பொறுத்த வேண்டும் என்று செய்து காண்பிக்க, ட்ரைவர் நன்றாக புரிந்துகொண்டார்.
பில் தொகை மீதி 1420+ 80 என்றான் ஜீவா.
[சென்ற மாதம் புது செருப்புக்கு ஆர்டர் கொடுக்க தனவந்தர் வந்ததுமே ஜீவாவின் மனதில் "இவர் தான் எனது ஏழ்மைக்காலத்தில் 80/- ரூபாயை தராமல் கணக்கில் போட்டுவிட்டதாக நாடகமாடி தங்கையை ஏமாற்றியவர் என்று.தெளிவாக புரிந்து கொண்டான்]. [அவர் முகச்சாயல், குரல் இரண்டும்] ஜீவாவின் மனதில் நன்கு பதிந்திருந்தன. எனினும் தொழில் முறை கெளரவம் கருதி ஒன்றும் தெரியாதது போல் அமைதி காத்து இருந்தான் பிடாதி அம்மன் மனக்கண்ணில் தோன்றி குறி காட்டினாள் -நினைவிற்கு வருகிறதா? ]
அது என்ன
+80 ? என்றார் தனவந்தர்.
சிரித்துக்கொண்டே ஜீவா சொன்னான் சார் cash ஆகவே கொடுத்துடுங்க; நாங்க படிப்பறிவு இல்லாதவங்கனு போன்ல நம்பரை காமிச்சு பணம் போட்டாச்சுன்னு சொல்லி ஏமாத்திர் ராங்க..அப்படி நீங்க முன்ன ஒரு வாடடி ஏமாத்துன 80/- ரூபாய் தான் +80 என்றான் ஜீவா. தனவந்தருக்கு பெருத்த அவமானம் அதுவும் ட்ரைவர் முன்னிலையில் . பேச முடியுமா?
என் முகத்தைப்பாத்து பேசுங்க சார் -
அது உங்களால முடியாது -நான் சொல்றேன் கேளுங்க என்றான் ஜீவா
80
ரூவாய்க்கு 4% வட்டி 8
வருசத்துக்கு [போஸ்ட் ஆபிஸ் ரேட்] கணக்கு பாருங்க நிச்சயம் அதிகமாத்தான் வரும். நான் வட்டியெல்லாம் வேணும் னு ஆசைப்படலை .
அதுனால மறுபேச்சு பேசாம 1420+ 80/- கொடுத்தீங்கன்னா கவுரவமா இருக்கும். நீங்க பெரியமனுசங்க , நான் வேற என்ன சொல்ல முடியும்? என்று மனத்தாக்குதல் செய்தான் ஜீவா .
இப்போது 'தனம்' கதி கலங்கியது.
9ஆண்டுகள் முன்னர் வலது கால் செருப்பை சரி பார்த்து வாங்கிக்கொண்டு செல்போனில் வந்த 8
மணியை [08.00] தலைகீழாக
80 என்று காட்டி சிறுமியை ஏமாற்றியவர் தான் இன்றைய தனவந்தர் . அவருக்கு வலது கால் ஜீவன்
பிச்சை, இட்ட[ஜீ]வன் ஜீவா.
வாய் பேசாமல் தலைகுனிந்து பணத்தை கொடுத்துவிட்டு மெல்ல நடந்து ட்ரைவர் உதவி இல்லாமலே காருக்கு சென்றார்.
[பி கு]:. கு 80 ரூபாயை ஏமாற்றிவிட்டுப்போன 20 வது நாளில் எதிர்பாரா விபத்தில் நெல்மூட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் தனவந்தரின் வலது காலில் ஏறி காலை வெகுவாக சிதைத்துவிட்டது. 9
வருடம் வைத்தியம் கடைசியில்[2024ல்] கல்கத்தாவில் பிளாஸ்டிக் சர்ஜரி, ஆனாலும் வலது கால் பாதம் வாழைக்காய் பஜ்ஜி போல் சிறுத்து சுருங்கி தட்டையாய் இருந்தது.
பாதம் தரையில் பதியாமல் அந்தரத்தில் ஊசலாடும் நிலையில் இருந்தது
.ஜீவாவின் புகழ் அறிந்து மீண்டும் 80 ரூபாய்க்கடைக்கே வந்தான் தனம் .
கல்கத்தாவில் அந்த செருப்புக்கு 12, 500/- முதல் 14000/- வரை கேட்டனர்; ஆனாலும் 6000/-
ரூபாய்க்கு பேரம் பேசிய தனவந்தர் ,
இப்போது
அந்நாள் பரம ஏழையிடம் மாட்டிக்கொண்டு அவமானத்தால் தலை குனிந்து வேகமாக வெளியேறினார்
போகும்போது வழியில பிடாதி அம்மனை கும்பிட்டு விட்டு போங்க என்று உரத்த குரலில் சொன்னான் ஜீவா. சரி என்று தலை அசைத்தது தனம் . .
நிறைவு
நன்றி
அன்பன் ராமன்
ஏமாற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக தான் ஒருநாள் தனது குணத்திற்கான தண்டனையை வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேரிடும் என்பதை விளக்கும் அருமையான சிறுகதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
K. லக்ஷ்மணன்.
Beautiful story RK
ReplyDelete