RENGA VENDAAM -6
ரெங்கா வேண்டாம்-6
காலை 9.40 , இப்போது ரெங்கராஜு வேறொரு கோலத்தில், நீண்ட பாகவதர் கிராப் கழுத்தில் காவி துண்டு, கையில் கிளிக்கூண்டு சகிதம் .
அம்மணி என்று குரல் கொடுக்க ,
மைதிலி வாயில் அருகில் பிரசன்னம் கையில் வாழை இலையுடன். அந்த இலையை திண்ணையில் இட வந்தாள் .
பொறுங்க தாயீ ,
கோல மாவு கொண்டாங்க [கல்லு மாவு ஆவாது ,
அரிசிமாவு தான் வேணும்] ;
எங்க வீட்டுல எப்பவுமே அரிசி மாவு தான் என்றாள் மைதிலி.
கோதுமை மாவு .கேசரி பௌடர் ,
இதெல்லாம் கேக்கபோறானுக என்றான் ரெங்கசாமி.
[கடுப்பில் உச்சத்தில் இருந்த ரெங்கராஜு ,
வேண்டாம் ரெங்கா என்று உரத்த குரலில் சொல்ல ,
மைதிலி "கொஞ்சம் சும்மா இருங்களேன்
" என்றாள் .
இந்த திருடனுக்கு காது ரொம்ப தீர்க்கம் முணுமுணுத்தாகூட வேண்டாம் ரெங்கா வேண்டாம் ரெங்கா னு ஒரே புலம்பல் . இன்னும் ஒரு வினாடி பார்த்திருந்தால் கூட மைதிலியின் கோபப்பார்வையில் ரெங்க சாமி பஸ்பம் ஆகி இருப்பான் -அவ்வளவு கோபம் மைதிலிக்கு..
பல்லைக்கடித்துக்கொண்டு கோல மாவு சட்டியுடன் திண்ணையில் எற , ரெங்கராஜு ,
தாயீ கோலம் நான் போட்டுக்கறேன் என்று சொல்லிக்கொண்டே கிளிக்கூண்டை திணையில் வைத்தான். மைதிலி ,
கோலம் நானே போடறே னே என்றாள் . இல்ல தாயீ இது பகவதி ஆவாஹன கோலம் என்றான் ரெங்கராஜு.. மைதிலி, கோமதி, சந்தானம் அனைவரும் மிரட்சியுடன் பார்க்க , சட்டென்று திண்ணையில் ஏறி தெற்கு வடக்காக நமஸ்கரித்து விட்டு மேல் துண்டால் திண்ணையை சுத்தம் செய்து விட்டு ,
தம்பி வாங்க என்று சந்தானத்தை அழைத்து, 3 சிட்டிகை கோலமாவை எடுத்து என் கையில் வைய் ங்க என்றான்.
சந்தானம் விழித்தான் ; சாமி சிட்டிகைன்னா , 2 விரல் இடையில எவ்வளவு வருமோ அது தான் அப்படி 3 தடவை வைங்க என்றான் . சந்தானம் அவ்வாறே செய்ய அத்துடன், தேவையான மாவை கையில் எடுத்துக்கொண்டு உரத்த குரலில் பகவதி நாமாவளி பாடிக்கொண்டே கோலமிட்டான் ரெங்கராஜு.
சதுர கட்டத்தில் நடுவே மாவிலையுடன் , பூரண கும்பம் , வெளியே பக்கத்துக்கு 4 வீதம் மொத்தம் 16 கட்டங்கள் , 12 ராசிகள், 4 எல்லை தெய்வங்கள் வரைந்து விட்டு , எல்லாம் சாமி கும்பிட தயாரா இருங்க ,
கோலத்துல சாமி வந்துச்சுன்னா -நம்ம பாக்கியம் என்று சொல்லிக்கொண்டே பகவதி உச்சாடனம் செய்து, முடிவில் ஹு ச் ஜக்கம்மா என்று கையில் இருந்த மஞ்சள் தூளை ஒரு அரைப்பிடி நடுக்கோலத்தில் வீச ,
குபீரென்று ஜ்வாலை கிளம்பி 50 வினாடி நர்த்தனம் செய்ய அதில் வீணை மீட்டும் தேவியின் உருவம் , அனைவரும் திகைக்க சந்தானம் கல் போல் இறுகி அசைவற்று நின்றான். அனைவரும் வணங்கி இதென்ன நம்ம வீட்டு திண்ணையில் பகவதியா என்று பரவசப்பட, கோமதி அம்மாள் “உங்களுக்கு கோடி புண்யம் பகவதி தரிசனம் உங்களால கை கூடியது”. என்று தழு தழுத்தாள்.
அம்மணி, நம்ம அய்யாவும் இருந்தாங்களே–பாக்கலியா? என்றார் ரெங்கராஜு .
நான் பாத்தேன் பகவதி கூட ஒரு மாமா இருந்தார் என்றான் சந்தானம்.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment