Sunday, July 26, 2026

MADURAI -20

 MADURAI -20

மதுரை -20      திருப்பரங்குன்றம்

மதுரையின் புற நகர் பகுதியாகிய திருப்பரங்குன்றம் விசேஷ முருகஸ்தலம் ஆகும். முதல் படை வீடென பெருமை கொண்டது. அப்பகுதியில் அமைந்த மலைக்குன்றின் வடக்கு முகத்தில் அமைந்துள்ள இவ்வாலயம் ஒரு. குடைவரைக்கோயில் .

ஆம் கோயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருந்து பல கட்டங்களாக மேல்நோக்கி நடந்து பயணிக்க எதுவாக படிக்கட்டுகளும் , மண்டபங்களும் அமைக்கப்பட்டு இக்கோயில் வெவ்வேறு உயரங்களில் அமைந்த மண்டபங்கள், இறை சன்னதிகள் என்று கடந்து கடந்து மேலே செல்ல எதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாந் நிலப்பகுதியில் இருந்து இடப்புறத்தில் [கிழக்கில்] இருப்பது புண்ணிய தீர்த்தம் சரவணப்பொய்கை. இப்பகுதியில் இருந்து கடந்து படிக்கட்டுகள் வழியே மேலேறிச்செல்ல இறுதியில் அமைந்த சன்னிதானம் முருகன் இருப்பிடம்.

அருகில்    பரங்கிரி நாதர் [சிவன்], துர்கை, விநாயகர் மற்றும் தெய்வானை திருவுருவங்களும் இப்பீடத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்கு நடந்தேறும் பால் அபிஷேகம் முருகப்பெருமானின் வேல் ஆயுதத்திற்கே. அநேகமாக ஒவ்வொரு நாளும் பல பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றுவது வழக்கம். வைகாசி விசாகம் கிருத்திகை போன்ற நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர் குழுமி தரிசனம் செய்வது இத்தலவிசேஷம் .

பல முக்கிய தல ங்களைப்போல  அழகு குத்திக்கொள்ளுதல் காவடி எடுத்தல், முடி காணிக்கைசெலுத்துதல் போன்ற அனைத்து வழிபாடு முறைகளும் உண்டு. கோயிலில் நவக்கிரகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சன்னதிகள் உண்டு  எனவே ஆங்காங்கே பிரார்த்தனை நிறைவேற்றுதல் நிகழ்ந்தேறிய வண்ணம் இருக்கும். கோயில் குறித்த வீடியோ இணைப்புகள் இதோ

https://www.youtube.com/watch?v=FQbnGTtd7DI    TPK

https://www.youtube.com/watch?v=rpdHTqvLXio      TPK VIDEO TAMIL

 

 

No comments:

Post a Comment

MADURAI -20

  MADURAI -20 மதுரை -20         திருப்பரங்குன்றம் மதுரையின் புற நகர் பகுதியாகிய திருப்பரங்குன்றம் விசேஷ முருகஸ்தலம் ஆகும் . முதல...