Tuesday, April 15, 2025

LET US PERCEIVE THE SONG – 18

 LET US PERCEIVE THE SONG – 18

பாடலை உணர்வோம் -18

பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் -1965] பஞ்சு அருணாச்சலம், எம் எஸ் விஸ்வநாதன் , டி எம் எஸ் , சுசிலா

இப்பாடல் பற்றி பேச ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் என்றால் பலர் நகைக்கக்கூடும் . ஏன் எனில் நம்மவர்க்கு எல்லாப்பாடல்களும் -இதென்ன பெரிய ...ஆ என்று அலட்சியப்பார்வை கொள்வதுதான் இயல்பு. நுணுக்கம் அறிந்தவன் துணிச்சல் கொள்ள தயங்குவான், இல்லாதோர் எதையும் துச்சமாக நினைப்பது  மட்டும் அல்ல , திரைப்படப்பாடல்கள் என்றாலே -உதவாக்கரை குப்பை என ஒரு எண்ணம். போகட்டும்  இந்தக்கேள்விக்கு ,விடை தேடுங்கள் . "இந்த 'பொன்னெழில் பூத்தது பாடல்' மேடை நிகழ்வுகளில், சூப்பர் சிங்கர் தேர்வு சுற்றுகளில் பார்க்க முடிகிறாதா? ஏன் இசைக்குழுவினர் தொடுவதற்கே அஞ்சும் நுணுக்கங்கள் நிறைந்த அமைப்பு . சொற்கள் ஒவ்வொன்றிலும் பாவம் காட்டும் குழைவுகள் . சிவகாமி, சிவகாமி என்றழைக்கும் பொழுது இரண்டு சொற்களிலும் மிக நுண் வேறுபாடு

சிவ -காமி என துவங்கி உடனேயே விரைந்து சிவ காமி என்றழைக்க நாயகி 'உன்னைப்பார்த்துவிட்டேன் என்பதைப்போல ஓ ஒ ஓ ஓ ஓ என பதில் குரல் கொடுக்க உடனே கொத்தாக இழையும் வயலின்கள் ஒலி யில் ஒரு சோகம் வழிய, அங்கேயே மெல்லிசை மன்னர் உணர்த்துகிறார் -இது ஒரு சோகப்பாடல் , டூயட் அல்ல என்று.. ஆம் இது சோகம் தாம்.

 தொலைந்து போன பொருள் கிடைத்தால் தடவித்தடவி பார்க்கும் மனித மனம், இப்போது மீண்டும் கண்ட      துணையை நேரடியாக கேள்விகளால் விடைபெற முயலுவதே பாடல்.

நீ எங்கே போனாய்? என்ற  கேள்வியை சொல்லும் ஓசையும் இலக்கிய நயம்பட கேட்கும் பாங்கினையும் அதே உணர்வு மங்காமல் செறிந்த இலக்கியச்செழுமையுடன் நாயகியின் பதில் இரண்டும் தரும் உன்னத உணர்வே இப்பாடலின்  சிறப்பு.

நான் விளக்க வேண்டிய அம்சங்களை நீங்கள் உணரும் படி எளிதாக்க பாடலின் இனிமை மற்றும் நயம் மேம்பட பிரித்து விளக்கலாம் என்றெண்ணுகிறேன் . எனவே நாயகனின் உள்ளக்குமுறல் வினா வடிவில்  தோன்ற , நாயகியின் விடை விளக்கம் நிறைந்த மென்மையின் செறிவாக அமைந்த பாடல் .

நீ எங்கேபோனாய் , உன்னைக்காணவில்லையே , எங்கெல்லாம் தேடுவது என்ற கருத்தை மன்னவர் கேட்பின்?

அதுதான் இங்கே நாம் சந்திக்கும் இலக்கிய நயம். அவை வினாக்கள் என்பதால் முதலில் அவற்றை வரிசைப்படி தொடுத்து பாடலில் உள்ள சொற்களில் காண்போம்

வினா 1

என் மன தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே சொல் சொல் சொல் [*]

வினா 2

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு எண்ணத்தை சொன்னவன் வாடு கிறேன்

 எண்ணத்தை சொன்னவன் வாடு கிறேன்

வினா 3

உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் ,

 உன் பட் டுக்கை பட பாடுகிறேன்

வினா 4

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை  அள்ளிக்கொடுத்த பொன் மாடம் எங்கே

அள்ளிக்கொடுத்த பொன் மாடம் எங்கே

வினா 5

கிண்ணம் நிரம்பிய செங்கனி ச்சாருண்ண முன்வந்த செவ்வந்தி மாலை எங்கே   முன்வந்த செவ்வந்தி மாலை எங்கே . 

[ஒவ்வொரு கருத்தையும் பிரித்து தனி வினாவாக பார்க்க முனைகிறேன்; ஏன் எனில் நாயகி இவற்றை தனித்தனியே விளக்கி நான் எங்கும் போய்  விடவில்லை  இங்கு தான் உலவுகிறேன். நீயோ தூது வந்த இயற்கையின் குறியீடுகளையும் புரிந்துகொள்ளாமல் மலங்குகிறாய்  என்று நாயகியின் விளக்கம் பாடலின் இலக்கிய தரத்திற்கு கட்டியம் கூறுகிறது.] . அவள் என்ன சொல்கிறாள் ?

வினாக்களுக்கு மற்றும் விடை களுக்கு இடையே அவ்வப்போது பல்லவி வருகிறது. நான் அவற்றை இங்கே விளக்க முற்படவில்லை ஏன் எனில் பாடலின் சுவை இருவரின் இலக்கியத்தர உரையாடலில் இருப்பதை முன்னிலைப்படுத்தவே இந்த முயற்சி.

நாயகி தரும் முதல் விடையே அவள் இசைக்கும் பல்லவியில் இருந்தே துவங்குகிறது.

விடை 1

பல்லவி

பொன்னெழில் பூத்ததது தலைவா வா

வெண்  பனி தூவும் இறைவா வா    [

இவ்விடத்தில் மெல்லிசை மன்னரின் அதீத ஆளுமை இறை வா 'வா' என்று நீட்டாமல் 'வா'  என்று சடன் பிரேக் போட்டு நிறுத்தி நாயகியின் காதலின் பொங்கிவரும் உணர்வை காட்டியுள்ளார்]  இரண்டாம் முறை பாடும் பொது இறைவா வா என்று வா வை வா என்று நீட்டிப்பா வைத்துள்ளார்.

விடை 2

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

விடை 3

மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு 

[வண்டு  போல நான் பாடி வந்ததால் , இவளே வந்துவிட்டாள் , நாம் இங்கிருந்து அகல வேண்டும் என்று பூந்தென்றல் ஆடிக்கொண்டு போய் மறைந்ததே நீ காணவில்லையா [குறியீடுகளை உணரவில்லை நீ          என கிறாள்]

விளக்க முடியாதவற்றுக்கெல்லாம் விளக்கம் கேட்கிறாய் நீ என்பதாக நாயகி அடுத்த பகுதியில்

விடை 4

என்னுடல் என்பது உன்னுடல்  என்றபின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ?

ஒன்றில் ஒன்றானபின் தன்னை தந்தானபின்

உன்னிடம் நான் என்ன சொல்லு வதோ

விடை 5

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண் பனி தூவும் இறைவா வா

உன் மன தோட்டத்து வண்ணப்பறவை வந்தது இங்கே வா வா வா [என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை சென்றது எங்கே சொல் சொல் என்றாயே இதோ இருக்கிறேன் என்கிறாள் ]

இரு மனம் இணைந்திட

என்றிருவரும் குதூகலிக்க பாடல் நிறைவடைகிறது.

தமிழ் திரை இசையில் இப்பாடலுக்கு இணையாக இன்னொரு பாடல் இல்லை என்பது அடியேனின் புரிதல். ஏன் என்றால் , இது சோகத்தில் துவங்கி சுகத்தில் சங்கமிக்கும் இருமன ஓட்டம் . இது போன்ற ஒரு மனோநிலையில் உழலும் ஆண் /பெண் பாத்திரங்களுக்கு ஒத்தியங்கும் ஒரு சந்த ஓட்டத்தில் பாடல் புனைவது எளிதன்று. ஆம் அடுக்கடுக்கான கேள்விகள் , ஈடுதரும் விளக்கங்களின் சுவையான சொல் வரிசையை இசையின் பரிமாணங்களில் அழகாக அமர்த்தி சீராக பயணிக்க வைத்தாரே மெல்லிசை மன்னர் அவரின் உழைப்பு இப்பாடலில் ஒவ்வொரு வினாடியிலும் பரிமளிக்க , பாடலை விமரிசிப்பது அத்துணை எளிதன்று. சரி இசை ஞானம் இல்லாத என் போன்றோர் விளக்குதல் குருடன் ராஜ விழி விழிக்க முயலுதலுக்கு  ஈடான ஒன்று -அறிவேன் . பாடலை உணர்வோம் என்றால் அதன் உள்ளார்ந்த நளினங் களை கோடிடா விட்டால் இது எடுத்த பணி யின் தீவிரத்தை உணராத அவலம் அன்றோ ?

இசைக்கூறுகள் கூட இப்பாடலில் இரு மாறுபட்ட அமைப்புகள் என்றே உணரலாம். ஆம் பாடலின் முற்பகுதியில் கருவிகள் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க உள்ளார்ந்த ஏக்கத்தின் வடிவாக இசையில் பேசுகிறார் எம் எஸ் வி அவர்கள் . இருவரின் குரல்களின் ஒலி எழுந்த பின் நிகழும் உள்ளத் திகைப்பு  வயலின் வீச்சாக கூட்டமாக தோன்றி சரிந்து மறைய , துவங்குகிறது ட்ரிபிள் காங்கோ, தபலா  வின் சீரான முழக்கம் . இம்மி விலகாமல் பாடலில் தொடர்ந்து பங்குகொள்ளும் ஒரே கருவி ஜோடி  அதுவே. அதாவது மொத்தப்பா டலின்  அனைத்து மாற்றங்களுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் லய  அமைப்பு -தீவிர இசை நுணுக்கத்தைக்  காட்டும் வெளிப்பாடு.

பாடலின் இரண்டாம் பகுதியில் [நாயகியின் பகுதி] இசைக்கருவிகள் அதிகமாக பங்களித்து காதலின் குதூகலத்தை காட்டும் துள்ளல் இசையாக, அக்கர்டியன், கிட்டார் , போங்கோ, குழல் பின்னி பிணைந்து    ஒலி க்க , பாடல் மகிழ்ச்சி கோலத்தில் பயணிக்க இருகுரல் இசையாக ஹம்மிங் ஒலியில் சங்கமித்து நிறைவேற நம் மனதில் மேகம் போல் மிதந்து நினைவைப்பீடிக்கும் பாடல் இது. இது போன்ற அமைப்பினுள் பாடல்கள் அமைவது துர்லபம் . எனவே ஊன்றி கேட்டு மகிழ்வீர் இப்பாடல் குறித்த வேறு சில விளக்கங்களை ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் பேச கேளுங்கள் . இணைப்பு கீழே

PD1 90187 bex dc paidsocial dv video youtube nomatterwhat edge ind en 16x9 15 VILARI EXPLAINS

அன்பன் ராமன்

Monday, April 14, 2025

ADAMANCY -2

 ADAMANCY -2

அடம் பிடித்தல் -2

தெருவில் போய் விளையாடு என்று பையனுக்கு வேண்டாத நேரத்தில் துரத்தி விடுவர்.

மறுநாள் காலை தாயார்/அக்கா பையனை பள்ளிக்கு அனுப்ப தலை வாரிவிட , ஆ ஆ , வலிக்கிறது என்பான் பையன். தலையில் என்ன என்று பார்ப்பார்கள் ஒன்றும் தென்படாது [குட்டு அப்படி . -நல்ல நடு மண்டையில் ].  இதுபோல் ஒருதரம் பட்டவன் 'இப்பவே இப்பவே ' வேலையை தாயாரிடம் அல்லது தாயார் இருக்கும்போது மட்டுமே துவக்குவான். 

இரண்டு சகோதரர்கள் எனில் ஒருவன் நல்லவன் போல் நடிக்க இன்னொருவன் அந்த தினத்திற்கு 'இப்பவே இப்பவே' கூப்பாடுக்கு அஸ்திவாரம் போடுவான் . இருவரும் சேர்ந்து ஏதாவது செய்தால் தாக்குதல் வெகு வீரியமாக இருக்கும். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து வாங்க முயலுவதும் தனித்தனியாகத்தான் 

இல்லையேல் அடுத்தவனின் கணக்கு/ஆங்கிலம் மார்க்கு குறைவுக்கு இருவருக்கும் செமத்தியாக கிடைக்கும்  வேறென்ன ? அடியும், அறையும் தான் ; எலும்புக்கூடாக இருக்கும் தகப்பன் இவ்வளவு வலுவாக அடி ஜமாய்க்கிறாரே என்று மனைவி ஆச்சரியம் கொள்வாள்; இந்த வாரம் டாக்டரிடம் போய் இவருக்கு டானிக் வாங்கணும் னு நினைத்தேன் . ஐய்யய்யோ   வேண்டவே வேண்டாம் அப்புறம் டானிக்கை வேறு   சாப்பிட்டுவிட்டு எனக்கு 4 போட்டார்னா -யாரால இருக்கு , நாலும் கிடக்க நடுவுல அடி வாங்க முடியாது என்று டானிக் பிளான் கை விடப்படும்.

இதெல்லாம் உண்மையா ? அல்லது நீ ஏதாவது அள்ளி விடுகிறாயா என்று யோசிக்கிறீர்களா? பெயர்களும் சம்பவங்களும் குறிப்பிடப்படாமலேயே முறையான விளக்கம் தருவதிலிருந்தே புரிந்திருக்குமே இவை பல நிகழ்வுகளை கவனித்து உள்வாங்கி தெரிவிக்கப்படுகிறது என்று. இதில் எதுவும் நிகழாத வெற்று கற்பனை அல்ல , மாறாக பல அனுபவ சந்தர்ப்பங்களில் உணர்ந்ததை சொல்லுகிறேன் . 

அப்படி ஓர் சம்பவம் சுமார் 50 ஆண்டுகள் முன்னம் ‘குமுதம்' வார இதழில் தெரிவிக்கப்பட்டிருந்த நிகழ்வு. மதுரை/ விருதுநகரில் இருந்து நெல்லை நோக்கி சென்ற பஸ் ஒன்றில் பெற்றோருடன் பயணித்த சிறுவன் ,சுமார் 30 நிமிட பயணத்திற்கு பின் 'ஓ ' என்று உரத்த குரலில் வீறிட்டு அலற பஸ் சில்  பயணித்தவர்கள் அவனை சமாதானம் செய்ய என்னஎன்னவோ முயன்றும் , போராடியும் மிரட்டியும் அதட்டியும் அவன் மசியவே இல்லை . மென்மேலும் உரத்த குரலில் அலற  ட்ரைவர் பஸ் ஸை நிறுத்திவிட்டு அவனருகில் வந்து 'தம்பி என்னப்பா வேணும்? 'என கேட்க முடியாது முடியாது ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா என்று அலற ட்ரைவர் பயந்து போய்,  ஒண்ணு ஒண்ணா னு கேட்கிறான் ஏதாவது 15 -20 பொருள்களை கேட்கிறான் போலும் என்று அவர் நமக்கேன் வம்பு என்று பஸ் ஸை மீண்டும் இயக்கப்போய்விட்டார். இப்போது பையன் மிக வீரியமாக . ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா ஒண்ணு ஒண்ணா வாங்கித்தா என்று அலற, பஸ் பயணிகள் கண்டக்டரிடம் இந்த 3 பேரையும் இறக்கி விட்டுருங்க எங்களால பயணம் பண்ண முடியல என்று தகராறு  செய்ய , கண்டக்டர் பாவம் சார் ரோட்டுல இறக்கிவிட்டா  எப்பிடி ? இப்ப சாத்தூர் வரும் அங்க இறக்கி விட்டா வேற பஸ் ல போயிருவாங்க என்று நிலைமையை கட்டுப்படுத்தி,பயணிகள் அமைதி ஆயினர். ஆனால் பையன் தீவிரமாக அலறிக்கொண்டே ஒண்ணு ஒண்ணாவாங்கித்தா  வாங்கித்தா  என்று இடைவிடாது அடம் பிடித்துக்கொண்டே இருக்க  , வண்டி இடது புறம் திரும்பி சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் நுழைய "இதோ ஒண்ணொண்ணா ஐயா இதோ ஒண்ணொண்ணா என்று சிரித்துக்கொண்டே பையன் கையை  காட்ட அங்கே பட்சண கடையில்  கோபுரம் போல் குவிந்திருந்த காராசேவு குவியல்.. தகப்பனார் ஒரு பொட்டலம் காராசேவு வாங்கி வர பையன் ஈரக்கண்ணுடன் ஈ என்று சிரிக்க , பிறகு தான் புரிந்தது காராசேவு குச்சி குச்சியாக தனித்தனி யாக ஒன்றோடொன்று ஒட்டாமல் இருப்பதால் அதற்கு ஒண்ணு ஒண்ணா என்று இவன் ஒரு பெயர் வைத்திருக்கிறான். இப்போது புரிகிறதா எப்படி அடம் பிடித்து உயிரை வாங்குவார்கள் சிறுவர்கள் என்று?  அடம் என்பது சமாளிக்கக்கூடிய எளிய நிகழ்வு அல்ல.

நன்றி அன்பன் ராமன்

Sunday, April 13, 2025

AVOIDING MISTAKES-5

 AVOIDING MISTAKES-5     

பிழை தவிர்த்தல் -5 

 CONTINUAL / CONTINUOUS இவைகளும் ஒரே பொருள் தருவன அல்ல.. JUDICIOUS / JUDICIAL   இரண்டும் வெவ்வேறு. SUPERFICIAL மற்றும் SUPERFLUOUS இரண்டும் ஒன்றல்ல. இன்னும்   நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டிய மொழி சார்ந்த விதி முறைகள் எண்ணற்றவை.          என்று சென்ற பதிவில் தெரிவித்திருந்தேன் .

அவற்றை புரிந்து கொள்வோம் 

                                                 இனிய   தமிழ் புத்தாண்டு                                                                                                                      "விசுவாவசு"                                            

                                          நல் வாழ்த்துக்கள்

                                                   

CONTINUAL , CONTINUOUS  இரண்டும் ஒரு செயலின் தொடர்ச்சியை குறிப்பிடுவன. ஆயினும் அவற்றிற்கிடையே வேற்றுமை அதிகம் .  

CONTINUAL என்பது விட்டு விட்டு நிகழும் தொடர் செயல் என்று விளக்கப்படுகிறது .என்ன தலை சுற்றுவது போல் இருக்கிறதா? மிகவும் எளிய தகவல் தான் . மனிதன் உயிர் வாழ உணவும் , உறக்கமும் மிகவும் அவசியம் . அதற்காக 24 மணி நேரமும் உணவையே உண்ணுவதோ, உறங்கிக்கொண்டே இருப்பதோ சரியல்ல , மேலும் ஆரோக்கிய வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும். ஆகவே ஒவ்வொரு உணவிற்கு முன்னும், பின்னும் உணவு உட்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். அது போலவே , உண்ணும் நேரம் போக பிற நேரங்களில் தூங்கிக்கொண்டே இருப்பதும் தவறு. இரவில் நீண்ட நேரம் [8 மணி நேரம்+ உறங்கலாம்] பகலில் 15 -20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம் . இவ்வாறே உணவு உட்கொள்ளும் செயல் / உறங்குதல்  தொடர்ச்சியானதல்ல , இடை வெளிகளுடன் நிகழ்வது So, eating and sleeping are continual functions. 

மனிதன் உயிர் வாழ, மூச்சு இயக்கம் [breathing] மிகவும் அவசியம். மூச்சு இயக்கத்தில் நீண்ட இடைவெளி கிடையாது. மூச்சு இயக்கம் இடைவிடாமல் நிகழ்வதால் அது continuous எனும் இடை வெளி அற்ற தொடர் செயல்.

அதில்  இடை வெளி ஏற்பட்டால் மரணம் நிகழும்.. Breathing is contiinuous என்கிறோம். ஆக, தொடர் நிகழ்வுகளில் continual என்பது இடைவெளியுடன் நிகழ்வது,

Continuous என்பது இதயத்துடிப்பு போல் இடைவிடாமல் தொடர்ந்து இயங்குவது. இவற்றை நன்கு உள்வாங்கி புரிந்து கொள்ளுதல், முக்கிய நிபுணர்கள் மத்தியில்,  நல்ல பெயர் எடுக்க நமக்கு உதவும் .

JUDICIOUS   and  JUDICIAL

மேலே காணும் இவ்விரு சொற்களும் ஒரே பொருள் தருவன என்பதாகத்  தோன்றும்; கணிசமான நபர்கள் அவ்வாறே  எண்ணி, ஒன்றுக்கு பதில் மற்றதை உபயோகித்து, மொழி தேர்ச்சி பெற்ற பெருமக்களிடம் அவமானப்பட்டு ஹி ஹி ஹீ என்று அசடு வழிய தலைகவிழ்ந்து நிற்பர் அல்லது வந்து வந்து என்று ஏதோ சமாதானம் தேடி பேசமுடியாமல் விழிக்கக்கானலாம். இது போன்ற அவலங்கள் அவரவர் கவனக்குறைவால் தோன்றுபவையே... 

JUDICIOUS     என்ற  சொல் "சாதுர்யமாக" அல்லது "வெகு நுணுக்கமாக" புரிந்து கொண்டு நடந்துகொள்வதைக்குறிக்கும் .

JUDICIAL    என்ற சொல் " சட்டத்தின் நிர்ணயப்படி " அல்லது "சட்ட கோட்பாட்டின் படி" என்று உணர்த்தும்.  பின் வரும் வாசகத்தை கவனமாக உள்  வாங்கிக்கொள்ளுங்கள் .

 

“On matters of judicial complexities, our requirements should be judiciously presented”                                                                                                                              அதன் பொருள் என்னவெனில் [judicial complexities ] சட்ட நுணுக்கங்கள் மிக்க ஒரு பிரச்சினையில் , நமது தேவைகளை  [judicious ஆக]  சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டும்

SUPERFICIAL  and  SUPERFLUOUS

'SUPERFICIAL' என்ற சொல்,  மேலோட்டமாகஅல்லதுவெளிப்புறப்பரப்பில்என்று பொருள் தரும் .  ஆனால், 'SUPERFLUOUS'  என்பதையும், பலரும் மேலோட்டமாக என்றே நினைத்துக்கொண்டு superficial என்ற சொல்லுக்கு பதில், superflous என்றே உபயோகிக்கின்றனர். 

 ஆனால் superfluous என்பதன் உண்மையான பொருள்,-தேவை இல்லாத அல்லது அளவுக்கு அதிகமாக என எடுத்துரைக்க மட்டும் தான்.

 மேலும் SUPERFLUOUS என்ற சொல், SUPERFLOO என்றே உச்சரிக்கப்பட வேண்டும்.

பொருள் உணராமல் பேசுவது மற்றும் எழுதுவது ஒருவரின் அடிப்படை திறமை  மற்றும் தகுதி இரண்டையும் குறைத்து மதிப்பீ டு செய்ய வழி . வகுக்கும் .

வளரும்

அன்பன் ராமன்

Saturday, April 12, 2025

CONFIDENCE BUILDING- 2

 CONFIDENCE BUILDING- 2

What has gone wrong? The answer is --nothing went right along the course of this form of education. 

What is the remedy?

The foremost requirement for anyone to improve self is to ‘concede’ that precious little is known. [Tall scores are not true pointers of ‘comprehension’]. Any improvement, of self needs to identify all domains that should be refurbished in right earnest.

It could be your professional  domain WHERE ‘UPDATING’ MUST BE  carried out periodically, without  taking a ‘relaxed stand ‘ that I graduated just three months ago.

Please remember that the syllabi prescribed in most plans are not vibrantly updated and they generally cater to essential basics. So, to be among the real good contenders, one has to make personal efforts of ‘knowledge acquisition’ at least in specific domains of your job interest.

There is a basic defect among job hunters in presuming that your job providers graduated several years ago and that they may not be updated. Please keep in mind that they being themselves in the industry, the senior bosses are professionally updated in application of work strategies while graduates know only theory and not its true application.

They would easily peg your functional defects. So, updating for job is to be alert about functional upkeep in application of technology and not in scoring marks by repetition of set phrases defending a theory.

The second component that deserves attention is our ‘ability to communicate’.  It calls for neat flawless expression of ideas in minimum words organized to present the idea.

Too long and mundane expressions like ‘not only but also’ fail to evoke respect among senior professionals who look for polite and well-mannered disposition. These niceties should come into play as a natural exposition of any idea.

Remember that you had liberally failed to gather the best strategies as a learner. Now you have to catch up with time, lest should settle for far lower compensations, unless ready to take colossal efforts to strengthen your profile by communication.

Realities of life are always harsh. Soft pedaling never helps. Keep in mind – nothing succeeds like success. Success can be achieved by genuine toil. 

Confidence-building begins with the confidence that ‘I will strive my best to build it’. Confidence is a product of assured ability to handle situations. Therefore, it is the mind that has to stay updated and alert to co-ordinate all relevant determinants and evolve the best-fit approach to overcome any hurdle. Mind to be cool requires being thoroughly organized. These are well with in one’s reach.

Prof. K. Raman

 

Friday, April 11, 2025

IS IT A MEAN ITEM? ASS / DONKEY -2

 IS IT A MEAN   ITEM?  ASS / DONKEY   -2

In response to the previous posting on the same topic,  Prof.  Dr  K.Venkatraman had opined that  Ass is the wild version and that donkey  is the domesticated version. The seeming cousins- Donkey, Horse and the Zebra are distinct by attitude

Horse can be quickly trained for cart-pulling, racing and as quick messenger carrying letters or items over rough hilly terrains tirelessly every day.  That is why humans choose to avail of horse for its swiftness, agility and heavy-duty services. Horse is both intelligent and harsh; can read too much and can violently react with uncontaminated contempt.

Being very intelligent, horses can thwart human efforts to perpetually subjugate them;  that is why,   the masters shield the animal’s lateral vision by a bridle and permit only the view of the immediate few feet ahead for the animal to see and run. Seeing certain specific landmarks, the cart-pulling animal knows the vicinity of its home and can simply drag the cart homeward with all the commuters. Horse owners know this too well and take the cart through some other path to safely off-load the commuters. As a young boy of 10-12 years, I have learnt of these horse habits from a horse trainer cum master who had his horse-cart for livelihood.

Let us recall how RK. Narayan –the famous author has critically reviewed Donkey’s routine.

He says “Donkey identifies the abandoned old homes collapsed , left with short stretches of walls [ captivatingly named kuttichuvar = wall remnant ]  and always stands parallel to the mud wall in the mid noon, sheepishly watching his own shadow with neck lowered to the floor.

"Even if two of them stand they stand parallel but facing opposite directions”. [An observation par excellence –I should endorse]. When, these donkeys leave the place? or what they eat?-- are items requiring keener study. They may drag posters stuck to walls and devour them. Occasionally they graze the blades of fresh grass. Soiled paper is a delicacy for asses/donkeys.  They avoid turbid waters to drink and prefer clear water for drinking.

While Cows, bulls, bullock are tied by their neck, horses and donkeys are held by long ropes tied to the ankle and are not neck-tied. Massive elephants are also chained in the legs.

Among the domesticated animals, Donkeys are let free and never fettered; at best the fore-legs are tied together to contain the animal from running. It can delightedly hop and it does.  If disturbed, donkeys can run quite fast even as they bray in delight or despair.

Quite a few things put we humans in the light of shame, considering the donkey’s  strict adherence to duty, with no commitment logical or legal with no pay or perks from the master. A donkey never misses his or her schedule even with the obligatory maternity round the corner.

Despite freedom to move off they faithfully visit the thankless master’s place by the morning to carry the day’s linen for washing heaped in bundles on their backs. At the destination, they wait at that spot where the master /mistress wash these clothes. They don’t rid themselves of these bundles, till the master does it. After off-loading linen bundle, they move off as donkeys are used only to transport dirty linen. By sheer instinct they take to the routine on a daily basis.

The donkey is a very loyal animal with no demand for wages, food or leave; but a very obedient creature. Yet, anger in people tempts them to call anyone a donkey, though the animal is not guilty of any misdeed. Humans are highly impulsive in choosing to call people, names. In our hurry and zeal to accuse someone we pick animal names with utter disregard to their utility to us.  Thankless are the humans and shamelessly so.

Prof. K.Raman

Garcinia mangostana

  Garcinia mangostana [Mangostan fruit] Purple mangusteen  Like Avocado, Mangostan too enjoys patronage by consumers across India. The fr...