Friday, September 30, 2022

வாழ்வினிலே ஒரு நாள்

                                                          வாழ்வினிலே ஒரு நாள்

இது என்ன கவிஞனின் பாடல் தலைப்பா அன்றி அரசு ஊழியனின் அன்றாட  

உழலலா , அல்லதுபோராட்டமே  வாழ்க்கை என அமைந்தவர்களின் துயர் சரிதையா?

 கிடைத்த 500/-ரூபாய் ஊதியத்தில் , ஊதியது 40-, [ஆம் பீடிக்குத்தான்], வாடகை 200/- அம்மா கையில் 250/- மிச்சம் 10/- என்று சிகரெட் அட்டையின் பின் புறத்தில் கணக்கு எழுதியவன் அய்யய்யோ முதலாளியின் கடன் 20/-க்கே காசு பத்தாதே என்று வாடினான் குபேரன் . [அவனுக்கு தெரியாது ஆண்டி லேசுப்பட்டவன் அல்லன் , 20/- பிடித்துக்கொண்டு தான் மீதி 480/- , அதுவும் எப்படி -குபேரனின் தாயிடம் தான் 10 தேதி வாக்கில் தருவான்].

விதியை ப்பாருங்கள் குபேரன் ஆண்டியிடம் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் நிலையில் இருக்கும் ஏழை சிறுவன். வயது 12.] தாய்-- தனம் வீட்டு வேலை செய்து உயிரைக்காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் வாழ்பவள். மிகுந்த கஷ்ட ஜீவனம். இந்நிலையில் ஆண்டியிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி மகன் குபேரனுக்கு ஒரு வேலையை பிடித்துக்கொடுத்திருக்கிறாள். குபேரனுக்கு படிப்பில் நாட்டம் குறைவு, ஆனால் கணக்கு அவனுக்கு எளிதான பாடம்.

விதி யாரை விட்டது, அவனுக்கு படிப்பைத்தொடரமுடியாத வறுமை. அரசாங்க சலுகைகளை பெற்று படிப்பை த்தொடரலாம் என்றால், ஆங்காங்கே கையூட்டு இல்லாமல் எவனும் கையெழித்திடமாட்டாத பரந்த உள்ளம் கொண்ட மனிதர்கள்.

வேறு வழியில்லை மளிகைக்கடை தான் இது போன்ற சிறார்களுக்கு புகலிடம்.. என்ன பெரிய்ய புகலிடம்? காலை 11 மணிக்கு 1 டீ , மாலை 6 மணிக்கு 1 டீ , வேறு ஒன்றும் தரமாட்டார் முதலாளி   -ஆண்டி எனும் செல்வந்தர் .    குபேரன் ஆண்டியிடம் கை ஏந்தி நிற்கும் ஊழியன்.. ஆண்டியின் அதிகாரம் தூள் பறக்கும். ஏலே அங்க என்னாலே செய்யுத யாவாரத்தப்பாரு என்ற பழக்கத்தின் காரணமாக விரட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டு போனில் பருப்புவிலை ஏறப்போகுதாமில்லா என்று தகவல் சேகரித்துக்கொண்டு முக்கியமான சரக்கை அமைதியாக பதுக்குவது தனது  தலையாய கடமை. என 'உழைப்பை' நல்கும் மனிதன்.  "யாவாரத்தப்பாரு” என்று குரல் கொடுத்தால்- ‘நான் பேசுவதைக்கேட்காதே’ என்று மறைமுக பொருள்.

குபேரன் ஏழையே அன்றி திருட்டு குணம் இல்லாதவன், சிறுவன் என்பதால் ., ஆண்டியின்  பேச்சில் ஏதோ உள்ளார்ந்த நகைச்சுவை இருப்பதாக உணர்வான் போலும், அவ்வப்போது கீழே குனிந்து சிரிப்பை அடக்கி கொள்வான் [அதாவது அச்சு வெல்லத்தை எலி இழுத்துக்கொண்டு  இழுத்துக்கொண்டு ஓடுகிறது என்பதை கவனிக்காமல்], யாவாரத்தப்பாரு” என்று கடமையாக கத்திக் கொண்டிருக்கும்  ஆண்டி நிச்சயம் நகைச்சுவை வழங்கிக்கொண்டிருப்பதாக குபேரனுக்கு மனதில் தோன்றும்.

இந்த மனிதன் தூங்கவே மாட்டார் போலிருக்கிறதே என்று குபேரன் நினைப்பதுண்டு . இரவு 10.00 மணி வரை கடை,     கடையை ப்பூட்டிய பின் பூட்டை இழு இழு என்று இழுத்து திருப்தியடையும் போது 10.15 ஆகிவிடும். காலைல நேரத்துலயே வந்திரு குபேரா என்று சொல்லி அவர் அகன்ற பின் தான் குபேரனுக்கு வீட்டை நினைக்க முடியும். உடல் அசதியில் சாப்பாடு வேண்டாம் போல தோன்றும்; அம்மா விடமாட்டாள் , அவளுக்காக 4 கவளம் விழுங்கி விட்டு படுத்தால் 5.00 மணி வரை அயர்ந்து தூங்குவான். மீண்டும் ஒவ்வொரு நாளும் யாவாரத்த ப்பாரு என்ற ஒரே வசனம், டீ காலை -11, மாலை 6.00 , இடையில் காற்று அல்லது பொட்டுக்கடலை முதலாளிக்கு த்தெரியாமல் [எலியின் வேட்டை முதலாளிக்கு அப்பாற்பட்டது இதைத்தடுக்க ஆண்டிஅல்ல ஆண்டவனே நினைத்தால் தான் உண்டு] அத்தனை கட்டுப்பாடுகளும் குபேரனுக்குத்தான் , எலிக்கு அல்ல , எலிக்கு போனது போகத்தான் 'யாவாரத்துக்கு', எலி ATM ல் திருடும் இந்தக்கால  இனத்தவர்கள் போன்றது, , 1 மாதம் போன பின் தான் தெரியும் எவ்வளவு போயிருக்கிறது என்று. எல்லா ஆடிட்டிங்கும் ஆண்டியே தான் , 2 கிலோ வெல்லத்தை தின்னுபுட்டு என்னலே நிக்குத என்று ஆண்டி கொந்தளிப்பார். பாவம் குபேரன் உண்மையைப்பேசினால் வேலை போனாலும் போய் விடும்  [நாம் என்ன எலியா இரவு பகல் பசியின்றி தின்று தீர்க்க] என்று தன் நிலை உணர்ந்து அமைதி காப்பான்.                 

                  ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதை மாற்றி   ஊருக்கு இளைத்தவன் மளிகைக்கடை குபேரன் என்று வைத்து விடலாம் , அவ்வளவு ஏச்சும் பேச்சும் குபேரனுக்கு.            

வயிறு வளர்ப்பது அவ்வளவு எளிதல்ல என்பது குபேரனுக்கு தெரியும், அவனை விட ஆண்டிக்கு சிறப்பாக தெரியும்; எனவே ஆண்டியின் மமதைக்கு அடி பணிந்த குபேரன் என்பதே உண்மை. கடும் உழைப்பில் விளைந்த உடலுடன் குபேரன் ஆண்டியின் சேவகனாக இந்த 4 ஆண்டுகளில் விளைந்து நிற்கிறான்.

ஆண்டிக்கு பணம் குவிந்தது, மனமோ சிறுத்து கருத்து நோய்வாய்ப்பட்டு கேவல நிலையில் இருக்கிறது. இப்போதெல்லாம் வங்கியில் பணம் செலுத்தும் பணியும் குபேரன் தலையில். 5 காசுக்கு க்கூட  குந்தகம் இல்லாத நேர்மையாளனாய் -வாலிபன் குபேரன் கடையையும் கவனித்துக்கொள்ள , ஆண்டி பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் தேடுகிற சராசரி மனிதன்.

குபேரன் சம்பளம் 650/- நேர்மையில் இம்மியும் குறையாத குபேரன்.. இனியும் மாற மாட்டான். காலை 10.00 மணிக்கு ஆண்டி பருப்பு மூட்டைகளை பதுக்க இடம் தேடி அலைகிறான். எங்கும் சரியான பதில் இல்லை. சோர்ந்து உட்கார்ந்தவனிடம் ,முதலாளி ஒரு 1000/- ரூவா கடன் தாங்க, மாசா மாசம் சம்பள த்துல பிடிச்சுக்குங்க என்ற குபேரனிடம்,   போடா "யாவரத்தப்பாரு " என்று கர்ஜிக்க,  குபேரன் மனம் நொந்து தாயாரை எந்த டாக்டரிடம் கூட்டி செல்வது என்ற கவலையில் உறைந்தான்.

ஆண்டிக்கு ,  12. 30 மணிக்கு   வீட்டிலிருந்து போன் " வாங்க நல்ல கோழி மசாலா சுட சுட சாப்பிட்டிட்டு போங்க என்ற மனைவியின் அழைப்பு. கோழியின் ஆசையில் கீழே இறங்கிய ஆண்டி , “ஆங்” என்று வாயிற் படியில் உக்கார்ந்து நெஞ்சு வலிக்குது என்றான். எதிர் வரிசை டாக்டர் சுகவனம் ஓடி வந்து பார்த்து விட்டு  1 வாரம் முழு ரெஸ்ட் ; ரோஸ்ட், நெய், வறுவல், இதெல்லாம் மறந்துடுங்க என்று காரில் வீட்டில் விட்டு விட்டு போய்விட்டார்.                       

டைனிங் டேபிளி ல் இருந்த செத்த கோழி ஆண்டியை பார்த்து சிரித்தது. .

இரவு கடையைப்பூட்டி சாவியைக்கொண்டு வந்த குபேரனிடம், ஏய் ஒரு பத்து நாளுக்கு கடையை பாத்துக்க என்ற ஆண்டியை--- கை  கூப்பி குபேரன் சொன்னான் "இல்லேங்க, நான் கடையை திறக்க மாட்டேன்,. ஒரு 1000 /- ரூவாய்க்கு யோக்கியதை இல்லாத நான் உங்க சொத்தை பாத்துக்கிறதா? முடியாதுங்க. நான் மூட்டை தூக்கி பிழைச்சுக்குவேன் நீங்க உடம்ப நல்ல பாத்துக்குங்க -இந்தாங்க 4217/- ரூவா . இப்ப கடை பூட்டுற வரை யாவாரம் ஆன  தொகை, 

இதென்னடா சாக்கு மூட்டை .?  அய்யா, வித்தது போக 61/2 கிலோ வெல்லம் இருக்குதுங்க. கடையில எலி நடமாட்டம் அதிகம் ; அதுனால கொண்டாந்துட்டேன் , இல்லைனா நான் தூக்கிட்டுப்போய்ட்டேன் நெனைக்க நேரும் . அந்தபொல்லாப்பு எனக்கு வேணாங்க அய்யா.  நான் வரேன் என்று முதலாளிக்கும், அவர்  மனைவிக்கும் கும்பிடு போட்டு விட்டு  தன்மானத்துடன் வெளியேறினான்.

பணம் படைத்திருந்தாலும் இவன் ஆண்டி  ஏழ்மையிலும் அவன் குபேரன்

பேரா . ராமன்

Thursday, September 29, 2022

BALD BUT BOLD

                                                BALD BUT BOLD

One Mr. McDonald from England came to India looking for some computer technocrats who would undertake providing solutions to  problems in computing that could be solved ‘on line’ on a contractual basis for 3 years. He landed in Bangalore, and after exhaustive assessment, he chose one M/S SRIPRIYA Software solutions; they gave good solutions in quick time for problems presented by Mr. McDonald and their bosses were happy at the outcome and permitted their representative another week’s stay and to visit Tamil Nadu and Kerala FOR A FIRST HAND Elucidation by physical visit to select destinations. Mr. McDonald sought help from Mr. Sripaadha Rao, the boss of M/S SRIPRIYA Software solutions, to sponsor local guides to help his proposed trip. The requirement was computer-skill and familiarity of Tamil and Malayalam while answering questions of Mr. McDonald. What happened thereafter was history -a hysteric one by the sheer ‘free for all traits of SARAVANAN and SUGEESH sponsored for the job. All further reporting of mine are pronunciation -based and all spellings employed are purpose-oriented though in violation of work-book stipulations.

7.00 AM BANGALORE CITY STATION 

SARAVANAN : GUD MAANING SAAR, McDonald.: NODS HEAD  SUGEESH:GUD mourning Sur. McDonald: Whom do u mourn?

SUGEESH: TO U. Angry McDonald fumes AND THINKS SARAVANAN is far more decent, little knowing of Saravanan’s tongue-twisters.

Mac: What time is the train to Chennai ? SARA: TO Sennai 1.00 ‘o clock saar

Why shud we stand here? -Mac. Sara : Train nouvvu but to sennai goes 1.00 ‘oclock. Mac: U don’t understand my question. Sara ; all kostin v un derstand, butt, speek englisu not eeci.

Why Mr. Rao put u on to me? Aal odhurs very bad; only kannadam or indhi speak. Sugeesu and I yi englis guddu.

Ma : I am afraid, how we get on ? Sara: don’t afraidu,  we solve proplem ;

Mac My problem is u; No saar we are soloosun peepl, We speak Englishu, Thamilu, he Englisu Mayalam; but you only Engleesu.

To Sugeesh,Mac:Why you don’t speak?

Sugeesh laughs sheepishly. Sugeesh: I speak patche misteik aavu adhu kondu some Pedi -fear, fear.  Mac: What is patche? Sara; patche is green

 Sugesh: patche is But, Oh is it Indian English? SUGESH: YES, MALAYAALAM. Mac: So in MALAYSIA, too Malayalam is the language. Sugesh in Malaysia, plendy of malayalees, so there also Malayaalam speak.

1.30 pm -Chennai

SARAVAN: SAAR THIS Bugaari ottal is the best ENVY ottel in sennai.

Mac: why shud we envy? Sara: saar only ENVY is good, sikkan, muttaan, fissu, boanlus nice.

Mac: What spine less? Sara:Yes saar all spinu, mullu, neatly cleaned , gud tastu. For three daysu you get the smell.

Mac: What smell? Sara: what you eat, that smell. Mac is worried that these two people smell more than he expected. Why don’t you speak -S ugesh? Sugesh: Speak? Kerala I speak.

A visit to Mahabalipuram was a grand relief to Mac, thanks to a guide who spoke genuine English. [To him Saravanan: neenga englis meediyamaanne?. He: 3rd fail in thamil medium; later moving with tourists, I speak 7 languages -3 foreign, 4 Indian Till then Saravanan was of the opinion that only Computer technocrats know languages.  Ironically they use ‘Monosyllables and are horrible on matters of spelling / grammar.

Sara: Saar in the evening, you try pachchi/ ponda with kaafi. They are not suvit but karam items befoar evening kaafi. In vada indhiya you will get only tee/ sappaththi.[Now Sugeesh laughs at Saravana’s English.]After Thanjavoor and Rameswaram, they went to Trivandrum.

By 9.30 AM, SUGEESH suggested a visit to ‘SOO’. Mac: What -soo?  Yes , animals, snakes, birds, elephants and mungees are there. Mac guessed ‘Zoo’.

In the evening they visited Padmanaba swami temple. SUGEES: Sur, foeriners need Devasam board’s PERMISHUN FOR tembl endry; I  will get it , my chettan is the Ofiser there. He went into the office.

Mac asked ‘What is Devasam board” Sarava: Devasam is ‘thidhi’ Mac :What ‘thidhi’?

Sarava: ‘thidhi’ is giving food to dead father , mother or anybody. How the dead wud take food?’ Sara: yes, they will take ; come like crow. What-- CROW? Yes, so saying he noticed a crow feeding on rice ball on the wall across the road. See, see thidhi food to crow. Mac saw it in disbelief. Another crow landed upon call, for another offering. Sara said another dead father eats food.

With permission of Devasam , they went into permitted zones. Mac realized there must be something deep about this culture, though Sara and Sugeesh said many things   not clear to him.

On return to Bngalore Mac said to Sripadha rao, “you need to keep English’ speaking persons in your institution”. He flew back to England carrying memories of howlers in English and was murmuring ‘englisu’

Prof. K. Raman

 

Wednesday, September 28, 2022

தமிழ் வினாத்தாள் - I

 

                                    தமிழ்  வினாத்தாள் -I

           பாடப்பகுதி:              கழுகு புராணம்

  அனைத்தும் தன் மதிப்பீட்டு [self assessment]  வகையின. 30 minutes

பின் வரும் வினாக்களில் யார், எங்கே, எப்பொழுது, ஏன் என்பன உள்ளிட்ட வகையில் தங்களின் விடைகள் அமைதல் வேண்டும் .

 

                    இடஞ்சுட்டி பொருள் விளக்குக

 

1. வா டீ குடிக்க போகலாம்

2 'நோக்கு கண் நன்னா தானே இருக்கு?"

3 'நீங்களா எதையாவது சொன்னா  எப்படி?"

4 ‘நான் அப்புறமா வரேன்'

5 'இதுல அட்ரஸ் வேற'

6 'இப்ப சுப்பிரமணி சந்துல இருக்காரு'

7 'உனக்கு கேக்கவே தெரியல'

8 'இப்புறத்து நோக்கு'

9 '65 எண்ணம் இரிக்கும்'

10 'Thank you '.

 

                                **********************************

 

 

 

Tuesday, September 27, 2022

குருவாயூரில் பறவைக்கரசு - VI

                         குருவாயூரில் பறவைக்கரசு   - VI

லேசருக்கு தூக்கம் கண்ணில் இறங்க மறுத்தது. நைசா தன்னையும் 'மாமி' என்று சொல்லிவிட்டாளே என்று குமைச்சல். அவளின் மனசாட்சி சொன்னது " நீ ஏன் தேவை இல்லாமல் அவளை இரண்டொருமுறை 'மாமி மாமி' என்று நீ ஏதோ சின்னவள் மாதிரி சொல்லிஅவளை இந்த நிலைக்கு தள்ளி விட்டு இப்போது புலம்பி என்ன? ஒன்று தெரிந்து கொள் -ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், காஞ்சீபுரம் மற்றும் தெற்கத்தி மாமிகள் உங்களை எளிதாக புரட்டிப்போட்டு விடுவார்கள். அந்த அம்புஜம் எவ்வளவு எளிதாக 'உனக்கும் வயசு கம்மி இல்லடி  என்று செல்லமாக கன்னத்தில் அறைந்துவிட்டாள் பார் . அது தான் ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொல்லிருக்கு என்று அவளுக்கு Moral class நடத்தியது மனம். .லேசரும், டெல்லியும் லௌகீக மாமிகளிடம் செல்லுபடி ஆகாது, வலிக்காம உலக்கையால இடிப்பாங்க உள்ளூர ரணம் வந்துரும். இவ்வளவும் தனக்குத்தானே உணர்ந்து புரிந்து  கொண்டாள், அப்படியே உறங்கி விட்டாள்; 

மணி 2.00 வேதாந்தம் குளித்துவிட்டு, வித்யாவை உலுக்கி எழுப்பி, குளி என்றான், உடனே பல் துலக்கி குளித்து, புடவையில் லேசர் . சும்மா சொல்லக்கூடாது லேசருக்கு புடவை அற்புதமாக பொருந்தியது. புடவையின் வசீகரம் அதை அணியும் நேர்த்தியில் இருக்கிறது என்று உணர்த்தும் பெண்களில் வித்யா தனித்துவம் உடையவள் எனில் மிகை அல்ல. வித்யா அசப்பில் ஹேமமாலினி என்பது சற்று குறைவு.கிட்டத்தட்ட ஹேமமாலினியே தான். ஹேமமாலினி சாரி,  வித்யா  வெளியில் வந்ததும்  அம்புஜம் ஓடி வந்து ஏ உனக்கு புடவை ரொம்ப நன்னா இருக்கு என்று திருஷ்டி கழிப்பது போல் முகத்துக்கு நேரே கைகளைக்காட்டி , விரல்களை மடக்கி கன்னத்தில் வைத்து பட பட பட என்று விரல் முறித்தாள். வித்யாவுக்கு புரிந்தது அம்புஜம் வன்மம் இல்லாதவள், 

வம்பிழுத்தால்  வார்த்தையாலேயே  தொலைத்துவிடுவாள்.இப்படிஎண்ணிக்கொண்டே வந்தவளுக்கு இப்போது கோயில் கியூவில் இருக்கிறோம் என்று புரிந்தது .நிர்மால்ய தரிசனம் முடிந்து வந்தால் இன்னும் இருள் விலகவில்லை. லேசான தூறல் வேறு

கழுகுகளுக்கு காபி நினைவுக்கு வந்தது. வேதாந்தம் சொன்னான்- இது என்ன தமிழ் நாடா கூட்டம் வருவதை பொறுத்து காபி கடை திறக்க. அதெல்லாம் நம்மூர்ல தான் ராத்திரி 3.00 க்கு கூட BUS STAND ல காபி, டீ    கிடைக்கும். வேற எல்லா ஊரும் சோம்பேறிகள். 6..00 மணிக்கு கொறஞ்சு திறக்கவே மாட்டான். கொஞ்ச நேரம் தூங்கிட்டு வருவோம் வேற வழியில்லை, முனகிக்கொண்டே ரூமில் வந்து மீண்டும் தூக்கம்.   பெரிய கழுகுக்கு காபி குடைச்சல் 5.30 ஆகிறதே என்று ஆவலுடன் கீழே இறங்கி, INDIA COFFEE HOUSE இல் எட்டிப்பார்த்தான் ஒரே இருட்டு. காப்பியாவது பீப்பியாவது என்று முகம் சோர்ந்து திரும்பினான். 

வராண்டா வில் அமர்ந்து குருவிகளின் கீச்கீச் கீச் குரலை ரசித்தான். மணி 6.10 மெல்ல இறங்கி எட்டிப்பார்க்க, INDIA COFFEE HOUSE திறந்திருந்தது. உயிர் வந்தவனாக ஓடி சூடாக ஒரு காபியை ருசித்தான். அவர்களும் வந்ததும் இன்னொரு ரவுண்டு பாத்துருவோம் என்று எண்ணிக்கொண்டான்.  

6.40க்கு எல்லோரும் கீழே இறங்கி காபி, டீ முடித்து, மீண்டும் ஸ்ரீவேலி பார்க்க புறப்பட்டு போய் அற்புதமான சேவை, சன்னதியிலும்,பிராகாரத்திலும். ராமக்ரிஷ்ணா ஹோட்டலில் புட்டு, கடலை டிபன், காபி  / டீ. 2 நாளில் சர்வர் நன்கு பழகிவிட்டார். தெரிசனம் ஆயோ என்றார். இவர்கள் தலை ஆட்டிக்கொண்டே மத்தியானம் சாப்பாடு என்றதும், 11.00 மணி என்றார். இரவு தான் ரயில் வேறென்ன பார்க்கலாம் என்று பேசிக்கொள்ள சர்வர் 'புன்னத்தூர் கோட்டா கண்டோ’ என்றார். அங்கென்ன என்றனர், ‘ஈ அம்பலத்திண்டே ஆனகளு அவடதன்னே தாமசம் ஒரு 65 எண்ணம் இரிக்கும்,     ‘அதே ஆனகொட்டாரம்’ என்று புரியவைத்தார். அதை மத்தியானம் பார்ப்போம். முதலில் காலையில்  தன்வந்திரி சேவிக்க ஆட்டோவில் நீண்ட பயணம் 45 நிமிடம்.. தன்வந்திரி யில் 10 பேர் தான் கூட்டம். வெண்ணைக்காப்பு சேவை, ரூபங்ஙள் எனும்  [உருவாரம் -கை  கால், வயிறு , கண் , அமிர்த கலசம் என்று எல்லாம் சமர்ப்பித்து] வேண்டுதல் வைத்து , உடல் உபாதைகளைப்போக்கு என்று வேண்டி, நிறைவான சேவைக்குப்பின்  மீண்டும் ஆட்டோவில் 40 நிமிட பயணம் , வழியில் பச்சைப் பசேல் இளநீர் வயிறு முட்ட பருகி ஏவ் என்று ஏப்பம் விட்டு குருவாயூரில் இறங்கும் போது மணி 11.40. 

ராமக்ரிஷ்ணா ஹோட்டலில் சாப்பாடு.12.45க்கு அம்புஜத்துக்கு இந்த சாப்பாடு பரவாயில்லை என தோன்றியது. சாம்பார் சாதம் ஆயிற்று; ரசம்எங்கே? வழக்கமான கிண்ணங்களைக்காணோம். இருந்த ஒரு கிண்ணத்தில் பாயசம். பொறுக்க மாட்டாமல் ரசம், மோர் கிடையாதா ? என்றாள் அம்புஜம். அடுத்த டேபிளில் இருந்த விஸ்வநாதன் [சர்வர்-தமிழர்] இரண்டு ஜக்குகளை   காட்டி இதோ என்றார். இது தீர்த்தம் இல்லையா? என்றாள் அம்புஜம்.  “மாமி அது தூத்தம் இல்லை” என்றார் சர்வர், திறந்து பார்த்தால் ஒன்றில் ரசம் மற்றதில் நீர்க்க , இஞ்சி, கொத்துமல்லி யுடன் மோர் . ஒரு பிடி பிடித்தனர் அம்புஜமும் வித்யாவும். [ஐயங்கார்களுக்கு நாக்கு கொஞ்சம் நீளம் தான் -சாப்பாட்டிற்கும் / பேச்சுக்கும்]

மதியம் சாப்பிட்டு ஓய்வுக்குப்பின் யானைக்கொட்டாரம் பார்க்க கிளம்பியாயிற்று. சிறுவன் முதல் கிழவன் வரை என வெவ்வேறு வயது, சைஸ் களில் யானைகள் இயற்கை சூழலில் சுமார் 63 யானைகள், நல்ல அனுபவம்   

வேதாந்தம் மாலை செஷன் என்று கிளம்பினான். வித்யா அவனை அனுப்பி விட்டு சிறிது கண் மூடி ஓய்வெடுத்தாள்  . சரி காப்பி/ டீ முடித்து மாலை ஸ்ரீவேலி  போகலாம் என்று பிறரை எழுப்பத்தலைப்பட்டாள்  வாய் வரை வந்து விட்ட 'மாமி' யை அடக்கிவிட்டு , ஹலோ என்றாள், வித்யா.  அம்புஜம், வா வா என்றாள் . மீண்டும் ஸ்ரீ வேலி தரிசனம், மனமின்றி வெளியே வந்தனர். இரவுக்கு ராமக்ரிஷ்ணாவில் சப்பாத்தி மற்றும் கேரளத்து SIDE DISH . இரவு 8. 50 . வேதாந்தம் " நீங்க ரயிலுக்கு போங்கோ, நாங்க ரெண்டு பேரும் த்ரிசூர் போரோம்.

மிகுந்த வாஞ்சையுடன் கனத்த மனதுடன் விடை பெற்றனர். கழுகுகள் ரயிலில் தூங்கி விட்டனர். அரை குறை உறக்கத்தில் டிக்கெட் செக்கிங் ஆயிற்று. கண்விழித்தால் நாகர்கோயில் ஜங்ஷன்.டீயுமில்லை காபியுமில்லை. 7.30 மணிக்கு நெல்லை . மணியாச்சியில் நல்ல டிபன் கிடைக்கும் இன்னும் முக்கால் மணியில் என்றனர். வாஞ்சி மணியாச்சியில் அற்புதமான ருசியான சட்டினி சாம்பாருடன்   4 இட்லி 1 வடை, அல்லது  3 பூரி மசால் வகையறா பாக்கெட்  ரூ 25/- ஒருமணி நேரம் நின்று கிளம்பி மதுரை வழியே ஸ்ரீரங்கம் போகும்போது மணி 2. 20 மதியம். 60/- ரூபாய் ஆட்டோக்கு வீடு போக. முன் பின் பார்த்திராத குருவாயூரில் மனம் லயித்துப்போய் மீண்டும் எப்போ போகலாம்? க்ரிஷ்ணனுக்கே வெளிச்சம்.                   

                                       நான் விளக்க வேண்டியது

அது என்ன பறவைக்கரசு? தென் தமிழ் நாட்டில் பக்ஷி ராஜன்' என்னும் வடமொழிப்பெயரை தூய தமிழில் பறவைக்கு அரசு [பறவைக்கரசு] = கிருஷ்ண பருந்து, [கருடன் [கழுகு ] என்பர். நம்ம கழுகு குருவாயூரில் உலவும் காட்சிகளை களப்படுத்த குருவாயூரில் பறவைக்கரசு என்ற பெயரில் எழுதலாம் என்று தோன்றியது. அன்பர்கள் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இனிமேலும் கழுகு கழுகு என்று சொல்லிக்கொண்டிருந்தால்  வண்டி ஓடாது.  பார்ப்போம்  குருவாயூரப்பன் வழி காட்டுவான்.             

                                           முற்றும்           நன்றி.  பேரா. ராமன்       

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...