Sunday, April 7, 2024

A hesitancy to biology- why?

 A hesitancy to biology- why?

பயாலஜி என்றால் ஒரு தயக்கம் -ஏன் ?

பலரும் எஞ்சினீரிங் / மருத்துவம் , பின்னர் பல் வைத்தியம் , பிஸியோதெரபி , கம்பியூட்டர் சயன்ஸ் , IT என்ற இன்பர்மேஷன்  டெக்னாலஜி,, காமர்ஸ்  , ஆடிட்டிங் என்று +2க்குப்பின் விருப்பக்கல்வியாக பட்டியலிடுவர் , மறந்தும் கூட மருந்துக்கும் கூட பயாலஜி என்ற திசையைக்கூட பார்க்க தயங்கு கிறார்கள். .ஏனைய கல்வித்திட்டங்களை புரிந்துகொண்டதைப்போலவும் , இந்த பாயாலஜியில் அவ்வளவு நாட்டமில்லை என்றும் வீராப்பு பேசுவார்கள். உள்ளூர அவர்களின் எண்ணம் பயாலஜியில் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்ற ஒரு கற்பனை நிலைப்பாடு. 

உங்கள் நிலைப்பாடே தவறு என்று சரியாக புரிந்து கொள்ள ஒரே ஒரு அடிப்படை கேள்வி. 

பயலாஜிக்கல் ரியாக்ஷன்கள் ஏதேனும் ஒன்றையாவது நம்மால் நிறுத்தவோ,திருத்தி அமைக்கவோ முடியுமா? முடியாது- ஏன்? நாம் அறிந்த கெமிஸ்ட்ரி ஒருவகை விளக்கம் தந்தாலும் , உயிரினங்கள் உண்மையிலேயே விதவிதமான செயல்களை அவ்வப்போது மாற்றுப்பாதைகள் [alternative pathways] வாயிலாக வெவ்வேறு அசாதாரண சூழல்களை கடந்து செல்லும் ஆற்றல் படைத்தவை. இது போன்ற செயல் திறன்களை அடிப்படை பயாலஜி கல்வித்திட்டத்தில்பெருமளவில்  போதிப்பதில்லை . எனவே நாம் தவளையின் படமும் குவளை மலரின் குறுக்குவெட்டுத்தோற்றமும் தான் பயாலஜி போலும் என்று மிகக்குறுகிய எல்லைக்குள்பயாலஜியை  அடைந்துவிட்டோம்  . . 

எதிர்காலத்தில் பயோடெக் வகை கல்வியில் நுழையும் தகுதியை அடைய சிறப்பாக வளர்ச்சி முறைமைகள் [developmental regulations] மாலிகுலார் கட்டுப்பாடுகள்  [molecular controls, [physiological modulations ]செயலியல் ஏற்ற இறக்கங்கள் உள்ளடக்கிய அஸ்திவார க்கல்வி, =2 / கல்லூரி முதல் ஆண்டு பாடத்திட்டங்களில் வந்தாலும் வியப்பில்லை  

தாவர / விலங்கு வகை செல் செயல்பாடுகள் இப்படித்தான் பயணிக்கும் என்று நாமாக தீர்மானிக்க இயலாது. உட்புற சூழல்/தேவைக்கேற்ப செயல் பாடுகள், குறைந்த எனெர்ஜி செலவில் நிகழ்த்துவது தான் உயிரின அமைப்புகளின் வல்லமை. தாவரங்கள் வெளிவிடும் ஆக்சிஜன் அளவு

சுமார் நாள் ஒன்றுக்கு இருமரங்கள் வெளிவிடும் ஆக்சிஜென் ஒரு நபரின் தேவையை பூர்த்தி செய்கிறது. இதற்கு விலை கொடுத்தால் சுமார் 2000/-ரூபாயை தாண்டும்.. இது போன்ற உயிரின செயல்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளவும் உரிய வகை உயிரினங்களை ஈடுபடுத்தவும் நுணுக்கமான தகவல்களை அளிக்க வல்ல துறைதான் பயாலஜி. இதன் விளைவாக நிகழ்ந்துள்ள மாற்றங்கள் மனிதகுலத்திற்கு பலன் அளித்துவருகிறது. விவரமறிந்தோருக்கு பயாலஜி ஒரு தங்க களஞ்சியம்/ தங்க சுரங்கம்.

சரி எதற்காக பயாலஜி குறித்து ஆதங்கம் கொள்ள வேண்டும் --என்றால், முன்னாட்களைப்போல் அல்லாமல், வரும் காலத்தில் செயல்படுத்தக்கூடிய அறிவார்ந்த தொழில்நுட்பம் சார்ந்து பயாலஜி விரைந்து முன்னேறிக்கொண்டு வருகிறது. இன்றைய பயாலஜி பலர் நினைப்பதைப்போல தவளையும் , குவளையும் அல்ல ;மாறாக பல்வேறு அறிவியல் துறைகளின் ஒருங்கிணைப்புக்களமாக செயல் வடிவம் பெற்றுள்ளது பயாலஜி துறை [field]. இன்னும் நுணுக்கம்,ஆக ஆய்ந்தால் IISc [இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்  சயின்சஸ் ],TIFR எனப்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் ஆகிய நிறுவனங்கள் எப்போதோ [30-40] ஆண்டுகள் முன்னேயே இந்தவகை கல்விமற்றும் ஆராய்ச்சிகளில் இறங்கி உயர்வகை ஆய்வுகளில் புகழ் எய்தியுள்ளனர். 

இது போன்ற உயர் தர பயிற்சி பெற்றோர் இந்தியாவில் மேம்பட்ட ஆய்வு நிறுவங்களிலோ/ மேலை நாடுகளில் புகழ்பெற்ற பல்கலை கழங்களிலோ அல்லது உயர்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலோ மிக நல்ல பதவிகளில் அமர்கிறார்கள். சமீப காலங்களில் தென் தமிழ்நாட்டின் பல்கலைகள் மதுரை, காரைக்குடி, நெல்லை போன்ற வற்றில் முனைவர்பட்டம் பெற்ற பயாலஜி துறைசார்ந்தோர் அமெரிக்க கல்விநிலையங்கள்/ஆராய்ச்சி நிலையங்களில் பணியில் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு வாய்ப்பு இருப்பதையே அறியாமல் அல்லது விரும்பாமல் ஏதாவது ஒரு எஞ்சினீரிங் காலேஜில் எஞ்சினீரிங்/ பயோடெக் சேர்வேன் என்போர் கருத்தில் கொள்க , பயோடெக் கல்வியும் பயிற்சியும் , செயல்பயிற்சி [ப்ராக்டிக்கல் ட்ரெய்னிங்]. முறையில் கற்பிக்க மற்றும் கற்கப்பட வேண்டிய கல்வி முறை. 

புத்தக கோட்பாடுகளை கேள்வி பதில் முறையில் பயின்று தேர்ச்சி பெறலாம்;ஆனால் களப்பணிக்கு வேண்டிய செய்முறை அணுகுமுறைப்பயிற்சி மற்றும் செல்களைக்கையாளும்  , விரைவும் , துல்லியமான பார்வை எனும் OBSERVATION அனுபவமும் தான் வேலை யில் ஈடுபடுத்தவல்ல பயிற்சிகள். மிகவும் தரமான அனலிடிக் கருவிகள், ஒருபொருள் கொண்டுள்ள எடை, தன்மை இவற்றை வினாடியில் பகுத்துச்சொல்லும் ஸ்கேனர் வகை கருவிகள் பயிற்சிகள், மிகத்துல்லியமாக வடிவமைக்கப்படும் வளர் ஊடகங்கள் [GROWTH MEDIA ] தயாரிப்பதில் உள்ள நுணுக்கங்கள் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாத நிறுவனங்களில் பிடெக் பயோடெக் பயில்வது, கிளிஜோதிடம் உட்பட  கிட்டத்தட்ட எந்த நன்மைக்கும் உதவாது. 

இது போன்ற பட்டதாரிகள் சிலர் பயோடெக் போதிக்கும் சில கல்லூரிகளில் ஆசிரியப்பணியில் சேர்ந்து அல்லலுறுவதைப்பார்க்கிறோம். ஏனெனில் BSc பயோடெக் போதிக்க வலுவான பயாலஜி ஞானமும் அடிப்படை செயல் முறைகளான இனம் காணுதல் [identification] ,போற்றிக்காத்தல் [preservation ] செல் தனிமைப்படுத்துதல் [செல் isolation] biochemical assay [பயோகெமிக்கல்சோதனைகள்] போன்ற வை நன்கு தெரிந்தோர் பிறருக்கு பயிற்றுவித்தல் முறையானது, எளிது. இவ்வனைத்துமே எஞ்சினீரிங்போல ஸ்கெட்ச்சிங் [sketching] / formula என்று போதிக்க முடியாது. அந்த வகை பயிற்சி  எதிர்கால வாழ்வுக்கு உதவாது. எனவே வளரும் துறைகள், அணுகுமுறைகள் பற்றி அறிந்தோரிடம் அறிந்து விவாதித்து இளையோர் தங்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் . 

அணுகுமுறைகள் முற்றிலும் வேறு திசை நோக்கி பயணிப்பது என்பதையே இன்னும் புரிந்துகொள்ளாமல் காலம் தாழ்த்துவது நமது வளர்ச்சிக்கு உகந்ததல்ல. பயாலஜிக்காக ஏன் வாதாடுகிறேன் எனில் இப்போது கணித தேர்ச்சி குறைவானவர்கள் கவலைகொள்ள த்தேவை இல்லை.  செயல்முறையில் பயின்று முன்னேற்றம் அடைய இன்றைய பயாலஜி ஒரு நல்ல வாய்ப்பு என்பதே எனது பார்வை. ஆனால் நல்ல நிறுவனங்களில் சேர்ந்து பயிலுங்கள் என்றுஎச்சரிக்கையாக அறிவுறுத்துகிறேன்.

நன்றி

அன்பன் ராமன்

Saturday, April 6, 2024

INTERVIEW ----2

                                                   INTERACTION IN  AN INTERVIEW                             

Basically, interview is a session of interacting with prospective employers / employees. Much is expected on either side by way of ascertaining mutual potentials. Therefore, candidates need to make the best expositions of selves. At no point, protocols of formal addressing can be ignored. Despite being formal, information relevant to the employer must be clearly presented; in doing so ambiguity has no place. Assumptions that the tall scores in examinations and the sheaf of credentials carried would win accolades and jobs are follies in themselves. Employers seek potential rather than academic claims. For them the ability to grasp and interpret an idea is more relevant.  Obviously, the ones who acquit themselves of brain storming capabilities stand appreciation and acceptance; quick witted disposition carries the person through as against those who struggle to impress the employer of their abilities to comprehend. Outspoken but polite in conveying ideas is the best bet to transform opportunities into offer. In corporate houses, Group discussion among peers in an interview is a strategy to study the competitors’ personality. So, every care must be in place to convince the panelists of ‘seriousness, commitment and willingness to go with the team and learn’ on the part of the jobseeker. Showing off would not pay; instead, it may irritate the observers on the panel. Absolute conformity to decency in body language, verbal language and  firm but polite assertions do a world of good. All jobseekers are obliged to know of the goals, protocols and priorities of the firm they wish to make to. Getting armed with the factual details about the firm is a signal of the commitment to the candidate’s approach. All these can be vividly brought out by meticulous interaction. Slipshod appearances, utterances and undue inquisitiveness destroy image and opportunity. 

BE A PICTURE OF CONFIDENCE

In any first interaction, a lot of silent inspection goes on to assess the composure of the aspirant to a position. If the person seems to be nervous, mature panelists allow for ‘cooling down’ time and avoid tormenting him /her for a few minutes. It is done by switching over to the ‘comfort zone’ of the individual for nativity, mother tongue, institutions of study and so on merely to ease off mental pressure. Certainly it helps the candidate in recouping his or her wits to face technical questions. It is important that boys and girls augment interactive skills essential for ‘formal situations’ of selection to higher studies or job. There has to be a systematic effort to keep skills pruned and ready to respond. Many candidates display physical agony [twitching of facial muscles], mental trauma [rapid eye movements/ vague looks], moment a question is flung at. Such signals convince the interviewer that the candidate is not fit to face ground situation. It is rather unfortunate that knowledge stays latent, failing to bring out the talent. Selectors are pragmatic and cannot be sympathetic. Why should a qualified individual long for sympathy, when [s]he can seize the opportunity to reveal merit or calibre? There is no point in glorifying our merits in private conversation, while revealing precious little in a session of discussion.

Confidence is a virtue associated with ‘well organized’ minds.  None can put on looks of confidence.  Critical questioning can prick the bubble of looks. The suggestion is, confidence has to enshrine itself in the knowledge base of the person. Any inadequacy on this facet [which includes skills of communication], impedes the manifestation of authentic confidence. It will not be long before the individual stands exposed. Needless to reiterate that, as a part of learning, one has to augment good skills of presentation- physical and verbal. Together these bestow on the individual ‘authentic confidence’ In a nutshell the organized totality is what goes by the attribute ‘COMPOSURE’ essential for dignified living.                                                   

  

Friday, April 5, 2024

STRATEGIES IN TEACHING

 STRATEGIES IN TEACHING

கற்பிக்கும் உத்திகள்

 இந்த பகுதி முற்றிலும் -ஆசிரியர்கள் தங்களை [அதாவது செயல்களை] கட்டமைப்பது குறித்த சில நுணுக்கங்கள் / அணுகுமுறைகள் குறித்தது எனவே , அடப்போய்யா எனக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் நேரடியாக வித்தையைக்காட்டுங்கள் -யார் உங்களை தடுக்கிறார்கள்? ஆசிரியரில் இரு பெரும் இனங்கள் உண்டு அவை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்றறியப்படுகின்ற்னர்.

ஓட்டுநர் :நேரத்தை ஓட்டுபவர், ஏதாவது வெட்டிப்பேச்சுப்பேசி ஏதேதோ கதைகளை அவிழ்த்துவிட்டு காலத்தை ஓட்டுபவர்கள்; வர வர ஆசிரியர்கள் . மத்தியில் இது போன்ற வெட்டிப்பேச்சு பேசும் கூட்டம் அதிகரித்து வருவது கவலை தருவதாக அமைந்துள்ளது. இவர்கள் தங்களது திறமையின்மையை மூடி மறைக்க , “வெறும் பாடம் பாடம் னு போனா இன்ட்ரஸ்ட் இருக்காது; உலக விஷயங்களைப்பேசி அவர்களை கவருபவன் தான் வெற்றி ஈட்டமுடியும்  என்று ஒரு லேம் லாஜிக் [நொண்டி வாதம்] முன்னெடுப்பார்கள். ஆனால் கள  யதார்த்தம் யாதெனில் ஆகச்சிறந்த ஆசிரியர்கள் நொடிப்பொழுதையும்  வீணாக்காமல்,கிட்டத்தட்ட 98-99% நேரத்தை முற்றாக பாடம்குறித்த விளக்கங்களிலேயே செலவிடுகின்ற்னர். அவர்கள் வகுப்பில் மாணவர்கள் இம்மிகூட கவனம் தவறாமல், வேறு எதையும் செவிமடுக்காமல் அதியற்புதமான கல்வி பயில்கின்றதை எப்படி சாத்தியமாக்குகின்றனர்  இவ்வகை ஆசிரியர்கள் ? இவ்வகை ஆசிரியர்கள் முக்கியமான பாடப்பகுதிகளை சிறப்பாக போதித்து மாணவர்களின் ஏகோபித்த பாராட்டுகளை வெல்கின்றனரே -அவர்கள் ஏன் பாடத்திற்கு தொடர்பில்லாதவற்றை பேசுவதே இல்லை? அவர்கள் வகுப்புகளில் எப்படி ஈர்ப்புதனை நிறுவுகின்றனர்.?                      ஒரே வரியில் எனது பதில்

ஒவ்வொரு ஆசிரியரும் தனக்கு தெரிந்ததை களப்படுத்துகின்றனர் . சிலர் நுணுக்கங்களை சொல்லித்தர பலர் துணுக்குகளை ப்பேசி   -செயல் புரிய=பாடம் நடத்துவோர்  - நடத்துனர் , காலம் கடத்துவோர் ஓட்டுநர் [காலத்தை ஓட்டுநர்] என்பதாக பெயர் பெறுகின்றனர். இவற்றிற்கான முன்னேரேபாடுகள் யாவை என்று பார்க்கலாம் 

ஓட்டுநர் நிலைக்கு எந்த முன்னேற்பாடும் தேவை இல்லை, சூடு சொரணை தன்  மானம் இவற்றை கைவிட்டுவிட்டால் போதும் எளிதில் [காலத்தை] ஓட்டுநர் நிலையை  எய்தலாம்  . அது எனது இலக்கு அல்ல.

நமது முயற்சியும் இலக்கும் -நடத்துனர் நிலையை எட்டுவதே ,எனவே அது குறித்து கவனம் செலுத்துவோம்..

1 . நான் மிகச்சிறந்த ஆசிரியர் என்ற நிலையை அடைவேன் என்ற தீராத வேட்கை கொள்ளுதல்

மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் எப்போதும் ஒரே சிந்தனையில் இயங்குவதைப்போலவே ஆசிரியப்  பணியின் மீது ஆழ்ந்த பற்று ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல --ஏன்? அந்த வெறி கிட்டத்தட்ட வேறுசில வெறிகளுக்கு நிகரானது . ஒரு மிகச்சிறந்த ஆசான் உங்கள் வாழ்வில் இடம்பெற்றிருந்தால் அது உங்கள் மீது மிகப்பெரும் ஆளுமையை செலுத்தி வயப்படுத்தும். அந்தக் கனல் உங்களை வாட்டும் போது , நீங்கள் ஆசிரியப்பணி மீது பிடிப்பும் பீடிப்பும் அடைந்து பந்தயக்குதிரைபோல துடிப்புடன் கிளர்ந்து எழ வெகு விரைவில் ஆளுமை மிக்க ஆசிரியர் என்ற உவகையும் பெருமையும் கொண்டு மாணவரிடத்து நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி கற்பிக்க தொடங்குவீர்கள்.

இந்த இடம் தான் உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். இந்த திருப்புமுனைப் புள்ளியின் தாக்கம் உங்களுக்கு ஒன்றை உணர்த்தும். "நான் கல்லூரியில் அதிகம் பயிலவில்லை போலிருக்கிறதே , கருத்துகளை எளிதாக விளக்க என்ன வழி" என்று சிந்திக்க வைக்கும்.  இப்போது சோர்வடையாதீர்கள் .மாறாக மென்மேலும் படியுங்கள். அனைத்தும் அறிந்த விவரங்கள் தான் எனினும் தெரிந்த நிலையை தாண்டி புரிந்த நிலை நோக்கி உங்கள் மனம் நகர வேண்டும். தெரிந்த தகவலுக்கும் புரிந்த தகவலுக்கும் இடையில் செயல் புரிவது தான் ஆசிரியப்பணி. தெரிந்தது என்பது உங்களுக்கு கிடைத்த அறிமுகம்; புரிந்தது என்பது உங்கள் கையில் வாய்த்த ஆயுதம். தெரிந்ததை வைத்து விளக்க முயல்வதைவிட புரிந்ததை வைத்து விளக்குவது எளிது.  வெறுமனே தெரிந்துகொண்டு ஆசிரியப்பணியில் இறங்கினால் இடர்ப்பாடுகள் அதிகம்.. புரிந்து கொண்டு விளக்கும் ஆசிரியன் வெற்றிகொள்வான் அவ்வகை ஆசிரியர்கள் . தோல்வி காண்பதில்லை .

இவ்விடத்தில் மூன்று நிலைகளை பார்ப்போம் . நாய், குதிரை ,யானை மூன்றையும் மனிதன் கையாள்வதை அறிவோம். இத்தகைய நிலைக்கும் ஆசிரியப்பணிக்கும் நிறைய ஒற்றுமைகளும் நிலைப்பாடுகளும் இருப்பதைப்பார்ப்போம்.. நாய் சிறிய குட்டி நிலையில் வளர்த்து நம்முடனே ஒன்றிக்கலப்பது போன்றது ஆசிரியப்பணி . அடிப்படை பரிச்சயம்   நாய் வளர்ப்பில் உதவிடுகிறது. நன்கு வளர்ந்த நாயை புதிதாக நெருங்கி நம் கட்டுக்குள் வைக்க இயலாது. அது போன்றே திடீரென்று நான் ஆசிரியனாக கட்டமைத்துக்கொள்வேன் என்று கனவு காண வேண்டாம் . நீங்கள் பணி  தொடங்கும் நாள் முதல்  உங்கள் கவனம் நல்லாசிரியர் ஆவது என்ற வேட்கையுடன் இருந்தால் நாய் வளர்ப்பில் அடையும் வெற்றிக்கு இணையான வெற்றி /பெருமை இரண்டையும் அடையலாம். சிறிது ஆரம்பகால தவறுகளுக்குப்பின் தன்னை திருத்திக்கொண்டு மேம்பாடடைய இயலாதா எனில் இயலும். ஆனால் பல மடங்கு உழைப்பை செலுத்தி உங்களின்  பிம்பத்தை த்திருத்திக்கொள்ள .போராட வேண்டியிருக்கும். ஏனெனில் மாணவ சமுதாயம் உங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவில் [நல்ல / கெட்ட] வைத்துப்பார்த்து பழகி அதை புதியமாணவர்களுக்கும் தலையில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கும்.. அதை உடைக்க பெருமளவு செயல் மாற்றம் உங்களிடம் ஏற்பட வேண்டும். அதைத்தான் 'FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION " என்று வழிவழியாக சொல்லப்பட்டு வந்துள்ளது.. முதலில் சிதைந்துவிட்ட பெருமையை மீட்டெடுத்து எதிர் திசையில் பயணிக்க கடும் போராட்டமும் செயல் முனைப்பும் உங்களின் அன்றாட இயல்பாக மாற வேண்டும்.

முயன்றால் முடியாதது உண்டா ? முடியும் ஆனால் சற்றும் தளரா வெறியுடன் இலக்கு நோக்கி நகர பரிபூரண ஈடுபாடு தேவை. இப்படியெல்லாம் வருத்திக்கொண்டிருக்க வேண்டுமா என்றால், முயற்சி தான் திருவினையாக்கும். வெற்றி என்பது போகிறபோக்கில் தட்டிப்பறிக்கும் கனி அல்ல . உங்களின் அனைத்து அறிவுசார் புலன்களும் ஒன்றிக்கலந்தால் அன்றி வெற்றி எளிதன்று. ஆசிரியப்பணியில் வெற்றி என்பது உழைப்பின் மகத்துவம் மட்டுமே . அந்தவகை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் வேறு செயல்களில் கிடைக்குமா ? நான் அறியேன்; ஏனெனில் ஏற்கப்பட்ட ஆசிரியனை ஓட்டுமொத்த மாணவ சமுதாயமும் ஏற்கும். அந்நிலை அடைய மனம் ஒன்றி செயல் படுதல்   அவசியம்  

தொடரும்

அன்பன் ராமன்

Wednesday, April 3, 2024

K S GOPALAKRISHNAN -2

 K S GOPALAKRISHNAN -2

கே எஸ் கோபாலகிருஷ்ணன்-2   

 

5 பாத்தாலும் பாத்தேன் [1000 ரூபாய் -1964] கண்ணதாசன், கே வி மகாதேவன் , பிபி ஸ்ரீனிவாஸ் பி சுசீலா

பிளாட்பாரம் நபராக சாவித்ரி ;இனிமேல் இதுபோன்ற வெகு இயல்பான அனாயாச நடிப்புக்கு யாரை காட்ட முடியும்?. சுசீலா அவர்களை வெகு சிறப்பாக நடைபாதை மொழியின் மணம் மாறாமல் பாட வைத்திருப்பது சிறப்பு.

குறிப்பாக படபடத்து வெட வெட த்து சட சடத்துப்போகுது , பக்கத்துல நீ இருந்தா இன்னா ன்னவோ ஆவுது,  அட ஏதோ ஒண்ணு என்னையும் ஒன்னயும் இப்புடிபுடிச்சு ஆட்டுது  இந்த வார்த்தைகளை சுசீலா அவர்கள் பாடியுள்ளதை சாவித்ரி முகபாவங்காளல் மேலும் மெருகேற்ற ஒரு மாறுபட்ட வகைப்பாடல் . கண்டு கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.google.com/search?q=VIDEO+SONG+PAARTHTHAALUM+PAARTHTHEN+NAAN+ONNAPOLA++VIDEO+ONG+&newwindow=1&sca_esv=435da4ccbf164833&sxsrf=ACQVn08MpBmsH4XJ1Miemeqa  

6 ‘பாவி என்னை மறுபடியும் [என்னதான் முடிவு -1965] பாடல் மாயவனாதன், இசை ஆர் சுதர்சனம் குரல் டி எம் எஸ். குரூர செயல் முறைகள் கொண்ட ஒருவன் மிகவும்வருந்திப்பாடுவதாக அமைந்த பாடல் , படம் நல்ல கதையம்சம் கொண்டது ஆனால் பெரும் வரவேற்பை பெறவில்லை பாடலை கேட்டுகவிதையை  ரசிக்க

https://www.google.com/search?q=ennadhan+mudivu+tamil+moviesong+%27paavi+ennai+video+song+download&newwindow=1&sca_esv=36209707b48417aa&sxsrf=ACQVn0_giR69XOqATqff0r3G23rhiytj_Q maayavanathan r. sudhasanam, t m s

7 காலமிது காலமிது [சித்தி-1966] கண்ணதாசன் , விஸ்வநாதன்  பி.சுசீலா

அதி ஆழ்ந்த பார்வை பெண்கள் நிலை குறித்து கவி அரசரின் விளக்கம் தொகையறாவிலேயே மொத்தக்கருத்தையும்ம் நுழைத்துவிட்ட  வித்தகம் கவியரசரின் திறமை அன்றோ.

வெவ்வேறுநிலைகளை இயல்பாக விளக்கும் கவிதை, தாலாட்டும் இசை அமைப்பு , மனம் ஒன்றவைக்கும் அமைப்பு

கேட்டு மகிழ இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=kaalamidhu+kaalamidhu+video+song+download&newwindow=1&sca_esv=36209707b48417aa&sxsrf=ACQVn09H3ux7wbVqSAi4ZPN_AKQF3P7cSg%3A1711010236757&ei=vPH7Zf

8 ‘எலந்த பயம் [பணமா பாசமா -1968] கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , எல் ஆர் ஈஸ்வரி . ஈஸ்வரியின் சிறப்பு உச்சரிப்பினால் புகழ் எய்திய பாடல். பாடல் பயங்கர வெற்றி ஆனால் பங்கு பெற்ற எவரும் இப்பாடலை பெரிதும் ரசிக்கவில்லை , அனால் இளையோர் கூட்டம் இந்தப்பாடலின் ஈர்ப்பில்  இருந்து மீளஇயலாமல் இருந்த காலம் உண்டு .பாடலுக்கு இணைப்பு https://www.google.com/search?q=elanthapayam+video+song+download&newwindow=1&sca_esv=36209707b48417aa&sxsrf=ACQVn0-g-o6fVlSv3rL46VkYUzH105424A%3A1711011092187&ei=FPX7ZeaLC5S

இது போன்ற பல சமூகப்படங்களையும், சில பக்திப்படைப்புகளையும் தந்துள்ளார் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள். இவர் தனது 86 ம் வயதில் மறைந்தார்.

அன்பன் ராமன்

 

SADHAN –AN ARTISTE -2

SADHAN –AN ARTISTE  -2

சதன் என்ற கலைஞன்-2

5 முத்தமோ மோகமோ [பறக்கும் பாவை 1967 ] கண்ணதாசன் , எம் எஸ் வி,                டி எம் எஸ், LR ஈஸ்வரி

சர்க்கஸ் மிருகங்களுடன் ஆடிப்பாடுவதாக அமைந்த பாடல் பெரும் வெற்றி ஈட்டிய பாடல், திரு சதனின் குரல் பல இடங்களில் பறவை, சிங்கம் போல ஒலிக்கிறதைகேட்கலாம் யானை யின் பிளிறல் உள்ளிட்ட /முயல் மற்றும் பறவைகள் சேர்ந்து பாசுடுவதாக அமைக்கப்பட்ட பாடல் சதன் அவர்களின் பங்களிப்பு அதிகம்

https://www.google.com/search?q=muthamo+mohamo+video+song&oq=muthamo+mohamo+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTIwMjYxajBqNKgCALACAA&sourceid=chrome&ie=UTF-8#fpst

6 அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு [ராமன் எத்தனை ராமனடி-1970 கண்ணதாசன் எம் எஸ் வி,    டி எம் எஸ்

சிவாஜி கணேசன் வெகுளியாக விடலைப்பையன்களுடன் ஆடும் பாடலில் சதன் [குடுமித்தலையுடன்] சிறுவன் போல் ஆடுவதை ப்பார்க்கலாம்

https://www.google.com/search?q=ammadi+ponnukku+thanga+manasu+song&newwindow=1&sca_esv=289933ce561edd87&sxsrf=ACQVn08QPaLk7wmxm_VyghoOD5JY5XOFPQ%3A1710754238499&ei=vgn4

7 கடவுள் அமைத்து வைத்த மேடை [அவள் ஒரு தொடர் கதை -1974] - கண்ணதாசன், எம் எஸ் வி, S P பாலசுப்ரமணியன் [சதன் சாய்பாபா மீசை முருகேஷ்]  இது ஒரு விழாகொண்டாடும் பாடல். விகடகவி பாடுவதாக நாயகன் தன உள்ளக்கிடக்கையை பூடமாக வெளியிடும் பாடல்.. பல வித ஒலிகள், வீணை விமானம், நாதஸ்வரம் தவில் உட்பட குரலில் வெளிப்படுத்தியுள்ளனர் கலைஞர்கள். [மான்கள் -சாய்பாபா], நாதஸ்வரம் -முருகேஷ் குரலில் , பிற- சதன் ]. .மிகவும் நுணுக்கமான கட்டமைப்பு பாடலும் குரல்களும் நேர்த்தியாக இணைந்த ஒரு பாடல்.

https://www.google.com/search?q=KADAVUL+AMAITHTHUVAITHTHA+MEDAI++VIDEO+SONG&newwindow=1&sca_esv=289933ce561edd87&sxsrf=ACQVn08K8eKS0ckBQH0LXehxhKe58qoNpQ%3A1710752830  

8 இருமனம் கொண்ட [அவர்கள் -1977] கண்ணதாசன் , எம் எஸ் வி, SP பாலசுப்ரமணியன் , சதன்

SPB  குரலில் அழகான பாடல் ;ஆனால் பாடலின் புதுமையும் விறுவிறுப்பும் பொம்மையின் விரைவான பதிலில்தான் அடங்கியுள்ளது. இதுவும் சதன் அவர்களுக்கு பெருமை சேர்த்த பாடல் .

https://www.google.com/search?q=IRUMANAM+KONDA+THIRUMANA+VAAZHVIL+VIDEO+SONG&oq=IRUMANAM+KONDA+THIRUMANA+VAAZHVIL+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIHCAEQIRifBdIBCTIwOTU4ajBqNKgCALACAA&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:f3751a7f,vid:zFg5rgAED_o,st:0

சொல்லாதே யாரும் கேட்டால் பாடலில் சிவாஜிக்கணேசனுக்கு கார் ஓட்டும் டிரைவர் -சதன்

9 ‘கேட்டுக்கோடி உறுமி மேளம் பாடல் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டது. எம் எஸ் வி யின் இசைக்குழுவில் சதன் [மஞ்சள் ஜிப்பா வழுக்கை] எவ்வளவு துடிப்புடன் உற்சாகப்படுத்துகிறார்,பாடல் நிறைவடையும் முன் எத்தனை வகை தாள அமைப்புகள் மாறி மாறி இசைக்கின்றனர். பார்த்து மகிழ 

https://www.google.com/search?q=kettukkodi+urumi+melam+tms+lre+ms+v+orchestra&oq=kettukkodi+urumi+melam+tms+lre+ms+v+orchestra+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABM  watch till the end , see MSV, TABLA PRASAD , MEESAI MURUGESH [THAVIL] AND SADHAN DEEP YELLOW SHIRT [FRONTALLY BALD HEAD] IN A LIVE PROGRAMME for DD

இது போன்ற திறமைசாலிகள் பேசப்படுவதே இல்லை என்பதே உண்மை நன்றி

அன்பன் ராமன்

Tuesday, April 2, 2024

CRIPPLING THE WORK 4

 CRIPPLING THE WORK 4

வேலை நிறுத்தம்-4

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து….

. இப்ப இவனுகளுக்கு குடுக்கறதே பென்சன் தானே , வேலை எங்க பாக்கிறான் ? இதுக்கு மேல தனியா பென்ஷன் குடுங்கறான். இவனையெல்லாம் சுடணு ம் சார்..எனக்கு தெரிஞ்சு ஒரு ஆளு 7 வீடு வாங்கிட்டான் பஜார் தெருவிலே. 

பாதிப்பேர் வாத்தியாரம்மாவை கல்யாணம் முடிச்சிருக்கான். அவ ஒருபக்கம், ட்யூசன் , வட்டிக்கு விட்டு காசு பாத்து வீடுவீடா வாங்கிப்போட்டுக்கிட்டிருக்கா. ஒருத்திக்கு களுத்து .ஏகமா  பெருத்துப்போய் அட்டியல் கிடைக்காம 7 லட்ச ரூவாய்க்கு ஆடர் குடுத்து செய்ய சொல்லிருக்கா.. அவளுக்கும் பென்ஷன் வேணுமாம். நம்ம தான்யா மடயங்க;   அப்பவே BT சேராம கலெக்டர் ஆபீஸ் வேலைனு ஓடி இப்ப ராத்திரி 8 மணி வரைக்கும் பைலை கட்டிக்கிட்டு அளுதுகிட்டு , கவுன்சிலர் வந்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டறான் ;தலை எளுத்து களுதை மாதிரி குனிஞ்சுக்கிட்டு நிக்க வேண்டியிருக்கு.. என்ன, கொஞ்சம் அனுசரிச்சு சம்பாரிக்கலாம் ஆனா பக்கத்துல இருந்தே போட்டுக்கொடுத்துர் ரானுக ; அப்புறம் கைல கால் ல விள வேண்டியிருக்குது -எல்லாம் நம்ப பொறந்த நேரம் வேறென்னத்தைச்சொல்ல என்று ஆசிரியர்களைப்பார்த்து பொருமும் பிற பணியாளர்கள்.  

இதில் வேறொரு விமரிசனமும் இடம் பெறும் . நமக்கு 9.30 - 5.00 ஆபீஸ் , இவனுங்களுக்கு 10- 4.00 அதுலியும் சனி ஞாயர் லீவு .அன்னிக்கு பாக்கிறேன் க்ளாஸ் ல ஒரு வாத்யார்     தூங்கிக்கிட்டு ருக்கார் பசங்க சளச்சள னு பேசிக்கிட்டு இருக்கானுங்க.. அதை விட கொடுமை இந்த பொண்ணுகளை எந்த ஸ்கூலுக்கும்  அனுப்ப முடியாது போலிருக்கு.

டெய்லி பேப்பர்ல 10 போக்ஸோ கேஸ் வருது; 6, 7 வாத்தியாருங்க , க்ராமத்துஸ்க்கூல் ல தாளாளர் அவனும்சேர்ந்துக்கறான்   . சில டீச்சரம்மாக்களே +1 பையன்களுக்கு மில் காலஜி ட்ரபுள் [பாலியல் தொந்தரவு] கொடுக்குறாங்க னு காவல் துறை அறிவிச்சுருக்கு . இவனுங்க பண்ற அட்டூழியத்துக்கு அளவே இல்லை , இத்தனைக்கும் மேல, ஸ்ட்ரைக்; இந்த பசங்க என்னத்த படிக்கும் என்று கடும் விமரிசனம் இருக்கிறது.

 

ஆசிரிய சங்கங்கள் சொல்வது என்ன/

எங்களை பணி  செய்ய விடுங்கள், ரேஷன் அட்டை, வோட்டர் பட்டியல், மலேரியா டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைகளை எங்கள் மீது சுமத்தாதீர்கள்.

பாடப்புத்தகங்கள் அனைத்தும் கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

வருவாய்த்துறை பணிகளை ஆசிரியர்கள் மூலம் நிறைவேற்றாதீர்கள்.

திருவிழா நேரங்களில் க்யூ வரிசை பணிகளை மாணவர் மற்றும் ஆசிரியர் மீது சுமத்தாதீர்கள் .படிக்க வேண்டிய நேரத்தில் பகலில் க்யூ ஒழுங்கு செய்துவிட்டு இரவில் படிக்க இயலுமா? .மேலும் புள்ளி விவரம் சேகரிக்க , மருந்து மாத்திரை பயன்பாடு விளக்க ஆசிரியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பணியமர்த்துவதும், சத்துணவு ஏற்பாடு மேற்பார்வை செய்வதும்-- போதிப்பு பணிகளில் குறிக்கிடுவதை அரசினர் உணரவில்லையா?வேலையில்லா நபர்களுக்கு இது போன்ற 'அவ்வப்போதைய' பணிகளும் சிறு ஊதியமும் தந்தால் அவர்களுக்கும் பயன் கிடைக்கும் .

தற்காலிக நிலையிலேயே 12-15 ஆண்டுகளாக இருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவீ ர்

தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு பதவி மற்றும் ஊதிய கோரிக்கையை பரிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இவற்றை புரிந்து கொள்ளாமல் ஊதியம் கேட்டு போராடுவதாக மக்கள் நினைப்பது கிட்டத்தட்ட வேரூன்றி விட்ட நிகழ்வு.

இவ்வாறாக தத்தம் வேலை நிறுத்தம் மிகுந்த நியாயமானதும் பொருத்தமானதும் என்று எண்ணுவதும் பிறர் வேலை நிறுத்தம் செய்து  மக்களை துன்புறுத்துகின்றனர்  என்று நம்புவதும் தக்காளி சட்னி கேஸ் தான்

நன்றி அன்பன் ராமன்  

 

WILLIAM SHAKESPEARE- 10

  WILLIAM SHAKESPEARE- 10              The day’s compilation of ‘quotes’ from Shakespeare are indeed crisp and powerful. I request our vie...